Jump to content

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33793
  • Joined

  • Days Won

    157

கிருபன் last won the day on February 13

கிருபன் had the most liked content!

2 Followers

Contact Methods

  • Website URL
    https://kirubans.blogspot.com/
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    முடிவிலி வளையம்
  • Interests
    போஜனம், சயனம்

கிருபன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

8k

Reputation

  1. போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
  2. தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. https://akkinikkunchu.com/?p=274079
  3. 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024 இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது. https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/
  4. சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம்; சுமந்திரனின் கருத்து அற்பத்தனமானது! கூறுகின்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆதவன்) தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது சிங்களத் தரப்பைக் கோபப்படுத்தி, இனவாதத்தைத் தூண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்து அற்பத்தனமானது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கை ஒரு ஜனநாயக நாடு. தமிழர்கள் தரப்பில் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று யாரும் வரையறை விதிக்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எடுத்துக்காட்டாகக் கூறும் குமார் பென்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்படவில்லை தற்போதைய பொதுவேட்பாளர் விடயம் அவ்வாறானது அல்ல. நாங்கள் பல தடவைகள் பலருக்கு வாக்களித்துள்ளோம். ஆனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை. சகல அரச தலைவர்களாலும் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். பொதுவேட்பாளர் என்பது இனப்பாகுபாடான விடயமல்ல. எமது சுயமரியாதையை, உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாங்கள் தெரிந்தெடுத்துள்ள ஒரு வழிமுறையாகும் - என்றார். (ஏ) https://newuthayan.com/article/சுமந்திரனின்_கருத்து_அற்பத்தனமானது!
  5. 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் 32 ஆயிரம் பேருக்கு வடக்கில் வீடுகள்! வடக்கு ஆளுநர் தெரிவிப்பு (ஆதவன்) வடக்கு மாகாணத்தில் 32 ஆயிரம் பேர் வீட்டுத் திட்டங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஒரு வருடத்துக்குள் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்படும் என்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போதே வடமாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது:- ‘வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் திட்டமிட்ட பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதற்கு போதுமான அளவு நீர் காணப்படுகின்றது. பெரிய மற்றும் சிறிய குளங்களின் நீர்மட்டம் போதுமானதாகக் காணப்படுகின்றமையால் இடைப்போகம் மற்றும் சிறுபோகம் ஆகியவற்றில் சிறந்த விளைச்சலை எதிர்பார்க்க முடியும். ஆகவே இதனூடாக வறுமையிலிருந்து மீள்வதற்கான சந்தர்ப்பமுண்டு. இந்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குளங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதே போல வடக்கு மாகாணத்தில் உள்ள 17 குளங்களை புனரமைப்புச் செய்வதற்கான நிதியை மத்திய அரசாங்கத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் நாங்கள் கோரியுள்ளோம். மக்களிடையே கலை, கலாசாரத்தை வளர்ப்பதற்கு அவர்கள் வாழும் கிராமங்களிலேயே திறந்த வெளி மேடைகளை அமைத்து அங்கு வாழக்கூடிய இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டும். கிராமங்களில் திறந்த வெளி மேடைகளை அமைத்து நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் ஊடாக எமது தனித்துவமான கலை, கலாசாரத்தைப் பேணிப் பாதுகாக்க முடியும்'- என்றார். (ஏ) https://newuthayan.com/article/32_ஆயிரம்_பேருக்கு_வடக்கில்_வீடுகள்!
  6. இன்னும் பாதிக்கிணற்றைத் தாண்டவில்லை என்பதால் எதுவும் நடக்கலாம். பெங்களூர் விராட் கோலி எப்படியும் வெளுத்துக்கட்டுவார்! போட்டி விதிகளைத் தளர்த்தமுடியாது @பையன்26! போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
  7. ஊழ் வண்ணம் : வெற்றிராஜா வெற்றிராஜா கேம்ப்ரிட்ஜ் மண்ணில் கால் பதித்ததுமே சர் ஐசக் நியூட்டன் படித்த கல்லூரியை, அந்த ஆப்பிள் மரத்தை காண வேண்டும் என்கிற ஆவலில் மனம் பரபரத்தது. கேம் என்பது ஒரு நதியின் பெயர். கேம் நதியின் மீது பல அழகிய பாலங்கள் அமைந்துள்ளன. கேம் + ப்ரிட்ஜ் = கேம்ப்ரிட்ஜ். ஒவ்வொரு பாலமும் நுண் வேலைப்பாடுகளுடன், கேம்ப்ரிட்ஜில் உள்ள கல்லூரிகளின் சரித்திரங்களையும், சாதனைகளையும் பறைசாற்றியபடி மிளிர்கிறது. நியூட்டன் கற்ற அதே ட்ரினிட்டி கல்லூரியில்தான் கணித மேதை ராமானுஜமும் படித்தார். ராமானுஜத்தின் ஊழ், அவரை ஈரோடு, கும்பகோணம், மெட்ராஸ் என சுழற்றியடித்து, பல்லாயிரம் மைல்கள் கப்பலில் பயணிக்க வைத்து, கேம் நதிக்கரை வரை இழுத்து வந்திருக்கிறது. சார்லஸ் டார்வின், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல், ஆலன் ட்யூரிங், ஜான் மில்டன், பைரன், சில்வியா பிளாத், ஜவஹர்லால் நேரு, டேவிட் அட்டன்பரோ, மன்மோகன் சிங் போன்ற பல ஆளுமைகள் படித்த கல்லூரிகள் கேம் நதிக்கரையெங்கும் வீற்றிருக்க, எதை காண்பது எங்கே துவங்குவதென குழம்பி, முச்சந்தியில் நின்று கொண்டிருந்தேன். அப்போது கார்ப்பஸ் கிறிஸ்டி கல்லூரியின் சுவற்றிலிருந்து கார்ப்பஸ் க்ளாக் வினோதமாக ஒலியெழுப்ப, அருகில் சென்று வேடிக்கை பார்த்தேன். அது அற்புதமாய் வடிவமைக்கப்பட்ட ஒரு மெக்கானிக்கல் க்ளாக். அதன் மீது ஒரு வெட்டுக்கிளி தனது கால்களால் கடிகார முட்களை தள்ளியபடி, காலத்தின் துளிகளை உணவாக தின்று செரித்துக் கொண்டிருந்தது. Chrono-Phagus அதாவது Time-Eater என்றழைக்கப்பட்ட ”காலத்தை உண்ணும் பூச்சியின்” ரூபம், அதை காண்பவருக்கு அச்சத்தையும் ஆர்வத்தையும் ஒருசேர அளித்தது. கேம் என்ற ஒரே ஒரு நதியின் மீது பல பாலங்களும், கல்லூரிகளும் முளைத்திருக்க, ஒரே ஒரு கல்லூரியைத் தேடி கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி, கங்கை, பிரம்மபுத்ரா என்று பல பெரிய நதிகளை கடந்து சென்ற என் கதை எனக்குள் மின்னலடித்தது. ஊழ் என்பது அத்தனை எளிதாக விளக்கி விட கூடிய ஒன்றா என்ன? புனைவின் வழியாக ஊழ் பற்றி சித்தரிப்பதை விட, என் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்கள் மூலமாக ஊழ் வினையை விவரிக்க முயற்சி செய்கிறேன். பாலங்களின் மீது தடதடவென்று ஓடுகின்ற ரயில்களின் ஓசை என் மண்டைக்குள் ஒலிக்க துவங்கியது. காலத்தை உண்ணும் வெட்டுக்கிளி என்னை முறைத்துப்பார்க்க, நான் கார்ப்பஸ் கடிகாரத்துள் நுழைந்து சுழன்றபடி, காலத்தின் பின்னோக்கி சென்று மாணவனானேன். நான் +1 வரை ட்யூஷனே படிக்கவில்லை. கிடைத்த ஒளியினை கிரகித்து, கிடைத்த நீரை உறிஞ்சி ஒரு காட்டுச்செடி போல வளர்ந்து கொண்டிருந்தேன். +2 வில் மொத்த வகுப்புமே ட்யூஷன் செல்ல, நான் மட்டும் ட்யூஷன் போகாமல் தவறு செய்கிறேனோ என்ற அச்சத்தால், புதுச்சேரியின் புகழ்பெற்ற பள்ளியொன்றின் ஆசிரியரான விஷ்வகுமார் பற்றி கேள்விப்பட்டு, அவரிடம் ட்யூஷன் போக முடிவெடுத்தேன். என் வீட்டிலிருந்து பள்ளி சென்று வருகின்ற தூரம் 14 கிமீ. விஷ்வகுமாரின் வீடு எதிர் திசையில் இருந்ததால் அங்கே சென்று வர 14 கிமீ. தினம் இப்படி 28 கிமீ சைக்கிளில் பயணித்தால், பிறகு படிப்பதற்கு நேரமேது? ஆனாலும் சவாலை எதிர்கொண்டு களத்தில் இறங்கினேன். பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து யோகப்பயிற்சி செய்வது போல, அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து விஷ்வகுமார் வீடு நோக்கி எனது சைக்கிள் பறந்தது. குளித்து பளிச்சென்று நெற்றி நிறைய விபூதி பட்டைகளுடன், முகத்தில் புன்னகையுடன் வரவேற்பார் விஷ்வகுமார். சொற்ப தொகையான ஒரு ட்யூஷன் பணத்தை அவர் வாய் திறந்து கேட்டதேயில்லை. கொடுத்தாலும் எண்ணி பார்ப்பதில்லை. ஜெயமோகனின் ”சோற்றுக்கணக்கு” சிறுகதையில் உணவளிக்கும் ‘கெத்தேல் சாகிப்’ பாத்திரம் போல, மாணவர்களுக்கு கல்வியை அள்ளித் தந்தவர் ஆசிரியர் விஷ்வகுமார். அவர் ஒரு அற்புத கதைசொல்லியும் கூட. ஒரு துகள் (எலக்ட்ரான்) அதன் எதிர்-துகளுடன் (பாசிட்ரான்) இணைந்து சக்தியாக மாறுவதை (annihilation), வடலூர் இராமலிங்க வள்ளலார் ஜோதியில் கலந்து மறைந்த சம்பவத்தை சொல்லி விளக்குவார். பேருந்தில் ஜன்னல் இருக்கைகள் முதலில் நிரம்புவதை வைத்து, எலக்ட்ரான்கள் அதன் சுழல் பாதைகளில் ஒற்றை ஒற்றையாய் அமர்கின்ற விதியை எளிதாக்குவார். பெருமாள் கோவில் சுவற்றின் வெள்ளை மற்றும் காவி வண்ண பூச்சு வரிசைகளை வைத்து ஒளிச்சிதறல் (ஸ்பெக்ட்ரம்) எடுக்கப்படும். குழாயின் கீழ் உள்ள குடத்தில், நீர் நிரம்புகின்ற ஓசையின் மாற்றங்களை வைத்து ‘டாப்ளர் விளைவு’ நிகழும். இப்படி எண்ணற்ற உவமைகள். ஏராளமான கதைகள். விஞ்ஞானத்துடன் சேர்ந்து விஞ்ஞானிகள் பற்றிய குறிப்புகள் பல தருவார். ஒரு பாம்பு தன் வாயால் அதன் வால் கவ்விய வடிவம் கனவில் தோன்றியதை வைத்து August Kekulé உருவாக்கியதுதான் Benzene Ring என்பது ஆர்கானிக் கெமிஸ்ட்ரியை மேலும் சுவாரசியமாக்கியது. நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் புகழ் பெற்ற தேற்றம் E = m*cஸ்கொயர். மேக்ஸ் பிளாங்க் தேற்றம் E = hv, அதற்கும் நோபல் பரிசு கிடைத்தது. ஒரு காகிதத்தில் இந்த இரண்டு முக்கிய தேற்றங்களை இணைத்து, டி ப்ரொக்லீ என்பவர் அலைநீளம் தேற்றத்துக்காக நோபல் பரிசு வென்றதை த்ரில்லர் கதை போல விளக்குவார் விஷ்வகுமார். அறிவுத்துறை எப்படி ஒரு தொடர் சங்கிலியாக செயல்படுகிறது என்பதை எண்ணி எனது ஆர்வம் பெருகியது. சட்டென்று எனக்கு பாட புத்தகங்கள் அனைத்தும் கதை புத்தகங்கள் போல் தோன்றின. நனவிலும் கனவிலும் கதைகள் விரிந்து வளர்ந்தன. கற்றல் என்பது மிக இனிமையாகி விட்டது. பரிட்சை ஹாலில் கேள்விகளுக்கு எக்ஸ்ட்ரா காகிதங்களை வாங்கி ஒரு எழுத்தாளன் போல கதைகளை எழுதித் தள்ளினேன். +2 ரிசல்ட் வந்ததும் மதிப்பெண்கள் காண்பிக்க ஆசிரியர் வீட்டுக்குச் சென்றேன். ‘அடுத்தது என்ன?’ என்றார் விஷ்வகுமார். ‘ஜிப்மர்ல மெடிக்கல் படிக்க ஆசை. என்ட்ரன்ஸ் எழுதி வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கேன். கிடைப்பது சாத்தியமில்லை சார்’ என்றேன். ‘வேறென்ன ஆப்ஷன்ஸ் வெச்சுருக்க?’ என்றார். ‘தெரியல சார்’ என்றேன். ‘என்னது? வீட்ல செய்தித்தாள் வாங்கும் பழக்கமுண்டா?’ ‘இல்லை சார்’ என்றேன். அருகே மேசையின் மீது இருந்த செய்தித்தாளை பிரித்து, குறிப்பிட்ட ஒரு பக்கத்தை தேடினார். ‘’Regional Engineering College அதாவது மண்டல பொறியியல் கல்லூரியின் விண்ணப்ப படிவம். அப்ளை பண்ணு. முயற்சி திருவினையாக்கும்’’ என்று ஆசிர்வதித்தார். அவரது எட்டு வயது மகள் சிரித்துக்கொண்டே வாழ்த்து சொல்லி எனக்கு டாட்டா காண்பித்தாள். ஆசிரியர் அன்று கத்திரிக்கோலால் எடிட் செய்து தந்தது செய்தித்தாளை மட்டுமல்ல, என் தலைவிதியையும் கூட என்று அப்போது தெரியவில்லை. நமது மரபு அணுக்களில் மாற்றம் செய்கின்ற தொழில்நுட்பம் இன்று மிகவும் எளிதாகி, DNA எடிட்டிங் தாண்டி RNA எடிட்டிங் வரை வந்துவிட்டது. டிசைனர் உடைகள் போல டிசைனர் குழந்தைகள் உருவாக்க இயலும். ஆட்டிசம் குறைபாடுகள், சர்க்கரை நோய், ஆட்டோ இம்யூன் போன்ற பல நோய்களுக்கு தீர்வாக ஜீன் எடிட்டிங் நம்பிக்கை தருகிறது. தாவரங்கள், மிருகங்கள் தாண்டி மனித மரபணுக்களில் சோதனை செய்வதற்கு பல தேசங்களில் தடையென்றாலும், முயற்சிகள் தொடர்ந்தபடிதான் உள்ளது. Watson & Crick விஞ்ஞானிகள், மரபணுவின் வடிவத்தை முதலில் கண்டுபிடித்த நாளன்று , கேம்ப்ரிட்ஜ் பரிசோதனை கூடத்தின் அருகில் இருந்த ஈகிள்ஸ் பப் உள்ளே சென்று, ‘உயிரின் ரகசியத்தை’ கண்டடைந்து விட்டதாக அங்கே அறைகூவல் விடுத்துள்ளனர். டபுள் ஹெலிக்கல் டிஎன்ஏ மாடலுக்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நான் நின்றிருந்த கார்ப்பஸ் க்ளாக்கிலிருந்து பத்தடி தூரத்தில் ஈகிள்ஸ் பப் தெரிய, உள்ளே நுழைந்தேன். உள்ளூர் மக்களுடன், சுற்றுலா பயணிகள் பலர் குழுமியிருந்தனர். மிக அருகில் கேவண்டிஷ் பரிசோதனைக் கூடம். ஜே.ஜே தாம்ஸன் எலக்ட்ரானை கண்டுபிடித்ததும், ஜேம்ஸ் சேட்விக் நியூட்ரானை கண்டுபிடித்ததும் இங்குதான். மாபெரும் அறிவியல் திருப்புமுனைகளை தந்த மகத்தான மனித மனங்கள் நடந்து சென்ற தெரு. அத்தெருவில் சிறிது தூரம் நடந்து சென்று, வலது புறம் திரும்பியவுடன் சார்லஸ் டார்வின் வசித்த வீடு தென்பட்டது. தற்சமயம் இது போன்ற வீடுகளில் கல்லூரி மாணவர்கள் வாடகையெடுத்து வசிக்கிறார்கள். ஒரு அறையிலிருந்து பாட்டு சப்தமும், கூச்சலும், ஆரவாரமும் பீறிட்டது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கையை நிரூபிக்க முயல்கிறார்களோ? மேய்ச்சல் நிலங்களில் வேலி போட்டு வாழ்வாதாரத்தை தடுத்து, மெழுகுவத்தி ஏற்றுவதற்கு வரி கட்ட சொன்ன அதிகாரத்தை எதிர்த்து வெடித்த குடியானவர்களின் புரட்சி, கேம்ப்ரிட்ஜ் மண் வரை பரவியுள்ளது. அரச வம்சங்களுக்கும், பிரபு குடும்பத்தாருக்கும் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த கல்வியானது, குடியானவர்களுக்கும் கிடைக்க வேண்டுமென்று நடந்த போராட்டங்களை “Town versus Gown” என்று கூறுகிறார்கள். கேம்ப்ரிட்ஜின் முதல் எண்ணூறு வருட சரித்திரத்தில் ஆண்கள் மட்டுமே படித்துள்ளனர். சென்ற நூற்றாண்டில்தான் பெண்களுக்காக கல்லூரிகளின் கதவுகள் திறந்து, அவர்களுக்கு பட்டமளிப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இரண்டு ராணிகள் கொடையளித்து உருவான கல்லூரியின் பெயரை Queens கல்லூரி என்பதா அல்லது Queen’s கல்லூரி என்பதா என்று குழம்பி, இறுதியில் Queens’ கல்லூரி என்று பெயரிட்டு மொழிச்சிக்கலை தீர்த்துள்ளனர். குயின்ஸ்’ கல்லூரியை தாண்டி கிங்ஸ் கல்லூரியை வந்தடைந்தேன். கிங்ஸ் கல்லூரி ஆறாம் ஹென்றி கொடையளித்து உருவானது. சுற்றி பார்க்க நுழைவு கட்டணம் ஐந்து பவுண்டுகள். ரசீது வாங்கி உள்ளே நுழைந்தேன். நவீன கணிப்பொறியியலின் தந்தை ”ஆலன் ட்யூரிங்” படித்த கல்லூரி இது. பிரம்மாண்டமான வாசல். சீரான பச்சை புல்வெளி. வண்ண மலர்கள் நிறைந்த தோட்டங்கள். அருகிலேயே ஒரு தேவாலயம். கல்லூரியின் பின்புறம் கேம் நதி ஓடிக்கொண்டிருந்தது. செல்வமும் செழிப்பும் இணைந்து கிங்ஸ் கல்லூரியின் ஒவ்வொரு புள்ளியிலும் ஞானத்தின் செறுக்கு தெறித்தது. மீண்டும் வாசலுக்கு வந்து, வடக்கு நோக்கி நகர்ந்து நியூட்டன் படித்த ட்ரினிட்டி கல்லூரிக்கு வந்து சேர்ந்தேன். அவரது அறையின் ஜன்னலுக்கு வெளியே தெரிந்த ஆப்பிள் மரத்தை சிலர் புகைப்படம் எடுக்க, சிலர் காணொளி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்தனர். கல்லூரி விடுமுறை காலத்தில் நியூட்டன் தனது கிராமம் சென்றபோது, அங்கு விழுந்த ஆப்பிளை பார்த்த பின் புவியிர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்றும், அந்த மரத்தின் சந்ததிதான் ட்ரினிட்டி கல்லூரியில் நட்டு வைத்து வளர்க்கப்படுகிறதென்றும் பல கதைகள் உலவுகின்றன. கல்லூரியின் ஆலயத்தில் இருந்த நியூட்டனின் சிலையருகில் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ட்ரினிட்டி கல்லூரி எட்டாம் ஹென்றியின் கொடை. நான் காலையிலிருந்து டஜன் கணக்கான கல்லூரிகளை கண்டு, அதில் படித்த அறிஞர்களை கிரகிக்க முயன்று மலைத்துப்போய் நின்றிருந்தேன். ஜவஹர்லால் நேரு, எம்.எஸ். ஸ்வாமிநாதன், மன்மோகன் சிங் போன்ற பல ஆளுமைகளை உருவாக்கி, இந்தியாவின் தலைவிதியையும் எதிர்காலத்தையும் தீர்மானித்ததில் கேம்ப்ரிட்ஜ் மண்ணுக்கு பெரும் பங்குண்டு என்றே கூறலாம். இந்தியாவின் பெரிய வரைபடம் ஒன்றின் முன்பாக நான் நின்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு மாநிலத்தின் மீதும் பல்ப் ஒன்று எரிய, திருச்சி துவாக்குடியில் REC கவுன்சலிங் பரபரப்பான கட்டத்தை எட்டியது. அமைதிப்படை அனுப்பிய காரணத்தால் அமைதிப்பூங்காவில் ராஜீவ்காந்தி படுகொலை அரங்கேற, பஞ்சாப் தீவிரவாதிகள், காஷ்மீர் தீவிரவாதிகள், அஸாம் தீவிரவாதிகள் என தேசத்தின் அனைத்து முனைகளும் பதட்டத்தில் இருந்த காலமது. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் தெற்கு, மத்திய, மற்றும் வடஇந்தியாவில் உள்ள கல்லூரிகளை தெரிவு செய்துவிட்டதால் சீட்டுகள் தீர்ந்து, அந்த மாநிலங்களின் மீது மினுக்கிய பல்புகள் விரைவாக அணைந்தன. என் முறை வந்தபோது பஞ்சாப், காஷ்மீர், அஸாம் ஆகிய மூன்று பல்புகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. நான் விரல்களை உயர்த்தி பஞ்சாப், காஷ்மீர் என்று நகர்த்தி கடைசியில் வடகிழக்கு நோக்கி அஸாம் மாநிலத்தை தேர்ந்தெடுத்தேன். அல்லது அஸாம் என்னை தேர்ந்தெடுத்தது என்றும் சொல்லலாம். புதுவையை சுற்றி கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் என எனது பால்யகால பயணங்கள் யாவுமே பேருந்து சார்ந்தவைதான். பதினெட்டு வயது வரை நான் ரயிலில் பயணித்ததே இல்லை. முதுகில் பதினெட்டு கிலோ லக்கேஜ்ஜையும், நெஞ்சத்தில் பதினெட்டு வருட நினைவுகளையும் சுமந்து கொண்டு, புதுவையிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டேன். காகிதத்தில் நான் கிறுக்கிய ரயில் ஓவியங்களை விட பிரம்மாண்டமாய் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நின்றிருந்தது. வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல ரயில் விசுக்கென்று கிளம்பியதும், என் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. டி.வியில் சேனல்கள் மாறுவது போல, ரயிலின் ஜன்னல்கள் வழியே தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் என்று காட்சிகள் மாறின. பல வித முகங்கள், மொழிகள், உணவுகள், உடைகள், வண்ணங்கள். இயற்கை காட்சிகள். ஒரிசாவில் பந்த் அறிவித்ததால் காலை துவங்கி மாலை வரை ரயில் ஒரே இடத்தில் நின்று விட்டது. கொல்கத்தாவிலிருந்து கவுஹாத்தி செல்ல வேண்டிய காமரூப் எக்ஸ்பிரஸ்ஸை இனி பிடிக்க இயலாது. அதன் பிறகு Barak Valley ரயில். பள்ளி நாட்களில் இந்திய வரைபடத்தில் நதிகளின் பெயரை எழுதியதுண்டு. அந்த நதிகள் எல்லாம் இன்று உயிர்பெற்று பெருக்கெடுத்து பேரோசையுடன் ஓடிக்கொண்டிருந்தன. கூவம், கொசத்தலையாறு, ஆரணி, பென்னா, கிருஷ்ணா, கோதாவரி, நாகவல்லி, மகாநதி, பிராமணி, ஹூக்ளி , சுபர்னரேகா, கங்கை, தீஸ்தா, பிரம்மபுத்ரா, பராக் நதி என மிக நீளமான ஒரு ட்ராலி ஷாட் ஏழு உதயங்களையும், ஏழு அந்திகளையும் காண்பித்த பின் நிறைவடைந்தது. நான் கல்லூரிக்குள் காலடி வைத்தேன். அந்திப்பொன் ஒளி பட்டு கேம் நதி ஜொலித்துக் கொண்டிருந்தது. நான் மெல்ல நடந்து கேம் நதியின் படகுத்துறை வந்து சேர்ந்தேன். படகில் துடுப்பு போட்டு செல்வது Rowing. நீண்ட கழி ஒன்றை நீருக்குள் உள்ள மண்ணில் செலுத்தி துழாவியபடி செல்வது Punting. கேம் நதியில் Punting மிகப் பிரபலம். கேம்பிரிட்ஜ் கல்லூரிகளை படகில் Punting செய்தபடியும் சுற்றி காட்டுகிறார்கள். கோடைக்கால சுற்றுலா பயணிகளை குறிவைத்து வழியெங்கும் ஐஸ்கிரீம் கடைகள். நகரின் மையத்தில் சந்தை சுறுசுறுப்பாக இயங்கியது. ஓவியங்கள், கைவினை பொருட்கள், கலைப் பரிசுகள் விற்பனைக்கு இருந்தன. கேம்பிரிட்ஜ் கல்லூரிகளின் படம் அச்சிட்ட டீ சர்ட், டீ கப், பை, பேனா, டை, தொப்பி, பொம்மைகள் என்று கடைகளில் பல வகை நினைவுப்பொருட்களை விற்றனர். ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுகளை துரிதமாய் வினியோகிக்க, இரு சக்கர வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாய் பறந்து கொண்டிருந்தன. நான் ராமானுஜத்தை நினைத்துக் கொண்டேன். முதல் உலகப்போர் நேரத்தில், சைவ உணவு கிடைக்காமல், இனவெறி தாக்குதலில் சிக்கி, கடுங்குளிரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 32 வயதிலேயே கணிதமேதை இறந்துவிட்டார். இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லர் படைகளின் தகவல் பரிமாற்றங்களை, ரகசிய குறியீடுகளை கட்டுடைப்பதற்காக புதிய கணிப்பொறி ஒன்றை வடிவமைத்தார் ஆலன் ட்யூரிங். இரண்டாம் உலகப்போரின் வெற்றியை நிர்ணயித்த ஆலன் ட்யூரிங், ஓரின சேர்க்கையில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, அவரை கட்டுப்படுத்த மருந்து செலுத்தியதின் விளைவாக அவரது ஹார்மோன்கள் குழம்பி, மார்பகங்கள் உருவாகி, உளவியல் பாதிக்கப்பட்டு 41 வயதில் பரிதாபமாக உயிரிழந்தார். மகாத்மா காந்திக்கு தோட்டாக்களை பரிசளித்த சமூகம்தானே நாம்? ஊழ் என்றால் என்ன? தலைவிதியா? கடவுளா? அதற்கும் அப்பால் அறிய முடியாத ஒன்றா? ஊழ் என்பது விதி என்றால் விதியை மதியால் வெல்வது சாத்தியமா? ஊழ் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றால் பிறகு மதியால் எப்படி அதை மாற்ற இயலும்? ஒரு தனி மனிதனின் ஊழ் என்பது, சமூகத்தின் ஊழ் மற்றும் பிரபஞ்ச விதிகளுடன் பிணைந்தே இருப்பதால் அவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தனியொரு மனிதனால் அறிவின் பாதையில் சென்று அகழ்ந்தெடுக்கப்படுகின்ற கணித சூத்திரங்கள், அறிவியல் விதிகள், மகத்தான கண்டுபிடிப்புகள் யாவும் நோபல் பரிசுகளை வென்றாலுமே கூட, ஒரு சமூகமாக அதை கையாளுவதற்கான தகுதியையும் முதிர்ச்சியையும் நாம் அடையாத பட்சத்தில், அந்த கண்டுபிடிப்புகள் அழிவில் முடியக் கூடும். நல்லூழ் தீயூழ் ஆவதும், ஆகூழ் போகூழ் ஆவதும் இப்படித்தான். அணுவை பிளந்து அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும் என்றாலும், அணு ஆயதங்களையும், இயற்கை பேரிடர்களையும் கணக்கில் கொண்டு இன்று உலகில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றது. மரபணு சோதனைகளுக்கும் தடை விதிக்கப்படுகின்றது. ஆலன் ட்யூரிங் மீதான குற்ற வழக்குகளை தள்ளுபடி செய்த இன்றைய நீதிமன்றம், பழைய தீர்ப்புகளை மாற்றி எழுதியது. அரசாங்கமும் சமூகமும் மன்னிப்பு கோரி, ஐம்பது பவுண்டு கரன்சி நோட்டில் ஆலன் ட்யூரிங் படத்தை அச்சிட்டு கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் உள்ள பூர்வகுடிகளுக்கு இழைத்த அநீதிகளுக்காக, வளர்ந்த சமூகங்கள் இன்று மண்டியிடுகின்றன. கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் செய்கின்ற பாவங்களுக்கு, எதிர்காலத்தில் பிராயச்சித்தம் தேடுகின்ற நிறுவனத்தின் பெயர்தான் சமூகமோ? இந்தியாவின் ஆன்மா காந்தி. ஆன்மாவை கொன்றுவிட்டு தான் நாமும் வேகமாய் வளர்கின்றோம். அறமற்ற ஒரு சமூகத்தில் அறத்தை நிலைநாட்டுவதே நமது கடமையும் தர்மமும். அப்படி ஒரு செயலில், நம் உயிரே போனாலும் பரவாயில்லை என்று நம்மை தீவிரமாக இயங்க வைப்பதே ஊழ். செயலின் நோக்கம்தான் முக்கியமே தவிர, செயலின் பலன்கள் அல்ல. ஒரு செயலின் நோக்கத்தை பொறுத்துதான் ஊழ் என்பது, நல்லூழாகவோ தீயூழாகவோ வடிவமெடுத்து நம்முடன் கைகோர்க்கிறது. யுகந்தோறும் ஊழ் நம்மை கண்காணித்துக் கொண்டேயிருக்கிறது. அதை தரிசிக்க பூர்வ ஜென்மம், மறுபிறவியெல்லாம் தேவையில்லை. வாழும் காலத்திலேயே சற்று கூர்மையாக நம்மை சுற்றி நடப்பவற்றை கவனித்தாலே போதும். இப்படித்தான் ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து என்னை அழைத்து, கேம்பஸ் நேர்காணலுக்காக ஒரு கல்லூரிக்கு செல்ல கோரினார்கள். சில காரணங்களால் என்னால் வர இயலாது என்றேன். அலுவலக பஸ் கல்லூரி நோக்கி கிளம்பிவிட்டது. நான் மாணவர்களை பற்றி யோசித்தேன். சமூகத்தின் பல்வேறு அடுக்குகளிலிருந்து வரும் சில மாணவர்கள் நுனி நாக்கு ஆங்கிலம் பேச தடுமாறுவதுண்டு. மாற்றுத்திறனாளி மாணவர்களை வழக்கமான இண்டர்வியூ முறைகள் பதட்டமாக்கிவிடும். மாணவர்களின் தயக்கத்தை போக்கி சிறிது நம்பிக்கை அளித்தால் அவர்கள் மிகச்சிறந்த தொழில்நுட்ப தீர்வுகளை தரக்கூடியவர்கள். கேம்பஸ் இண்டர்வியூ என்பது அவர்கள் வாழ்க்கையை மாற்றவல்ல ஒரு வாய்ப்பு. மறுநாள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நான் கல்லூரிக்கு வந்து விடுவதாக கூறினேன். சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்து புதுவை பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்தேன். பரபரப்பான சூழலில் HR டீம் என் கையில் ஒரு பயோடேட்டாவை கொடுத்து ஒரு மேசையை காண்பித்தனர். அங்கே ஒரு பெண் தனது நேர்காணலுக்காக காத்திருந்தாள். யார் இவள்? எனக்கு முன்பாக வந்து இங்கே அமர்ந்து இருக்கிறாள். வட்ட முகம். நெற்றியில் விபூதி. மலர்ந்த சிரிப்பு. பரிச்சயமான இந்த முகத்தை இதற்கு முன்பு எங்கோ பார்த்த நினைவு. பயோடேட்டாவை பார்த்தபடி, ,’பெயர்?’ என்றேன். அவள் தனது முழுப் பெயரை சொன்னாள். நான் நம்ப முடியாமல் ‘தந்தையின் பெயர்?’ என்று மீண்டும் கேட்டேன். ‘விஷ்வகுமார்’ என்றாள். ‘என்ன வேலை செய்கிறார்?’ ‘ஆசிரியர்’ என்றாள்.. ‘எந்த பள்ளியில் ஆசிரியர்?’ சொன்னாள். நான் மனசுக்குள் புன்னகைத்துக் கொண்டேன். பல வருடங்களுக்கு முன் எனக்கு வாழ்த்து சொல்லி டாட்டா காண்பித்த சிறுமி இவள். ‘யுவர் டெக்னிக்கல் ரவுண்ட் ஸ்டார்ட்ஸ் நௌ’ என்றபடி நான் கேள்விகளை கேட்க, அவள் பளிச்சென்று பதில்களை சொல்லத் துவங்கினாள். ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் *** வெற்றிராஜா புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார். https://akazhonline.com/?p=6983
  8. இன்னும் 48 மணித்தியாங்களுக்கு குறைவான நேரமே உள்ளது. யாழ்களப் போட்டியில் பங்குபற்ற விரும்புவோர் தாமதிக்காமல் போட்டியில் கலந்துகொள்ளுங்கள். போட்டியில் கலந்துகொண்ட @ஏராளன் மற்றும் @நிலாமதி அக்கா வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் குறைந்தது 5 பேராவது கலந்துகொண்டால்தான் போட்டி நடக்கும்!
  9. மின்னம்பலம் திமுகவினது இல்லை. எல்லாக் கட்சிகளும் விளம்பரங்களைப் போடுவதைப் பார்க்கின்றேன். கருத்துக்கணிப்பு தெளிவாகச் சொல்வது என்னவென்றால் எவர் வெல்லும் கூட்டணியை அமைக்கின்றாரோ அவர் கட்சிக்கூட்டணியே வெல்லும். அதிமுக, பிஜேபி, பா.ம.க கூட்டணி அமைத்திருந்தால் திமுகவுக்கு பத்துக்குள்தான் வெற்றிவாய்ப்பு உள்ளது. கூட்டணி எப்போதும் ஜனநாயகத்தைக் காப்பாற்றும். ஆனால் சுயநலத்திற்காகத்தான் தமிழ்நாட்டில் கூட்டணிகள் அமைவதும், பிரிவதும் உண்டு. எல்லாமே பகடை பன்னிரண்டுதான்! இப்போது 40 தொகுதிகளுக்குமான கருத்துக்கணிப்பு வந்துள்ளது. அண்ணாமலைக்கும் வெற்றி வாய்ப்பில்லை. ஆனால் கடினமாக முயன்றால் வெல்ல இப்போதும் சந்தர்ப்பம் இருக்கின்றது! வாய்ப்பில்லை ராஜா!😜 பிஜேபி கூட்டணி மூலம் வளர்ந்து வருகிறது. எப்படியும் அதிமுகவுடன் மீண்டும் சேர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று நினைக்கின்றேன்.
  10. மின்னம்பலம் மெகா சர்வே: தேனி… யார் திசையில் வெற்றிக் காற்று? Apr 17, 2024 07:06AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதன் ஜெயபாலன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தேனி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. தேனி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம், உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் (தனி) பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் 39% வாக்குகளைப் பெற்று தேனி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி 22% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஜெயபாலன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,தேனி தொகுதியில் இந்த முறை தங்கதமிழ்செல்வன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-theni-constituency-dmk-thanga-tamilselvan-wins-with-39-percentage-votes-admk-got-22-percentage-votes/ மின்னம்பலம் மெகா சர்வே: ராமநாதபுரம்…சேது பூமியில் சாதிப்பவர் யார்? Apr 17, 2024 07:36AM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மக்கள் மனதை வென்றவர்கள் யார்? ராமநாதபுரம் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சந்திரபிரபா ஜெயபால்போட்டியிடுகிறார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அதிமுக, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில்கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான ராமநாதபுரம், முதுகுளத்தூர், அறந்தாங்கி, பரமக்குடி (தனி), திருச்சுழி மற்றும் திருவாடனை பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ராமநாதபுரம்தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். பாஜக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் 27% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் 22% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஜெயபால் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ராமநாதபுரம் தொகுதியில் இந்த முறை நவாஸ்கனி வெற்றி பெற்று மீண்டும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/iuml-candidate-navaskani-won-ramanathapuram-loksabha-constituency-in-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: கோயம்புத்தூர்… கொங்குத் தங்கம் யாருங்ணா? Apr 17, 2024 08:11AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அண்ணாமலைபோட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான பல்லடம், சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம்புத்தூர் (தெற்கு) பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 36% வாக்குகளைப் பெற்று கோயம்புத்தூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை 29% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெயக்குமார் 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கோயம்புத்தூர் தொகுதியில் இந்த முறை கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-ganapathy-rajkumar-will-win-coimbatore-constituency-admk-bjp-slightly-behind/ மின்னம்பலம் மெகா சர்வே : வேலூர்… வெற்றி வெயில் யார் கையில்? Apr 17, 2024 08:39AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் டாக்டர் பசுபதி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் தி.மகேஷ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வேலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் கீழ்வைத்தினன் குப்பம் (தனி) பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 40% வாக்குகளைப் பெற்று மீண்டும் வேலூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் 34% வாக்குகளைப் பெற்றுஇரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதி 21% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தி.மகேஷ்குமார் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, வேலூர் தொகுதியில் இந்த முறையும் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-vellore-constituency-report-dmk-kadhir-anand-wins/ மின்னம்பலம் மெகா சர்வே: புதுச்சேரி… புது எம்.பி யார்? Apr 17, 2024 09:42AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வைத்திலிங்கம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் தமிழ்வேந்தன் போட்டியிடுகிறார். பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.மேனகா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக புதுச்சேரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 47% வாக்குகளைப் பெற்று மீண்டும் புதுச்சேரி தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் 39% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும், அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் 10% வாக்குகளைப் பெறுவார் என்றும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.மேனகா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…,புதுச்சேரி தொகுதியில் இந்த முறையும் வைத்திலிங்கம் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-puducherry-constituency-congress-vaithilingam-wins/
  11. மின்னம்பலம் மெகா சர்வே: கன்னியாகுமரி… வெற்றிச் சங்கமத்தில் யார் அலை? Apr 16, 2024 20:55PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம், மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் காங்கிரஸ்கட்சியின் சிட்டிங் எம்பி விஜய் வசந்த் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் பசிலியான் நசரேத் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களமிறங்குகிறார். நாம்தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிஃபர் போட்டியிடுகிறார். கன்னியாகுமரி தொகுதியில் தேசிய கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் சற்று வலுவாக இருக்கும்நிலையில், போட்டி இவர்களுக்கு இடையில்தான் தீவிரமாக இருக்கிறது. களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோயில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதி வாரியாக நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 45% வாக்குகளைப் பெற்று குமரியை மீண்டும்கைப்பற்றத் தயாராகிறார். பாஜகவின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப்பிடிக்கிறார். மீனவ முக்குவர் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுகவின் வேட்பாளரான பசிலியான் நசரேத் 17% வாக்குகளைப் பெறுகிறார். நாம் தமிழர் வேட்பாளர் மரிய ஜெனிஃபர் 4% வாக்குகள் பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரியில் மீண்டும் திமுக கூட்டணியில் காங்கிரசின் கொடியே பலமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-kanniyakumari-constituency-congress-vijay-vasanth-wins-45-percent-votes/ மின்னம்பலம் மெகா சர்வே: திருநெல்வேலி… மக்கள் தீர்ப்பு என்ன? Apr 16, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராபர்ட் புரூஸ் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஜான்சிராணி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் பா.சத்யா போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, இராதாபுரம் பகுதிகளில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 41% வாக்குகளைப் பெற்று திருநெல்வேலி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 27% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி 24% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பா.சத்யா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருநெல்வேலி தொகுதியில் இந்த முறை ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-robert-robert-bruce-won-tirunelveli-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சிதம்பரம்… மக்கள் மனதின் ரகசியம் என்ன? Apr 16, 2024 22:40PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சந்திரகாசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ஜான்சிராணிபோட்டியிடுகிறார். விசிக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி) மற்றும் குன்னம் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 46% வாக்குகளைப் பெற்று மீண்டும்சிதம்பரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 22% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ஜான்சிராணி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிதம்பரம் தொகுதியில் இந்த முறையும் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்று மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/vck-candidate-thirumavalavan-won-chidambaram-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்? Apr 17, 2024 00:06AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில்ஆ.ஜெயக்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நீலகிரி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான பவானிசாகர் (தனி), உதகமண்டலம், குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம் மற்றும் அவினாசி (தனி) பகுதிகளில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் நீலகிரி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெயக்குமார் 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நீலகிரி தொகுதியில் இந்த முறையும் ஆ.ராசா வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-a-raja-will-win-in-nilgiris-constituency-admk-placed-second/ மின்னம்பலம் மெகா சர்வே: தர்மபுரி… தட்டிப் பறிப்பது யார்? Apr 17, 2024 06:38AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் ஆர்.மணி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் அசோகன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி செளமியா அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா பொன்னிவளவன் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தர்மபுரி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிபட்டி, அரூர் (தனி) மற்றும் மேட்டூர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் ஆர்.மணி 37% வாக்குகளைப் பெற்று தர்மபுரி தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி 31% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அதிமுக வேட்பாளர் டாக்டர் அசோகன் 28% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பொன்னிவளவன் 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தர்மபுரி தொகுதியில் இந்த முறை ஆர்.மணி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-dharmapuri-constituency-dmk-r-mani-wins-with-37-percentage-votes-soumiya-anbumani-came-second-place/
  12. போட்டியில் பங்குபற்றும் @suvy ஐயா வெற்றிபெற வாழ்த்துக்கள்! வெள்ளி இரவு 10 மணிக்கு முன்னர் இன்னும் 7 பேர் கலந்துகொண்டால்தான் போட்டி!
  13. 40 இல் (பாண்டிச்சேரி உட்பட) எதுவும் எதிர்க்கட்சிகளுக்குக் கிடையாது. என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், வாக்குச்சாவடிக்குப் போய் போட்டால்தான் வாக்கை எண்ணுவார்கள்.😉
  14. மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான திட்டக்குடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான சிவகங்கை, திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST சூடுபிடிக்கிறது அரசியல் களம்… தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது. மக்கள் மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம். தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம் போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார். அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36% வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது. தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், வேளச்சேரி, மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.