Jump to content

ஆறு மாதத்தில் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர முடியுமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அக்காவிற்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதற்காக ஆறு மாதத்தில் குழந்தையை பிறக்க வைத்துள்ளார்கள்.ஆனால் குழந்தை உயிருடன் உள்ளது.எனது கேள்வி என்னவென்றால் இந்த குழந்தை தப்பி ஆரோக்கியமாக வளர முடியுமா? ஏனென்றால் குழந்தை இறக்கும் பட்சத்தில் அக்காவை மன ரீதியாக தேற்றுவது மிகவும் கடினம்.இதைப்பற்றி பூரண விளக்கம் ஆராவது தந்தால் திருப்தியாக இருக்கும்.

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்த ஒருவர் ஆறு மாதத்தில் பிறந்து ஆரோக்கியமாக நல்ல உயரமாக வளர்ந்து எந்தவித குறைபாடுகளுமின்றி இருக்கிறார்.

Link to comment
Share on other sites

வாதவூரான், எனக்குத் தெரிந்து ஒரு குழந்தை 27 வாரங்களில் (40 - தான் சாதாரணம்) பிறந்தது. அது இப்போது வளர்ந்து பள்ளிக்கும் செல்கிறது. முதல் சில வாரங்கள் incubator இல் வைத்திருந்து, தாய்ப்பால் கொடுத்து வளர்த்தார்கள்.

எனவே உங்கள் சகோதரியின் குழந்தையும் நன்றாக வளர சாத்தியம் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியல்லவே. என்றாலும், மனதை தளரவிடாது காத்திருங்கள். மேல் நாடுகளில் என்றால், மருத்துவம் நன்றாக முன்னேறியுள்ளது.

அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

குறை மாதங்களில் பிறந்த சில குழந்தைகளை நானும் பார்த்திருக்கிறேன். முழு மாதங்களில் பிறந்த பலரை விட இவர்கள் ஆரோக்கியமாகவே உள்ளார்கள். உங்கள் அக்காவின் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் என்று கடவுள் மேல் நம்பிக்கை வைத்து உங்கள் அக்காவையும் தேற்றுங்கள் அவவை மனம் தளர விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்! :) God bless!!

Link to comment
Share on other sites

எனக்குத் தெரிந்த ஒரு பையன் குறை மாதத்தில் பிறந்தான் (சரியான மாதம் தெரியவில்லை. விசாரித்துச் சொல்கிறேன்). வைத்தியசாலையில் நீண்ட காலம் வைத்திருந்தார்கள். பாடசாலையிலும் அவனுக்கு விசேட உதவிகள் கிடைத்தன.

இப்பொழுது சாதாரண, ஆரோக்கியமான பையனாக உள்ளான். ஒரு குறையுமில்லை. உங்களது அக்கா மேல்நாடுகளில் வசிப்பவராயின், விசேட கவனம் செலுத்துவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான், எனக்குத் தெரிந்து ஒரு குழந்தை 27 வாரங்களில் (40 - தான் சாதாரணம்) பிறந்தது. அது இப்போது வளர்ந்து பள்ளிக்கும் செல்கிறது. முதல் சில வாரங்கள் incubator இல் வைத்திருந்து, தாய்ப்பால் கொடுத்து வளர்த்தார்கள்.

எனவே உங்கள் சகோதரியின் குழந்தையும் நன்றாக வளர சாத்தியம் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியல்லவே. என்றாலும், மனதை தளரவிடாது காத்திருங்கள். மேல் நாடுகளில் என்றால், மருத்துவம் நன்றாக முன்னேறியுள்ளது.

அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

இது 25 வாரங்கள் தான் ஆகிறது இது நீண்ட காலத்தின் பின் கிடைத்த ஒன்று.இங்கையில்லை ஊரிலை தான்.கர்ப்பம் ஆகியவுடன் நிறைய சந்தோசமாக இருந்தா.கலகலப்பானவ இதற்கு முதல் இரண்டு தடவைகள் மூன்று மாதத்திற்குள் கருசிதைவு ஏற்பட்டு அதன் பிறகு மிகவும் அமைதியாக இருந்தார்.இப்ப கொஞ்ச நாளாக தான் பழையபடி கலகலப்பாக மாறியிருந்தார்.அதற்குள் இப்படியாகிவிட்டது.

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்த ஒரு அக்காவின் 4 பிள்ளைகளும் (2 ஆண், 2 பெண்) குறை மாதத்தில் தான் பிறந்தார்கள்.(கனடாவில்).அவர்கள் பிறந்து பல நாட்கள் வைத்திய சாலையிலேயே செலவளித்தார்கள்.மூச்சுக்கோளாறு,இதய க்கோளாறு என அப்பிள்ளைகள் அவதிப்பட்டார்கள்.ஹெலிகொப்டர் மூலம் வேறு வைத்தியசாலைக்கு கூட அனுப்பட்டார்கள்.குழந்தைகளுக்கு 2 வயது வரை நிறை குறைவாகவும்,நோயாலும் அவதிப்பட்டார்கள்.

தற்போது அவர்கள் பாடசாலை செல்லும் வயதை எட்டியதோடு மட்டுமில்லாமல் கெட்டிக்காரர்களாகவும் நோய் இல்லாமல் இருப்பதாகவும்,உடல் வளர்ச்சியில் சாதாரண பிள்ளைகள் போல இருப்பதாவும் தான் பட்ட கஸ்டங்களையும் இப்போ சந்தோசமாக இருப்பதாகவும் தாயார் ஒரு முறை என்னிடம் கூறி இருந்தார்.

வாதவூரான், அக்காவும் குழந்தையும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனியவன் அண்ணா,ஈஸ் அண்ணா,குட்டி அண்ணா, தப்பிலி அண்ணா மற்றும் நுனாவிலான் அண்ணா,இங்கை என்றால் நான் யோசிக்க மாட்டன் ஆனால் ஊரிலை வசதி குறைவு தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்திய கண்காணிப்பு உள்ள வரை கவலைப்பட த்தேவை இல்லை. அக்க மன ஆறுதல் பெற வாழ்த்துக்கள். ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை நிச்சயமாக காப்பாற்ற முடியும். தகுந்த.. இங்கியுபேற்றர் வசதி இருப்பின்.. நிச்சயம் குழந்தையைக் காக்க முடியும்..! இப்படி காக்கப்பட்ட பல நிகழ்வுகள் முன்னர் நடந்துள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கண்ணா நிலாமதி அக்கா .எனக்கு இப்போது நிறைய நம்பிக்கை வருகிறது அக்காவையும் தைரியப்படுதுவேன்.அணிவருடைய ஆதரவுக்கும் மீண்டும் நன்றி

Link to comment
Share on other sites

ஊரில் இவ்வாறு பிறந்த குழந்தைகள் ஊரிலேயே வைத்தியசாலையில் கண்காணிக்கப்பட்டு தற்போது திடகாத்திரத்துடனும், சிறந்த கல்வியுடனும், செழிப்புடனும் ஊரிலேயே சிறப்புடன் வாழ்கின்றார்கள். ஆனால் அதிககவனமும், முயற்சியும் தேவை. குறிப்பாக நல்லதொரு வைத்தியநண்பர் போன்றோருடன் நேரடித்தொடர்பில்/கண்காணிப்பில் இருப்பின் மேலதிக‌ பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

முன்னைய எனது பதிவில் குறிப்பிட்ட பையன், ஆறு மாதங்களில் பிறந்தவராம்.

இதனைவிட ஊரில் நாற்பது வருடங்களிற்கு முன்பு குறை மாதத்தில் பிறந்தவரையும் அந்த நேரத்தில் இருந்த incubator இல் சிலகாலம் வைத்து வளர்த்து நன்றாக உள்ளார்.

அக்கா இருக்கும் ஊரில் மருத்துவ வசதிகள் குறைவென்றால், வேறு நல்ல ஒரு வைத்தியசாலைக்கு மாற்ற முயலுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான் என்னுடைய இளைய மகன் ஏழுமாதங்கள் நிறைவடையாத நிலையில்தான் பிறந்தான் அவன் பிறந்தபோது அவனுக்கு சுவாசிக்கக்கூடிய சக்தி மிகக் குறைவாக இருந்தது அத்தோடு வாயை அசைத்து பால்கூட அருந்தமுடியாத நிலையில் மூக்கின் ஊடாக டியூப் வைத்தே பால் பருக்கினார்கள். ஒரு வாரமாக என்னைத் தவிர தொட்டுப்பார்க்கத் தந்தையைக்கூட தாதிகள் அனுமதிக்கவில்லை......4 வாரங்களாக கண்ணாடிப. பெட்டிக்குள் வயர்கள் சுற்றிய நிலையில்தான் இருந்தான்.... படிப்படியாக அவன் வாயசைத்துப் பால் அருந்தத் தொடங்கும்வரை எங்களுக்கும் மிகத் துயரமான நாட்களாக அந்நாட்கள் இருந்தன... ஆனால் இப்போது அவனிடம் சில விசேட தன்மை இருப்பதை உணர முடிகிறது என்ன விடயமாக இருந்தாலும் துரிதமாக கற்றுக் கொள்ளும் வேகம் ஆச்சர்யப்படவைக்கிறது. வேறு சிலரும் இப்படிப்பட்ட தங்கள் பிள்ளைகளிடம் அத்தகைய துரிதமான தன்மையை அவதானிப்பதாகக் கூறினார்கள். உங்கள் அக்காவைக் கவலைப்படவேண்டாம் என்று சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் அண்ணா ,தப்பிலி அண்ணா மற்றும் சகாரா அக்கா நன்றி உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு.நிச்சயமாக எனக்கு நூறுமடங்கு தெம்பு வந்திருக்கிறது.முதலில் குழந்தை இறந்து விட்டதாகவே சாதாரண மருத்துவர்கள் கூறியுள்ளார்கள் பின்னர் குழந்தை மருத்துவர் வந்து செயற்கை சுவாசம் கொடுத்த பின்னரே குழந்தை அழுதுள்ளது.தப்பிலி அண்ணா அக்கா யாழ் போதனா வைத்தியசாலையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலைப்படாதீர்கள் வாதவூரான்!எல்லாம் நல்லபடியாக நடக்கும்.இப்படியான பிரச்சனைகளை பல இடங்களில் கேள்விப்பட்டுருக்கிறேன்.இதுவரைக்கும் நல்லபதிலாகவே இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாத்தா எல்லாம் நல்லபடியாக நடந்தால் சந்தோசம் தான்

நன்றி தாத்தா எல்லாம் நல்லபடியாக நடந்தால் சந்தோசம் தான்

Link to comment
Share on other sites

வாதவூரான்,

கவலை வேண்டாம் எனக்குத் தெரிந்து ஊரில் குறை மாதம் பிறந்த அனைவரும் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர்.

மிக முக்கியமான விடயம் என்னவெனில் உங்கள் அக்கா மிகத் தைரியமாக இருப்பதற்கான வழிவகைகளைச் செய்யுங்கள். உங்கள் அக்காவின் மனநிலையும் ஆரோக்கியமுமே முதல் தேவை. குழந்தையை மருத்துவர்கள் பார்த்துக் கொள்வார்கள், அக்காவை அவரைச் சுற்றி உள்ளவர்கள் தைரியம் கொடுத்து பார்க்கச் சொல்லுங்கள். அக்காவின் ஆரோக்கியமே பிள்ளையின் ஆரோக்கியத்தின் முதல் தேவை. எது நடப்பினும் அதனை ஏற்கும் மனநிலைக்கு அக்காவை (மிகைப்படுத்தப்பட்டளவில் நம்பிக்கைகள் கொடுப்பது கூட தவறானது) கொண்டுவருவது முக்கியம்

Link to comment
Share on other sites

நிழலி சொன்னது போன்று அக்காவினுடைய ஆரோக்கியம் தான் முக்கியம். அவரை சந்தோசமாக இருக்க சொல்லுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது, மிக நெருங்கிய நண்பர்கள் பலர், குறைமாதத்தில் பிறந்தவர்கள் தான்!

எந்தக் குறைகளும் அவர்களிடம் இல்லை!

அக்காவுக்கு விளங்கப் படுத்துங்கள்!

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இது ஒரு 'Special Baby' போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான், உங்கள் மருமகன்/ள் உங்களை இன்னும்... கொஞ்சக் காலத்தில்

மாமா என்று சொல்லி கூப்பிடுவார். கடுமையான யோசனை வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி.குழந்தை 850 g நிறை குறைவு 50 க்கு 50 தான் சந்தர்ப்பம் என்று வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.இனி ஆண்டவன் சித்தம்

Link to comment
Share on other sites

உங்கள் அக்காவின் குழந்தை நலம் பெற வேண்டுகிறேன்.

இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கு மேற்குலக நாடுகளில் சிறப்பாக வடிவமைத்த பிரிவு உண்டு.

http://en.wikipedia.org/wiki/Neonatal_intensive_care_unit

அண்மையில் கனடாவில் யாழ் போதனா வைத்தியசாலையில் இவ்வாறான ஒரு பிரிவை அமைக்க நிதி சேர்க்கப்பட்டது. அதையும் சிங்கள அரசு தடைகள் போடுவதால் கனேடிய அரசு ஊடாகவே செய்ய முடிந்தது (கனேடிய வைத்தியசாலைக்கும் நிதி சேகரிக்கப்பட்டது).

இவ்வாறான பிரிவுகள் முழுமையாக செயற்படும்பொழுது உயிர்கள் காப்பற்றப்படும்.எமக்கும் பெருமை கிட்டும்.

Link to comment
Share on other sites

வாதவூரன்.. அக்காவும் குழந்தையும் நலமுடன் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.