
மனதை நெகிழ வைப்பதுதான் கவிதை என்றால்
அவளின் சந்தோசங்கள்தான் எனது கவிதை...
மனதை உருக்குவதுதான் கவிதை என்றால்
அவளின் சோகங்கள்தான் எனது கவிதை...
மனதுக்கு ஆறுதல் தருவதுதான் கவிதை என்றால்
அவளின் பேச்சுதான் எனது கவிதை...
மனதை லேசாக்குவதுதான் கவிதை என்றால்
அவளின் சுவாசம்தான் எனது கவிதை...
மனதை தொடுவதுதான் கவிதை என்றால்
அவளின் முத்தம்தான் எனது கவிதை...
மனதுக்கு பிடித்ததுதான் கவிதை என்றால்
அவள்தான் எனது கவிதை...
Edited by pakee, 07 March 2012 - 03:35 PM.
















