-
Posts
9910 -
Joined
-
Last visited
-
Days Won
38
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by தனிக்காட்டு ராஜா
-
ஓகோ நன்றி🙂🙂 இத்துடன் இந்த புதிய நிறைவு ஆண்டுடன் யாழ் இணையத்தில் இருந்து சந்தோசத்துடன் விடைபெற்றுக்கொள்கிறேன் நன்றி அனைவரும் மிக நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க இறைவனை பிராத்தித்துக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக உங்களுடன் பழகியதில் பெருமகிழ்ச்சியும் சந்தோசமும் அந்த வகையில் எழுத்தால் உணர்வு தந்து முகம் தெரியாத உறவுகளை இணைத்த யாழ் இணையத்திற்கும் ,உறவுளுக்கும் மீண்டும் நன்றி @suvy @MEERA மோகன் @கலைஞன் அண்ணாக்கள் நேரில் சந்தித்தவர்கள் சுமே அக்கா இவர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன் நன்றி வணக்கம். யாழ் வாழ்க வளர்க😊😊😊
-
ஊறல் எனறால் எல்லா மூலிகைகளும் சேரத்த ஒரு பை அதை வாங்கி சுடுதண்ணியில் வேக வைத்து ஆறிய பிறகு குடிததால் உடல் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்
-
அடுத்தாநாள் வச்சி சாப்பிடும் வாளை மீன் குழம்பு அதீத சுவை
-
ஓர் ஊரின் கல்வி வளர்ச்சியும் வரலாறும் வாழ்த்துக்கள் மோகன அண்ண நல்லபடியாக போட்டோவும் எடுத்துள்ளீர்கள்
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
தனிக்காட்டு ராஜா replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கச்சேரி முடிஞ்சு கனநாள் ஆகிறது என்று கூறி அவங்க சென்னைக்கு போயிட்டாங்க தமன்னா பெங்களுருக்கு போயிருக்கும் -
நாவற்குழி A9 வீதியில் மோட்டார் சைக்கிள் - அரச பேருந்து விபத்து
தனிக்காட்டு ராஜா replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இப்ப விபத்தால் இறந்து போகின்றவர்களே அதிகமாகிறது வடக்கு கிழக்கில் -
நன்றி அண்ணை கனபேர் இந்த சமூகத்துக்கு தூரமாகவே வாழ்ந்துவருகிறார்கள் சிலர் சிறையில் இருப்பவர்கள் எந்த கையாவது தங்களை விடுவிக்காதா என்ற ஏக்கத்திலே இருக்கிறார்கள் நன்றி அண்ணை நன்றி புங்கையூரான் வரவுக்கும் கருத்துக்கும்
-
(எழிலன்): - முதலாளி இன்றைக்கு லீவு தாங்கோ? எனக்கு காய்ச்சலா இருக்கு உடம்பும் நடுங்குகிறது (எழிலன்) முதலாளி:- இன்றைக்கு லீவு கொடுக்க இயலாது இன்று ஞாயிற்றுக்கிழமை கன சனம் கடைக்கு வரும் நீயும் லீவு எடுத்தால் நான் யாரைக்கொண்டு கடையை நடத்துற வேலை செய்யுற என்று சொன்னார் முதலாளி முதலாளி:- இல்லை ஐயா எனக்கு நிற்க கூட முடியல அதுதான் லீவு கேட்கிறன் முதலாளி:- சரி லீவு இல்ல கணக்கை பார்த்து காசை மொத்தமா வாங்கிட்டு போ இனி வேலைக்கும் வராத என்றார் முதலாளி. (எழிலன்): உடலைப்பார்த்தால் தான் நாளைக்கு வேலை செய்யலாம் என காசை தாங்கோ என கேட்க முதலாளி:- எத்தனை நாள்? (எழிலன்): 15 நாள் ஐயா 15000 ரூபா முதலாளி:- இந்தா 10000 பிறகு வந்து 5000 ரூபாவை வாங்கித்துப்போ என்றார் முதலாளி நம்ம தமிழ் முதலாளிகளின் நல்ல பழக்கங்களில் இதுவும் ஒன்று காசை வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு நான் செல்ல அங்கே காவாலாளி இன்றைக்கு ஓ பி ரி (O.P.T) இல்லை நாளைக்கு வாங்க என்றார். எனக்கு நிற்க முடியல மருந்து எடுக்கணூம் தம்பி உள்ள விடுங்க யாரையாவது பார்த்து மருந்து எடுத்து செல்கிறேன் என நானும் சொல்ல அவங்க விடுவதாக இல்லை லேசாக மயக்கம் வருவது போல அமர உள்ளே கிளினிக் செய்யும் வைத்திரியரிட்ட அனுப்புங்க என சொல்லி உள்ள விட அங்கே ஒரு பெண் தரையை துடைத்துக்கொண்டிருந்தாள். நான் சென்றால் அந்த பகுதி மீண்டும் அழுக்காகிவிடும் என்ற காரணத்தால் காயும் வரைக்கும் நிற்க அவளோ போங்க பறவாயில்லை என்றாள் ஆளை அடையாளம் காண முடியவில்லை முகத்தை மறைத்து முகக்கவசம் அணிந்திருந்தாள். சரி நான் போய் வைத்தியரைப்பார்க்க வரிசையில் நிற்க அந்த குரல் எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறது என மனம் சொல்ல அந்த குரலையும் அவளையும் தேடியது கண்கள் அவவாக இருக்குமோ என்ற ?? கேள்விதான் எழுகிறது பதில் இல்லாமல் வைத்தியர் :- அடுத்த ஆள் வாங்கோ உள்ளே அழைக்க என்ன பிரச்சினை! ஐயா நேற்றில இருந்து நடுங்கி காய்ச்சல் காயுது சரி இந்த குழுசைகளை விழுங்குங்க பனிக்காலம் என்ற படியால் பனிவெளியில திரியாதிங்கோ சரி ஐயா நன்றி என்று வெளியில் வர நீலன் நீலன் என அழைக்க திரும்பி பார்த்தேன் அந்த பெயரோ போராட்ட காலத்தில் எனக்கு வைத்த பெயர் அது அந்த பெயரை தெரிந்தவர் யார் என திரும்பி பார்த்த போது அந்த பெண்தான் நீங்க?? நான் ரோசி (சுடர்) அக்கா நீங்களா? நீங்கள் எப்படி இங்க இந்த வேலைக்கு அது பெரிய கதை வா என கூட்டிக்கொண்டு போனா இங்க இரு......... சாப்பிட்ட நீயா? ஓம் சாப்பிட்ட நான் சரி பிளேன் டி குடி இல்ல அக்கா வேணாம் தம்பி ஒரு பிளேன் டீ போடு அக்கா காசை எடுத்துவர போனா வேலைக்கு கொண்டு வரும் பையை எடுக்க அதிலதான் காசு வைத்திருந்தா அப்போது சிற்றுண்டி சாலைக்கு முன்னால் உள்ள சிறிய கோவிலில் பதறி விழுந்து ஒருவன் ஓடி வந்து நீயெல்லாம் கடவுளே இல்லை உன்னை நான் கும்பிட்டிருக்கவே கூடாது என்றான் உறவினர் யாரோ இறந்திருப்பார்கள் போல இன்னொருவன் வந்து விழுந்து வணங்கினான் ஆண்டவரே உனக்கு நன்றியப்பா என் வாழ் நாள் உனக்காகவே என்றான் பாவம் கடவுள் எவ்வளவு பிரச்சினைகளை தீர்க்க வேண்டியுள்ளது. கல்லாகவே இருப்பது கடவுளுக்கு நல்லது என என் மனதுக்குள் தோன்ற அக்கா ஓடி வந்தா என்ன குடிச்ச நீயோ ஓம் குடிச்சன் இங்க நல்ல புதுனம் பார்க்கலாமே அக்கா இங்க நேரம் போறதே தெரியுறல்ல கடைக்கார தம்பி இந்தா 20 ரூபா அக்கா கடை பக்கமே வாரல்ல போல இப்ப பிளேண்டீ 25 ரூபா ஓ அப்படியா சரி அஞ்சு ரூபா பிறகு தாரன் கடைக்கு வார ஆட்கள் இதயே சொல்லுங்க இப்ப எல்லாம் விலை கூடிப்போச்சு அக்காவுக்கு தெரியாதே என்று கேட்டான் அந்த சிற்றுண்டிச்சாலை தம்பி அக்கா இத கொடுங்க நான் கூட வேலையில் இருந்து விலகித்தான் ஆஸ்பத்திரிக்கு வந்த நான் காய்ச்சலுக்கு லீவு கேட்ட நான் கணக்க முடிச்சு துரட்டிட்டாரு அக்கா இந்தா கையில இருக்கு 10000 ரூபா பார்த்தியா நம்ம சனத்தா ஓம் அக்கா உலகமே அப்படித்தானே இயங்குது ஓம் ஓம் பறவாயில்ல நீ வச்சுக்க ................. சரி குழுசையை காட்டு இந்தா பாருங்க உங்களுக்கு தெரியாத குழுசையா என்ன ?? இந்த பவர் கூடுன குழுசைகளை விழுங்காமல் நல்ல ஊறல் பைய வாங்கு ஊறல் போட்டு குடி அது உடம்புக்கும் நல்லது பச்சை தண்ணியில அளையாமலும் இரு ம் சரி அக்கா என்ன நடந்த? அந்த கதைகளை விடு அதைப்பேசி பலன் இல்லை என மறுத்துவிட்டார் இஞ்ச பாரு என முகத்தை காட்டுனா முகம் ஒரு பக்கமாக தீ காயம் ஏற்பட்டு கழுத்து வரை நீண்டு இருந்தது. நீங்க மருத்துவ பிரிவிலிருக்கும் போது பார்த்தது அக்கா ம் நம்மட பிள்ளைகள் எல்லாம் போயிட்டுது நான் மட்டும் தான் அந்த ஷெல் தாக்குதல்ல காயப்பட்டு வந்த நான் ஊருக்கு எங்கயும் போக முடியல. போனாலும் பிரச்சினை இப்ப இங்கதான் ஒரு பிள்ளை படிக்குது அவரும் இறந்து போனார் ஓ அப்படியா? அதுதான் இந்த வேலையில சேர்ந்த நான் சாப்பாடு இங்க கிடைக்கும் அந்த செலவு மிச்சம் பிள்ளைக்கு படிப்புக்கு மட்டும் காசு............... ம் அக்கா இப்ப முன்னாள் போராளிகளுக்கு கனபேர் உதவி செய்யுறாங்க தானே அக்கா ம் செய்யுறாங்க ஆனால்???? அவங்க போண் நம்பற எடுத்து நமக்கு நீங்க போராளிதானா என பரீட்சை வைத்து பார்த்து உதவி செய்யுறதுல பல மாதம் போய் விடுகிறது தம்பி.............. ஓம் அக்கா நானும் கூட யாரிட்டயும் சொல்கிறதில்லை கடந்த காலத்தை . சரி சாப்பாடு ஒன்று கட்டித்தருகிறேன் கொண்டு போய் சாப்பிடு இங்க ஆஸ்பத்திரி சாப்பாடு என்று யாரும் பெரிதாக சாப்பிடமாட்டார்கள் சாப்பாடு இருக்கு கோழிகறி இன்றைக்கு என அக்கா சாப்பாடு எடுக்க போனா கையில் இருந்த அந்த 10000 ரூபாவை அவ பையில் அவக்கு தெரியாமல் வைத்துவிட்டு இருந்தேன் .அக்கா பொலித்தீன் பையையினுள் சாப்பாடு இட்டு தந்தா நானும் வாங்கிக்கொண்டு கோவிலுக்கு வெளியில் இருக்கும் ஒரு மர நிழலில் சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் தூங்கி விட்டேன் திடிரெனா யாரோ அதட்டி எழுப்புவது தெரிந்தது கோழி சாப்பிட்டு கோவிலுக்கு முன்ன உறங்க கடவுள் கோபித்து விட்டாரோ அவர்தான் அதட்டி எழுப்புகிறாரோ???? என எழும்ப கோவில் நிர்வாகியாம் இங்க படுக்க கூடாது போங்க என்றார். நானோ அந்த பஸ் நிற்கும் நிறுத்துமிடத்தில் இருக்கையில் அன்றிரவு தூங்க ஆயத்தமாகிறேன் அப்போது அந்த சுவற்றில்............. இதோ கடவுள் வருகிறார் என போஸ்டர் ,இன்னும் பல கோவில்களின் போஸ்டர்கள் ஒட்டி இருந்தது அந்த நிலையத்தில் நான் கூட பயமில்லாமல் தூங்கினேன் நாளை என்னை எழுப்பி விடுவார் என்ற நினைப்பில்... மலிந்து போன கடவுள்களை நோக்கி..................................
- 18 replies
-
- 17
-
புதனும் புதிரும்
தனிக்காட்டு ராஜா replied to Kavi arunasalam's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
படிச்சு முடிச்சாச்சு ஒரு கயித்தில கட்டி இழுத்துப்போயிட்டார் வாழ்த்துக்கள் கவி ஐயா -
இங்கு அமாவாசையில் நண்டு சதையை கரைக்கும் என்பார்கள் அதுக்காகவே கேட்டன் எனக்கு நண்டு உடைச்சு சாபிட நேரம் எடுப்பதால் சாப்பிடுவது குறைவு
-
சதை இருந்துச்சோ சி நாட்களில் பெரிய நண்டுகளில் சதை இருக்காதே அண்ண
-
தமிழரசுக் கட்சி ஒட்டுமா உடையுமா? - நிலாந்தன்
தனிக்காட்டு ராஜா replied to கிருபன்'s topic in அரசியல் அலசல்
சுமந்திரன் இல்லை எவர் வந்தாலும் இங்குள்ள மக்களுக்கு விடிவு இல்லை -
கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?
தனிக்காட்டு ராஜா replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
நம்மட சனம் லைன் கட்டுது கனடா என என்ன காரணமாக இருக்கும் நுணா நீங்க வேற இப்ப வங்கி மீதி காட்ட தேவையில்லை என விளம்பர படுத்துகிறார்கள் கொஞ்ச நாளைக்கு முன்ன சனம் தோட்டம் துரவு முழுவதையும் வித்ததுகள் வங்கி மீதி காட்ட ஆனால் சனம் போய்க்கொண்டுதான் இருக்கு எங்க ஊரெல்லாம் எங்க பார்த்தாலும் வீடு விற்பனைக்கு வயல் காணி விற்பனைக்கு கார்கள் விற்பனைக்கு என முகநூலில் விளம்பரப்படுத்துகிறார்கள் பிறகு பாய் பாய் BYE BYE சிறிலங்கா என்று கட்டுநாயக்காவில் இருந்து போட்டோ போடுகிறார்கள் இது இப்ப ஊர் நிலமை இந்தா சிங்கனும் கேட் கிறத பார்த்தா அடுத்த பிளைட்டு போல -
கனடாவில் வாழ முடியாமல் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவது ஏன்?
தனிக்காட்டு ராஜா replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
நாமளே சொல்லிக்கொள்வோம் -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
தனிக்காட்டு ராஜா replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நான் குற்றம் சாட்ட வில்லை கலாச்சார காவலர்களை சொன்னேன் தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு எண்ணுமாம் அதுபோலதான் நன்றி எதிர்கட்சி இருக்க வேண்டும் ஆனால் முடிவுகளை மட்டும் சரியாக எடுக்கத்தெரியாதவர்கள் போலவே இருக்க்கிறார்கள் அதாவது ஓடினால் ஓடுவம் நின்றால் நிற்போம் கொடி பிடிக்க சொன்னால் கொடி பிடிப்பம் இதுதான் இன்றைய எல்லா எதிர்கட்சிகளின் நிலை இது எல்லாவற்றுக்கும் பொருந்தும் -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
தனிக்காட்டு ராஜா replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இது வரைக்கும் சாத்தியம் இல்லைதானே அதைதான் சொல்ல வந்தேன் ஒரு சில நாட்டுக்காரர் ( புலத்து தமிழர்கள்) போய் அரச குழுவினரை சந்தித்தால் அவர்களை விமச்சிப்பது இன்னொரு குழு இப்படி குழுவாக இருக்கிறோம் இந்த நிகழ்வை எடுத்துக்குக்கொண்டால் வெளிநாடுகளில் இருப்பவர்கள் சிலருக்கு இந்த நிகழ்வு அதுவும் யாழ்ப்பாணத்தில் நடப்பது பிடிக்கவில்லை அவர்களின் விமர்ச்னங்கள் நேரடியாக முகநூலில் இருந்தது மாறாக ஒரு குழு நடக்க வேண்டும் எனவும் இருந்தது ஆக மொத்தத்தில் தமிழன் குழுக்களாகவே -
நீங்களும் சிட்னி முருகனும் சேர்ந்து ஒரு சந்திப்பை ஜனாதிபதியுடன் போடுவது
-
புதனும் புதிரும்
தனிக்காட்டு ராஜா replied to Kavi arunasalam's topic in யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
ம் வருகிறோம் கூடவே -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
தனிக்காட்டு ராஜா replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அங்கே அகதியாக செல்பவர்களை குத்திக்காட்டுவது தொடர்கிறது இந்திய காவல்படையால் மூன்று நாளைக்கு முன்னர் சென்ற குடும்பத்தை க்கியூ பிரிவு விசாரிகிறதாம் இத்தனைக்கும் 3 குழந்தைகள் தாய் தகப்பன் இது என்ன நிலை? கைக்குள் அகப்பட்டவனுக்கே மூச்சு திணறல் தெரியும் -
பழைய உறுப்பினரே வருக வருக
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
தனிக்காட்டு ராஜா replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இனி ஆர்ப்பாட்டம் போராட்டம் செய்யும் அளவுக்கு யாரும் இல்லை அந்த மனநிலையிலும் மக்கள் இல்லை மாறாக களியாட்டங்களுக்கு காணலாம் இந்த நிகழ்ச்சி உதாரணம் வடகிழக்கில் இராணூவ பிரசன்னம் சிங்களவர்கள் காணிகளை பிடிக்கிறார்கள் கோவில்களில் குடியேறுகிறார்கள் ஆர்ப்பாட்டம் என்றால் யாரும் இல்லை ஒழுங்கு செய்பவர் மட்டும் உட் கார்ந்து இருப்பார் இதுதான் இங்குள்ள நிலமை விசுகர் -
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
தனிக்காட்டு ராஜா replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இன்னும் புலம் பெயர்ந்தவர்கள் ஓரணியில் திரளமுடியமலே இருக்கிறார்கள் என்ன செய்யலாம்