#41
Posted 23 March 2012 - 11:13 AM
இந்த திரியை நான் தான் பூட்ட வேண்டும் என்றில்லை. அவரது தற்காலிகத் தடை இன்னும் 7 நாட்களில் முடிகின்றது. அதுவரைக்கும் சுய கட்டுப்பாட்டுடன் எவரும் பதில் கருத்து எழுதாமல் இருந்தாலே சரி.
- இணையவன், seeman and பகலவன் like this
நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??
தொடர்புகளுக்கு: nizhali@gmail.com

#42
Posted 23 March 2012 - 01:10 PM
இந்த திரியிலும் சாத்திரி மீதும் அவர் குடும்ப உறுப்பினர்கள் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் அவரது தற்காலிகத் தடை நீக்கப்படும் வரை பூட்டி விடுவதே சரி என்று நினைக்கின்றேன். ஒருவரை தடை செய்து அவருக்கு பதில் அளிக்கும் சந்தர்ப்பங்களை வழங்காமல் விட்டு விட்டு அவர் பற்றி, அவர் குடும்பம் பற்றி எழுதுவது சரியில்லை.
இந்த திரியை நான் தான் பூட்ட வேண்டும் என்றில்லை. அவரது தற்காலிகத் தடை இன்னும் 7 நாட்களில் முடிகின்றது. அதுவரைக்கும் சுய கட்டுப்பாட்டுடன் எவரும் பதில் கருத்து எழுதாமல் இருந்தாலே சரி.
நிழலி நீங்கள் சொல்வது சரி என்றாவது எழுதலாமா?
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!
#43
Posted 23 March 2012 - 07:33 PM
நான் யாழ் களத்தை கடந்த கடந்த ஏழு ஆண்டுகளாக பார்வையிட்டு வருகின்றேன், ஐந்து ஆண்டுகளாக எழுதியும் வருகின்றேன். எனது அனுபவம், பார்வையின் அடிப்படையில் சாத்திரி எழுதிய தொடர்கதையின் குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டது தவறாகவே எனக்கு தெரிகின்றது.
கலைஞனின் கருத்தை ஆமோதிக்கின்றேன். எனினும் அந்தப் பாகத்தில் சொல்லப்பட்ட விடயம் பரவலாக நடந்ததாகவும், அதை மேல்மட்டத்தில் இருந்தவர்கள் கண்டும் காணாமல் இருந்ததாகவும் அதன் பின்னர் வந்த கருத்துக்களில் சொல்ல முயன்றதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
- விசுகு likes this
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
#44
Posted 23 March 2012 - 11:34 PM
அவருடைய "இலவ(ஈழ)ம் காத்தவர்கள்" கதையைக் கூட என்னால் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு இருந்தது. ஆனால், இந்தப் பகுதியினை வாசித்த உடனேயே "இவர் ஏன் இப்படி எழுதினார்?" என எண்ணத் தோன்றியது!
வழமையாக நகைச்சுவை கலந்து உண்மைகளை வெளிக்கொணரும் எழுத்துப்பாணி அவருடையது. ஆனால் இந்தக் கதையில் பெரும் தவறினை விட்டிருந்தார்!
"காமம்"" என்ற தலைப்பில் ஒரு ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான காம உறவென்பது... குறிப்பாக எமது இனத்தில்.... முறையற்ற ஒன்று! "காமம்" என்ற தலைப்பில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உணர்வுகளை இன்னும் மிகத் தெளிவாக, சுவாரசியமாக விளக்க சந்தர்ப்பம் பெற்றுள்ள சாத்ஸ் , தேவையில்லாமல் முறையில்லாத காமத்தை ஏன் தொட்டவர்? என்ற ஆதங்கம் இருந்தாலும், அதையும் எம் போராளிகள் செய்தார்கள் !(?)என்று சொன்னது எமக்காக போராடி மடிந்த மாவீரர்களை இழிவாக்கும் செயல் என்பது என் கருத்து!!!
மே 2009க்கு முன்னர்.... இதே கதையினை சாத்திரி எழுதியிருந்தால், அதனை நான் ஒரு பொருட்டாகவே எண்ணியிருக்க மாட்டேன்! சம்மந்தப்பட்ட பலபேர் உயிருடன் இருந்தார்கள். ஆனால் அவர்களே இல்லை.... என்ற ஒரு தருணத்தில், இப்படியான கதைகளை வெளியிடுவது என்பது மகாதவறானது.
ஆனால், கருத்துக்களம் என்பது கருத்தாட உள்ள களம். ஒருவர் ஒரு கருத்தினை முன்வைத்தால் அதனை ஆதரித்தோ... எதிர்த்தோ... எம் கருத்துக்களை முன்வைப்பதுதான் முறை! அவரது கதையின் அந்த காமப் பகுதி தொடர்பாக வந்த பதில் கருத்துக்களை விரல்விட்டு எண்ணலாம் என்று நினைக்கின்றேன்!
எதிர்க்கருத்துக்கள் என்பது மூலப் படைப்பினை ஆக்கிய படைப்பாளிக்கு நேரடியாக கருத்தாளர்களால் தெரிவிக்கப்பட்டால்... தனது தவறினை அந்த படைப்பாளி உணர ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்! ஆனால் அதற்குரிய கால அவகாசம் ,சந்தர்ப்பம் என்பன "பகிரங்கமான எதிர்க்கருத்துகள்" முன்வைக்கப்படும் அளவுக்கு கொடுக்கப்படவில்லையா? அல்லது கருத்தாளர்கள் சாத்திரிக்கு முன்னால் தம் எதிர்ப்புணர்வுகளை பகிரங்கமாக முன்வைக்கத் தயங்கினார்களா??? யாழ்களத்தில் எம் மாவீரச் செல்வங்களை நாம் எப்படி மதிக்கின்றோம் என்பதனைக் காட்டக் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டிருக்கின்றோம் என்றுகூடச் சொல்லலாம். வழமையாக எத்தனையோ எதிர்மறைக் கருத்துக்களை எதிர்கொள்ளும் நாம் எம் மாவீரர்களின் புனிதங்களை காப்பதற்கு அங்கு ஏன் தயங்கினோம்???
நான் அப்பொழுது யாழ் களத்தில் எழுதுவதிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்தாலும்.... இந்தக் கதையினை பார்த்துவிட்டு, உடனேயே சாத்திரிரிக்கு நேரடியாக என் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தேன்
அதற்கு அவர் சொன்ன பதில்...
அதற்குமேல் நாம் அதைப்பற்றி பேசவில்லை......!"என் வாழ்வில் இது நடந்தது. அதைத்தான் எழுதினன். என்ர கதையை எழுத வரும்போது.... அதைத்தானே எழுதமுடியும்"
அதற்குப்பின் நடந்தது ஒரு "களவிதி மீறல்" காரணமாக சாத்திரியின் தடை! மூல ஆக்கத்தினை நீக்குவது என்ற களவிதி மீறல் என்பது அவர் தெரிந்தோ தெரியாமலோ செய்த மாபெரும் தவறுதான் ! அதனை யாரும் நியாயப்படுத்த முடியாதுதான்! நானும் அதனை நியாயப்படுத்த வரவில்லை!!!
கருத்துக்களை கருத்துக்களால் மோதினால்தான்.... அது கருத்துக்களம்! இல்லாவிட்டால் அது வெற்றுத் தளம்!! ஒரு பக்க தாளம் போட்டால்.... அது இரசிக்கும் இசையாகாது!!
மாற்றுக்கருத்துக்களுடன் மோதமுடியாத முட்டாள்களா நாங்கள்? ஒரு கருத்தினை முன்வைப்பது அவரவர் விருப்பம். அதை எதிர்த்துக் கருத்தாடுவது உண்மையான கருத்தாளனின் பொறுப்பு!
ஆனால் விதிகள் மீறப்படுவது ஏன்? என்பதும்... அந்த விதிகளை நன்கு அறிந்த ஒரு நீண்டகால உறுப்பினர் ஏன் செய்தார்? என்பதனையும் ஒருமுறையேனும் சிந்தித்து நடந்திருந்தால் .... எவ்வளவோ பிரச்சனைகளை நிர்வாகம் தவிர்த்திருக்கலாம்!
நிர்வாகத்துக்கும் சாத்திரிக்குமான வெறும் இரண்டு நிமிட கலந்துரையாடல் என்ற ஒரு சின்ன விடயம் அவர்களை நல்லதொரு புரிந்துணர்வுக்கு கொண்டுவந்திருக்கலாம். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் இங்கு தவறவிடப்பட்டிருக்கின்றது என்பது கவலைக்குரியதாக இருக்கின்றது!
சாத்திரி அவர்கள்..... தான் எந்த இடத்தில் தவறிழைத்தார் ....என்பதனை, இப்பொழுது உணர்ந்திருப்பார்.
நிர்வாகத்தின் அத்தனை விளக்கங்களையும் பார்த்த பின்னரே... என் மனதுக்கு தோன்றிய நடுநிலையான எண்ணத்தினை முன் வைக்கின்றேன்.
தவறு என்பது தவறி விடுவது! ஒரு படைப்பாளியின் ஏமாற்றம்... கோபம் ஆனது ஏன்? என்ற கோணத்தில் யோசித்தால் மட்டுமே..... அவரது நியாயங்களை புரிந்து கொள்ள முடியும்! அவர்பக்க நியாயங்களை அவரே வந்து பகிரங்கமாக முன்வைப்பதே இதற்கொரு தெளிவான முடிவைத் தரும். எனவே , அதற்கு நிர்வாகம் எப்பொழுது அனுமதி கொடுக்க நினைக்கின்றதோ அப்பொழுது கொடுக்கட்டும்! விதிமுறைகள் என்பது தவறாது கடைப்பிடிக்கப்பட வேண்டியது!
விதிமுறை என்பதும்... அதனைக் கடைப்பிடிக்கும் நெறிமுறை என்பதும்.... நிர்வாகத்தால் தெளிவாக, நடுநிலையானதாக , சமதர்மத்தோடு நடைமுறைப்படுத்தப்படும்.... என்பதனையும் நான் நம்புகின்றேன்!!!
யாழ் களத்தின் ஒரு சிறந்த கருத்தாளனை இழக்க விரும்பவில்லை! என்ற என் தனிப்பட்ட பார்வையில்..... மேலுள்ள கருத்துக்கள் அனைத்தும் என்னால் முன்வைக்கப் பட்டவை.
சாத்திரி மீண்டும் வரவேண்டும்! அவருடன் சண்டை பிடிக்க வேண்டும்!!
- shanthy, seeman, கோமகன் and 1 other like this
நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களமாடும் கவிதை... விளையாடும் குழந்தை!
-ஒருவன்-
"கவிதை"














