Jump to content

ஹைக்கூ எழுதிய கூப்பாடு!


Recommended Posts

16594343362820333444235.jpg

சிரி........

என்னைப்பார்த்து

நன்றாக சிரி

உனக்கு காசு பண்ண

நானா கிடைத்தேன் ?

Link to comment
Share on other sites

  • Replies 348
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உடல் நலிந்து விட்டாலும்

நன்றி உள்ள ஐந்து

அறிவின் நன்றிக்கடன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

303638_401075953276236_239970157_n.jpg

ஊழல் செய்த பணம் எல்லாம் சுவிஸ் வங்கியில் உறங்கிக்கொண்டிருக்கின்றது ....... கால் வயிற்றுக்கு கஞ்சி கிடைக்காத இவர்கள் குப்பைத்தொட்டியில் உணவை தேடுகின்றார்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16594343362820333444235.jpg

பல ஆண்டுகளாக உடுக்க உடை கொடுத்து சாப்பாடு கொடுத்து பதவி கொடுத்து பார்த்ததுகளுக்கே அந்த விசுவாசம் இல்லை ஆனால் இந்த ஐந்தறிவு உள்ள ஜீவனுக்கு எவ்வளவு எஜமானர் விசுவாசம் ,

விசுவாசம் என்றால் என்ன என்று இதைப்பார்த்தாவது திருந்தட்டும் சில ஜென்மங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

303638_401075953276236_239970157_n.jpg

ஊழல் செய்த பணம் எல்லாம் சுவிஸ் வங்கியில் உறங்கிக்கொண்டிருக்கின்றது ....... கால் வயிற்றுக்கு கஞ்சி கிடைக்காத இவர்கள் குப்பைத்தொட்டியில் உணவை தேடுகின்றார்கள் !

எழுதத் தெரியாது,வராது என்ற எண்ணம் எல்லாம் இப்போ எங்கிருந்து வந்தது..ம்ம்ம்...தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்...:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதத் தெரியாது,வராது என்ற எண்ணம் எல்லாம் இப்போ எங்கிருந்து வந்தது..ம்ம்ம்...தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்... :)

எல்லாம் சகோதரி உங்களின் ஊக்கிவிப்பும் , காதலின் ஊக்கிவிப்பும்தான் உங்கள் இருவருக்கும்தான் அந்த பெருமை . :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நன்றி சொல்வதற்கு ஓன்றும் இல்லை..மேலே எழுதிய சிலருடையதைப் பார்த்தாவது சற்று திருத்தம் செய்வீர்கள் என்று நம்பிறன்..

Link to comment
Share on other sites

Uluru-at-sunrise-sun-on-top-by-ID-Photography-Alice-Springs.jpg

புற்களின் புன்முறுவல் காண

பெரும்பாறையின் தடை தாண்டும்

கதிரவன் பார்வை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16594343362820333444235.jpg

எனக்குத் தெரியும்!

வேறு வழியின்றி,

வித்தை காட்டுகிறாய், நீ!

வேதனைச் சுவடுகள்,

வெளியில் தெரியவில்லை!

விடியாது உனக்கும்,

என்னைப் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனிதர்களுக்குள், எவ்வளவு சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன!

சுடலையின் சிந்தனை, யதார்த்தை, ஒளிவு மறைவின்றிப் போட்டுடைக்கின்றது!

எதற்காக வெட்கப் பட வேண்டும்?

விசுகரினதும்,யாயினியினதும், காதலினதும் வார்ப்புக்களில், ஏக்கமும், இயலாமையும் வெளிப்படுகின்றது!

பகலவன், நீங்கள் வானத்தின் எல்லை தாண்ட வேண்டியவர்!

தமிழரசு, அநியாயத்தைக் கண்டு கொதிக்கும் மனம் கொண்டவர் நீங்கள்!

உங்கள் வரிகள், உங்கள் மனக் கிணறின், ஆழத்திலிருந்து ஊறி வருபவை!

அவை, ஏதோ ஒரு விதத்தில், உங்கள் மனம் பார்க்கும், கண்ணாடியாகின்றன!

ரதி, உங்களுக்கு ஒரு கவிஞை ஆகும் ஆசை உண்டு!

அதை ஒரு தனிப்பதிவின் மூலம், வெளிக்காட்டி இருந்தீர்கள்!

இதோ உங்கள் கரும்பலகையும், டஸ்டரும்!

எல்லோருக்கும் பச்சை சாத்த ஆசை!

இருப்பதோ மூன்று பச்சை!

அதுவும் அவுஸில், இரவு ஏழு மணிக்குப் பிறகு தான், தன் திருக்கதவைத் திறக்கும்! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குரங்குகளுக்கு கோயில் கட்டி

கும்பிடும் சமுதாயத்தில்

குரங்குகளிலும் கேவலமாக நாம்

குப்பையில குண்டு மணி

மின்னுவது போல கவிஞர்கள்

கவி வடிக்க நாம்

பெண்ணுரிமை பேசும் லிப்ஸ்டிக்

பெண்களுக்கு ,நாமும்

பெண்கள்தான் தெரியவில்லையொ?

சிறுவர்கள் ஆயுதம் தூக்கினால்

சீறீப்பாயும் ஜக்கிய சபை

சிறுவர்கள் குப்பை தூக்கினால்......மெளனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், கொஞ்ச நாளைக்குக் கவிதைகளாய்க் கிறுக்குங்கள்!

சும்மா ஒரு சேஞ்சுக்கு!

உருவகங்கள் எல்லாமே, நல்லாருக்கே! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன், கொஞ்ச நாளைக்குக் கவிதைகளாய்க் கிறுக்குங்கள்!

சும்மா ஒரு சேஞ்சுக்கு!

உருவகங்கள் எல்லாமே, நல்லாருக்கே! :D

உண்மையாகவா? கவிதை அறியேன்கதை அறியேன் கிருக்கல் சுமாராக அறியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாகவா? கவிதை அறியேன்கதை அறியேன் கிருக்கல் சுமாராக அறியும்

அறிஞ்சதைப் பறயிறது? :D

உண்மையில் நன்றாக எழுதுகிறீர்கள்!

உங்கள் ஆற்றல், ஞானறியும்!

Link to comment
Share on other sites

16594343362820333444235.jpg

நன்றிக்கடனுக்கு வரைவிலக்கணம்

கர்ணன் என்று தான் நினைத்திருந்தேன்

உன்னை காணும் வரை.

Link to comment
Share on other sites

18139048872868115305195.jpg

மனதின் வெக்கை

வானில் எதிரொலி.............

மாலையின் கோபம்

சிகப்பாய் வானில் .

சீண்டலின் நிறம் சிகப்பு..

சிந்திய ரத்தமும் சிகப்பு....

தமிழன் மனமும் சிகப்பு...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயந்திர வாழ்க்கையில்

இருந்து இயற்கையை

ரசித்திட நேரமெது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tiger-and--deer_1_46032.jpg

நிறைந்த வயிறுகள்,

மறந்த வேற்றுமைகள்!

நட்பு!

18139048872868115305195.jpg

வர்ணம் தீட்டிய வானம்,

வளைந்தோடும் நதி!

அழகு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்கள் எம்மால்

முடியுமென்றால் ஒற்றுமையாக

மனிதர்கள் உங்களாலும் முடியும்

Link to comment
Share on other sites

லியோ அண்ணா,

தனியே உங்கள் link ஐ போட்டு விட்டு அங்கு சென்று வாசிக்குமாறு கூறுவது தவறு.

அந்த சுஜோவும் நீங்களும் ஒன்றா? (நான் பெரிதாக கவிதைகள் வாசித்ததில்லை. எனவே எனக்கு தெரியாது.)

ஆம் என்றால் ஹைக்கூ கவிதைகளை இங்கு போட்டு விட்டு உங்கள் link ஐ கீழே இணையுங்கள்.

இல்லை என்றால் அக்கவிதைகளை இங்கு இணைத்து விட்டு கீழே சுஜோ என்று போட்டு விடுங்கள். (உங்கள் இணைப்பை போட வேண்டியதில்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதிரவன் வரவுக்காய்

விடி காலைப் பொழுதில்

இருள் கிளித்து பொழுது புலருகிறது...

Link to comment
Share on other sites

மிருகங்கள் எம்மால்

முடியுமென்றால் ஒற்றுமையாக

மனிதர்கள் உங்களாலும் முடியும்

:lol: :lol:

ஒருவேளை மனிதர்கள் எமக்கும் ஐந்தறிவு இருந்திருந்தால் ஒற்றுமையாக இருந்திருப்போம். :lol:

ஆறாவது அறிவை மனிதன் தவறாக பயன்படுத்துகிறான். :wub:

Link to comment
Share on other sites

60107810151864018735173.jpg

ஒருவேளை நீ பெருமிதம் கொள்ளலாம் .........

உன் வாயில் நான் என்று .

தொண்டையில் சிக்குவேன் அப்பனே .......

அப்போது தெரியும் உனக்கு ,

மரணவலி எப்படியென்று ........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.