சுவாமி நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் இணைந்து இருப்பதாக காணொளி ஒன்று வெளியானது.
இந்த காணொளி நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், சுவாமி நித்யானந்தா இதை மறுத்து வருகிறார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, நான் கூறிவந்ததை அமெரிக்க ஏஜன்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது சித்தரிக்கப்பட்டது தான் என்பதற்கு 60 காரணங்களை அந்த அமைப்புகள் கூறியுள்ளன.
எனவே தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்ட காணொளி முற்றிலும் சித்தரிக்கப்பட்டது என அவர் கூறினார்.
நவீன முறையைக் கொண்டு அந்த காணொளி மார்பிங் செய்யப்பட்டுள்ளன. அதை இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் கண்டுபிடிக்க முடியாது. அமெரிக்க ஏஜன்சிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
http://www.newindian...D7e42OlJ022MAA2

















