-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
யார்யாரெல்லாம் புலி அனுதாபிகளோ அவர்களனைவரும் நீக்கப்படுவர். அடுத்தவர் சிறீதரன்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல்
கடந்த 78ஆண்டுகளாக வந்த எல்லா ஆட்சியாளரும் சொல்லியதையும் செய்ததையுமே அநுர ஆட்சி தொடர்கிறது. மாற்றங்கள் மகாசங்கங்களின் அதிகாரத்துவம் உள்ளவரை அல்லது சிங்கள் வெகுசனங்களிடையே இருதரப்பும் ஈழத்தீவின் சமமான பங்காளர்கள் என்ற மனமாற்றம் ஏற்படாதவரை அரசியல் மாற்றங்கள் நிகழாது. அவை ஒற்றையச்சிலேயே சுழலும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
தைப்பொங்கல் சிரிப்புகளில் வரவேண்டிய செய்தியைப்போல் சுமந்திரன் கட்சியின் நிலை உள்ளது.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
துணைவியாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் மோகன் அவர்களுக்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.
-
அமைச்சர் லால்காந்தவின் கருத்தை உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும்
உங்கப்பரும், சித்தப்பருமா இந்தச் சட்டத்தைத் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தேக்க என்ன கோமாவிலா இவர் இருந்தவர். உங்கடை கையாளான சவீந்திர சில்வா தையிட்டியிலை விகாரை கட்டேக்கை, குருந்தூர்மலை... கிண்ணியா... சிவபுரமென உங்களாட்சிக்காலத்தில் அடாவடிகள் செய்து இனஅழிப்பையும் இனவெறுப்பையும் அதியுச்சமாகச் செய்தபோது எங்கே போனது எங்கபோனது அந்த சட்டம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்!
சிங்கள மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேரர் சொல்லாமல் விட்ட சொல் ''சிங்கள'' ஏனென்றால் அவரது சிங்கள விசுவாசமும் சுவாசமும் ஒன்று. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!
இந்த உலகில் ''இறையாண்மை'' என்று ஒன்று உள்ளதா? அப்படியிருப்பதாக இருந்தால் ஆக்கிரமிப்பும் குடியேற்றவாதமும் நிறைவடைந்த 50க்குப் பிற்பட்ட உலக சூழலில் இனங்களின்(தனித்துவம்) சுயநிர்ணயம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். தமிழீழம் முதல் காசா வரையான அழிவுகளும், ஈராக், உக்ரேன் முதல் வெனிசுவேலா வரையான ஆக்கிரமிப்புகள் நடைபெற்றிருக்குமா? பாபர் மசூதி இடிப்பு, காஸ்மீரின் தனித்துவ உரிமைகள் மறுப்பு மற்றும் சட்டநீக்கம் எனப் பல்தேசிய இனங்களின் உரிமை மறுப்பு, காலிஸ்தான் உரிமைப்போராட்ட அழிப்புப் போன்றனவும் தொடர்கின்றன. யூகோஸ்லாவியாக்காவைக் கையாண்டது ஒரு விதம். இலங்கையை மற்றும் இஸ்ரேலைக் கையாள்தல் ஒருவிதம் எனத் தத்தமது தேவைகளும், கொள்ளையிடத் தேவையான வளங்களுமே சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் தீர்மானிக்கின்றன. மேற்கோ கிழக்கோ வளச்சுரண்டலுக்கான போட்டியில் ஒருவரை ஒருவர் மிஞ்சியோரல்ல. ஆனால், அழிவது என்னவோ அப்பாவி மக்களே. சனநாயகமென்ற போர்வையுள் நின்று ஆக்கிரமிப்பையும், அப்பாவி மக்கள் மீதான படுகொலைகளையும் புரிவோர் இறுதிவரை அரச சுகபோகங்களை அனுபவித்து அரவசவாழ்க்கையை வாழ்ந்து அரசமரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டுவிடுகின்றனர். அதற்கும் மக்களின் வரிப்பணமே செலவாகிறது. சீ** இந்த வெட்கம் கெட்ட வாழ்வுக்கு எத்தனை பந்தா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வேறு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
ஈராக் முதல் வெனிசுவேலா வரை இந்த ஒரே ஒப்பாரியை வைத்துவிட்டு ஓய்ந்துவிடுவதே வழமை. பிறகென்ன. பேசாமல் ஐ.நாவைக் கலைத்தவிட்டு அமெரிக்கச்சபையாக்கிவிடலாம்.
-
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு : அரசுக்கு நெறியியல், அறநெறிசார் சட்டபூர்வத்தன்மை இல்லை - கிறிஸ்தவ பாதிரிமார்கள், செயற்பாட்டாளர்கள் 61 பேர் கூட்டாகக் கண்டனம்
மக்கள் விடுதலை முன்னணி(JVP) என்ற தேசிய மக்கள் சக்தி(NPP) அரசொன்றும் தாமும் இனவாதத்தில் சளைத்தோரல்ல என்பதைப் பதிவுசெய்தே வருகிறார்கள். முன்பு அரசாண்ட கட்சிகளை நீலமும் பச்சையும் மோதகமும் கொழுக்கட்டையுமெனச் சுட்டும் ஒரு சொற்றொடருண்டு. மக்கள் விடுதலை முன்னணி(JVP) என்ற தேசிய மக்கள் சக்தி(NPP)யைப் பொறுத்தவரை முந்தியவை இரண்டும் அவித்ததென்றால், இது பொரித்த மோதகம் அல்லது கொழுக்கட்டை போன்றது. வெளியே போர்வையாக உள்ள மாவென்னவோ பொரிப்பதால் சுவை வேறுபட்டாலும் உள்ளுடன் ஒன்றுதான். மகாவம்சமும் பௌத்தமதமும் சிங்களத்தின் நிலையான தூண்கள். அவற்றைச் சாய்த்துவிட்டுத் தமிழினத்தை அரவணைத்து ஏற்ற தீர்வைத் துணிவோடு இவர்கள் முன்வைப்பார்கள் எனத் தமிழினம் 2026இலும் சிந்திப்பதானது பட்டறிவைச் சீர்தூக்கிப்பாராமையின் நிலையே. என்ன இது அநியாயம்? இவர்கள் மதம் சார்ந்த வேலையைப் பார்ப்பதைவிட்டு எதற்காக இந்த அரசியல் செயற்பாடுகள் மீது அறிக்கையிடுகிறார்கள். இலங்கையரைப் பொறுத்தவரை அபத்தமல்லவா? இலங்கை நேசர்கள் பிக்குகள் மட்டுமே அரசியல், இராணுவ மற்றும் சட்டவாக்கம் போன்றவற்றில் தலையிடும் உரமையுள்ளோரெனக் கூறுகிறார்கள்.! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?
https://www.google.com/search?q=ipkf+operation+gurunagar&oq=IPKF+&gs_lcrp=EgZjaHJvbWUqBggBECMYJzIGCAAQRRg5MgYIARAjGCcyFAgCECMYExgnGIAEGIoFGPAFGJ4GMgYIAxBFGDsyBggEEEUYQDIJCAUQABgTGIAEMgkIBhAAGBMYgAQyCQgHEAAYExiABNIBCzUwODQ4M2owajE1qAIIsAIB8QXbeXB0ATCm7PEF23lwdAEwpuw&sourceid=chrome&ie=UTF-8
-
செம்மணி யாழ் வளைவு பகுதியில் தடை - நல்லூர் பிரதேச சபையின் சர்ச்சைக்குரிய தீர்மானம்
புடுங்கவேண்டிய ஆணிகளைவிட்டுப் புதிய ஆணிகளைத் தாமாகத் தேடிப்பித்து தமது தலையிலேயே அடித்துக்கொள்வதில் எங்கள் அரசியல்வியாதிகளை மிஞ்சிவிட இந்த உலகில் யாருமிலர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்!
பொலிசாரிடம் வேலன் சுவாமிகளின் ஆபத்தான திக்.. திக்.. நிமிடங்கள் - முதன் முறையாக அம்பலமாகும் உண்மைகள்! சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள தையிட்டி தொடர்பாக அதிலே பங்குபற்றித் தாக்குதலுக்குள்ளானவரால் பேசப்படும் கருத்துகளுக்காக இணைத்தள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி (லங்காசிறியின் தலைப்பு காணொளியோடு ஒத்துப்போகவில்லை என்பது வேறு)
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
உண்மை, அனுர அரசுக்கும் முன்னைய அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பெயர்களும் நிறங்களுமே வேறு. சிலர் கோத்தாபோல் கடுமையாக இல்லை என்பர். மக்களுக்கு ஆட்சியை வழங்க வேண்டுமேயொழியக் கடுமையாக இருக்க வேண்டியதில்லை. நியாயமான சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் சமனாக வழங்கமுடியாதவராகவே இந்தத் தலைவரும் உள்ளார். திருகோணமலை புத்தர் சிலைவிவகாரத்தையே துணிவோடு கையாள முடியாத அரசு.அரசியலமைப்பென்று இதற்கும் விளத்தம் கொடுப்போரும் உளர். பெரும்பான்மையைக் கொண்ட அரசு ஏன் சரியானதொரு உலக நடைமுறைகளை உள்வாங்கி இன சமத்துவத்தைப் பேணக்கூடிய அரசியலமைப்பொன்றை முன்வைத்து நாட்டை சனநாயக நாடாக மாற்றலாமே. இவர்கள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார்கள். அப்படிச்செய்தால் இவர்களது கட்சியில் உள்ளோரும் நீதியின் முன் நிற்கவேண்டி வரலாம். இதைக் கூறியவரை எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இதைக் கூறியவரை (சு.பொன்னையாவை) எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!
காலநிலை தொடர்பாக நடைபெறும் மாநாடுகள் வடையும் தேனீரும் அருந்தும் மாநாடுகள் போல் தோன்றுகின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
திலீபத்திற்கு மாலை சூடிய சிங்கள தளபதி
இணைப்புக்கு நன்றி. எம்மவர்களே .இன்னும் முழுமையாக விளங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. வீழ்ந்ததால் எம்மவர்களது நக்கல் நளினம் முதல் தூற்றல் என்று தொடர்கையில் சர்வதேசம் விளங்கிக்கொள்ளாமல் இருப்பது ஒன்றும் புதிரல்ல. (சர்வதேசம் விளங்கிக்கொண்டு விளங்காததுபோல் நடிக்கிறார்கள் என்பது வேறுகதை) நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி