//விருப்புடனோ இல்லை விருப்பின்றியோ யார்,யார் எல்லாம் இந்தப் பக்கத்தை புரட்டிப் பார்த்து செல்கிறீர்களோ அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்..!!!இருபத்து ஐந்து பக்கங்கங்களைத் தாண்டி செல்லும் பக்கம் வெறுமனே நானே பதிவுகளை இட்டு,நானே பார்த்துக் கொண்டு இருக்கும் பக்கமாக இருக்கிறதா என்ற கேள்வியும் என்னுள்ளே எழும்பத் தான் செய்கிறது..இதையும் விட்டால் மௌனம் என்ற ஆயுதத்தை தவிர வேறு எதையும் தூக்க முடியாது.//
என்ன இப்படி சொல்லி போட்டியல் யாழுக்கு வந்தாலே யாயினி என்ன சொல்லிருக்கு இன்றைக்குன்னு பார்க்கிறதுதான் முதல் வேலை பல விஷயங்கள் முன்பே தெரிந்து இருந்தாலும் என் கண்ணில் படாத சில விஷயங்கள் உங்கள் பதிவு மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அதற்காக நன்றி. மேலும் நிறைய விஷயங்கள் நீங்கள் கற்று யாழ் கள சாகரா, சாந்தி சகோதரங்களை போல நிறைய எழுத வேண்டும், வாசிக்க நாங்கள் காத்து இருக்கிறோம் வாழ்த்துக்கள்.