தமிழகத்து "பிரபல" சமயச் சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்கள் விரைவில் அவுஸ்த்திரேலியா வரவுள்ளதாகவும் அவர் பங்கேற்கும் இரு நிகழ்வுகள் சிட்னி மற்றும் மெல்பேர்னில் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அண்மையில் யாழ்ப்பாணம் சென்று வந்த இந்த "பிபரபல" சொற்பொழிவாளர், யாழ்ப்பாணம் ஆகா ஓகோ என்றிருப்பதாகப் புகழ்ந்திருப்பதோடு, இலங்கை அரசுக்கெதிராக புலம்பெயர் தமிழர்களும், தமிழக தமிழர்களும் செய்துவரும் பிரச்சார மற்றும் நீதி கேட்கும் நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று பகிரங்கமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். போர்க்குற்ற விசாரணைகள், குற்றச்சாட்டுகள் மூலம் தமிழர்கள் எதையுமே அடைந்துவிடமுடியாது என்று அறிவுரை கூறும் இவர், மகிந்த அரசானது தமிழர்களுக்குச் சரியான தீர்வைத் தருமென்று கூறுவதுடன், அதற்காக தமிழர்கள் அனைவரும் மகிந்தவுடன் சேர்ந்து உழைக்க வேண்டும் என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
தமிழர்களை அடிமைகளாகவே தொடர்ந்தும் இருங்கள் என்று கூறும் இவர் இப்போது தமிழரின் பணத்தின்மேல் கண்வைத்து அவுஸ்த்திரேலியா வருகிறார். இவரை வைத்து நிகழ்ச்சி செய்து பணமும் பெயரும் சம்பாதிக்கக் காத்திருக்கும் அவுஸ்த்திரேலிய ஒழுங்கமைப்பாளர்கள் உடனடியாக இந்த நிகழ்ச்சிகளை இரத்துச் செய்யவேண்டும் என்று பலரும் இப்போது கூறிவருகிறார்கள்.
மகிந்தவின் இனக்கொலைக்கு வக்காலத்து வாங்க தமிழர் பணத்திலே இங்குவரும் இந்த இனக்கொலை அடிவருடியை தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இங்கு இவருக்குக் காட்டப்படும் எதிர்ப்பினைப் பார்த்து இவர் இனிமேல் புலத்திலே எங்குமே செல்லமுடியாதவாறு பாடம் புகட்டப்பட வேண்டும். இவரைப் போன்ற மகிந்தவின் பிரச்சாரப் பீரங்கிகளுக்கு இவரின் புறக்கணிப்பு ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
Edited by ragunathan, 16 March 2012 - 08:50 AM.
















