Jump to content

ஊர்க்காவலன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    675
  • Joined

  • Last visited

  • Days Won

    5

ஊர்க்காவலன் last won the day on October 17 2014

ஊர்க்காவலன் had the most liked content!

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

3967 profile views

ஊர்க்காவலன்'s Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator

Recent Badges

259

Reputation

  1. இல்லை தலீவரே. பென்சன் எடுக்க நிறைய காலம் இருக்கு. ஆனா பென்சன் எடுக்கிறதை திட்டமிடுற வயசுக்கு வந்திட்டன் சில சமூக சேவைகள் செய்வதற்கு நேரடியாக இலங்கையில் வங்கிக்கணக்கு இருந்தால் நடைமுறை சிக்கல் நிறையவே குறையும். அதற்கு தான் கேட்டனான். இந்த இடைத்தரகர்கள் மூலமாக செய்வது நம்பிக்கை குறைந்துகொண்டே போகிறது.
  2. இறுதியான ஒரு கேள்வி. எந்த வங்கியில் இந்த NRRA வசதி உள்ளது? கணக்கினை ஆன்லைன் மூலம் திறக்கும் வசதிகள் இருக்குமா? இலங்கையில் கோடி கோடியாய் முதலீடு செய்வதற்கு நான் இந்த தகவலை கேட்கவில்லை என்பதையும் கூறிக்கொண்டு....:)
  3. உள்ளூரில் வைப்பிலிட முடியாது என்றால் என்ன அர்த்தம்? இலங்கை சென்றால் அந்த பணம் எடுக்க முடியாது என்று அர்த்தமா? வைப்பிலிருக்கும் பணம் இலங்கை ரூபாயில் இருக்குமா அல்லது அந்தந்த நாட்டு நாணயத்திலா?
  4. வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் (இலங்கை குடியுரிமை இல்லாதவர்) இலங்கையில் வங்கிக்கணக்கு தொடங்க முடியுமா? இணையத்தில் தேடியதில் முரணான தகவல்களே கிடைத்தன. யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும். நன்றி
  5. என்னுடைய சந்தேகம் இப்பொழுதும் இதை RAW செய்திருக்க வாய்ப்பில்லை என்பது தான். அதற்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று முதல் இணையத்தில் மித்துஜா என்பவர் உள்ளே கொண்டுவரப்பட்டிருக்கிறார். அவரின் அடையாள அட்டை முதல், கணவர், பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படம் வரை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நான் இங்கே இணைக்க விரும்பவில்லை. அது மித்துஜா இல்லையென்றால் அவர் எல்லோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் மித்துஜா சுவிசில் அகதி அந்தஸ்து நிலையில் தான் இருக்கிறார் என்பது அவருடைய அடையாள அட்டையில் இருந்து தெரிந்துகொள்ளலாம். சில மாதங்களிற்கு முன்னர் சுவிசில் துவராகவின் பெயரை வைத்து ஒரு பணவேட்டை நடந்தது அனைவரும் அறிந்ததே. அதுவும் மித்துஜாவின் திருவிளையாடலாக இருக்கலாம். இந்த சில்லறைத்தனமான வீடியோ கூட பணவேட்டை கும்பலின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பிருக்கிறது. எது எப்படியோ மித்துஜா இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றால் வெளியில் வந்து பேசவேண்டும். சம்மந்தம் இல்லாத பட்சத்தில் இணையத்தில் வதந்தி பரப்பிய அனைவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து நஷ்டஈடு பெறட்டும். அவரின் மௌனம் மேலும் மேலும் அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துக்கொண்டே செல்லும்.
  6. RAW ஒரு மூன்றாம் தரப்பு நாட்டின் உளவுத்துறையல்ல. தொழில்நுட்பத்தை கையாளுவதில் அவர்களிற்கு பெரிய சிக்கல் இருக்கப்போவதில்லை. அப்படியிருக்கையில் இப்படி ஒரு மட்டமான அரைவேக்காட்டுத்தனமான காணொளியை ஏன் வெளியிட வேண்டும்? பார்ப்பவர்கள் இவ்வளவு இலகுவாக இது பொய் என்று கண்டுபிடிக்க கூடிய ஒரு காணொளியை வெளியிடவேண்டிய தேவை என்னவென்று புரியவில்லை. ஒன்றில் அவர்கள் தெரிந்தே இந்த தவறை செய்திருக்கவேண்டும். அல்லது இந்திய உளவுத்துறை அப்படி தரம்குறைந்து போயிருக்கவேண்டும் (இதை நான் பெரிதும் நம்பவில்லை). 2009இல் இருந்து தமிழர் பிரச்சனையில் "யாரோ" ஒரு மீட்பர் வருவார் அதுவரை காத்திருங்கள் என்று ஆசைகாட்டியே தமிழர்களின் போராட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ அமைப்பு தாங்கள் தான் என்று சொல்பவர்கள் கூட தலைவர் வருவார் என்ற ஒரு மாயைக்குள் தான் தமிழர்களை வைத்திருக்கிறார்கள். அந்த மாயைக்குள்ளயே தமிழர்கள் இருக்கும் வரை அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாது. பெரும்பாலானவர்கள் இனி தலைவர் வருவார் என்பதை 14 ஆண்டுகள் சென்றபின்னர் நம்புவதாக இல்லை. ஆனாலும் தலைவர் வருவார் என்று நம்புகிற ஒரு சிறிய கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அது புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறை பெரியவர்கள் தான். இந்த காணொளி அவர்களை மறுபடியும் அந்த மாயைக்குள்ள வைத்திருப்பதற்காக இருக்கலாம். ப்ரொஜெக்ட் தலைவர் குடும்பம் என்று ஒன்றை தொடங்கி அடுத்த 10 ஆண்டுகள் காலத்தை ஒட்டட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை.
  7. நான் சில மதங்களிற்கு முன்னர் AI 2041 என்ற புத்தகம் வாசித்திருந்தேன். அது 2041 உலகம் தொழில்நுட்பத்தில் முக்கியமாக செயற்கை நுண்ணறிவு எவ்வளவு தூரம் வரை செல்லும் அல்லது செல்லலாம் என்பது பற்றியது. அந்த புத்தகம் வாசித்த பின்னர் இப்படி ஏதாவது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். Deep fake என்பதை இன்னும் சரியாக கையாள தெரியாத ஒரு கூட்டம் இதை செய்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இன்னும் ஒரு 10-15 வருடங்களில் அதை சரியாக பயன்படுத்தி தலைவரின் உரையை வெளியிடுவார்கள். அது வரை பொறுமை காக்கவும். நான் உரையை கேட்கவில்லை. வீடியோவின் thumbnail பார்த்தே புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. 😄
  8. வணக்கம் ஊர்க்காவலன்.

    விடுகதைகள் என்ற திரியை 2014 ஜூன் மாதத்தின் பின்னர் நீங்கள் தொடரவில்லை. நீங்கள் விடுகதை பற்றிய திரி திறந்தது தெரியாது நானும் ஒன்றைத் திறந்துவிட்டேன். நீங்கள் மீண்டும் வந்து அத்திரியைத் தொடர்ந்தால்  எனக்கு ஆட்சேபனை இல்லை. நீங்கள் தொடர மாட்டீர்கள் எனில் நான் தொடர்ந்தும் விடுகதைகளைப் போடலாம். உங்கள் எண்ணத்தைத் தயவுசெய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி.

    அன்புடன் சுமே

  9. 800 பச்சைபுள்ளிகளை பெற்ற சிறுமி சாந்தி "அக்காவிற்கு" வாழ்த்துக்கள்!
  10. பச்சைபுள்ளிகள் எடுத்து சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
  11. யாருப்பா அது Pagetamil.com ? சும்மா மேலோட்டமா வாசித்த எனக்கு இவ்வளவு எழுத்துபிழை எழுதினதை ஒருக்கா மீளாய்வு செய்திட்டு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் (பகுதி 2லும் இதே நிலை தான்).
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.