Jump to content

வல்வை சகாறா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5810
  • Joined

  • Last visited

  • Days Won

    39

வல்வை சகாறா last won the day on September 19 2023

வல்வை சகாறா had the most liked content!

3 Followers

About வல்வை சகாறா

  • Birthday December 5

Profile Information

  • Gender
    Female
  • Location
    கனடா
  • Interests
    ஆன்மாவுடன் பேசுதல்

Recent Profile Visitors

15587 profile views

வல்வை சகாறா's Achievements

Mentor

Mentor (12/14)

  • Very Popular Rare
  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

1.6k

Reputation

  1. விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும் அன்னக்காவடிகளே! விலை எங்கு போனீர்? வலை பின்னி வாரீர் வார்த்தைகள் பொய்க்கின்றீர் நிசம் இது இல்லை விழிகளே கூறும் மெய்நிலை உணர்கின்றேன். தமிழச்சாதி இவ்வளவு தூரத்திற்கு மலினப்பட்டுவிட்டதா?
  2. யாயினி ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னையின் இழப்பிற்கும் நேரில் வந்து பங்குபற்ற முடியாமல் பென்டமிக் தடைசெய்தது. இப்போதும் நேரில் சமூகமளிக்கமுடியாத சூழலில் இருக்கிறேன். அதற்காக வருந்துகிறேன். கண்டிப்பாக நேரில் சந்திப்பேன்.
  3. பிள்ளைகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்துவதை மொக்கை மாதிரி பார்த்துக் கொண்டிருப்பதே வேலையாகிவிட்டது. ஒரு சொல்லைத் தேட வெளிக்கிட்டால் ஏகப்பட்டவை கொட்டுப்படுகின்றன. கணனி ஒரு உளவாளி. 😒
  4. புட்டின் மகிமையால ஞானத்தங்கமே - எங்கள் கு.சா குழம்பிப்போனார் ஞானத்தங்கமே😁
  5. ஒரு சம்பவத்தை மிகவும் இரசித்து வாசிக்கும்படி எழுதும் பாணி வெட்டுக்கிளிக்கு லாவகமானது என்பதற்கு உங்கள் பதிவுகள் சாட்சி. இரசித்து சிரித்தபடியே வாசித்து முடித்தேன். சூப்பர்
  6. என்னதான் வக்கணையாய் ஆயிரம் கதைகள் கதைத்தாலும் பக்கத்தில் உடன் வரும் துணைதான் ஆபத்பாந்தவர். வீட்டுக்குப் போன பின்னால் நிழலி கவிதாவின் காலில் அட்டாங்க நமஸ்காரம் செய்ததாக காற்று வாக்கில் கதை அடிபட்டது நான் தான் நம்பேல்லை. பட் இப்ப நம்புறேன். கிலியை உண்டாக்கும் எழுத்தென்றாலும் அந்த நீட்டி முழங்கல் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி விடுகிறது. பாராட்டுகள் வெட்டுக்கிளி
  7. நல்ல கவிதை தியா. அரிதாக என்றாலும், சிறகுகள் உடைந்தாலும் மேலும் கீழுமாக என்றாலும் பறவை பறக்கிறது அல்லவா. ஆதலால் பறவை தொலையவும் இல்லை தன்னைத் தொலைக்கவும் இல்லை. நான் சொல்வது சரிதானே.. 🙂
  8. கவனம் அப்பு ப்ரசர் ஏறிக்கிடக்கிற மாதிரி தெரியுது. கவிதை சொல்லுது..... மீள் வருகை நலமாகட்டும்.
  9. யாழிணையத்தின் இருபத்தைந்தாவது அகவை தினம் யாழை தினமும் ஆராதிக்கும் உறவுகளுக்கும் யாழுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
  10. எல்லாம் இருந்தது இப்போது இல்லையே கனவா என்று கேட்க வைப்பது நாம் கடந்ததை மட்டுமே நினைத்தபடி நடப்பதனால்..... வாழ்வின் ஓட்டம் எதிர் வருவதை நோக்கப்பயப்படுகிறது.
  11. உண்மையில் இன்று புலம்பெயர்ந்து வாழும் பல குடும்பங்கள் மனநல வைத்திய தேவை இருந்தும் நாடாமல் அவ்வகையான பிரச்சனைகளில் இருந்து மீளாமலும் அல்லது வைத்தியதேவைக்குப் பதிலாக சூழல் மாற்றத்தைக் கூட செய்யத்துணிவில்லாதவர்களாகவும் வாழ்கின்றனர். மாற்றுத் தீர்வுகளை நிராகரிப்பவர்களாகவே அதிகமானவர்கள் வாழ்கிறார்கள்.
  12. நல்ல முயற்சி பாராட்டுகள் பிரபா சிதம்பரநாதன்.
  13. கோசான் உங்கள் படைப்பாற்றல் மிகவும் அபாரமாக இருக்கிறது. நம்மைச் சுற்றி நிகழும் சாதாரண விடயங்களுக்குள் அசாதாரணத்தை ஊகிப்பது கடினம். கோசான் உங்கள் கருத்தாடல்களை நாளாந்தம் வாசிக்கத் தவறுவதில்லை. கருத்தாடல்களே அதிகமாக உங்களை மிகவும் புடம்போட்டிருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. எழுத்தின் லாவகம் செம்மையாக இருதரப்பு வாதங்களையும் சமாந்தரமாக பயணிக்க வைத்திருக்கிறது. கதாப்பாத்திரங்களின் ஆளுமைதான் கதைகளை வெற்றிகரமாகக் காவிச்செல்லும். அபாரமான எழுத்தாளர். வாழ்த்துகள்.
  14. ஒவ்வொரு அவலங்களுக்குப் பின்னாலும் தர்மத்தின் சாவும் மானுடத்தின் சிதைவும் நிச்சயம் இருக்கும் காது கொடுத்து கேட்காதவரை அது வெளியே தெரியாது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.