ஊடக நண்பர்கள் தந்த தகவலைத்தான் இங்கே எழுதுகின்றேன். அவர்களும் புளொட்டின் சில நடவடிக்கைகளுக்கு உடன்படாதவர்கள். அதற்காக அவர்கள் செய்கின்ற நல்ல விடயங்களை எல்லாம் புறம் தள்ள முடியாது என்பது அவர்களின் வாதம்.
விடுதலைப் புலிகள் மட்டும் அனைத்தையும் சரியாக செய்து இருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காதே.
மாறி, மாறி அவர் நல்லவர் இவர் நல்லவர் என்று வாதிடுகின்றோமே தவிர எவரும் நல்லவராகவே இருந்தது இல்லையே.
வியட்நாம் விடுதலைப் போரையும் தமிழீழ விடுதலைப் போரையும் ஒப்பீடு செய்யுங்கள் பார்க்கலாம்.
வியட்நாம் விடுதலைப் போராட்டம் மக்களின் பரிபூரண ஆதரவுடன் நடைபெற்ற போராட்டம். தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏன் மக்களின் பரிபூரண ஆதரவினை பெறாது ஒரு சாராரின் ஆதரவுடனும் மற்றவர்கள் பயந்தும் ஆதரவு அளித்தனர்?
விடுதலைப் புலி உறுப்பினர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரே சினந்து கூறியது, "சனத்தையும் தொழில் செய்ய விடுங்கோடா" இரு தொழில்களை (சாதீ ரீதியானது என்பதனால் தவிர்த்துக் கொள்கின்றேன்.) தவிர மிச்ச எல்லாத்தையும் நீங்கள்தானடா செய்கிறியள்" என்றாராம்.
இதே பாலசிங்கத்தை கடைசியில் விடுதலைப் புலிகள் என்ன செய்தார்கள். நாங்கள் வரலாறு கூறினால் திரிபுபடுத்துவதாக கூறுவீர்கள். எழுந்தமானமாக அறிந்த தகவலை நான் இங்கே பதிவிடவில்லை. அது மட்டும் உண்மை.