Jump to content

செப்டெம்பர் 12 வருகின்றது?


Recommended Posts

[size=6]செப்டெம்பர் 12 வருகின்றது?[/size]

[size=4]தொழில்நுட்ப உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிள் ஐ போன் 5 அடுத்தமாதம் 12 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படுமென நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

அதன் முன்னைய வெளியீடான ஐ போன் 4 மற்றும் 4s ஆகியன ஒரே மாதிரியான தோற்றத்தினைக் கொண்டிருந்தன.

ஆனால் ஐ போன் 5 ஆனது சற்று வித்தியாசமான தோற்றத்தினையும், பெரிய திரையையும் , நவீன தொழில்நுட்ப வசதிகள் பலவற்றையும் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் அப்பிள் வெளியிட்ட கெலக்ஸி S 3 விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது.

இதனால் அப்பிள் தனது சந்தையைக் கொஞசம் கொஞ்சமாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே கெலக்ஸி S 3 க்கு போட்டியாக ஐ போன் 5 வை உடனே வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ___[/size]

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39770

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]செப்டெம்பர் 12 வருகின்றது?[/size]

[size=4]அண்மையில் அப்பிள் வெளியிட்ட கெலக்ஸி S 3 விற்பனையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றது.

இதனால் அப்பிள் தனது சந்தையைக் கொஞசம் கொஞ்சமாக இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே கெலக்ஸி S 3 க்கு போட்டியாக ஐ போன் 5 வை உடனே வெளியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ___[/size]

http://www.virakesar...asp?key_c=39770

Galaxy s3 ஐ வெளியிட்டது அப்பிள் அல்ல.. samsung.. ஆகும்..! வீரகேசரியும்.. இப்படி செய்தி தவறுகள் இழைக்க ஆரம்பிச்சிட்டா..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

[size=4]கேசரியின் தவறை :( சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் .[/size]

Link to comment
Share on other sites

  • 1 month later...
Link to comment
Share on other sites

[size=6]ஐ போன்5 இல் ' நெனோ சிம்' ?[/size]

[size=4]புதிய தொழில்நுட்பங்களை அமுல்படுத்துவதும் பின்னர் அவற்றைப் பாவனையாளர்களுக்குப் பிடித்தமானதாகப் பழக்கப்படுத்துவதிலும் கைதேர்ந்த நிறுவனங்களிலொன்றே அப்பிள் ஆகும்.[/size]

[size=4]இசையினை அடுத்த பரிமாணத்துக்கு எடுத்துச் சென்ற அதன் ஐ பொட் முதல் கையடக்கத்தொலைபேசியின் வரைவிலக்கணத்தினை மாற்றிய ஐ போன் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.[/size]

[size=4]அப்பிள் தனது ஐ போன் 5 ஸ்மார்ட்போனை இன்னும் சில தினங்களில் வெளியிடவுள்ளது. [/size]

[size=4]தற்போது ஐ போன் 5 தொடர்பான எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளது.[/size]

[size=4]இந்நிலையில் ஐ போன் 5 மூலமாக அப்பிள் மாற்றமொன்றினைக் கொண்டுவரவுள்ளதாகத் தெரிகின்றது.[/size]

[size=4]ஆம், அம் மாற்றம் தொலைத்தொடர்பாடல் வலையமைப்புக்கும் , கையடக்கத்தொலைபேசிக்கும் பாலமாகத் திகழும் சிம் அட்டையிலாகும்.[/size]

[size=4]கையடக்கத்தொலைபேசிகளின் ஆரம்பகாலத்தில் சிம் அட்டைகள் கடனட்டை அளவில் காணப்பட்டன.[/size]

[size=4]இவ் அளவானது காலப்போக்கில் சுருங்கி தற்போது பரவலாகப் பாவனையில் உள்ள வடிவத்துக்குக் கொண்டுவரப்பட்டது. [/size]

[size=4]ஆனால் அப்பிள் ஐ போன் 4 இனை அறிமுகப்படுத்தியபோது 'மைக்ரோ சிம்' எனப்படும் தற்போது பாவனையிலுள்ள சிம் அட்டையினை விட அளவில் சிறியதனை அறிமுகப்படுத்தியது.[/size]

[size=4]தற்போது தனது ஐ போன் 5 இல் மைக்ரோசிம்மினை அதை விட சிறிய நெனொ சிம்மினை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகின்றது.[/size]

[size=4]மைக்ரோசிம் ஒன்றின் அளவு 15 x 12 x 0.76 mm .ஆனால் நெனோ சிம் ஒன்றின் அளவு 12.3 x 8.8 x 0.67 mm ஆகும். அதாவது நெனோ சிம் மைக்ரோ சிம்மினை விட 40 சதவீதம் சிறியதாகும்.[/size]

[size=4]சிம் அட்டையின் அளவு குறைக்கப்படுதல் என்பது அட்டையில் காணப்படும் மேலதிக பிளாஸ்டிக்கின் அளவினைக் குறைத்தலாகும்.[/size]

[size=4]ஜேர்மனியில் உள்ள தொலைத்தொடர்பாடல் நிறுவனமொன்றுக்கு அப்பிள் இந் நெனோ சிம்மினை பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்கென வழங்கியுள்ளதாகத் தெரிகின்றது.[/size]

[size=4]அச் சிம் அட்டைகளுடன் அப்பிள் வழங்கியதாகத் தெரிவிக்கப்படும் குறிப்பு இதோ,[/size]

[size=4]இவ்வருட ஆரம்பத்தில் தனது நெனோ சிம் அளவினை சிம் அட்டையின் நியம அளவாக அங்கீகரிக்கக் கோரி அப்பிள் நிறுவனம் ஐரோப்பிய தொலைத்தொடர்பாடல் தரப்படுத்தல் நிறுவனத்திடம் European Telecommunications Standards Institute (ETSI) கோரியிருந்தது.[/size]

[size=4]பல்வேறு போட்டிகளுக்கு மத்தியில் அப்பிளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் சிம்மின் அளவும் அங்கீகரிக்கப்பட்டது.[/size]

[size=4]சிம் மட்டுமன்றி ஐ போன் 5 இல் அப்பிள் பல புதிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.[/size]

[size=4]குறிப்பாக ஐ போன்5 க்கான ஹெட் போன் வடிவத்தினை மாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=4]எது எவ்வாறாயினும் இன்னும் சில தினங்களில் அதாவது 12 ஆம் திகதி எது உண்மை எது பொய் எனத் தெரிந்துவிடும்.[/size]

http://www.virakesari.lk/article/technology.php?vid=34

Link to comment
Share on other sites

[size=6]வந்தது 'ஐ போன்' 5[/size]

[size=5]ஆப்பிளின் நிறைவேற்று அதிகாரி ரிம் கூக் மேடையில் பேசியவண்ணம் உள்ளார்.[/size]

[size=5]- 1 million people visit every day. 380 stores in 13 countries now[/size]

[size=5]- [/size][size=5]Apple has 27% of the notebook market, which is #1 in the U.S. Apple is outpacing the PC industry for 6 years.[/size]

[size=5] [/size]

- [size=5]Apple sold 17 million iPads, more than an PC manufacturer sold of its entire line up.[/size]

[size=5]- Competitors have been launching tablets and Apple's market share has gone up! 68% this year, up from 62% a year ago.[/size]

aapl.png

Link to comment
Share on other sites

Cook: We have exciting news about the iPhone, Phil Schiller coming to share it.

Schiller: today we're going to introduce iPhone 5. (It comes up on a pedestal from stage.)

It has five rows of icons, plus the dock row on the bottom (longer) .... The leaked parts were accurate. Schiller says [size=5]new phone is 20 percent lighter than the 4S.[/size]

[size=5]There is 44 percent more color saturation than the iPhone 4S.[/size]

iPhone 5 has LTE: dynamic antenna can automatically switch between different networks.

Apple A6 chip in iPhone 5, 22 percent smaller (this is a bit of a surprise).

iPhone 5: ATT, Verizon, Sprint in US, also carriers in Canada, Japan, Australia, Europe.

[size=5]Battery life[/size]: 8 hours 3G talk, 10 hours WIFI browsing, which is better than the iPhone 4S.

Better camera: 8 mp sensor, 3264x2448, backside illumnation, f/2.4 aperture, dynamic low light mode, precision lens alignment, faster photo capture. Camera will also have panorama mode.

Schiller: Panorama allows users to sweep their scene, camera tells user how slow to pan; demo photo is 28 megapixels. The panorama feature is pretty impressive; [size=5]camera is a key feature.[/size]

Video performance improved as well, though fewer details.

Forstall asks Siri "How did the 49ers do last weekend" ... Also asks for NFL standings and what good movies out.

iCloud tabs gives you access to any open tab on any device.

Link to comment
Share on other sites

[size=5]iPhone 5 pricing same as iPhone 4S, which was [/size]

[size=5]$199 for 16 GB, [/size]

[size=5]$299 for a 32 GB and [/size]

[size=5]$399 for a 64GB.[/size]

[size=5]iPhone 4S to $99. [/size]

[size=5]Pre-order on 9/14, ship on 9/21, more countries 9/28[/size]

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செப்டெம்பர் 12 வருகின்றது?

நானும் ஏதோ சரோஜாதேவியின்ரை புதுப்படம் வருதாக்குமெண்டு நினைச்சன் :huh:

Link to comment
Share on other sites

[size=4]இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 5 ஆனது இதன் முன்னைய 4S இனை மேம்படுத்துவதாக உள்ளதே தவிர புதிதாக கவரும் வகையில் ஒன்ன்ரையும் வெளியிடவில்லை என கூறப்படுகின்றது. [/size]

[size=1]

[size=4]இருந்து[/size]ம் [size=4]செப்டெம்பர் 14ஆம் திகதி அன்று மின்வலையில் வேண்டக்கூடியதாக இருக்கும் ஐ போன்5 - கிட்டத்தட்ட 10 தொடக்கம் 12 மில்லியன்கள் வரையான கைத்தொலைபேசிகள் [/size][size=4]இந்த மாதம் மட்டும்[/size] [size=4]விற்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]கிட்டத்தட்ட 0.5 வீதம் அளவிலான இந்த ஆண்டின் அமெரிக்க தேசிய உற்பத்திக்கு, GDP, இதன் விற்பனைகள் உதவும் எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறு ஒரு மக்கள் பாவனை பொருள் நிறுவனம் நாட்டின் பொருளாதரத்திற்கு உதவுவது இதுவே முதல் தடவை என கூறப்படுகின்றது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஏதோ சரோஜாதேவியின்ரை புதுப்படம் வருதாக்குமெண்டு நினைச்சன் :huh:

யார் அண்ணா, சரோஜாதேவி. புது நடிகையா...smiley-laughing014.gifsmiley-laughing002.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]iPhone 5 pricing same as iPhone 4S, which was [/size]

[size=5]$199 for 16 GB, [/size]

[size=5]$299 for a 32 GB and [/size]

[size=5]$399 for a 64GB.[/size]

[size=5]iPhone 4S to $99. [/size]

[size=5]Pre-order on 9/14, ship on 9/21, more countries 9/28[/size]

  • Australian iPhone 5 prices start at $799 for the 16GB model through to $999 for the 64GB version :( :(

யார் அண்ணா, சரோஜாதேவி. புது நடிகையா...smiley-laughing014.gifsmiley-laughing002.gif

அந்தக் கால எட்டாக்கனி, இப்பவும் அவருக்கு புதுசுதான் :D

Link to comment
Share on other sites

Australian iPhone 5 prices start at $799 for the 16GB model through to $999 for the 64GB version :( :(

[size=4]ஆம், அவ்வாறு தான் விலை நீங்கள் முழுமையாக வாங்கும்பொழுது, அதாவது பொதுவாக ஒரு சேவையை வழங்கும் நிறுவனத்திற்கு கட்டுப்படாமல் ( no contract) .[/size]

[size=1]

[size=4]மேலே என்னால் இணைக்கப்பட்ட விலைகள் பொதுவாக மூன்று வருட சேவைக்கு நீங்கள் ஒப்பந்தம் செய்யும்பொழுது கைத்தொலைபேசிக்கு கொடுக்கும் விலை பட்டியல். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியாகியது ஐபோன் 5: அரைத்த மாவையே அரைக்கிறதா அப்பிள்?

By Kavinthan Shanmugarajah

2012-09-13 12:57:37

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அப்பிள் நிறுவனமானது தனது ஐ போன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐ போன் 5 இனை நேற்று அறிமுகப்படுத்தியது.

சென்பிறான்ச் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வை நாம் உங்களுக்கு எமது இணையத்தளத்தினூடாக நேரடியாக வழங்கியிருந்தோம்.

அப்பிளின் பிரதான நிறைவேற்று அதிகாரி டிம் குக் இதனை அறிமுகப்படுத்தியதுடன், உலகளாவிய சந்தைப்படுத்தடுத்தலுக்கான சிரேஷ்ட உப தலைவரான பில் ஸ்ஸிலர் ஐ போன் 5 தொடர்பின் வசதிகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஐ போன் 4 எஸ் வெளியாகியது. அதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு ஜூன் வெளியாகிய ஐ போன் 4 இன் தோற்றத்தினை ஒத்திருந்ததுடன் எதிர்பார்த்தளவு தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கியிருக்கவில்லை.

எனவே ஐ போன் 5 இன் மேல் அப்பிளின் தீவிர விசிறிகள் ( Apple Fan boys) மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். பல புதிய வசதிகளையும் தோற்றத்தினையும் அப்பிள் ஐ போன் கொண்டுவருமென அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பினை அப்பிள் நிறைவேற்றியதாக? ஏற்கனவே ஐ போன் 4எஸ் மற்றும் ஐ போன்4 இனை உபயோகிப்பவர்களுக்கு ஐ போன் 5 சிறந்த மாற்றுத்தெரிவாக அமையுமா எனப் பார்ப்போம்.

ஐ போன் 5

2inside%20app.jpg

தோற்றம்

ஐ போன் 5 ஆனது கண்ணாடி மற்றும் அலுமினியத்தாலான வெளிப்புறத்தினைக் கொண்டுள்ளதுடன் இதன் பருமன் 123.8 x 58.6 x 7.6 mm.

இதுவரை வெளியாகிய ஐ போன்களில் மிக மெல்லியதாக இது கருதப்படுகின்றது. இது 7.6 மில்லி மீற்றர்கள் மட்டுமே தடிப்பானது.

மேலும் இதன் நிறை வெறும் 112 கிராம்கள் மட்டுமேயாகும்.

முன்னைய வெளியீடான ஐ போன் 4 எஸ் இன் பருமன் 115.2 x 58.6 x 9.3 mm என்பதுடன் ஐ போன் 3 ஜிஎஸ் இன் பருமன் 115.5 x 62.1 x 12.3 mm ஆகும்.

apple%20comparision.jpg

ஐ போன் 5 ஆனது கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கவுள்ளன.

ஸ்மார்ட் போன்களின் தோற்றத்தில் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் திரையாகும். ஐ போன் 5 ஆனது 4 அங்குல ரெட்டினா திரையைக்கொண்டுள்ளது.

இதன் ரெசலுயுஷன் 1136x640 பிக்ஸல்ஸ் என்பதுடன் 326 (Pixels per inch) படவணு அடர்த்தியைக் கொண்டது.

தொழில்நுட்ப அம்சங்கள்

புரசசர் (Processor)

ஐபோன் 5 ஆனது ஐ போன் 4எஸ் கொண்டிருந்த A5 ஐ புரசசரை விட இருமடங்கு வேகமாக இயங்கக்கூடிய A6 புரசசரைக் கொண்டுள்ளதாக அப்பிள் தெரிவிக்கின்றது.

i%20insideapp.jpg

இது மேம்பட்ட கிராபிக்ஸ் செயற்பாடுகளுக்கும் ஏற்றதென அப்பிள் தெரிவிக்கின்றது.

எனினும் புரசசர்களின் கோர்களின் எண்ணிக்கை மற்றும் வேகம் தொடர்பில் அப்பிள் எதனையும் தெரிவிக்கவில்லை.

கெமரா (Camera)

ஐ போன் 4எஸ் கொண்டிந்ததனைப் போல ஐ போன் 5 உம் 8 மெகாபிக்ஸல் ( 3264x2448 pixels) கெமராவினையே கொண்டுள்ளது.

ஐ போன் 5 சென்சரானது 4எஸ்ஸினை விட சற்று சிறியதாகும்.

8 மெகாபிக்ஸல் கெமாராவினைக் கொண்டுள்ள போதிலும் 28 மெகாபிக்ஸலில் பரந்த தோற்ற (பெனோரமிக்) ஷொட்களை இதன்மூலமாக படம்பிடிக்க முடியும்.

inside%20camera.jpg

மேலும் மேம்படுத்தப்பட்ட 1.2 மெகா பிக்ஸல் புரண்ட் கெமராவினையும் ஐ போன் 5 கொண்டுள்ளது.

inside%20camera22.jpg

இவற்றைத்தவிர 4ஜி எல்.டி.இ. வேகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் ஐபோன் 5 ஆனது தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐஓஎஸ் 6 இயங்குதளத்தின் மூலம் இது இயங்குகின்றது. இதில் கூகுள் மெப்புக்குப் பதிலாக அப்பிளின் சொந்த மெப் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளமை நாம் அறிந்ததே.

சார்ஜ் செய்வதற்கான கெனக்டர் மற்றும் போர்ட்களில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது அப்பிள்.

port%20pic.jpg

இந்நிகழ்வில் புதிய வடிவிலான ஹெட்போன்களையும் அப்பிள் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருந்தது.

apple%20headset.jpg

மேலும் அப்பிள் புதிய ஐ பொட் டச், ஐ பொட் நெநோ, மேம்படுத்தப்பட்ட டெக்ஸ்ட் டொப் ஐ டியூன்ஸ் அப்ளிகேஷன் போன்றவற்றையும் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தியது.

தற்போதைய அப்பிள் பாவனையாளர்கள் ஐ போன் 5 க்கு மாறவிரும்பினால் மாறுவதற்கான பல நல்ல தொழில்நுட்ப அம்சங்கள் அதில் உள்ளன.

அதேபோல இதைவிட பல்வேறு வசதிகளைக் கொண்ட செம்சுங் கெலக்ஸி எஸ்3 போன்ற ஸ்மார்ட் போன்களும் சந்தையில் உள்ளன.

நொக்கியாவும் அண்மையில் லுமியா920 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதுவும் பல புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஆனால் பாவனையாளர் எதிர்பார்த்த அளவு புரட்சிகரமாக ஐ போன்5 உள்ளதா எனப் பார்க்குமிடத்து, இல்லையென்றே தெரிவிக்கின்றார்கள் சந்தை ஆய்வாளர்கள்.

செம்சுங், எச்.டி.சி போன்ற நிறுவனங்கள் தங்களது ஒவ்வொரு பிரதான ஸ்மார்ட்போனிலும் பல்வேறு நவீன வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

o-IPHONE-GALAXY-CHART-900.jpg

வடிவத்திலும் அவை நல்ல மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அப்பிள் அதன் திரையில் அளவை சற்று அதிகரித்து, கண்ணாடி மற்றும் அலுமினியத்தை உபயோகித்த போதும் பெரிய அளவிலான ஐ போன் 4எஸ் என்ற எண்ணத்தை மட்டுமே தருகின்றது.

செம்சுங், எச்.டி.சி நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களில் காணப்படும் தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒப்பிடும் போது புரட்சிகரமானதும் சந்தையில் புதுமைகளைப் புகுத்திய நிறுவனம் என்ற வகையிலும் அப்பிளின் தொழில்நுட்ப அம்சங்கள் சற்றுக் குறைவே என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஸ்டீவ் ஜொப்ஸ் இறந்த பின்னர் அப்பிளின் வேகம் குறைந்து விட்டதா? எனத் தற்பொழுது எண்ணத் தோன்றுகின்றது.

அரைத்த மாவினையே அப்பிள் மீண்டும் அரைக்கிறதா என்ற கேள்வியும் நம்முன் எழுகின்றது.

யானைப் பசிக்கு சோளப்பொறியைத் தீனியாகப் போட்டது போலவே அப்பிளின் ஐ போன்5 உம் உள்ளது என்பதனை மறுக்க முடியாமலுள்ளது.

எது எவ்வாறிருப்பினும் இறுதி முடிவு நுகர்வோர் கையிலேயே உள்ளது.

http://www.virakesari.lk/article/technology.php?vid=40

Link to comment
Share on other sites

[size=6]புது ஐ போன் இல் பாஸ்புக் [/size]

[size=1]

[size=4]இந்தபாஸ் புக் மூலம் என்ன செய்யலாம்?[/size][/size][size=1]

[size=4]இதன் உதவியுடன் உங்கள் சீட்டுக்கள் (விமான சீட்டுக்கள்) மற்றும் விலை தள்ளுபடி துண்டுகளை சேர்த்து வைக்கவும் [/size][/size][size=1]

[size=4]குறிப்பிட்ட விற்பனையாளர்களின் அவர்களின் பொருட்களை கூட பட்டியில் இட்டு வைத்துக்கொள்ளலாம். [/size][/size]

[size=1]

[size=4]இது ஆப்பிளின் i OS 6 இன் ஊடாக வடிவமைக்கப்பட்டுள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]அடுத்த வருடங்களில் இதன் மூலம் பணமும் செலுத்தும் வசதியும் வரும் ![/size][/size]

[size=6]Apple demos Passbook, a ticket, coupon organizer for iOS 6[/size]

[size=1]

[size=6]Passbook provides one place for tickets and coupons, with alerts for updates such as plane delays or the proximity of a merchant for whom the user has a card.[/size][/size][size=1]

http://news.cnet.com/8301-13579_3-57450493-37/apple-demos-passbook-a-ticket-coupon-organizer-for-ios-6/[/size]

Link to comment
Share on other sites

[size=4]இன்று மடை திறந்தது, ஆப்பிள் நிறுவனம் ஐ போன் ற்கான விண்ணப்பங்களை கோரியது.[/size]

[size=4]வெள்ளம் போல வந்த கோரிக்கைகளை தாங்காது... தளம் சரிய, விண்ணப்பங்களை ஏற்பது நிறுத்தப்பட்டது[/size]

[size=4]http://ca.finance.yahoo.com/news/apple-stops-taking-iphone-5-orders-less-8-145223672.html[/size]

Link to comment
Share on other sites

[size=4]முதல் இரண்டு நாளிலும் இரண்டு மில்லியன்கள் புது ஐ போன் வாங்க விண்ணப்பங்கள் வந்தன [/size][size=1]

[size=4]இன்று பங்கு முதல் முறையாக USD 700 க்கு மேலாக முடிந்தது [/size][/size][size=1]

[size=4]உலகின் அதி கூடிய பணக்கார நிறுவனம் - ஆப்பிள் [/size][/size]

Link to comment
Share on other sites

[size=4]உலகில் பலர் ஐபோன் 5 தமக்குக் கிடைத்து விடாதா? என ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் நபரொருவர் ஐபோன் 5 வினை மைக்ரோவேவ் அவனில் வைத்தால் என்ன நிகழும் என்பதைக் காணொளியொன்றின் மூலம் காட்டியுள்ளார். [/size]

[size=4]தற்போது யூடியூப்பில் தரவேற்றப்பட்டுள்ள அக் காணொளி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. [/size]

[size=4]மைக்ரோவேவில் வைத்து எரிந்து போன ஐபோன் 5 இனை ஈபே இணையத்தளத்தினூடாக விற்பனை செய்யவுள்ளார். அதன் விலை 3001 அமெரிக்க டொலர்களாகும். [/size]

[size=4]இவரது இச்செயல் அப்பிள் விசுவாசிகளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளை செம்சுங் விரும்பிகளின் வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இதனை நீங்கள் செய்து பார்க்காதீர்கள் என அறிவுரையும் கூறியிருக்கிறார் ஐபோனை எரித்த அந்நபர். [/size]

http://www.virakesari.lk/article/technology.php?vid=49

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை எங்கு நோக்கி நகர்த்துகின்றோம்

பணத்துக்காக இது போன்ற பரீட்சைகளை ஊக்குவிக்கப்போகின்றோமா?? :( :( :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை எங்கு நோக்கி நகர்த்துகின்றோம்

பணத்துக்காக இது போன்ற பரீட்சைகளை ஊக்குவிக்கப்போகின்றோமா?? :( :( :(

ஐ போன் 5 வாங்குவதற்காக, சென்ற வெள்ளிக்கிழமை கடை வாசலில்... இங்குள்ளவர்களும், ஒஸ்ரியா, சுவிஸ் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து 60 மணித்தியாலத்துக்கு மேல் காவல் நின்றுள்ளாதாக தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ போன் 5 வாங்குவதற்காக, சென்ற வெள்ளிக்கிழமை கடை வாசலில்... இங்குள்ளவர்களும், ஒஸ்ரியா, சுவிஸ் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து 60 மணித்தியாலத்துக்கு மேல் காவல் நின்றுள்ளாதாக தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

நானும் பேப்பரிலை பார்த்தன்.......சுத்த பன்னாடைக்கூட்டங்கள் ரஸ்யா நோர்வே எண்டு கதிரை,பெட்டி படுக்கையோடை கியூவிலை நிக்குதுகள்.....ஏனெண்டால் அவையின்ரை இடத்துக்கு 2,3 மாதம் பிந்தித்தான் வருமாம்......அங்கை சினிமா கட்டவுட்டுக்கு பால் ஊத்துற கூட்டம் இஞ்சை இப்பிடியொரு பேய்க்கூட்டம்.....

Link to comment
Share on other sites

[size=4]ஐ போன் i OS6 , ஆன்றோய்த் தொழில் நுட்பங்களை கற்று அந்த தளங்களுக்கு மென்பொருட்களை எழுதுவது மிகவும் உயர்ந்த சம்பளம் தரும். > 100,000 USD, தொழில் இன்று. [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.