Jump to content


Tamil Star News
Photo

ஒன்றாகக் கரம் கூட்டுவோம்........


  • Please log in to reply
14 replies to this topic

#1 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,207 posts
  • Gender:Male

Posted 15 March 2012 - 09:22 AM

Posted Image


கலிகாலம் பிறக்கக்,
காத்திருக்கும் கபோதிகள்!
கண்ணீர்க் குமுறலுடன் ,
கண்ணில் விரிந்தது அவலம்!
காற்றையும் நஞ்சாக்கிய,
கனரக ஆயுதங்களின் குமுறல்!
கார்வண்ணன் தேரோட்டாத,
குருசேத்திரப் போர்க்களம்!
கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,
குருதியில் குளித்தன சருகுகள்!
கூட்டாக நடத்திய கொலைக்களம்..
கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!
கொஞ்சிக் குலாவுகின்றன,
காந்தீயக் கோழைகள் !

கலிங்கத்து மன்னனின்,
கால் பட்ட தூசியும்,
காந்தீய தேசத்தின்.,,
கதை கேட்டு விலகியோடும்!
கலிங்கத்துப் பரணியில்,
கூழுண்ட பேய்களும்,
கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!
போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,
பாவத்தின் சின்னமாகும்!
பூவேந்தி நீ செல்லும்,
புத்தனின் தூபிகள்,
போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

துருபதா தேவியின்,
துகில் களைந்தவன் கூடத்.
தூயவனாகி விட்டான்!
உயுருள்ள பெண்ணொன்றின்,
உடைகள் கலைகையில்,
ஓடிவந்தான், கண்ணன்!
ஓவென்ற அலறலில்,
நாங்கள் அழுகையில்.
ஓடி ஒளித்தான்,அவன்!
கருகிய பயிர்களும்,
கண் விழிக்கும் காலம்,
கண் முன்னே விரிகிறது!
உரிமையின் தேவையின்,
உண்மையின் உணர்ச்சியில்.
ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!

  • மோகன், putthan, வல்வை சகாறா and 3 others like this

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


Advert

#2 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 15 March 2012 - 09:47 AM

துருபதா தேவியின்,
துகில் களைந்தவன் கூடத்.
தூயவனாகி விட்டான்!
உயுருள்ள பெண்ணொன்றின்,
உடைகள் கலைகையில்,
ஓடிவந்தான், கண்ணன்!
ஓவென்ற அலறலில்,
நாங்கள் அழுகையில்.
ஓடி ஒளித்தான்,அவன்!
கருகிய பயிர்களும்,
கண் விழிக்கும் காலம்,
கண் முன்னே விரிகிறது!
உரிமையின் தேவையின்,
உண்மையின் உணர்ச்சியில். (உணர்வில் )
ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!


உணர்ச்சிக்கு விவேகம்மட்டு . ஆனால் உணர்வுக்கு அதன் செறிவு கூட . ஆக , அந்த இடத்தில் உணர்வே தேவை என்பது எனது தாழ்மையான பிரேரணை .காலத்திற்கு ஏற்ற கவியை வடித்த புங்கைக்குப் பாராட்டுக்கள் :) :) :) +1 .

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#3 மல்லிகை வாசம்

மல்லிகை வாசம்

    இணையத் தோழன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 772 posts
  • Gender:Male
  • Location:மல்லிகை, பூந்தோட்டம்
  • Interests:தமிழிசை, மெல்லிசை, புத்தகங்கள், எழுத்து

Posted 15 March 2012 - 11:47 AM

கருகிய பயிர்களும்,
கண் விழிக்கும் காலம்,
கண் முன்னே விரிகிறது!
உரிமையின் தேவையின்,
உண்மையின் உணர்ச்சியில்.
ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!


அந்த நம்பிக்கையும் உறுதியும் தானே எம்மினத்தை விடிவுப் பாதையில் முன்னேற்றிச்செல்ல அவசியமானவை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள், புங்கையூரன் :)
அன்புத்தென்றலில் வீசும்,
-மல்லிகை வாசம்

#4 shanthy

shanthy

    முல்லைமண்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,125 posts
  • Gender:Female
  • Location:Germany

Posted 15 March 2012 - 01:09 PM

துருபதா தேவியின்,
துகில் களைந்தவன் கூடத்.
தூயவனாகி விட்டான்!
உயுருள்ள பெண்ணொன்றின்,
உடைகள் கலைகையில்,
ஓடிவந்தான், கண்ணன்!
ஓவென்ற அலறலில்,
நாங்கள் அழுகையில்.
ஓடி ஒளித்தான்,அவன்!
கருகிய பயிர்களும்,
கண் விழிக்கும் காலம்,
கண் முன்னே விரிகிறது!
உரிமையின் தேவையின்,
உண்மையின் உணர்ச்சியில்.
ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!


கண்முன் விரிந்து
கனவுவெளியெங்கும்
விதைந்து கிடக்கிற
எங்கள் மீதான வன்மங்கள்
ஒருநாள்
ஓர்மமாய் எழும்.

கவிதைக்கு நன்றிகள் புங்கையூரான்

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

nesakkaram1.gif
முல்லைமண் வலைப்பூ

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -


#5 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,207 posts
  • Gender:Male

Posted 16 March 2012 - 08:47 AM

துருபதா தேவியின்,
துகில் களைந்தவன் கூடத்.
தூயவனாகி விட்டான்!
உயுருள்ள பெண்ணொன்றின்,
உடைகள் கலைகையில்,
ஓடிவந்தான், கண்ணன்!
ஓவென்ற அலறலில்,
நாங்கள் அழுகையில்.
ஓடி ஒளித்தான்,அவன்!
கருகிய பயிர்களும்,
கண் விழிக்கும் காலம்,
கண் முன்னே விரிகிறது!
உரிமையின் தேவையின்,
உண்மையின் உணர்ச்சியில். (உணர்வில் )
ஒன்றாகக் கரம் கூட்டுவோம்!


உணர்ச்சிக்கு விவேகம்மட்டு . ஆனால் உணர்வுக்கு அதன் செறிவு கூட . ஆக , அந்த இடத்தில் உணர்வே தேவை என்பது எனது தாழ்மையான பிரேரணை .காலத்திற்கு ஏற்ற கவியை வடித்த புங்கைக்குப் பாராட்டுக்கள் :) :) :) +1 .


கருத்துக்கு நன்றிகள், கோமகன்!
தாழ்மைக்கு என்ன தேவை, இப்போது?
உணர்வு பற்றிய உங்கள் கருத்து, உண்மையானதே!
சில வேளைகளில், கணணி ஒன்று, கவிதை எழுதியமாதிரிப் போய்விடாமலிருக்க அவ்வாறு எழுதினேன்!
இனி எழுதும்போது, கவனத்தில் கொள்கிறேன்!

அந்த நம்பிக்கையும் உறுதியும் தானே எம்மினத்தை விடிவுப் பாதையில் முன்னேற்றிச்செல்ல அவசியமானவை. நல்லதொரு கவிதைக்குப் பாராட்டுகள், புங்கையூரன் :)

நன்றிகள்,மல்லிகை வாசம்!
ஊர் கூடித் தேரிழுப்பதில், இன்னும் நம்பிக்கையுள்ளவன் நான்!
விடிகாலை வானம், எவ்வளவு அழகானது?

கண்முன் விரிந்து
கனவுவெளியெங்கும்
விதைந்து கிடக்கிற
எங்கள் மீதான வன்மங்கள்
ஒருநாள்
ஓர்மமாய் எழும்.

கவிதைக்கு நன்றிகள் புங்கையூரான்

கருத்துக்கு நன்றிகள், சாந்தி!
'கொலைக் களங்கள்' ஒளிநாடாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன்!
சிந்திய கண்ணீர், காய முன்பு எழுதி முடிக்க நினைத்தேன்!
இப்போது பார்க்கும் போது, இன்னும் மெருகூட்டியிருக்கலாம் என்று தோன்றுகின்றது!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#6 கல்கி

கல்கி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 314 posts
  • Gender:Female
  • Location:Nature
  • Interests:to make good friendship, reading books and writing poems

Posted 16 March 2012 - 09:26 AM

கலிகாலம் பிறக்கக்,
காத்திருக்கும் கபோதிகள்!
கண்ணீர்க் குமுறலுடன் ,
கண்ணில் விரிந்தது அவலம்!
காற்றையும் நஞ்சாக்கிய,
கனரக ஆயுதங்களின் குமுறல்!
கார்வண்ணன் தேரோட்டாத,
குருசேத்திரப் போர்க்களம்!
கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,
குருதியில் குளித்தன சருகுகள்!
கூட்டாக நடத்திய கொலைக்களம்..
கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!
கொஞ்சிக் குலாவுகின்றன,
காந்தீயக் கோழைகள் !


நம்மினத்திற்கு நேர்ந்த கொடுமைகள் மனதில் அறைகின்றன. அதை ஒளிபரப்பில் பார்த்தபோது கண்ணீர்தான் பார்வையை மறைத்தன.. மனதில் சூனியம் மட்டும் தான் மிச்சம். அதையும் மீறி கிளர்ந்து அதை கவியாக வடித்த தங்கள் உணர்வுக்கு எனது மிகப் பெரிய பாராட்டுக்கள் புங்கையூரான்.....
கல்கி Posted Image

#7 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,207 posts
  • Gender:Male

Posted 17 March 2012 - 06:00 AM

கலிகாலம் பிறக்கக்,
காத்திருக்கும் கபோதிகள்!
கண்ணீர்க் குமுறலுடன் ,
கண்ணில் விரிந்தது அவலம்!
காற்றையும் நஞ்சாக்கிய,
கனரக ஆயுதங்களின் குமுறல்!
கார்வண்ணன் தேரோட்டாத,
குருசேத்திரப் போர்க்களம்!
கருகி எரிந்த பிஞ்சுகள் நடுவில்,
குருதியில் குளித்தன சருகுகள்!
கூட்டாக நடத்திய கொலைக்களம்..
கூட்டங்கள் நடத்தம். கொலைகாரர்!
கொஞ்சிக் குலாவுகின்றன,
காந்தீயக் கோழைகள் !


நம்மினத்திற்கு நேர்ந்த கொடுமைகள் மனதில் அறைகின்றன. அதை ஒளிபரப்பில் பார்த்தபோது கண்ணீர்தான் பார்வையை மறைத்தன.. மனதில் சூனியம் மட்டும் தான் மிச்சம். அதையும் மீறி கிளர்ந்து அதை கவியாக வடித்த தங்கள் உணர்வுக்கு எனது மிகப் பெரிய பாராட்டுக்கள் புங்கையூரான்.....

உலகத்தின் இயக்கம், ஒரே திசையில் என்றுமே பயணித்ததில்லை!
சுழற்சி முறையிலேயே உலகம் இயங்குகின்றது!
எங்கள் காலமும் விரைவில் வரும் என நம்புவோம்!
அதை விரைவாகக் கொண்டுவர எம்மால் முடிந்ததைச் செய்வோம்!
தங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றிகள், கல்கி!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#8 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,996 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 17 March 2012 - 10:16 AM

கவிதைக்கு நன்றி புங்கையூரான் வேறு என்னத்தை சொல்ல?
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#9 வல்வை சகாறா

வல்வை சகாறா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,842 posts
  • Gender:Female
  • Location:கனடா
  • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 17 March 2012 - 03:29 PM

Posted Image




கலிங்கத்து மன்னனின்,
கால் பட்ட தூசியும்,
காந்தீய தேசத்தின்.,,
கதை கேட்டு விலகியோடும்!
கலிங்கத்துப் பரணியில்,
கூழுண்ட பேய்களும்,
கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!
போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,
பாவத்தின் சின்னமாகும்!
பூவேந்தி நீ செல்லும்,
புத்தனின் தூபிகள்,
போர்குற்றம் ஏந்தி நிற்கும்!




அருமையான வரிகள் ரோமியோ


மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.


#10 putthan

putthan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,950 posts
  • Gender:Male
  • Location:sydney
  • Interests:poltics,religion,gardening

Posted 17 March 2012 - 07:16 PM

நல்ல கவிதை ஒரு பச்சை....

புத்தனின் தூபிகள்,
போர்குற்றம் ஏந்தி நிற்கும்


கள உறவின் பெயர் பாவித்தமையை வன்மையாக கண்டிக்கிறேன்...நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.....சும்மா கிகி.....
"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன்"


http://putthan.blogspot.com/

#11 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,207 posts
  • Gender:Male

Posted 18 March 2012 - 08:22 AM

கவிதைக்கு நன்றி புங்கையூரான் வேறு என்னத்தை சொல்ல?

கருத்துக்கு நன்றிகள், ரதி!

அருமையான வரிகள் ரோமியோ

நன்றிகள், வல்வை!

கீழ்வானம் வெளிக்கும் போது,
காரிருள் கடை கட்டும்! :D

நல்ல கவிதை ஒரு பச்சை....



கள உறவின் பெயர் பாவித்தமையை வன்மையாக கண்டிக்கிறேன்...நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?.....சும்மா கிகி.....

போர்குற்றம் ஏந்துகின்ற தூபிகளின் கீழ் அமர்ந்திருக்கும் புத்தர் சிலைகளின் ஆன்மா, எப்போதோ உயிர் விட்டிருக்கும்!
சிங்களத்தின் புத்த கோவில்களும், தாஜ் மகால் கல்லறையும், எனது பார்வையில் ஒன்றே!
கருத்துக்கு நன்றிகள், புத்தன்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#12 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,928 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 18 March 2012 - 07:34 PM

Posted Image



துருபதா தேவியின்,
துகில் களைந்தவன் கூடத்.
தூயவனாகி விட்டான்!
உயுருள்ள பெண்ணொன்றின்,
உடைகள் கலைகையில்,
ஓடிவந்தான், கண்ணன்!
ஓவென்ற அலறலில்,
நாங்கள் அழுகையில்.
ஓடி ஒளித்தான்,அவன்!




//கண்ணில் நெருப்பெடுத்து-மதுரையைக்

கண்ணகி எரித்தகதை

இன்னும் சரித்திரத்தில்-படிக்க

இலக்கியப் புத்தகத்தில்


எண்ணுக் கணக்கற்று-கண்ணகிகள்

எங்கள் தேசத்தில்

மண்ணுக்கு இரையானார்-மதுரைகள்

இன்னும் எரியவில்லை


வருசம் விழாஎடுத்து-நேர்த்திக்கு

வளர்த்த கடாவெட்டி

புருசனுக்காய் நோன்பிருந்த-பெண்கள்

பூவிழந்து போயினரே


கொழுத்த அரக்கர்கள்-எங்களை

கொன்று புதைக்கையிலே

பழுத்த தேவர்கள்-ஞானப்

பால் குடிக்கப்போயினரோ


கற்பூரச் சட்டிகளை-கைகளில்

கடவுளர்க்காய் ஏந்தியோர்கள்

கற்பழித்துக் கொல்லப்பட- சாமிகள்

கண்மூடிச் சயனத்திலோ //


எப்பவோ எழுதிய எனது கவிதை ஒன்றில் இருந்து சிலவரிகள் புங்கை அண்ணா...உங்கள் கவிதை இதை நினைவூட்டியது..நன்றி புங்கை அண்ணா அருமையான கவிக்கு...

வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#13 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,316 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 18 March 2012 - 07:49 PM

கலிங்கத்து மன்னனின்,
கால் பட்ட தூசியும்,
காந்தீய தேசத்தின்.,,
கதை கேட்டு விலகியோடும்!
கலிங்கத்துப் பரணியில்,
கூழுண்ட பேய்களும்,
கொடுப்புக்குள் சிரிப்புதிர்க்கும்!



வலிமையான வரிகள்

நன்றி புங்கை

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#14 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,199 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 18 March 2012 - 08:06 PM

கவிதைக்கு நன்றி புங்கையூரான்.எமக்காக வரும் சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் கொலைக்கூட்டத்தையும்,கொலைக்கு அனுசரணையாக இருந்தவரையும் தண்டிக்க வேண்டும்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#15 nochchi

nochchi

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,652 posts
  • Gender:Male
  • Location:Germany
  • Interests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)

Posted 01 April 2012 - 12:05 PM

போதிமரம் காணும் புதிய குருத்துக்கள்,
பாவத்தின் சின்னமாகும்!
பூவேந்தி நீ செல்லும்,
புத்தனின் தூபிகள்,
போர்குற்றம் ஏந்தி நிற்கும்!

புங்கையூரானே படைப்புக்குப் பாராட்டுகள். வளர்க உங்கள் பணி.

வலிமை நிறை வரிகள்!

இது சிங்கள தேசத்தின் நிரந்தரக் குறியீடாகவே இருக்கப் போகிறது. ஆனால் இனவாத உருவேறிக் கருக்கொண்டு பிறக்கும் புதிய குருத்துகள் கூட நவீன உலகின் நடைமுறைகளை ஏற்குமா? மன்னிப்புக்கோருமா? என்பது விடைகாண முடியா வினாவாகும். ஆனால் எமக்கானதை நாமே அடைய வேண்டும். 'கம்மாலையின் இரும்பாவோம் காலத்தை எமதாக்குவோம்'
Posted Image"கருநாகத்தை நம்பினாலும் தமிழினத்தை அழிக்கத் துணை நிற்கும் கிந்தியக் காங்கிரஸை நம்பாதே"Posted Image



Posted Image








Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]