Jump to content

புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள் (படங்கள்)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

AuuaD1FCEAICHr3.jpg

- Jonathan Miller (twitter) -

சனல் - 4 செய்தியாளர் ஜொனாதன் மில்லரை கவர்ந்த... பதாகை பட இணைப்புக்கு நன்றி காதல் :rolleyes:

அதை... எழுதிய, தமிழ் அன்பருக்கு வாழ்த்துக்கள். :D

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

இன்று நடந்தது விஸ்வாமித்திர இந்தியா, காதகனான மகிந்தாவுக்கு காட்ட முயன்ற திரிசங்கு சுவர்க்கம். ஆனால் உறவுகள் தங்கள் இந்திர பலத்தை பாவித்து சண்டாளன் மகிந்தாவை சுவர்க்கத்தின் வாசலில் வைத்து தள்ளி விழுத்திவிட்டர்கள். இடைநடு ரோமில் போய் விழுந்திருக்கிறார் மகிந்தா .

இன்றைய மகிந்தாவின் உபயம் பொதுநலவாய காரியதரிசி கமலேஸ் ஸர்மாவால் கொடுக்க பட்டது. இலங்கைக்கு பொதுநலவாய கூட்டம் கிடைப்பதற்கு அசோக் காந்தா அவுஸ்திரேலியாவில் கடுமையாக உழைத்திருந்தார். இன்று தெரிகிறது இந்தியா இதில் போட்டிருக்கும் நெடுநாளைய திட்டங்களை. இதில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா போன்றநாடுகளுக்கு சவாலாக, பொது நலவாயத்தை ஆட்டி படைக்க தனக்கு இருக்கும் அதிகாரத்தை காட்ட இந்தியா அவுஸ்திரேலியாவில் புகுந்து விளையாடியிருந்தது. அதன் தொடர்ச்சியாக அங்கு மகிந்தாவுக்கு கிடைத்த சுவர்க்கம் திரிசங்கு சுவர்க்கமாக இல்லாமல் முழுமையானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பொதுநலவாய காரியதரிசி ஸர்மா இந்த திருவிளையாட்டை நிகழ்த்தியிருந்தார். இன்று உறவுகளுக்கு இங்கிலாந்து கொடுத்திருக்கும் மதிப்பை பார்க்கும் போது இங்கிலாந்து மகிந்தாவின் வரவை கண்டு புளகாங்கிதம் அடையவில்லை என்பதுதான் கருத்து. மகிந்தாவை இழுத்துவந்து இங்கிலாந்தின் விருபத்திற்கெதிராக ராணியின் வரவேற்புக்களுக்குள் தன்னால் புகுத்த முடியும் என்று காட்டி தனது பலத்தை இந்தியா இன்னொருதடவை நிரூபித்திருக்கிறது. அதில் மூக்குடை பட்டது ஸர்மாவே. இங்கிலாந்து, அவர் தயாரித்திருந்த ஒழுங்கைத்தான் பிரதானமாக ரத்து செய்திருக்கிறது.

நாராயணன், சிவசங்கர் மேனன், நிரூபம்மா ராவ், நம்பியார் சகோதரங்கள், அசோக்காந்தா என்ற மலையாளிகளுக்கு கெலித்தவன் நான் இல்லை என்று காட்ட இந்த ஸர்மா இன்று முயன்றிருக்கிறார். ஆனாலும் நல்ல பாடம். தேராலை சறுக்கி விழுந்த மகிந்தா, இழுத்து சென்ற இந்திய குதிரைகளின் வயிற்றில் நிச்சயமாக இன்னும் ஒருதடவை குத்தி விடுவார்.

பாடுபட்ட உறவுகளுக்கு நன்றி. வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல், நான் செல்லவில்லை (காரணம் எனக்கு முடக்குவாத நோயால்) என் சகோதரன் சென்றிருந்தான்.. 25.000 மேற்படோர் கலந்து கொண்டதாய் சொன்னான்.

ராஜா, இந்நேரத்தில்...

உங்கள்... உடல் நலம் பெற, யாழ் களத்தின் சார்பில் இறைவனை வேண்டுகின்றோம்.

மேலதிக மருத்துவ ஆலோசனைகள் தேவைப்பட்டால்... யாழ்கள உறவுகள், நிச்சயம் உதவுவார்கள்.GetWellSoonSmileyWaves.gif

ஐயா நெல்லையன்.. இந்த சந்தியில் சீண்டு முடியிற வேலையை விட்டிட்டு.. வேற வேலை இருந்தாப் பாருங்க சார். நாடு கடந்த தமிழீழ அரச ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததை நான் என் கண்ணால் கண்டேன். சும்மா.. வந்து குழப்பகரமான வதந்திகளைப் பரப்புவதை தயவுசெய்து கைவிடுங்கோ. சும்மா வந்ததி பரப்பிக்கிட்டு திரியுற.. உங்களைப் போல ஆக்களுக்கு ஊரில என்றால் கம்பத்தில கட்டி பச்சை மட்டை அடிதான் விழுந்திருக்கும்..! :lol::icon_idea:

நெல்லையருக்கு,

நாடு கடந்த அரசை....

சீண்டாவிட்டால், நித்திரை வராது போலை.... :D:icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள். நானும் இலண்டனில் இல்லை என்று கவலையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து தமிழர்களும், சிங்களவரும் கலந்து கொண்ட பேரணியில்...

தொப்பி போட்ட, இஸ்லாமிய சகோதரர்கள் ஏன்... கலந்து கொள்ளவில்லை.

காரணம் என்ன?

பொறுக்கித் தின்னியள் சோனகன், தன் புத்தியைக் காட்டுவான். அதைப் புரியாத ஆட்கள் சோனகனுக்கு வக்காலத்து வாங்குவான்.

எல்லாருக்கும், ஞாபகமிருக்கட்டும்...

நீரளவே..... ஆம்பல்,

Link to comment
Share on other sites

ஆம் தமிழ்சிறி கேட்கவேண்டிய கேள்விதான் ........

ஆனால் மற்றப்பக்கத்தில் சாத்தியப்படக்கூடிய விடயமா அது.... மொட்டை முடியில் முடி வளரலாம் உதுகள் எப்பவும் எங்களுக்கு ஆதரவு

தராதுகள். எங்கடையில் சிலதுகள் தான் சகோதரர்,நண்பர்கள்,சமுகம்,என்றல்லாம் வழிந்து வழிந்து போய் வருத்தக்காரர் போல் பேசுவதும்,

போதை அடித்தவர்கள் மாதிரி பாசத்தில் கருத்தெழுதுவதும் ......................... என்னைப்பொறுத்தவரை சிங்களவனை நம்பலாம்.உதுகளை நான் ஒரு போதும் நம்புவதில்லை .பிற்குறிப்பு .................ஆப்ரிக்காவில் வாழும் முஸ்லிம் சமுதாயத்தை இந்தக்கருத்துக்குள் நான் அடக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணிதிரண்டு, ஒற்றுமையையையும்,போராட்ட வலுவையும் உணர்த்திய தமிழர்களுக்கு, பாராட்டும் வணக்கமும். :rolleyes:

Link to comment
Share on other sites

மீண்டும் லண்டனில் போர்க்குற்றவாளிக்கு தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை உணர்வு பூர்வமாக காட்டினார்கள்.புலிக்கொடிகளோடு போர்க்குற்ற படங்களும் எதிர்ப்பு ஊர்வலத்தில் காட்டப்பட்டுள்ளது.காதல்.சுபேஸ் மற்றும் இணைப்புக்களை வழங்கியவர்களுக்கு நன்றி.

ஊர்வலத்தில் பங்கு பற்றிய உறவுகளுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

ராஜா, இந்நேரத்தில்...

உங்கள்... உடல் நலம் பெற, யாழ் களத்தின் சார்பில் இறைவனை வேண்டுகின்றோம்.

மேலதிக மருத்துவ ஆலோசனைகள் தேவைப்பட்டால்... யாழ்கள உறவுகள், நிச்சயம் உதவுவார்கள்.GetWellSoonSmileyWaves.gif

நன்றி சிறி, நண்பேண்டா...! :D:lol:

Link to comment
Share on other sites

பெரும் அவமானத்துடன் பிரித்தானிவை விட்டு வெளியேறினார் மஹிந்த ராஜபக்ஷ

news_07-06-2012_63mahinda.jpg

லண்டனில் பல பகுதிகளில் ஒன்றுகூடியிருந்த பெரும் திரளான புலத்து போராளிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்களினால் பெரும் அவமானத்திற்கும் தலைக்குனிவிற்கும் உள்ளான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவை விட்டு வெளியேறினார்.

மஹிந்த ராஜபக்ஷ லண்டன் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட போது அங்கு பெரும் ஜனத் திரளாக திரண்டிருந்த தமிழ் மக்கள் முட்டைகளையும் பாதணிகளையும் அவரது வாகனத்தின் மீது வீசியும் கோசங்களை எழுப்பியும் தமது ஆத்திர உணர்வை வெளிப்படுத்தினர்.

முன்னதாக காலை 9 மணியளவில் மல்போரோ ஹவுஸ் முன்பாகவும் மாலை 4 மணியளவில் ஹில்டன் ஹோட்டல் முன்பாகவும் மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவி தூக்கில் இடப்பட்டு பின்னர் கொளுத்தப்பட்டது. லண்டனின் பல்வேறு பகுதிகளில் தமிழ் மக்கள் அலையென திரண்டு நாள் முழுவதும் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான பிரித்தானிய மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்ததுடன் பல வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்களிலும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக தமிழ் மக்கள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்த தொடர் போராட்டங்கள் காரணமாக பொதுநலவாய பொருளாதார பேரவையின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ஷ ஆற்றுவதற்கு இருந்த உரை ரத்து செயப்பட்டிருந்த போதிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மாநாடு நடைபெறும் மான்சன் ஹவுஸ் முன்பாக ஜன சமுத்திரமாக நிறைந்து நின்று திரண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் காலை 9.30 மணியளவில் ஊர்வலம் ஒன்றை லண்டன் மாநகர வீதிகளினூடாக மேற்கொண்டு லண்டனின் பிரசித்தி பெற்ற மால்பரோ ஹவுசின் முன்பாக அலையென திரண்டு ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.

தமிழ் மக்களின் இந்த பாரிய ஆர்ப்பாட்டத்தை கண்டு கொண்டே மகாராணி அவர்கள் மால்பரோ ஹவுசினுள் மதிய உணவு விருந்திற்காக உள்நுழைந்து சென்றதுடன் பினர் அங்கு ராஜபக்ஷவை சந்தித்திருந்தார். பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்களால் இந்த மல்போரோ ஹவுசின் முன்பாக ராஜபக்சவின் கொடும்பாவி ஒன்றும் சிறிலங்காவின் தேசிய கொடியும் எரிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கத்தின் போர் குற்றம், மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளை கண்டிக்கும் நூற்றுகணக்கான பதாதைகள் மற்றும் சுலோக அட்டைகளை தாங்கியும் கோசங்களை எழுப்பியும் காலை 8 மணி முதல் தமிழ் மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த உலக தலைவர்கள், ராஜதந்திரிகள் மற்றும் பிரதானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் பல வெளிநாட்டு ஊடகங்களின் கவனத்தையும் பெற்றிருந்தது.

ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் பிரித்தானியாவின் பல்வேறு பாகங்களில் இருந்தும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான பிரித்தானிய பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், பெரும் பங்களிப்பினையும் வழங்கியிருந்தனர்.

http://www.paristamil.com/tamilnews/view-news-MTk1OTc5MzQ0.htm

Link to comment
Share on other sites

இலங்கையின் தேசியக்கொடி எரிக்கப்படும் காட்சி.

uk3.jpg

தொங்கவிடப்பட்டுள்ள மகிந்தவின் கொடும்பாவி.

11.jpg

- மூலம்: தாய்தமிழ் -

Link to comment
Share on other sites

என்ன இந்தப்பிள்ளை மாறி மாறி கதைக்குது என்று பார்க்காமல் இதை கடைசியா ஒருக்கா வாசியுங்கோ. இது தான் என் இறுதி முடிவு.

நாம் புலிக்கொடி பிடித்தால் புலிக்கொடி பிடிப்பவர்கள் அனைவரும் புலிகள் என்று கூறி மகிந்த தப்பி விடுவார் என்று ஒரு நிமிடம் ஆதங்கப்பட்டேன் தான். ஆனால் மற்றவர்களுக்கு தான் மக்கள் வேறு புலிகள் வேறு. எம்மை பொறுத்தவரை மக்களும் புலிகளும் ஒன்று தான். இதனை தலைவரே கூறியுள்ளார். வன்னியில் ஆயுத போராட்டம் நடந்தது. இங்கு ஆயுதம் இல்லாமல் போராட்டம் நடக்கிறது. என்றாலும் போராடும் அனைவரும் போராளிகள் தான். எனவே எமக்கான கொடி புலிக்கொடி தான். எமக்கென்று இன்னும் நாடு இல்லை. நாம் அகதிகளாக இருக்கிறோம். எனினும் எமக்கு தேசிய கொடி உள்ளது. அதை பிடிக்க ஏன் தயங்க வேண்டும்.

தமிழரசு அண்ணா, சகாறா அக்கா, நெடுக்ஸ் அண்ணா, மற்றும் பலர் கூறியிருப்பது போல் எம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி காட்டுவது புலிக்கொடி தான்.

இதனை நாம் ஏந்தாமல் விட்டால் அத்தருணத்தை சிங்களவர்கள் பயன்படுத்தி விடுவார்கள். அருகிலிருந்து பார்க்கும்போது நாம் தாங்கியுள்ள பதாகைகள் போர்குற்ற படங்கள் ஏனையோருக்கு தெரிந்தாலும் தூரநோக்கிற்கு அவை தெரியாது. அத்தருணத்தில் கொடியை வைத்து தான் எந்த இன மக்கள் என்று கணிப்பார்கள். இந்நிலையில் நாம் கொடியை ஏந்தாமல் சிங்களவர்கள் தமது கொடியை ஏந்தினால் நடந்தது அவர்கள் போராட்டம் போல் தோற்றமளித்து விடும்.

கருத்து கந்தசாமி அண்ணா கூட குறிப்பிட்டார். இம்முறையும் சிங்களவர்கள் சிலர் தமது கொடியை ஏந்தியிருந்தார்கள் என்று.

சில சிங்கள நாயள் சிங்கக்கொடியோட நிண்டவ தானே. அவையின்ர நிலமை என்ன மாதிரி? இப்பவும் நிக்கினமா?

எமது கொடி பரவலாக இருந்ததால் தான் சிங்க கொடி புகைப்படங்களில் விழாமல் மறைக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் சிங்க கொடி மட்டும் தான் புகைப்படங்களில் தெரிந்திருக்கும்.

மகிந்த இனி என்ன சொன்னாலும் எம்மை அகதிகளாக ஏற்றுக்கொண்ட அனைத்து நாடுகளுக்கும் எம் பிரச்சினை தெரியும். எனவே அவர்கள் விரும்பினால் கூட அவர்களால் எதுவும் சொல்ல முடியாது. இதுவரை புலிக்கொடி பிடிப்பது பிழை என்று நாம் தான் கூறிக்கொண்டிருக்கிறோமே தவிர எந்த நாட்டு அரசாங்கமும் பேரணிகளில் புலிக்கொடி பிடிக்க வேண்டாம் என்று கேட்கவில்லை. மீறி கேட்டாலும் இக்கொடிகளில் ஆயுத படம் அகற்றப்பட்டு தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற வாசகமும் அகற்றப்பட்டிருப்பதால் இது மக்களுக்கான கொடி என்று நாமும் சந்தர்ப்பத்திற்கேற்ப அவர்களுக்கு பதில் கூறலாம்.

நேற்று படங்களிலும் காணொளிகளிலும் புலிக்கொடியை பார்த்தவுடன் என்னையறியாமலேயே எனக்கு ஓர் போராட்ட உணர்வு அதிகரித்தது. எனவே திக்கு திக்காக உள்ள மக்களையும் ஒன்று சேர்க்கும் சக்தி புலிக்கொடிக்கு உண்டு.

புலிக்கொடியை நான் எதிர்க்காவிட்டாலும் ஒரு ஆதங்கத்தை தெரிவித்ததுக்கே நேற்றிலிருந்து ஒழுங்கா எனக்கு நித்திரை வரவில்லை. அப்படியிருக்கும் போது எப்படி ஒரு நாளென்றாலும் என்னால் பேரணியில் புலிக்கொடியை தவிர்க்க முடியும்? நானும் பேரணிக்கு போயிருந்தால் என்னையறியாமலேயே என் கை புலிக்கொடியை ஏந்தியிருக்கும். இந்த நிலை தான் ஏனையோருக்கும் என்று நினைக்கிறேன்.

யார் என்ன கூறினாலும் அவர்கள் கூற்று சரியாக இருந்தாலும் நான் புலிக்கொடி ஏந்துவதை தான் ஆதரிப்பேன். இந்த கொள்கையிலிருந்து என்றும் மாறமாட்டேன் என்று இந்த நிமிடமே உறுதி எடுத்துக்கொள்கிறேன். :) :) :)

மக்களே நீங்களும் இனி குழம்பாமல் இதேபோல் உறுதியெடுங்கள். :lol: :lol:

இதை சொல்லாமல் எனக்கு நித்திரை வராதாம். :( :( :( அது தான் சொல்லிப்போட்டு தூங்க செல்ல போறன். :)

Link to comment
Share on other sites

ஒரு தமிழீழ குடிமகனுக்கு மொழி, கலாச்சாரம், பூர்வீகம் என்பன உள்ளது போன்றே அவனுக்கு ஒரு கொடியும் உள்ளது.

அதை யாருமே மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த கொடியை அவன் பிடிப்பது அவனது அடிப்படை மனித உரிமை.

Link to comment
Share on other sites

ஒரு தமிழீழ குடிமகனுக்கு மொழி, கலாச்சாரம், பூர்வீகம் என்பன உள்ளது போன்றே அவனுக்கு ஒரு கொடியும் உள்ளது.

அதை யாருமே மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த கொடியை அவன் பிடிப்பது அவனது அடிப்படை மனித உரிமை.

ஆம் அண்ணா,

கொடியை பிடிப்பதை தற்காலிகமாக தவிர்ப்பது சரியா பிழையா என்று நேற்று ஓர் குழப்ப நிலை இருந்தது. பலர் தெளிவாக தான் இருந்தார்கள். இப்ப நானும் தெளிவாகி விட்டேன். இன்னும் குழப்பமுள்ளவர்கள் இனி தெளிவடைய வேண்டும்.

நன்றி உங்கள் கருத்துக்கு. :)

இனி எனக்கு நித்திரை வரும். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனின் நிலைமை இப்படித்தான் இருக்கும் காதல், வேண்டுமானால் அர்ஜுன் போன்றோர் விதண்டவாதத்திற்கு குதர்க்கமாக எழுதலாம் ஆனால் அது யதார்த்தம் இல்லை அடிமனதில் இருந்து வருபவை கிடையாது அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் அவரை எழுத தூண்டியிருக்கும் மற்றபடி அவரும் ஒருகாலத்தில் தமிழீழம் கேட்க புறப்பட்டவர் ஆகையால் அவருக்கும் தமிழ் ஈழ தேசியக்கொடியிலும் தமிழ் ஈழம் பெறவேண்டும் என்பதிலும் அவருக்கும் விருப்பம் இருக்கும் அதைக்காட்ட எதோ ஒன்று அவரை விடுகுது இல்லை காலப்போக்கில் அவர்களும் புரிந்து கொள்வார்கள் என்பதே எனது எண்ணம் .

Link to comment
Share on other sites

ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனின் நிலைமை இப்படித்தான் இருக்கும் காதல்

ஆம் தமிழரசு அண்ணா. :)

வேண்டுமானால் அர்ஜுன் போன்றோர் விதண்டவாதத்திற்கு குதர்க்கமாக எழுதலாம் ஆனால் அது யதார்த்தம் இல்லை அடிமனதில் இருந்து வருபவை கிடையாது அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்கள் அவரை எழுத தூண்டியிருக்கும் மற்றபடி அவரும் ஒருகாலத்தில் தமிழீழம் கேட்க புறப்பட்டவர் ஆகையால் அவருக்கும் தமிழ் ஈழ தேசியக்கொடியிலும் தமிழ் ஈழம் பெறவேண்டும் என்பதிலும் அவருக்கும் விருப்பம் இருக்கும் அதைக்காட்ட எதோ ஒன்று அவரை விடுகுது இல்லை காலப்போக்கில் அவர்களும் புரிந்து கொள்வார்கள் என்பதே எனது எண்ணம் .

அர்ஜுன் அண்ணா மக்களுக்காக தானே போராட வெளிக்கிட்டவர்? அப்படிப்பட்டவர் மக்கள் எந்த அமைப்பை ஏற்றுக்கொள்கிறார்களோ அதை ஆதரவளிப்பதே சிறந்தது. அதை விடுத்து தமது பகையை காரணம் காட்டி அதே மக்களுக்கு எதிராக செயற்பட்டால் அவர் பக்கம் நியாயம் இல்லையே.

பகையுணர்வு என்பது அர்ஜுன் அண்ணாவின் ரத்தத்தில் ஊறி விட்டது. அதிலிருந்து இப்போதைக்கு அவர் மீள்வார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் தன கருத்துகளால் குழப்ப நிலையில் உள்ள மக்களை அவர் திசை திருப்புகிறார். நாளைக்கு அர்ஜுன் அண்ணா பகையை மறந்து புலிகளுக்கு ஆதரவளித்தாலும் அவர் கருத்துகளால் திசை திரும்பிய மக்கள் பலரையும் மாற்ற முடியாது.அவர்கள் எதிராகவே செயற்படுவார்கள். :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் தமிழரசு அண்ணா. :)

அர்ஜுன் அண்ணா மக்களுக்காக தானே போராட வெளிக்கிட்டவர்? அப்படிப்பட்டவர் மக்கள் எந்த அமைப்பை ஏற்றுக்கொள்கிறார்களோ அதை ஆதரவளிப்பதே சிறந்தது. அதை விடுத்து தமது பகையை காரணம் காட்டி அதே மக்களுக்கு எதிராக செயற்பட்டால் அவர் பக்கம் நியாயம் இல்லையே.

பகையுணர்வு என்பது அர்ஜுன் அண்ணாவின் ரத்தத்தில் ஊறி விட்டது. அதிலிருந்து இப்போதைக்கு அவர் மீள்வார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் தன கருத்துகளால் குழப்ப நிலையில் உள்ள மக்களை அவர் திசை திருப்புகிறார். நாளைக்கு அர்ஜுன் அண்ணா பகையை மறந்து புலிகளுக்கு ஆதரவளித்தாலும் அவர் கருத்துகளால் திசை திரும்பிய மக்கள் பலரையும் மாற்ற முடியாது.அவர்கள் எதிராகவே செயற்படுவார்கள். :(

இந்த கருத்தினை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்கின்றேன் . :)

Link to comment
Share on other sites

காதல் மிக குழந்தைதனமாக சிந்திக்கின்றீர்கள் .குழந்தையோ தெரியாது .

புலம் பெயர்ந்தும் வந்துவிட்டீர்கள் இனியும் நேர் கோட்டு சிந்தனையை தவிர்ப்பது நல்லது .ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆயிரம் சிந்தனைகள் உதிக்கட்டும் என்பார்கள் .புலம் பெயர்ந்து வந்தும் ஓரளவு ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தும் மாற்று கருத்து என்று ஒன்று இருக்க கூடாது என்று நினைக்கின்றீர்கள் .

யாழ் எத்தனையோ விதமான தலைப்புகளில் பதிவுகளை உள்வாங்குகின்றது .சினிமா ,விளையாட்டு ,சாப்பாடு ,சமூக சாரளம் இப்படி எல்லாவற்றிலும் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை பலரும் முன் வைக்கின்றார்கள் .ஒருவர் இரத்தவறை பற்றி எழுத இன்னொருவர் மரக்கறி மட்டும் சாப்பிடுவராக இருக்கின்றார் ஆனால் இருவரும் நண்பர்களாக இருக்கின்றார்கள் .

அரசியல் என்று வரும்போது மாற்று கருத்து வைப்பவனை அவன் சரியாக இருக்குமோ என்று ஒரு கணமும் சிந்திக்காது ஆளை போட்டு தள்ளவேண்டும் என்ற லெவலில் எழுதுகின்றீர்கள் .

ஒரு கொடியை காட்டி ராஜபக்சாவை லண்டனில் அவமதித்து என்னவோ தமிழிழதிற்கான ஒரு படி என நினைக்கின்றீர்கள் .முப்படையும் வைத்திருந்த உங்கள் தலைவராலேயே ஒன்றும் முடியாமல் போய்விட்டது.

தனிநபர்களை,எதிரிகளை பழி வாங்கி நாம் ஒரு சிறு சந்தோசம் கொள்ளலாமே தவிர எமது மக்களின் விடுதலைக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமுமில்லை .நீங்கள் கொடியோடு போங்கள் விரும்பினால் மொன்றியலில் மாணவர்கள் போவது போல நிர்வாணமாகவும் செல்லுங்கள் அது உங்கள் விருப்பம் ,அதே போல உது வேலைக்காகாது என்று சொல்வதும் எங்கள் விருப்பம் .

கடந்த முப்பதுவருடங்களில் கண்ணுக்கு முன்னே பிழையாக போகின்றீர்கள் என்று சொல்ல சொல்ல கேட்காமல் போனவர்கள் பலர் அழிந்ததை நேரே பார்த்தோம் .அதையே தான் இப்பவும் சொல்லுகின்றோம் .கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பம் .

எல்லாவற்றிலும் முக்கியம் எமது போராட்டத்தில் சுத்துபவன்,வேஷம் போடுபவன் ,நாடகம் நடிப்பவனை நம்பி நடு றோட்டில் நின்றவர்கள் தான் பலர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல் மிக குழந்தைதனமாக சிந்திக்கின்றீர்கள் .குழந்தையோ தெரியாது .

புலம் பெயர்ந்தும் வந்துவிட்டீர்கள் இனியும் நேர் கோட்டு சிந்தனையை தவிர்ப்பது நல்லது .ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆயிரம் சிந்தனைகள் உதிக்கட்டும் என்பார்கள் .புலம் பெயர்ந்து வந்தும் ஓரளவு ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தும் மாற்று கருத்து என்று ஒன்று இருக்க கூடாது என்று நினைக்கின்றீர்கள் .

யாழ் எத்தனையோ விதமான தலைப்புகளில் பதிவுகளை உள்வாங்குகின்றது .சினிமா ,விளையாட்டு ,சாப்பாடு ,சமூக சாரளம் இப்படி எல்லாவற்றிலும் முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை பலரும் முன் வைக்கின்றார்கள் .ஒருவர் இரத்தவறை பற்றி எழுத இன்னொருவர் மரக்கறி மட்டும் சாப்பிடுவராக இருக்கின்றார் ஆனால் இருவரும் நண்பர்களாக இருக்கின்றார்கள் .

அரசியல் என்று வரும்போது மாற்று கருத்து வைப்பவனை அவன் சரியாக இருக்குமோ என்று ஒரு கணமும் சிந்திக்காது ஆளை போட்டு தள்ளவேண்டும் என்ற லெவலில் எழுதுகின்றீர்கள் .

ஒரு கொடியை காட்டி ராஜபக்சாவை லண்டனில் அவமதித்து என்னவோ தமிழிழதிற்கான ஒரு படி என நினைக்கின்றீர்கள் .முப்படையும் வைத்திருந்த உங்கள் தலைவராலேயே ஒன்றும் முடியாமல் போய்விட்டது.

தனிநபர்களை,எதிரிகளை பழி வாங்கி நாம் ஒரு சிறு சந்தோசம் கொள்ளலாமே தவிர எமது மக்களின் விடுதலைக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமுமில்லை .நீங்கள் கொடியோடு போங்கள் விரும்பினால் மொன்றியலில் மாணவர்கள் போவது போல நிர்வாணமாகவும் செல்லுங்கள் அது உங்கள் விருப்பம் ,அதே போல உது வேலைக்காகாது என்று சொல்வதும் எங்கள் விருப்பம் .

கடந்த முப்பதுவருடங்களில் கண்ணுக்கு முன்னே பிழையாக போகின்றீர்கள் என்று சொல்ல சொல்ல கேட்காமல் போனவர்கள் பலர் அழிந்ததை நேரே பார்த்தோம் .அதையே தான் இப்பவும் சொல்லுகின்றோம் .கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பம் .

எல்லாவற்றிலும் முக்கியம் எமது போராட்டத்தில் சுத்துபவன்,வேஷம் போடுபவன் ,நாடகம் நடிப்பவனை நம்பி நடு றோட்டில் நின்றவர்கள் தான் பலர் .

இந்த வகையாக ஜனனாயகத்தைப் போதிக்கும் இந்த மாதனமுத்தா தன் தனி ஒருவனின் கருத்தை ஆயிரம் பேர்களாக மறுதலிக்கட்டும் அவர்களை மண்டை களண்டதுகளாக பிரகடனம் செய்வார்! அண்ணர் ஜனனாயகத்தின் நாற்றத்தை இனி வேறு எங்கே நாம் பார்க்க வேண்டும்?

ஆனதுகள் தமக்கு ஆனதான மதிப்பை எதிர்பார்ப்பதும் இல்லை அப்படி ஆனதாக மதிக்கப்படுபவர்களைக் கண்டும் பொறாமைப்படுவதும் இல்லை! ஆனால் தகாததுகள் அப்படி அல்ல தம்முள் பொங்கி புழுங்கி வெடித்துவிடும்!

இல்லையேல் கட்டணம் செலுத்தாமல் திருட்டுத்த்தனமாக சாதிப்பதை பெருமையாக வேறு உளறித் திரிகின்ற இந்த அறிவு இவர்களை அன்றி யாருக்கு வரும்?

Link to comment
Share on other sites

மொன்றியலில் மாணவர்கள் போவது போல நிர்வாணமாகவும் செல்லுங்கள் அது உங்கள் விருப்பம் ,அதே போல உது வேலைக்காகாது என்று சொல்வதும் எங்கள் விருப்பம் .

மேற்கு நாட்டு சுதந்திரங்களை நாம் எமது கருத்து எழுதும் சந்தர்பங்களில் அனுபவிக்கிறோம். ஆனால் அது நாம் மேலை நாடுகளை கொப்பி பண்ணித்தான் ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்காது. எதற்கும் யாழில் பதில் போடும் போது, நம்ம(தமிழர்) பாணியில், ஒரு தங்கை, ஒரு தாய்குலத்தின் கருத்துக்கு முதிர்ச்சியான பதிலை அளிப்பதற்கு பின் வாங்க கூடாது. தங்கள் குடும்ப படத்தை ஒரு உறவு இங்கே போட்டதற்கு பல உறவுகள் பொங்கி எழுந்தார்கள். இது கருத்துக்களம் மட்டும் அல்ல "யாழ்". அதாவது உறவுக்களம்.

Link to comment
Share on other sites

காதல் மிக குழந்தைதனமாக சிந்திக்கின்றீர்கள் .குழந்தையோ தெரியாது .

உங்கள் வயதுடன் ஒப்பிடும் பொழுது நான் குழந்தை தான் அண்ணா. ஆனால் இந்த குழந்தை கூட தமிழீழ விடயத்தில் உங்களை விட அக்கறையாக இருக்கிறது.

புலம் பெயர்ந்தும் வந்துவிட்டீர்கள் இனியும் நேர் கோட்டு சிந்தனையை தவிர்ப்பது நல்லது . ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆயிரம் சிந்தனைகள் உதிக்கட்டும் என்பார்கள் .புலம் பெயர்ந்து வந்தும் ஓரளவு ஜனநாயக நாடுகளில் வாழ்ந்தும் மாற்று கருத்து என்று ஒன்று இருக்க கூடாது என்று நினைக்கின்றீர்கள் .

போன வருட நடுப்பகுதியில் தான் அண்ணா வந்தேன். இங்கு யாருமே எனக்கு எதுவும் சொல்லித்தரும் நிலை இல்லாத போதும் புலம்பெயர் தேசம் பற்றி குறுகிய இந்த காலத்தில் நான் அறிந்ததே மேல் என்று நினைக்கிறேன்.

அரசியல் என்று வரும்போது மாற்று கருத்து வைப்பவனை அவன் சரியாக இருக்குமோ என்று ஒரு கணமும் சிந்திக்காது ஆளை போட்டு தள்ளவேண்டும் என்ற லெவலில் எழுதுகின்றீர்கள் .

இங்கு ஆளைப்போட்டு தள்ளவேண்டும் என்ற லெவலில் எங்கு எழுதியுள்ளேன் என்று கொஞ்சம் சொல்வீர்களா?

மாறாக புலம்பெயர் தேசத்தில் ஆளைப்போட்டுத்தள்ளுவது பிழை என்ற ரீதியில் தான் ஓரிடத்தில் கருத்தை எழுதியுள்ளேன். எனக்கு சிலவேளை கண்களில் பழுதோ தெரியவில்லை.

சூடு சுரணை இருந்தாலும் இது எம்மால் இலகுவில் முடியாத ஒரு காரியம்.

இப்படியானவர்களை இனங்காண்பது கடினம். இனங்கண்டாலும் புலம்பெயர் தேசத்தில் அவர்களுக்கெதிரான நடவடிக்கை எடுப்பது கடினம். ஏனென்றால் எதற்கும் ஆதாரம் தேவை. மீறி கொலை செய்தால் கொலை செய்பவர் ஜெயிலுக்குள் சென்று இருக்க வேண்டியது தான். எத்தனை பேரை கொலை செய்து எத்தனை பேர் ஜெயிலுக்கு போவது. :unsure: அப்படி போன பின் கூட காட்டிக்கொடுப்பவர்கள் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள். :wub:

எனவே சூடு சுரணை இல்லாமல் என்பதை விட எமது இயலாமையினால் அவர்களை விட்டுவைத்துள்ளோம் என்று கூறலாம். :(

ஒரு கொடியை காட்டி ராஜபக்சாவை லண்டனில் அவமதித்து என்னவோ தமிழிழதிற்கான ஒரு படி என நினைக்கின்றீர்கள் .முப்படையும் வைத்திருந்த உங்கள் தலைவராலேயே ஒன்றும் முடியாமல் போய்விட்டது.

தனிநபர்களை,எதிரிகளை பழி வாங்கி நாம் ஒரு சிறு சந்தோசம் கொள்ளலாமே தவிர எமது மக்களின் விடுதலைக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமுமில்லை .நீங்கள் கொடியோடு போங்கள் விரும்பினால் மொன்றியலில் மாணவர்கள் போவது போல நிர்வாணமாகவும் செல்லுங்கள் அது உங்கள் விருப்பம் ,அதே போல உது வேலைக்காகாது என்று சொல்வதும் எங்கள் விருப்பம் .

கடந்த முப்பதுவருடங்களில் கண்ணுக்கு முன்னே பிழையாக போகின்றீர்கள் என்று சொல்ல சொல்ல கேட்காமல் போனவர்கள் பலர் அழிந்ததை நேரே பார்த்தோம் .அதையே தான் இப்பவும் சொல்லுகின்றோம் .கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பம் .

மேலே மல்லையூரான் அண்ணாவின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்கள் கருத்துகளை கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.

முப்படையும் வைத்திருந்ததே எங்கள் தலைவரால் முடிந்ததால் தான். முடிந்தால் கூறுங்கள் வேறெந்த நாட்டில் அரசாங்கத்திற்கெதிராக போராடும் அமைப்பிடம் முப்படை உள்ளதென்று. இங்கு உலகநாடுகளின் ஆதரவில்லாதிருந்தால் போரிலும் சிங்களப்படை தலைவரை நெருங்கியிருக்க முடியாது.

கொடியோடு போவது வேலைக்காகாது என்றால் கொடி இல்லாமல் போனாலும் வேலைக்காகாது தான் அண்ணா. இங்கு கொடியோடு போனாலாவது நாம் தமிழினம் என்றும் எமக்கு நீதி வேண்டும் என்றும் கேட்டு போராடுகிறோம் என்றாவது விளங்கிக்கொள்வார்கள்.

எல்லாவற்றிலும் முக்கியம் எமது போராட்டத்தில் சுத்துபவன்,வேஷம் போடுபவன் ,நாடகம் நடிப்பவனை நம்பி நடு றோட்டில் நின்றவர்கள் தான் பலர் .

அது தான் அண்ணா எங்களுக்கும் பயமாக இருக்கிறது. உங்கள் வார்த்தைகளை கண்டு திசை திரும்பி பலர் நடு ரோட்டில் நின்று விடுவார்களோ என்று. இது பற்றி மேலே நான் எழுதியுள்ள கருத்திலும் குறிப்பிட்டுள்ளேன்.

பகையுணர்வு என்பது அர்ஜுன் அண்ணாவின் ரத்தத்தில் ஊறி விட்டது. அதிலிருந்து இப்போதைக்கு அவர் மீள்வார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் தன கருத்துகளால் குழப்ப நிலையில் உள்ள மக்களை அவர் திசை திருப்புகிறார். நாளைக்கு அர்ஜுன் அண்ணா பகையை மறந்து புலிகளுக்கு ஆதரவளித்தாலும் அவர் கருத்துகளால் திசை திரும்பிய மக்கள் பலரையும் மாற்ற முடியாது.அவர்கள் எதிராகவே செயற்படுவார்கள். :(

Link to comment
Share on other sites

மொன்றியலில் மாணவர்கள் போவது போல நிர்வாணமாகவும் செல்லுங்கள் அது உங்கள் விருப்பம்,.

"பன்றிக்கு கனவிலும் குப்பையை கிளருவதுபோல் தான் கனவு வருமாம்" என்று ஒரு பழமொழி உண்டு. இன்னொன்றும் சொல்வார்கள் அது இன்னும் மட்டரகமானது.

Link to comment
Share on other sites

[size=3]snapback.pngarjun, on 05 June 2012 - 08:10 AM, said:[/size]

[size=4]புலிகளின் அழிவு எனக்கு மட்டுமல்ல எத்தனோயோ தமிழர்களுக்கு மகிழ்சியையே தந்தது . புலிகள் என்ற வட்டத்திற்குள் நின்று பார்த்தால் புலிகள் தான் தமிழர்,புலிகள் தான் உலகமாகவும் தெரியும் .

நாங்கள் தேடுவது எமது இனத்திற்கான இருப்பு .நீங்கள் தேடுவது புலிகளுக்கான அங்கீகாரம் .சர்வதேசம் புலிகளை எப்போ தடை செய்ய தொடங்கியதோ அப்போதே புலிகளின் கதை முடிந்துவிட்டது .

வேறு எங்கும் போகவேண்டாம்.மனித உரிமைகள் அமைப்பு அறிக்கைகள். U.N.அறிக்கைகளை வாசியுங்கள்(விளங்கினால் ) நாங்கள் எங்கே நிற்கின்றோம் என்று விளங்கும் .

புலிகள் வன்னிக்கு இடம் பெயர்ந்த பின் யாழ்பாணம் ஒன்றும் அழிந்து போகவுமில்லை அங்கிருக்கும் மக்கள் அதுபற்றி பெரிதாக கவலைபடவுமில்லை .

புலிகள் என்ற வட்டத்திற்குள் நின்று வெளியில் வராமல் தமிழனுக்கு விடிவு இல்லை என்று தேசிய கூட்டமைப்பிற்கு நன்கு தெரியும் .

புலிகள் போராடினதும் உண்மை ,உயிர் தியாகம் செய்ததும் உண்மை உலக அரசியல் தெரியாததும் உண்மை.

அதையெல்லாம் கடந்து எமக்கான தீர்வு அவசியம் ,அங்கேயே நின்று அதே இடத்தில் தொங்கிக்கொண்டிருக்கமுடியாது .

ஊர்வலம் போனது ,கொடி பிடித்தது 80 களிலேயே நாங்கள் செய்ய தொடங்கிவிட்டோம் .எத்தனை ஊர்வலம் HYDE PARK ,LANGASTER GATE இல் செய்தோம்.தனிய எமது போராட்டத்திற்கு மட்டுமல்ல P.L.O, A.N.C ஊர்வலங்களும் போன ஆட்கள் நாங்கள் .[/size]

இப்படி வெட்டிப்பேச்சு பேசிய ஆட்கள் பலரை தெரியும்.ஒன்றுமே செய்ய மாட்டார்கள் உருப்படியாக.ஆனால் புலிகளில் பிழை பிடிக்க வேண்டும் என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள் இவர்கள்.புலிகளின் பிரசன்னம் இல்லாமல் போய் 3 வருடத்துக்கு மேலாகி விட்டது. மக்களுக்காக பாடுபட நினைப்பவர்களுக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன.செய்தததோ ஒன்றுமில்லை.உங்களின் கூட்டத்தில் ஒருவர் தான் சித்தார்த்தன்.தமிழ் மக்களுக்கு செய்த ஒரு செயலை உங்களால் கூறமுடியுமா? அறிக்கைகளுக்கு மட்டும் குறைவில்லை.

புலிகளின் குழந்தை போராளிகள் பற்றி வாய் கிழிய கத்திய மன்னிப்பு சபைகள் , ஏனைய சர்வதேச அமைப்புகள் சரணடைந்த போராளிகள்,வெள்ளை கொடியுடன் சரணடைந்த போராளிகள் கொல்லப்பட்டது

இன்று நடக்கும் கொலைகள் ,கடத்தல்கள்,பாலியல் வல்லுறவுகள் எல்லாவற்றுக்கும் மேலாக பல ஆயிரம் ஆயுதப்படை சாதாரண மக்கள் மத்தியில் ஏன் இருக்க வேண்டும் போன்றவை பற்றி வாய்மூடி ஏன் மௌனியாக இருக்கிறார்கள் என உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கவில்லையா?? மனச்சாட்சி, பொது அறிவு இதற்கு போதுமானது.

புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்த நாடுகள் ஆப்கான்,ஈராக் போன்ற நாடுகளில் செய்த மனித அவலங்கள் பற்றி யார் பேசுவது? அல்லது கண்டும் காணாமல் விடுவதா? இவர்கள் ஏனையவர்களை பயங்கரவாதிகளாக பெயரிட இவர்களுக்கு அருகதை உள்ளதா? மேற்கு நாடுகள் செய்வன எல்லாம் சரி என ஏன் இழிச்ச வாய்களாக இருக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

"பன்றிக்கு கனவிலும் குப்பையை கிளருவதுபோல் தான் கனவு வருமாம்" என்று ஒரு பழமொழி உண்டு. இன்னொன்றும் சொல்வார்கள் அது இன்னும் மட்டரகமானது.

[size=2][size=4]பண்டி கிளற வெளிக்கிட்டுவிட்டது...........நாங்களும் சேர்ந்து கிண்டுவம்....[/size]....... :D:icon_idea: [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.