
தேவையானவை:
1 பிடி கீரை
1/2 கப் நறுக்கிய வெங்காயம்
2-3 நறுக்கிய பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி பெரும்சீரகம்
4-5 மேசைக்கரண்டி தேங்காய்ப்பால்
தேவைக்கேற்ப உப்பு
செய்முறை:
1. கீரையை நன்றாக நீரில் அலசி, மண் இல்லாது எடுத்து, சிறிதாக அரிந்து கொள்ளுங்கள். ( சோம்பல் காரணமாக சரியாக நீரில் அலசாமல் விட்டால், அன்று "மண் கீரை கடையல்" தான் கிடைக்கும். )
2. ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு, சிறிதளவு நீர் ஊற்றி வேகை வையுங்கள்.
3. அதில் பெரும்சீரகம், வெங்காயம், மிளகாய், சிறிதளவு உப்பையும் சேர்த்து நன்றாக வேக வையுங்கள்.
4. கீரை நன்றாக வெந்து வந்ததும், மத்தால் அல்லது ஒரு மசிக்க கூடிய அகப்பையால் நன்றாக கடையுங்கள். (அடுப்பில் இருந்து இறக்கி செய்யுங்கள்)
5. பின்னர் சட்டியை மீண்டும் அடுப்பில் வைத்து, தேங்காய்ப்பாலை சேர்த்து லேசான கொதி வந்ததும் இறக்குங்கள். இறக்கியதும் சிறிது தேசிக்காய்/எலுமிச்சைப் புளி சேர்த்தால் அருமையான ருசி கிடைக்கும்.எங்க வீட்ல உள்ளவங்க போல, தேசிக்காய்க்கு எதிர்ப்பு காட்டினால்..அது வேணாங்கிறேன்...வேலை குறைவு..கிகிகிகி
பி.கு: இதெல்லாம் ஒரு பெரிய செய்முறையா என கேட்பவர்களுக்கு: நான் கற்றுக்குடுத்து வெந்நீர் போல கற்றுக் கொண்டவர்களும் இங்குண்டு, என்னைய சுத்தி அம்புட்டு அப்பாவிங்க...வரட்டுமா ;)
www.thooyaskitchen.blogspot.com



















