Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    85545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. இறால் மாங்காய் குழம்பு என்னென்ன தேவை? இறால் - 1/2 கிலோ, நீளவாக்கில் நறுக்கிய மாங்காய் துண்டுகள் - 4, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 200 கிராம், பச்சைமிளகாய் - 5, தக்காளி - 2, புளி - 50 கிராம், தேங்காய் - 1/2 மூடி, காய்ந்தமிளகாய் - 5, மிளகாய்த்தூள் - 50 கிராம், தனியாத்தூள் - 40 கிராம், மஞ்சள் தூள் - 10 கிராம், சீரகத்தூள் - 30 கிராம், கடுகு - 10 கிராம், வெந்தயம் - 10 கிராம், நல்லெண்ணெய் - 200 மி.லி., உப்பு, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தேவைக்கு. எப்படிச் செய்வது? இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். மிக்சியில் தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்துக் கொள்ளவும். புளியை கரைத்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கிள்ளிய காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இறால், தக்காளி, பச்சைமிளகாய், மாங்காய், புளிக்கரைசல், மசாலா தூள் வகைகள் போட்டு கிளறி கொதிக்க விடவும். கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி கெட்டியாக கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும். http://www.dinakaran.com
  2. ஜீரண சக்தியை அதிகரிக்கும் இஞ்சி ரசம் அ-அ+ அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி ரசத்தை செய்து சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதை சூப்பாகவும் பருகலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : துவரம்பருப்பு - கால் கப் பூண்டு - 5 பல் மிளகு - 2 டீஸ்பூன் இஞ்சி - சிறிதளவு மஞ்சள் தூள் - சிறிதளவு சீரகம் - 1 ஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு எலுமிச்சை சாறு - சிறிதளவு உப்பு - தேவைக்கு கடுகு - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை : துவரம் பருப்பை வேக வைத்து தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சி, மிளகு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, மிளகை போட்டு வதக்க வேண்டும். அதனுடன் பருப்பு வேக வைத்த தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். மசாலா தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான இஞ்சி ரசம் ரெடி. இந்த ரசத்தை குடிக்கவும் செய்யலாம். சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம். https://www.maalaimalar.com
  3. தயிர் சாதத்திற்கு அருமையான நெல்லிக்காய் ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லிக்காய் ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் - 10 எலுமிச்சம்பழம் - 5 வெந்தயம் - 1/2 தேக்கரண்டி சீரகம் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி எண்ணெய் - 1/4 கோப்பை மிளகாய்த்தூள் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை : நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்கவும். நெல்லிக்காய் சூடு ஆறியதும், பல் பல்லாக உதிர்த்து கொட்டை நீக்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும். வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து ஆறியதும் தூளாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்கவும். தாளித்த பொருட்களை ஊறுகாயுடன் சேர்த்து உடனடியாக பரிமாறவும். சூப்பரான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி. https://www.maalaimalar.com
  4. இரவுக்கு ஆயிரம் கண்கள்... ’குலமகள் ராதை’ பாடல்! இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்? எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்? இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
  5. பாகற்காய் பக்கோடா என்னென்ன தேவை? பாகற்காய் - 1/4 கிலோ, கேழ்வரகு மாவு - 1/4 கிலோ, மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? பாகற்காயை சிறு சிறு வில்லைகளாக நறுக்கிகொள்ளவும். கேழ்வரகு மாவில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பாகற்காயை கேழ்வரகு கலவையில் கலந்து பக்கோடா போல் போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும். கருணைக்கிழங்கு பொரியல் என்னென்ன தேவை? கருணைக்கிழங்கு - 1/4 கிலோ, தக்காளி - 2, வெங்காயம் - 2, முழு பூண்டு - 1, மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? குக்கரில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் உப்பு, மிளகாய்த்தூள், கருணைக்கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விடவும். விசில் சத்தம் அடங்கியதும் கருணைக்கிழங்கு பொரியலை சாதத்துடன் பரிமாறவும். வாழைப்பூ கூட்டு என்னென்ன தேவை? சுத்தம் செய்த வாழைப்பூ - 1 கப், துவரம் பருப்பு - 1/2 கப், தேங்காய்த்துருவல் - 1 கப், தக்காளி - 2, முழு பூண்டு - 1, வெங்காயம் - 2, காய்ந்தமிளகாய் - 2, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? நறுக்கிய வாழைப்பூ, துவரம் பருப்பு இவற்றை தனித்தனியே வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், காய்ந்தமிளகாய், நறுக்கிய தக்காளி, இடித்த பூண்டு, உப்பு சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் வாழைப்பூ, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து இறக்கி சாதத்துடன் பரிமாறவும். அத்திக்காய் பொரியல் என்னென்ன தேவை? அத்திக்காய் - 1 கப், பயத்தம் பருப்பு - 1/4 கப், தக்காளி - 2, முழு பூண்டு - 1, வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 4, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. எப்படிச் செய்வது? அத்திக்காயை இடித்து விதைகளை நீக்கி கழுவி வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, இடித்த பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, பின்பு பயத்தம்பருப்பு, அத்திக்காய் சேர்த்து வதக்கி, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் அத்திக்காய் பொரியலை சாதத்துடன் பரிமாறவும். http://kungumam.co.in
  6. ஆப்பத்திற்கு அருமையான முட்டை குருமா சப்பாத்தி, பூரி, ஆப்பம், தோசை, இட்லிக்கு சூப்பராக இருக்கும் முட்டை குருமா. இன்று முட்டை குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை - 6 கெட்டியான தேங்காய் பால் - 1 கப் பச்சைமிளகாய் - 8 இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன் மஞ்சள் தூள் - கால்ஸ்பூன் சீரகத்தூள் - 1 ஸ்பூன் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி - தலா 1 கொத்தமல்லி - கால் கப் வெங்காயம் - 5 எண்ணெய் - ஒரு குழிகரண்டி கொத்தமல்லி - ஒரு கொத்து செய்முறை : வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சைவாசனை போனதும் மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்க்கவும். பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும். சூப்பரான பூரிக்கு அருமையான முட்டை குருமா ரெடி. குறிப்பு - கெட்டியான தேங்காய் பால் தான் சேர்க்க வேண்டும். தேங்காய் விழுது சேர்க்க கூடாது. https://www.maalaimalar.com/
  7. சப்பாத்திக்கு அருமையான எள்ளு மட்டன் கிரேவி தோசை, இட்லி, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எள்ளு மட்டன் கிரேவி. இந்த இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரைக் கிலோ தயிர் - 2 தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி எள் - 2 தேக்கரண்டி கிராம்பு - 2 முந்திரி - 6, பட்டை - சிறு துண்டு வெங்காயம் - 3 தக்காளி - 3 பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 8 சீரகம் - ஒரு தேக்கரண்டி பூண்டு - 10 எண்ணெய் - தேவையான அளவு இஞ்சி - சிறிய துண்டு இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி செய்முறை : மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். கொத்தமல்லி, 1 தக்காளி, 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும். கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக‌ வைக்கவும். வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, முந்திரி, சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் 1 வெங்காயம், காய்ந்த‌ மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய 1 தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள‌ வெங்காய‌ மசாலா கலவை, அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அதனுடன் வேக‌ வைத்த‌ மட்டனை சேர்க்கவும். மட்டன் வேக‌ வைத்த‌ தண்ணீர் மற்றும் தேவையான‌ அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விடவும். நன்கு கொதித்த‌ பின்னர் கொத்த‌மல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான‌ எள்ளு மட்டன் கிரேவி தயார். https://www.maalaimalar.com
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா.
  9. ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி அ-அ+ சிறுதானியங்களில் சிறப்பு மிக்க சாமையில் கஞ்சி தயாரிப்பது எளிது. இதில் காய்கறிகள், மசாலா கலந்து செய்தால் சுவை இரட்டிப்பாகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் சாமை - 50 கிராம் பயத்தம் பருப்பு - 50 கிராம் வெங்காயம் - 1 ப.மிளகாய் - 2 இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன் தேங்காய் பால்- 1 கப் கேரட், பீன்ஸ் - கால் கப் மஞ்சள் தூள் - சிறிதளவு மிளகு தூள் - அரை தேக்கரண்டி தனியா தூள் - கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப தாளிக்க : பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கடுகு. செய்முறை : சாமை அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும். பயத்தம் பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.. வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதில் பயத்தம் பருப்பு, சாமை, பாதியளவு மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கி விடவும். விசில் போனவுடன் மூடியை திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும். பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். கடைசியாக எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் சேர்த்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி ரெடி. https://www.maalaimalar.com பால்சுறா குழம்பு தேவையான பொருட்கள் : பால் சுறா - 250 கிராம் தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்) புளி - ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு புளி அதிகம் தேவையில்லை) பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்) சீரகம் - 2 டீஸ்பூன் மிளகு - ஒரு டீஸ்பூன் மல்லி (தனியா) - 2 டீஸ்பூன் சுக்கு - ஒரு சிறிய துண்டு (அம்மியில் வைத்துத் தட்டவும்) காய்ந்த மிளகாய் - ஒன்று கடுகு - ஒரு டீஸ்பூன் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை : புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும். பூண்டைத் தட்டிக்கொள்ளவும். தேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா), தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். தட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். அதிகம் கிளற வேண்டாம். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும். சூப்பரான பால்சுறா குழம்பு ரெடி. https://www.maalaimalar.com/
  10. பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன் May 2, 2018 பன்னிரு ஆண்டுகள் கடந்தும் நிழலாடும் நினைவுகளுடன் கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் முன்னிரவு வேளையில் ‘உதயன்’ செய்தி நிறுவனத்தில் தலைமையகத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்தனர். முன்னாள் விற்பனை முகாமையாளர் ஜோர்ஜ் சாகாயதாஸ், விநியோகப் பகுதிப் பணியாளர் ரஞ்சித்குமார் ஆகிய இருவருமே அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு பணியாளர்கள் படுகாயமடைந்தனர். உதயனின் சொத்துக்கள் பலவும் துப்பாக்கிச் சன்னங்களுக்கு இரையாக்கப்பட்டு பெரும் பொருள் சேதம் கொடுக்கப்பட்டது. http://newuthayan.com/story/89649.html
  11. சூப்பரான வடு மாங்காய் ஊறுகாய் அ-அ+ தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வடு மாங்காய் ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பிஞ்சு மாங்காய்கள் - ஒரு கிலோ மிளகாய்ப்பொடி - 50 கிராம் கடுகு பொடி - 25 கிராம் நல்லெண்ணெய் - 4 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை மாங்காய் காம்களை நீக்கி நன்கு கழுவித்துடைத்து ஈரமில்லாமல் வைக்கவும். இந்த வடு மாங்காயில் நல்லெண்ணெய் போட்டு பிரட்டி, கடுகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மேலாக பரவலாகப் போட்டு காற்று போகாமல் மூடி வைக்கவும். தினமும் ஒருமுறை குலுக்கி விடவும். நன்றாக ஊற 10 நாட்களாவது ஆகும். 10 நாட்கள் கழித்து எடுத்து சாப்பிடலாம். சூப்பரான வடு மாங்காய் ஊறுகாய் ரெடி. https://www.maalaimalar.com
  12. சூப்பரான இறால் ஊறுகாய் செய்வது எப்படி அ-அ+ எலுமிச்சை, மாங்காய், வடுமாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அசைவ பிரியர்களுக்கு விருப்பமான இறால் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் இறால் - கால் கிலோ இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 200 கிராம் வினிகர் - 1/2 கப் உப்பு - 1 தேக்கரண்டி வறுத்து பொடிக்க கடுகு - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் வெந்தயம் - 1/2 ஸ்பூன் செய்முறை இறாலை சுத்தமாக கழுவி கொள்ளவும். நன்றாக கழுவிய இறாலில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு பிசறி அரை மணிநேரம் ஊற வைக்கவும். ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறலை போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுத்து ஆற வைக்கவும். இறாலை பொரித்த எண்ணெயுடன் மீதி எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். அடுத்து பொரித்த இறால் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 5 நிமிடம் கிளறி விடவும். பின்பு அதில் வினிகர், உப்பு சேர்த்து இறக்கி விடவும். கடைசியாக அதன் மேல் வறுத்து பொடித்த பொடியை போட்டு நன்றாக கிளறி ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். ஊறுகாய்க்கு மேலே 1 இஞ்ச் உயரத்திற்கு எண்ணெய் இருக்க வேண்டும். பாட்டிலின் வாயை வெள்ளை துணியால் மூடி மூன்று நாள் கழித்து உபயோகப்படுத்தலாம். உப்பு காரம், புளிப்பு போன்றவை அவரவர் ருசிக்கேற்ப்ப சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஊறுகாய் 2 மாதம் வரை கெடாமல் இருக்கும். சூப்பரான இறால் ஊறுகாய் ரெடி. https://www.maalaimalar.com/
  13. கிராமத்து ஸ்பெஷல் உப்புக்கறி ஆயிரம் வகை உணவு இருந்தாலும் உப்புக்கறிக்கு ஈடாகாது. பழைய கஞ்சியை உப்புக்கறியோடு சாப்பிடும்போது சுவையே அலாதியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : வெள்ளாட்டுக்கறி - ஒரு கிலோ எண்ணெய் - 200 மில்லிகிராம் சோம்பு - ஒரு டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 200 கிராம் காய்ந்த மிளகாய் - 150 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தண்ணீர் - 150 மில்லி சீரகம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப உப்பு - தேவையான அளவு செய்முறை : கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும். சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும். மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த ஆட்டுக்கறியை போட்டு வதக்கவும். அடுத்து அதில் சீரகம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறிவிடவும். தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும்வரை மண்சட்டியை மூடிவைக்கவும். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஆட்டுக்கறியில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும். அந்த நேரத்தில், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, இறக்கி சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும். சூப்பரான உப்புக்கறி ரெடி. https://www.maalaimalar.com
  14. பீட்சா ரெசிப்பி இளைய தலைமுறையின் நவீன அடையாளம் பீட்சா. இதன் மேல் அடுக்கில் வைக்கப்படும் டாப்பிங்ஸைப் பொறுத்து இதன் ஊட்டச்சத்துகளும் கலோரிகளும் மாறுபடும். காளான், சீஸ், கீரை, சாஸேஜ், அன்னாசி... இப்படி எதுவும் பீட்சாவுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு ஸ்லைஸ் பீட்சாவின் எடை 100 கிராம் என்றால், அதில் 250 கலோரிகள் இருக்கும். பீட்சாவையும் சுவைக்க வேண்டும், கலோரியும் அதிகமாகக் கூடாது என்றால் என்ன செய்வது? வீட்டிலேயே பீட்சா செய்யும்போது சீஸ் அளவைப் பாதியாகக் குறைக்கலாம். ரெஸ்டாரென்ட்டுகளிலும் `ஹாஃப் சீஸ்’ என்று கேட்டு வாங்கலாம். இதோ... இந்தியத் தன்மையுடன் இன்டர்நேஷனல் சுவை பீட்சா வகைகளை வீட்டிலேயே செய்து ருசிக்கும் விதமாகப் புதுப்புது வொரைட்டிகளில் அழகிய படங்களோடு நமக்களிக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ். ஹரியாலி வீட் பீட்சா தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய: கோதுமை மாவு – ஒன்றரை கப் ஈஸ்ட், சர்க்கரை, உப்பு – தலா ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் – அரை கப் ஆய்ந்த கீரை – ஒரு கப் பச்சை மிளகாய் – 2 எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் டாப்பிங் செய்ய: பேசில் இலைகள் – ஒரு கப் பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் – ஒரு கப் பைன் நட்ஸ் – கால் கப் மொசரல்லா சீஸ் – கால் கப் ஆலிவ் எண்ணெய் – கால் கப்பிலிருந்து அரை கப் வரை ராக்கெட் இலைகள் - சிறிதளவு ஆலிவ் - 10 (நறுக்கவும்) மொசரல்லா சீஸ் துருவல் – ஒன்றரை கப் அலங்கரிக்க: பேசில் இலைகள், ராக்கெட் இலைகள், பார்ஸ்லே இலைகள், பீட்சா சீஸனிங் – சிறிதளவு செய்முறை: கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீருடன் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய்விட்டு மிருதுவாகப் பிசையவும். இதை எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு, மூடி இரண்டு மடங்காகப் பொங்கி வரும் வரை அப்படியே வைக்கவும். பேசில் இலைகளுடன் பார்ஸ்லே இலைகள், பைன் நட்ஸ், கால் கப் மொசரல்லா சீஸ், ஆலிவ் எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதுதான் பெஸ்டோ. மாவை நன்கு அழுத்திப் பிசைந்து இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தை 6 இன்ச் அளவு விட்டத்துக்குச் சப்பாத்தி போல தேய்க்கவும். அதன் மேலே போர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்திவிட்டு பெஸ்டோவைப் பரப்பவும். அதன் மீது சீஸ் துருவலைத் தாராளமாக தூவி, நறுக்கிய ஆலிவ், ராக்கெட் இலைகள் தூவவும். அதன்மீது சிறிதளவு சீஸ் துருவலைத் தூவி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 – 15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்த பிறகு அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி, சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும். பீட்ரூட் ஹம்மஸ் நோ ஈஸ்ட் பான் பீட்சா தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய: மைதா மாவு - 2 கப் பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன் பீட்சா சீஸனிங் – ஒரு டேபிள்ஸ்பூன் பால் – முக்கால் கப் எண்ணெய் – கால் கப் உப்பு – ஒரு டீஸ்பூன் ஹம்மஸ் செய்ய: கொண்டைக்கடலை – முக்கால் கப் பீட்ரூட் – ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்) எள் - 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் - 4/5 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன் உப்பு – அரை டீஸ்பூன் டாப்பிங் செய்ய: பேசில் இலைகள் - சிறிதளவு ஆலிவ் - 10 (நறுக்கவும்) மொசரல்லா சீஸ் துருவல் - 2 கப் சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீஸனிங் - சிறிதளவு செய்முறை: கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் கொண்டைக்கடலையுடன் பீட்ரூட் சேர்த்து வேகவைத்து, 6 - 7 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் திறந்து நீரை வடியவிட்டு, சிறிதளவு கடலையை அலங்கரிக்க தனியாக எடுத்துவைக்கவும். வெறும் வாணலியில் எள்ளைச் சேர்த்து வறுத்து எடுத்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை கலவை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, நடுநடுவே எண்ணெய்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும் (தண்ணீருக்குப் பதிலாக, கடலையை வேகவைத்த தண்ணீரை ஊற்றியும் அரைக்கலாம்). மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு, பீட்சா சீஸனிங், பால், எண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து மூடிவைக்கவும். அரை மணி நேரம் கழித்து மாவை எடுத்து மீண்டும் பிசையவும். பிறகு, மாவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகம் மாவை எடுத்து, சப்பாத்தி போல திரட்டவும். பானை (Pan) சூடாக்கி, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை வேகவிட்டு எடுக்கவும். இதன்மீது கடலைக் கலவையைத் தடவி, மேலே சிறிதளவு சீஸ் துருவலைத் தூவவும். அத்துடன் எடுத்த வைத்த கடலை, ஆலிவ், பேசில் இலைகளைப் பரப்பவும். இறுதியாக மீதமுள்ள சீஸ் துருவலைத் தாராளமாக தூவி அதே பேனில் வைத்து மூடி, மூன்று நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும். மேலே சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீஸனிங்கால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும். சாக்லேட் - ரசகுல்லா பீட்சா தேவையானவை: மைதா மாவு – ஒன்றரை கப் சர்க்கரை - 2 டீஸ்பூன் ஈஸ்ட், உப்பு – தலா ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் – அரை கப் முதல் முக்கால் கப் வரை எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் சாக்லேட் கலவை செய்ய: ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப் சாக்லேட் துருவல் – ஒரு கப் டாப்பிங் செய்ய: ரசகுல்லா - 10 (இரண்டாக நறுக்கவும்) உலர்பழக் கலவை – அரை கப் கிவிப்பழத் துண்டுகள் - சிறிதளவு செய்முறை: வாணலியில் க்ரீம் சேர்த்துச் சூடு செய்து இறக்கவும் (அதிகமாகச் சுட வைக்க வேண்டாம்). அதனுடன் சாக்லேட் துருவல் சேர்த்துக் கிளறி உருக்கவும். இதை ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கரைத்து, பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் எண்ணெய் சேர்த்து மாவாகப் பிசைந்து மூடி வைக்கவும். மாவு இரு மடங்காக ஆன பிறகு மீண்டும் பிசைந்து இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். பிறகு, ஒரு பாகம் மாவை எடுத்துக் கனமான சப்பாத்தியாகத் திரட்டவும். மேலே ஃபோர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்திவிட்டு ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 முதல் 20 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும். அதன்மீது சாக்லேட் கலவையைப் பரப்பவும். இறுதியாக டாப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி அலங்கரித்து முக்கோண வடிவில் வெட்டிப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள இன்னொரு ஒரு பாகம் மாவிலும் தயாரிக்கவும். சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா தேவையானவை: பீட்சா பேஸ் செய்ய: மைதா மாவு - 2 கப் முட்டை - ஒன்று வெதுவெதுப்பான பால் – கால் கப் சர்க்கரை, ஈஸ்ட், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன் உப்பு – ஒரு டீஸ்பூன் டாப்பிங் செய்ய: வெண்ணெய், மைதா மாவு – தலா 2 டேபிள்ஸ்பூன் காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப் இத்தாலியன் சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன் மொசரல்லா சீஸ் – கால் கப் பேசில் இலைகள் - சிறிதளவு பொடியாக நறுக்கிய கலர் குடமிளகாய் – ஒரு கப் உப்பு – தேவையான அளவு முட்டைப் பணியாரம் செய்ய: முட்டை - 3 பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் - சிறிதளவு சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உடைத்த முட்டை, ஈஸ்ட் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு மீண்டும் நன்கு பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். உடைத்த முட்டையுடன் பார்ஸ்லே இலைகள், உப்பு, சீஸ் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து முட்டைக் கலவையைக் குழிகளில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் வெண்ணெயை லேசாக சூடாக்கி மைதா மாவு சேர்த்து வறுக்கவும். (மைதா மாவு நிறம் மாறக் கூடாது), அதனுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டி தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம், பேசில் இலைகள், உப்பு, இத்தாலியன் சீஸனிங், மொசரல்லா சீஸ் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுவே வொயிட் சாஸ். ஒரு பங்கு மாவைக் கனமான சப்பாத்தியாகத் தேய்த்து அதன் மீது வொயிட் சாஸ் தடவவும். பிறகு, அதன் மேலே கலர் குடமிளகாய், பேசில் இலைகள், குழிப்பணியாரம், சீஸ் துருவலைப் பரப்பி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 15 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்து, சூடாகப் பரிமாறவும். இதேபோல மீதமுள்ள இன்னொரு பாகம் மாவிலும் தயாரிக்கவும். மசாலா வடகறி வீட் பீட்சா பீட்சா பேஸ் செய்ய: கோதுமை மாவு - 2 கப் ஈஸ்ட், உப்பு – தலா ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் – ஒரு கப் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை - 2 டீஸ்பூன் மசாலா வடகறி செய்ய: வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) மசால் வடை - 7 (உதிர்க்கவும்) பாவ் பாஜி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு மொசரல்லா சீஸ் துருவல் – சிறிதளவு (அலங்கரிக்க) எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: வெதுவெதுப்பான நீருடன் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கலந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு கோதுமை மாவுடன் உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் எண்ணெய்விட்டு மாவாகப் பிசைந்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு மீண்டும் பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பங்கு மாவை ஆறு இன்ச் விட்டம், அரை முதல் ஒரு இன்ச் கனம் கொண்ட சப்பாத்தியாகத் தேய்த்து 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். இதுவே பீட்சா பேஸ். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் பாவ் பாஜி மசாலாத்தூள், உதிர்த்த மசால் வடை, தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். வடகறி தயார். பீட்சா பேஸ் மீது வடகறியைப் பரப்பவும். அதன் மேலே சீஸ் துருவல் தூவி, மறுபடியும் 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்துச் சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள இன்னொரு பங்கு மாவிலும் தயாரிக்கவும். மில்லட் பான்கேக் மஷ்ரூம் பீட்சா தேவையானவை: டார்ட் பேஸ் செய்ய: சிறுதானிய கலவை மாவு – ஒரு கப் காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப் முட்டை - ஒன்று பேக்கிங் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் ஆனியன் பவுடர் – ஒரு டீஸ்பூன் பீட்சா செய்ய: பீட்சா சாஸ் - 4 டேபிள்ஸ்பூன் நறுக்கிய மஷ்ரூம் – ஒரு கப் சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன் ஆலிவ் – 6 (வட்டமாக நறுக்கவும்) வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்) துருவிய பீட்சா சீஸ் – ஒரு கப் பேசில் இலைகள் - சிறிதளவு செய்முறை: சிறுதானிய மாவுடன் ஆனியன் பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். உடைத்த முட்டையுடன் பால், எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து, மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதை ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மஷ்ரூம் துண்டுகள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்துக் கரைத்த சிறுதானிய மாவை எடுத்துச் சிறிய கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதுதான் பான் கேக். மாவு முழுவதையும் இதேபோல் செய்துகொள்ளவும். ஒரு பான் கேக் மீது சிறிதளவு பீட்சா சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றைத் தடவவும். அதன்மீது வதக்கிய மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, ஆலிவ், பேசில் இலைகள் ஆகியவற்றைப் பரப்பவும். இதன் மேலே சீஸ் தூவி அலங்கரிக்கவும். தவாவைச் சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து, பான் கேக்கை வைத்து சீஸ் உருகி வந்த பிறகு எடுத்துச் சூடாகப் பரிமாறவும். மற்ற பான் கேக்குகளையும் இதேபோல் செய்துகொள்ளவும். எக் - ராகி டார்ட் பீட்சா தேவையானவை: டார்க் பேஸ் செய்ய: ராகி மாவு (கேழ்வரகு மாவு) – அரை கப் கோதுமை மாவு – ஒரு கப் ஈஸ்ட், சர்க்கரை, உப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் – அரை கப் முதல் முக்கால் கப் வரை டார்ட் டின் - தேவைக்கேற்ப பீட்சா செய்ய: பீட்சா சீஸனிங் - 3 டீஸ்பூன் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப் ஆலிவ் – 7 (வட்டமாக நறுக்கவும்) முட்டை – 4 அல்லது 5 சீஸ் துருவல் – ஒரு கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு பீட்சா சாஸ் - சிறிதளவு செய்முறை: வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள் தனியாக வைக்கவும். ராகி மாவுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இதை எண்ணெய் தடவிய பெரிய பவுலில் வைத்து மூடி போட்டு ஒரு மணி நேரம் அல்லது மாவு இரண்டு மடங்காக ஆகும் வரை அப்படியே வைக்கவும். பிறகு, மாவை மீண்டும் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி வட்டமாகத் தேய்த்து டார்ட் டின்னின் அளவுக்கு ஏற்ப வெட்டிக்கொள்ளவும். இதை டார்ட் டின்னில் வைத்து ஆங்காங்கே போர்க் ஸ்பூனால் குத்திவிடவும். 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனில் (oven) இதை வைத்து 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். மீதமுள்ள மாவிலும் இதே போல் செய்துகொள்ளவும். இவைதான் டார்ட் பேஸ். டார்ட் டின்னில் உள்ள ஒரு டார்ட் பேஸ் மீது சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன் மீது சீஸ் துருவல், வெங்காயம், தக்காளி, குடமிளகாய், ஆலிவ், பீட்சா சீஸனிங் ஆகியவற்றைப் பரப்பவும். மேலே சிறிதளவு சீஸ் தூவி மைக்ரோவேவ் அவனுள் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை 180 டிகிரி டெம்பரேச்சரில் பேக் செய்து எடுக்கவும். அதன்மீது முட்டையை உடைத்து ஊற்றி மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழையைத் தூவவும். இதை மீண்டும் ஐந்து நிமிடங்கள் அல்லது முட்டை செட்டாகும் வரை பேக் செய்து, டார்ட் டின்னைவிட்டு எடுத்துச் சூடாகப் பரிமாறவும். மற்ற டார்ட் பேஸ்களையும் இதே போல் செய்துகொள்ளவும். அக்கி ரொட்டி பீட்சா தேவையானவை: அக்கி ரொட்டி செய்ய: அரிசி மாவு – ஒரு கப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 டீஸ்பூன் கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு பீட்சா செய்ய: பீட்சா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன் உதிர்த்த சோள முத்துகள் – அரை கப் செர்ரி – 10 (இரண்டாக நறுக்கவும்) நறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள்) கலவை – அரை கப் ஆலிவ் – 10 (வட்டமாக நறுக்கவும்) துருவிய பீட்சா சீஸ் – அரை கப் பேசில் இலைகள் - சிறிதளவு பீட்சா சீஸனிங் - சிறிதளவு செய்முறை: அரிசி மாவுடன் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், சீஸ், உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, எண்ணெய் தடவி, ஓர் உருண்டையை வைத்து வட்டமாகக் தடிமனான ரொட்டி போல தட்டவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்துச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதேபோல மற்றோர் உருண்டையையும் தட்டி வேகவிட்டு எடுக்கவும். வேகவைத்த ரொட்டியின் மீது சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன்மீது சோள முத்துகள், செர்ரி, ஆலிவ், குடமிளகாய் ஆகியவற்றை அடுக்கவும். மேலே சீஸ் துருவல், பேசில் இலைகள் தூவி அலங்கரிக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு ரொட்டி பீட்சாவை வைத்து மூடி, அடுப்பை சிறு தீயில் வைத்து, சீஸ் உருகும் வரை வேகவிட்டு எடுக்கவும். மேலே சிறிதளவு பீட்சா சீஸனிங் தூவி, சூடாகப் பரிமாறவும். மற்றொரு ரொட்டியையும் இதேபோல் செய்துகொள்ளவும். டோஃபு - மஷ்ரூம் பன் பீட்சா தேவையானவை: ஸ்வீட் பன் (அ) பர்கர் பன் - 4 வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய கலர் குடமிளகாய் – அரை கப் பொடியாக நறுக்கிய மஷ்ரூம் – அரை கப் துருவிய டோஃபு – அரை கப் பீட்சா சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ் - சிறிதளவு எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 6-8 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு சீஸ் துருவல் - தேவையான அளவு செய்முறை: தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு வெண்ணெய் தடவவும். அதன்மீது பன்னை வைத்து அடுப்பைச் சிறு தீயில் வைக்கவும். `மேஷர்’ கொண்டு பன்களின் மேற்பகுதியை அழுத்தி, பன்னை பீட்சா பேஸ் போல ஆக்கவும். மற்ற பன்களையும் அதேபோல செய்யவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் குடமிளகாய், மஷ்ரூம், டோஃபு துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, சீஸனிங் தூவிக் கிளறி இறக்கவும். பன்களின் மீது இந்தக் கலவையைப் பரப்பி, மேலே சீஸ் துருவலைத் தாராளமாகத் தூவவும். தோசைக்கல்லைச் சூடாக்கி பன் பீட்சாக்களை ஒவ்வொன்றாக வைத்து மூடி போட்டு சீஸ் உருகத் தொடங்கும்போது எடுத்து, மேலே சில்லி ஃப்ளேக்ஸ், சீஸனிங் தூவிப் பரிமாறவும். பனீர் அண்டு பைனாப்பிள் காக்ரா பீட்சா தேவையானவை: சிறிய காக்ரா - 6 (ரெடிமேடாகக் கடைகளில் கிடைக்கும்) விதை நீக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி – கால் கப் கலர் குடமிளகாய் கலவை – கால் கப் வேகவைத்த சோள முத்துகள் – கால் கப் பொடியாக நறுக்கிய பனீர் துண்டுகள் – கால் கப் பொடியாக நறுக்கிய அன்னாசித் துண்டுகள் – கால் கப் பச்சை மிளகாய் - 2 பீட்சா சீஸனிங் – ஒரு டேபிள்ஸ்பூன் துருவிய பீட்சா சீஸ் – கால் கப் பீட்சா சாஸ் - 5 டீஸ்பூன் பேசில் இலைகள் - சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: தக்காளியுடன் குடமிளகாய், சோள முத்துகள், பனீர் துண்டுகள், பச்சை மிளகாய், அன்னாசித் துண்டுகள், பீட்சா சீஸனிங், உப்பு சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும். காக்ராவின் மீது சிறிதளவு பீட்சா சாஸைத் தடவவும். அதன்மீது தக்காளி கலவையைப் பரப்பவும். மேலே சீஸ் துருவல், பேசில் இலைகள் தூவி அலங்கரிக்கவும். மைக்ரோவேவ் அவனில் காக்ரா ஒரு நிமிடம் அல்லது சீஸ் உருக ஆரம்பிக்கும் வரை வைத்து, பிறகு எடுத்துச் சூடாகப் பரிமாறவும். எல்லா காக்ராக்களையும் இப்படியே செய்துகொள்ளவும். https://www.vikatan.com
  15. சூப்பரான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் அ-அ+ தோசை, சப்பாத்தி, நாண், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த ஸ்பைசி மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த மட்டன் சாப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் - அரை கிலோ கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - இரண்டு கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி தனியா தூள் - ஒரு தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி செய்முறை : மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கழுவிய மட்டனை குக்கரில் போட்டு அதில் உப்பு, தனியாதூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், பச்சை மிளகாய், 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும். குக்கரை விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வைக்கவும். ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதில் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் வற்றி நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும். சுவையான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் ரெடி https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/04/25150635/1158970/spicy-mutton-chops.vpf
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.