Jump to content


Tamil Star News
Photo

(நி)சப்த உணர்வு .....


  • Please log in to reply
6 replies to this topic

#1 நேற்கொழு தாசன்

நேற்கொழு தாசன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 183 posts
  • Gender:Male
  • Location:france
  • Interests:எல்லாம் வாசிக்க பிடிக்கும்
    தமிழை மட்டும் சுவாசிக்க பிடிக்கும்

Posted 03 March 2012 - 10:27 AM

முன்பெல்லாம்
இருள்பூத்த நிசப்தத்தில் _அவை
இயங்குதல் வழக்காதலால்
ஆங்காங்கே எச்சங்களாய் ................!

வேரோடுதல் போல
ஓடிக்கொண்டிருக்கும்_ அப்பப்ப
தன்னிலை மறந்து சிலகணம் வாய்கால்
நீரோடுதல் போல வெளிவரும் ...

பூசாப்பொருள் இதுவென்று
பேசாதநாளில்லை உற்றவர்
காசா பணமா தருமிதுவென்று
௬சாமல் முன்னின்று குறிவைத்தனர் .

வளைதல் நெளிதல் வசப்படல் கொண்டதில்லை .
உயர்ந்தவனை கொண்டாடியதுமில்லை
கீழிருந்தவனை துண்டாடியதுமில்லை _ஆதலால்
மாவிலை தோரணங்கண்டதுமில்லை.

முகவரியில்லாத முகத்திற்கு
சுகவரிகளை பரிசளித்த போதிலும்
தகவிலா நிலைகளை
வகைப்படுத்திய போதிலும்
மிகைப்பட்டுக்கொண்டதுமில்லை

இதமான இறந்தகால நினைவுடன்
சூனியவாதமொன்றை கடக்க முனைகையில் ,
சூழ்கின்றன எல்லாம் சூனியமாய் ..............

விளிம்பு நிலையென்பது
உயிர்களுக்கு மட்டுமல்ல
உயிர்மெய் வார்த்தைகளுக்கும் உண்டு.
ஆதலால் ..................

இபோதெல்லாம் ,
ஒலித்தலை மறுத்து
மௌனம் காக்கின்றன
காலவெளிகடக்குமென் வார்த்தைகள் ........

Attached Thumbnails

  • bird-migration.jpg

Edited by நேற்கொழு தாசன், 03 March 2012 - 10:46 AM.

  • வல்வை சகாறா, சுபேஸ் and புங்கையூரன் like this
இயல்புதாண்டிய இருத்தலுடனும், குற்ற உணர்வுடனும்
அகதி தமிழன், வல்வை நெற்கொழு தாசன்
http://netkoluvan.blogspot.fr/

Advert

#2 வல்வை சகாறா

வல்வை சகாறா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,851 posts
  • Gender:Female
  • Location:கனடா
  • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 03 March 2012 - 06:48 PM

இப்போதெல்லாம் ,
ஒலித்தலை மறுத்து
மௌனம் காக்கின்றன
காலவெளிகடக்குமென் வார்த்தைகள் ........


ஆழமான வரிகள்
காலவெளிகள் எவ்வளவு கடப்பினும் வாழும் வார்த்தைகள் இவை

"விளிம்பு நிலை என்பது உயிர்களுக்கு மட்டுமல்ல உயிர்மெய் வார்த்தைகளுக்கும் உண்டு" சிந்திக்கவைக்கின்றன வரிகள்

இரவின் சூனியத்தைக் கிழித்து ஓலமிடும் கரிக்குருவிபோல் கவிதையிலும் சூனியத்தைக் கிழிக்கும் ஓலம் தென்படுகிறது. ஒலித்தலை மறுத்து மௌனம் நிலைத்தால் காலவெளிகளை கடக்க முடியாத யதார்த்தம் தொக்கி நிற்கும்.

நெற்கொழுதாசன் அருமையான கவிதைகளை நெய்கிறீர்கள். அதிகபடியான வார்த்தைகளைத் திணித்து அலுத்துகொள்ள வைக்காத கவிப்பின்னல். ஒவ்வொரு வரிகளும் இரும்பு போன்று இருப்புக்கு உரியதாய்.... காலவெளிகள் கடந்தும் உங்கள் கவிதைகள் வாழும். பாராட்டுக்கள் உரித்தாகட்டும்


மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.


#3 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,421 posts
  • Gender:Male

Posted 05 March 2012 - 02:07 AM

கவிதைக்கு நன்றிகள், நேற்கொழுதாசன்!>>

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#4 நேற்கொழு தாசன்

நேற்கொழு தாசன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 183 posts
  • Gender:Male
  • Location:france
  • Interests:எல்லாம் வாசிக்க பிடிக்கும்
    தமிழை மட்டும் சுவாசிக்க பிடிக்கும்

Posted 06 March 2012 - 01:05 AM

ஆழமான வரிகள்
காலவெளிகள் எவ்வளவு கடப்பினும் வாழும் வார்த்தைகள் இவை

"விளிம்பு நிலை என்பது உயிர்களுக்கு மட்டுமல்ல உயிர்மெய் வார்த்தைகளுக்கும் உண்டு" சிந்திக்கவைக்கின்றன வரிகள்

இரவின் சூனியத்தைக் கிழித்து ஓலமிடும் கரிக்குருவிபோல் கவிதையிலும் சூனியத்தைக் கிழிக்கும் ஓலம் தென்படுகிறது. ஒலித்தலை மறுத்து மௌனம் நிலைத்தால் காலவெளிகளை கடக்க முடியாத யதார்த்தம் தொக்கி நிற்கும்.

நெற்கொழுதாசன் அருமையான கவிதைகளை நெய்கிறீர்கள். அதிகபடியான வார்த்தைகளைத் திணித்து அலுத்துகொள்ள வைக்காத கவிப்பின்னல். ஒவ்வொரு வரிகளும் இரும்பு போன்று இருப்புக்கு உரியதாய்.... காலவெளிகள் கடந்தும் உங்கள் கவிதைகள் வாழும். பாராட்டுக்கள் உரித்தாகட்டும்

நன்றி அக்கா இதுபோன்ற விமர்சனங்கள் என்னை இன்னும் வளப்படுத்தும்

கவிதைக்கு நன்றிகள், நேற்கொழுதாசன்!>>


தவறாது என் கவிதைகளுக்கு வதிவிடும் உங்களுக்கு நன்றிகள் .
உங்களின் ஊக்கங்களே இன்னும் இன்னும் எழுத தூண்டுகிறது

Edited by நேற்கொழு தாசன், 06 March 2012 - 01:03 AM.

இயல்புதாண்டிய இருத்தலுடனும், குற்ற உணர்வுடனும்
அகதி தமிழன், வல்வை நெற்கொழு தாசன்
http://netkoluvan.blogspot.fr/

#5 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,742 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 06 March 2012 - 01:52 AM

வாழ்த்துக்கள் நெற்கொழுந்து :D அண்ணா. உங்கள் கவிதைகள் தொடரட்டும்....

#6 நேற்கொழு தாசன்

நேற்கொழு தாசன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 183 posts
  • Gender:Male
  • Location:france
  • Interests:எல்லாம் வாசிக்க பிடிக்கும்
    தமிழை மட்டும் சுவாசிக்க பிடிக்கும்

Posted 06 March 2012 - 01:47 PM

வாழ்த்துக்கள் நெற்கொழுந்து :D அண்ணா. உங்கள் கவிதைகள் தொடரட்டும்....

கொழுந்து விட்டு எரிகிறது இனி
அழுதிடுவன் காணும் ..........

நன்றி தங்காய் வாசிப்புக்கு

இயல்புதாண்டிய இருத்தலுடனும், குற்ற உணர்வுடனும்
அகதி தமிழன், வல்வை நெற்கொழு தாசன்
http://netkoluvan.blogspot.fr/

#7 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,978 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 18 March 2012 - 08:02 PM

யாழில் நான் விரும்பி வாசிக்கும் கவிதைகளில் நேற்கொழுதாசனின் கவிதைகளும் அடங்கும்...உணர்ந்து அனுபவித்து வார்த்தைகளை நெய்கிறீர்கள் என்பதை உங்கள் கவிதகளைப் படிக்கும்போது புரிகிறது..பாராட்டுக்கள் நெற்கொழுதாசன்...
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/




Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]