Jump to content

Leaderboard

  1. குமாரசாமி

    குமாரசாமி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      43059


  2. ரதி

    ரதி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      5

    • Posts

      14944


  3. தமிழ் சிறி

    தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      4

    • Posts

      76585


  4. ஈழப்பிரியன்

    ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      3

    • Posts

      15416


Popular Content

Showing content with the highest reputation on 01/12/17 in all areas

  1. பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது January 12, 2017 பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு தொடர் சிகிச்சையின் பலனாக கண் பார்வை கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பாடகி வைக்கம் விஜலட்சுமிக்கு பிறவியிலே பார்க்கும் திறன் இல்லை. இருப்பினும் அவர் தனது இனிய குரலில் பாடல்கள் பாடி அசத்தி வருகிறார். என்னமோ ஏதோ படத்தில வரும் புதிய உலகை புதிய உலகை, குக்கூ படத்தில் கோடையில் மழை போல, வீர சிவாஜியில் சொப்பன சுந்தரி நான் தானே , உள்பட சுமார் 40 பாடல்களை பாடியுள்ளார். அவருக்கும் கேரளாவை சேர்ந்த இசையமைப்பாளர் சந்தோ{க்கும் எதிர்வரும் மார்ச் மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் நடைபெற உள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விஜயலட்சுமிக்கு பார்வை வந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. விஜயலட்சுமி தனது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறோம்.
    1 point
  2. யாராவது கூப்பிட்டு ஒரு நாளைக்காவது இப்படி ஒரு சாப்பாட்டை அதுவும் சுவையான சாப்பாட்டை சமைச்சுத் தந்தால் எப்படி இருக்கும் இரண்டு பேருமே பச்சைக் கள்ளன்கள்
    1 point
  3. 1 point
  4. கோபுர ரகசியமும், நம் முன்னோரின் விஞ்ஞான அறிவாற்றலும் முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்? கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர ்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைபெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..? ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன. "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது http://aanmeegaiyarkai.blogspot.ca/2014/12/blog-post_10.html
    1 point
  5. வணக்கம் வாத்தியார்....! தத்தி தத்தி நடக்கும் போது பரதக்கலை பிறக்கும் தங்கச்சிலையை அணைக்கும்போது சந்தனம்போல் மணக்கும் முத்தெடுத்து தொடுத்து வைத்த சித்திரம் போல் இருக்கும் -- நாம் முத்தத்தில் செய்ததெல்லாம் மொத்தமாக கிடைக்கும்.....! --- தவழும் தங்கரதம் ---
    1 point
  6. பிரமிடு கட்டியவர்கள் தமிழரே: 5 தொன்மையான நாகரீகங்கள் பிரமிடு கட்டியவர்கள் தமிழர்களே என்பதை பல கோணங்களில் செய்து வரும் நமது ஆய்வுத்தேடலை உலகின் பல்வேறு தொன்மையான நாகரீகங்களோடு தமிழர்களின் நாகரீகம் கொண்டிருந்த பிரமிடு அல்லது பிரமிடு போன்ற கட்டுமானங்களின் அடிப்படையிலான தொடர்புகளில் தேடுவோம். இந்த தலைப்பின் முதல் பதிவில் கண்டது போல 5. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில முக்கிய தொன்மையான நாகரீகங்கள்: 1. நாஸ்கா பெரும் மண் ஓவியங்கள் உள்ள இன்கா இனம் வாழ்ந்த பெரு (தென் அமெரிக்கா) 2. உலகின் மிகப்பெரும் பிரமிடு உள்ள மாயன் இனம் வாழ்ந்த மெக்சிகோ (மத்திய அமெரிக்கா) 3. Stonehenge எனப்படும் இங்கிலாந்தில் உள்ள குத்துக்கல் வரிசை. (ஐரோப்பா) 4. உலகின் மிகப்பெரும் கோயிலான அங்கோர்வாட் உள்ள கம்போடியா (தென் கிழக்கு ஆசியா) 5. முகவாய் சிலைகள் நிறுவப்பட்ட ஈஸ்டர் தீவுகள் உள்ள சிலி Chile (தென் அமெரிக்கா) 6. குனுங் பதாங் பிரமிடு உள்ள இந்தோனேசியா (தென் கிழக்கு ஆசியா) 7. உளூரு பாறை (Uluru or Ayer Rock) உள்ள ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியா) 5. 1. பெரு நாட்டில் உள்ள நாஸ்கா கோட்டு உருவங்கள்: 1. பெரு நாட்டில் பறக்காஸ் தீவில் உள்ள திரிசூல விளக்கு 1926 ல் இன்றைய உலகத்துக்கு தெரிய வந்த பெரு நாட்டின் ஆண்டீஸ் மலையில் உருவாக்கப்பட்ட பெரிய தரை உருவங்கள், நில ஓவியங்கள். நிலத்தில் இருந்து பார்த்தால் முழுமையாகத் தெரியாது வானத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரியும் வகையில் உருவாக்கப்பட்டவைகள் அவை. அவை 1. நாஸ்கா உருவங்கள் பெரு நாட்டில் நாஸ்கா பாலைவன மலைப்பகுதியில்வரையப்பட்டுள்ளன. 2. 80 கி. மீ. பரப்பளவில் அவை அமைந்துள்ளன. 3. வரையப்பட்ட உருவங்களின் எண்ணிக்கை 70 க்கும் மேல். 4. கி. மு. 500 - கி.பி. 500 ஆண்டளவில் உருவாக்கப்பட்டவை. 5. பெரும்பாலும் 200 முதல் 660 அடிவரை நீளமுள்ள உருவங்கள். 6. எதற்காக வரையப்பட்டன: மத ரீதியாக அல்லது வானியல் காரணங்களாக இருக்கலாம். காண்க: நாஸ்கா ஓவியங்கள் வரையப்பட்டுள்ள மலை இருக்குமிடம்: தென் அமெரிக்காவின் பெரு (Peru) நாட்டில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரின் ஒரு பகுதி. பெரும் ஓவியங்கள் என்னென்ன ஓவியங்கள் என்பது பற்றிய விளக்கத்துடன் மத்தியில் செல்லும் சாலையின் இருபக்கத்திலும் ஆங்காங்கே மலைகளில்... இந்த பெரும் தரை ஓவியங்கள் ஆகாயத்திலிருந்து தான் பார்க்க முடியும் என்பதால் மேலிருந்து எடுக்கப்பட்ட படங்கள். எவ்வளவு பெரியது என்பதை அங்கே சாலையில் செல்லும் வாகனங்களைக்கொண்டு அறிந்து கொள்ளலாம். அருகில் சென்று பார்த்தால்... சில தரை ஓவியங்கள் அவற்றின் அளவுகளுடன் இதே பெரு நாட்டில் தமிழர்களைப்போன்றே இறந்த மூதாதையருக்கு திதி செலுத்தும் வழக்கம் பற்றியும், சூரிய, சந்திர வழிபாடு, நாக வழிபாடு பற்றியும், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய லோக மாதா நகரமும், நம்மூரு மேரு மலை (இமய மலை) போல அங்கும் ஒரு மேரு மலை இருப்பதையும் காண: 5. 2. 1. மாயன்களின் பிரமிடுகளும் தமிழர்களின் தொடர்புகளும் மாயன்கள் தமிழர்களே என்பதை 25 விளக்கங்களோடு ஏற்கனவே நாம் பார்த்திருக்கிறோம். காண்க: எனவே இப்பதிவில் அவர்களுடைய பிரமிடுகள் பற்றி மட்டுமே காண்போம். உலகின் மிகப்பெரிய பெரிய மாயன்கள் உருவாக்கிய சோலுலா பிரமீடே. இப்பிரமிடு இருக்குமிடம் மாயன்கள் வசித்த மெக்சிகோ நாடே. மெக்சிகோவில் சோலூலா மாயன்களின் சோலூலா நகரின் பெயரைக் கேட்டவுடன் தமிழக சோழர்களின் ஞாபகம் வருகிறதா? வரனும்ல. அதுபற்றி விளக்கம் காண: சரி, தலைப்புக்குள் வருவோம். அந்த சோலூலா நகரத்தில் உள்ள ஒரு மலைக்கோயில். மெக்சிகோவை காலனியாதிக்கம் செய்த ஸ்பானியர்கள் கட்டியிருக்கும் கிறித்தவ கோயில். மலை மீது கோயில் கட்டப்பட்டிருந்தாலும் கூட கோயிலின் கீழே இருப்பது மலையா ? மலையல்ல மறைந்திருக்கும் உலகின் மாபெரும் பிரமிடு. பிரமிடு மீது பல்லாண்டுகளாய், பல நூறு ஆண்டுகளாய் மண் குவிந்து மலையாகிவிட்டது. கோயிலில் இருந்து எவ்வளவு தொலைவு வரை பிரமிடு இருக்கிறது, இதே போல அந்தக் கோயிலின் அடுத்த பக்கமும். பிரமிடு அமைப்பை அப்படியே இருப்பது போல "ஒரு மாதிரி வடிவம்" செய்திருக்கிறார்கள். அப்போதுதான் அந்த பிரமிடின் பிரமாண்டம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடிகிறது. சோலூலா பிரமிடு எகிப்திய பிரமிடை விட உயரத்தில் குறைவு தான்.ஒரு துணைச்செய்தி:(சோலூலா பிரமிடின் உயரமும், சோழர்களின் தஞ்சை பெரிய கோயிலின் உயரமும்ஒன்றே-66 மீட்டர்.) தஞ்சை பெரிய கோயிலின் உயரம் - 66 மீட்டர் ஆனால் நீள அகலத்தில்... பரப்பிலும், தள அளவிலும் எகிப்து பிரமிடை விட நான்கு மடங்கு பெரியது சோலூலா பிரமிடு. கி. மு. 300 அளவில் கட்டப்பட்ட இந்த பிரமிடு 1910 ம் ஆண்டு வரை யார் கண்ணிலும் படாமல் காடு, மண்ணால் புதையுண்டே கிடந்திருக்கிறது. எகிப்திய பிரமிடுடன் ஒரு ஒப்புமை 5. 2. 2. மாயன்களின் மெக்சிகோ நாட்டில் உள்ள மற்றொரு முக்கிய பிரமிடு நகரம் Teotihuacan - தேயோத்திவாகன். தேயோத்திவாகன் என்பதன் பொருள் "கடவுள்களின் பிறப்பிடம்", "Birthplace of the gods" காண்க: மேலே உள்ள படத்தில் அந்த நகரத்தில் உள்ள 3 முக்கிய பிரமிடுகள்: சந்திர பிரமிடு, சூரிய பிரமிடு, மற்றும் பறவை நாக பிரமிடு. சூரிய பிரமிடின் உயரம் கணிக்க இன்னொரு படம். இந்த 3 பிரமிடுகளும் இணைந்த அரிய புகைப்படம். மைய சாலையில் உள்ள மக்கள் புள்ளியாக தெரியும் அளவுக்கு உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டதன் மூலம் பிரமிடுகளின் அளவினை கணிக்கலாம். படத்தை பெரிதுபடுத்தியும் காணலாம். இந்த 3 பிரமிடுகளும் இணைந்த வரை படம். எகிப்திய 3 பிரமிடுகளுக்கும் ஓரியன் நட்சத்திரக்கூட்டங்களுக்கும் உள்ள ஒற்றுமை போலவே இந்த நகரத்திலும் உள்ள 3 பிரமிடுகளுக்கும் ஓரியன் நட்சத்திரக்கூட்டங்களுக்கும் இடையே ஒற்றுமை இருப்பது அதிசயமே.எகிப்திய பிரமிடுகள் - ஓரியன் நட்சத்திரக்கூட்டம் - தேயோத்திவாகன் பிரமிடுகள் The most obvious comparison, however, is that the layout of both the three pyramids at Gizeh and the three main structures of Teotihuacan represent the Belt of Orion. The Pyramid of the Moon compares with the smallest pyramid on the plateau, the Sun Pyramid with Khafre and the Temple of Quetzalcoatl, which has the largest ground plan, but never was built into a full pyramid, compares with that of Khufu. Though there are individual differences, I would suggest that the same ingredients have been used, answering to the same general ground plan: to represent the Belt of Orion, which in ancient Egypt was the symbol of Horusஓரியன் நட்சத்திரக்கூட்டத்தோடும், எகிப்திய பிரமிடுகளோடும் ஒப்புமைப்படுத்தி பார்க்க மேலும் விரும்புவோர் காண்க: மேலும் மாயன் பிரமிடு அமைப்புகளுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசிய பாலித்தீவிலும் இதே போன்ற பிரமிடு அமைப்புகள் இருப்பது ஆச்சரியமான ஒற்றுமை. 5. 3. Stonehenge எனப்படும் இங்கிலாந்தில் உள்ள குத்துக்கல் வரிசை. (ஐரோப்பா)5100 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்ட இங்கிலாந்தில் இருக்கும் இந்த Stonehenge எனப்படும் குத்துக்கல் வரிசை என்ற தொன்மையான கட்டட அமைப்பும் வானியல் பூர்வமானது. காண்க: குத்துக்கல்வரிசை எவ்வளவு உயரமானது என்பதைக்கான... அமெரிக்க அதிபர் ஒபாமா இங்கு வருகை தந்தபோது... சுற்றுலா பயணிகள், ஆய்வாளர்கள்... வானியலோடு உள்ள தொடர்பில் சூரியனின் நிலநடுக்கோடு வருகையின் போது உருவாகும் ஒளி யினை மையமாகக் கொண்டு கட்டப்பட்டது. இதனை விளக்கும் விதமாய் இன்னொரு படம். மாயன்களின் பிரமிடு கடக - மகர ரேகை சூரிய ஒளி நாளில் ஏற்படும் பாம்பு உருவம் போல உருவாக்கப்பட்டது இங்கிலாந்து குத்துக்கல்வரிசை. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகருக்கருகில் உள்ள குத்துக்கல் வரிசையும் சூரிய நிலநடுக்கோட்டு சம ஒளி நாளை குறிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்ட குத்துக்கல் வரிசையே. இந்தியாவின் மணிப்பூரில் உள்ள குத்துக்கல்வரிசையும் வானியலோடு தொடர்புடையதே. காண்க: குத்துக்கல்வரிசை பற்றிய ஒரு தமிழ்க் கட்டுரை. 5. 4. உலகின் மிகப்பெரும் கோயிலான அங்கோர்வாட் உள்ள கம்போடியா (ஆசியா) கம்பூச்சியா அ கம்புஜா என அழைக்கபடும் இன்றைய கம்போடியா ஒரு தென் கிழக்கு ஆசிய நாடாகும். கம்போடியாவிலுள்ள இனத்தின் பெயர் குமர் (khmer). இந்த மக்களை கம்போடியர் என்றும் குமர் என்றும் அழைக்கின்றனர். காண்க: அன்றைய கம்போடியா குமர் நாடு என்றே அழைக்கப்பட்டது. அன்றைய குமர் மற்றும் இன்றைய கம்போடியா இணைந்த நில வரைபடம். (வெள்ளைக் கோடுகள் இன்றைய நாடுகளின் எல்லைகள்; வண்ணத்தில் உள்ளவை அன்றைய நாடுகள்) மேரு மலையை உலகின் மையமாக நினைத்தவர்கள் தமிழர்கள். அதனால் இனப்பரவல் நிகழ்ந்த இடங்களில் எல்லாம் மேரு மலை என்ற பெயரை மலைகளுக்கு வைத்தவர்கள். காண்க:இந்தோனேசியாவில் செமெரு, காண்க: ஆப்பிரிக்க தான்சானியாவில் மேரு மலை, இமய மலையின் மேற்கில் சுமேரு, காண்க: இமய மலையின் கிழக்கில் குமேரு, ஆஸ்திரேலியாவிற்கருகில் தெற்கு மேரு எனும் திமேரு (Timor), காண்க: அமெரிக்காவில் மிசைமேருக்கா காண்க: இஸ்ரேல் நாட்டில் மோரியா.தமிழ்நாட்டின் தென் முனை குமேரு முனை. (குமரி முனை அல்ல) கீழே உள்ள நிலப்படத்தில் மேரு மலை (இமய மலை) தற்போதைய ஈரானிலிருந்து தாய்லாந்து வரை பெருமலையாய் பரவி இருப்பதைக் காணலாம். குமேரு என்பது மறுமுனை அ மலையின் முடிவில் கீழ்ப்பகுதி அ தாழ்வு பகுதி என்று அர்த்தம் பெறுகிறது. கம்பு என்பவரின் பெயரில் கம்புஜா நாட்டின் பெயர் உருவாயிருக்கிறது. அவர் இந்தியாவில் இருந்து வந்தவர். சற்றே தேடிப்பார்த்ததில் அவருடைய உண்மையான பெயர் கவுந்தன்யா (கி.பி.68) என்றும் தெரிய வந்தது. அவரை Hun Thien என்று சீனர்கள் அழைத்து இருக்கிறார்கள். காண்க: 5 ம் நூற்றாண்டில் இருந்த தமிழில் எழுதப்பட்ட கல்வெட்டு. சமஸ்கிருத கிரந்தம் என்று ஆரியமயப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரிதுபடுத்தியும் காணலாம். காண்க: கம்போடியா நாட்டின் மிக முக்கிய நகரம் அங்கோர்வாட். அங்கோர் வாட் இரண்டாம் சூர்யவர்மனால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காண்க: நமது சோழப்பேரரசு உச்சத்தில் இருந்த காலம் இது. ராஜேந்திர சோழன் (ஆட்சிக்காலம் c. 1014–c.1044 CE) காலத்தில் சோழப்பேரரசோடு தொடர்பில் இருந்த ஆட்சி முதல் சூரியவர்மனின் ஆட்சி. காண்க: Suryavarman I (reigned 1006 – 1050) established diplomatic relations with the Chola dynasty of south India. Suryavarman I sent a chariot as a present to the Chola Emperor Rajaraja Chola I. Suryavarman requested aid from the powerful Chola Emperor Rajendra Chola I of the Chola dynasty against the Tambralinga kingdom. After learning of Suryavarman's alliance with Rajendra Chola, the Tambralinga kingdom requested aid from the SrivijayaKing Sangrama Vijayatungavarman. This eventually led to the Chola Empire coming into conflict with the Srivijiya Empire. The war ended with a victory for the Chola dynasty and of the Khmer Empire, and major losses for the Sri Vijaya Empire and the Tambralinga kingdom. This alliance also had religious nuance, since both Chola and Khmer empire were Hindu Shivaist, while Tambralinga and Srivijaya were Mahayana Buddhist. There is some indication that before or after these incidents Suryavarman I sent a gift, a chariot, to Rajendra Chola I to possibly facilitate trade or an alliance. அங்கோர் என்றால் நகரம் என்றும், வாட் என்றால் கோயில் என்றும் பொருள். வாட் என்றால் மேரு மலையின் குறியீடு என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். அங்கோர்வாட் கோயிலைச் சுற்றியுள்ள அகழி மேரு மலையை சுற்றியுள்ள பெருங்கடலை குறிக்கும்.(சாகர் (கடல்) மாதாவை நினைவில் கொள்வோம்). காண்க: கோவிலின் மூன்று அடுக்குகளும் மேருவை தாங்கும் நீர், நிலம், காற்று ஆகிய தளங்கள். இங்குள்ள 5 கோபுரங்கள் மேரு மலையின் உயர்ந்த 5 சிகரங்களைக் குறிக்கிறது. மத்திய கோபுரத்தை சுற்றி இருக்கும் ஏழுவளையங்கள், மேரு மலையை சுற்றி இருக்கும் ஏழு மலைத்தொடர்கள். கோயில் கட்டப்பட்ட போது விஷ்ணு கோயிலாக இருந்தது. 14 ஆம் நூற்றாண்டில் பௌத்த கோவிலாக(தேரவாதம்) இன்றளவும் பௌத்த கோயிலாகத் தான் இருக்கிறது. கம்போடியாவில் இன்று இந்துக்களே இல்லை. ஆனால் விஷ்ணுவுக்கு மாலையிட்டு வழிபடுகிறார்கள். ஓம் நமோ நாராயணா என்ற 8 எழுத்து வார்த்தைக்கு இந்த பிரபஞ்சம் முழுதும் 8 திசையிலும் பரவியிருக்கும் விண்ணியலைக் குறிக்கும். விண்ணவம்-விண்ணு-விஷ்ணு. காண்க: கீழே அங்கோர்வாட்டில் உள்ள விஷ்ணுவின் சிலையில் 8 கரங்கள். அங்கோர் வாட் கோயிலில் பாற்கடலைக் கடையும் தமிழர்களின் வானியல் அறிவை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி கல் ஓவியமாக சுவரில் பதியப்பட்டுள்ளது. பாற்கடல் புராணத்தில் தமிழரின் வானியல் அறிவு பற்றிய விளக்கம் காண: இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயல்பட்டது. இந்த கோயில்தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே " பெரியது. " இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர். இன்றைக்கு இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. காண்க: ஈகரை. இந்தக்கோயில் எவ்வளவு பெரியது என்பதை கீழே அங்கோர்வாட்டின் முன்பாகக் காணப்படும் மக்களின் உயரத்தைக்கொண்டு கணக்கிட்டுக்கொள்ளலாம். கம்போடியா நாட்டுக்கொடியிலும் அங்கோர்வாட் கோயில்தான் உள்ளது. 5. 5. ஈஸ்டர் தீவின் பிரம்மாண்ட சிலைகளும் தமிழர் தொடர்புகளும் ஈஸ்டர் தீவுகள் என்று பரவலாக அறியப்பட்ட சிலி நாட்டுக்குச் சொந்தமான ரப்பா நூயி தீவுகள் மிகப்பழமையானவை தமிழர்களோடு தொடர்புடையவை. ஜேக்கப் ரோஜ்ஜவீன் என்ற டச்சுக்கார முதல் ஐரோப்பியர் 1722 ஏப்ரல் 5[8] அங்கு கரை இறங்கிய நாள் ஈஸ்டர் என்பதால் அப்பெயரை வைத்தார். இந்த தீவின் உண்மையான பெயர் ரப்பா நுயி (Rapa Nui) என்பதே. இந்த தீவில் பிரம்மாண்டமான மனித முக சிலைகள் (அவர்கள் வைத்துள்ள பெயர் முகவாய் தான் (Moai)) மொத்தம் 887 இருக்கிறது. ஒரு சிலையைக்கூட இன்றைய தொழிநுட்பம் கொண்டும் அவ்வளவு எளிதாக நகர்த்திவிட முடியாது. எங்கெங்கு அந்த சிலைகள் என்ற படம். அந்த சிலைகளில் ஒரு சில இந்த சிலைகள் ஒவ்வொன்றும் எவ்வளவு பெரியது என்பதை அருகிலுள்ள நபர்களைக் கொண்டு காணலாம். ரப்பா நூயி தீவுகளில் வாழ்ந்து கடல்கோளில் மறைந்தவர்கள் பயன்படுத்திய குறியீடுகளும்,சிந்து சமவெளி தமிழர்களின் குறியீடுகளும் எவ்வாறு ஒரேமாதிரியாய் உள்ளன என்று பார்த்தால் ஆச்சரியமாய்த்தான் உள்ளது. படித்ததிலிருந்து.......
    1 point
  7. ஸ்மார்ட் போனில் மட்டுமா செல்பி எடுக்க முடியும் . கரண்டியாலும் எடுக்கமுடியும் என்பது இவர்களுக்கு மட்டும்தான் தெரியும் .
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.