இருள்பூத்த நிசப்தத்தில் _அவை
இயங்குதல் வழக்காதலால்
ஆங்காங்கே எச்சங்களாய் ................!
வேரோடுதல் போல
ஓடிக்கொண்டிருக்கும்_ அப்பப்ப
தன்னிலை மறந்து சிலகணம் வாய்கால்
நீரோடுதல் போல வெளிவரும் ...
பூசாப்பொருள் இதுவென்று
பேசாதநாளில்லை உற்றவர்
காசா பணமா தருமிதுவென்று
௬சாமல் முன்னின்று குறிவைத்தனர் .
வளைதல் நெளிதல் வசப்படல் கொண்டதில்லை .
உயர்ந்தவனை கொண்டாடியதுமில்லை
கீழிருந்தவனை துண்டாடியதுமில்லை _ஆதலால்
மாவிலை தோரணங்கண்டதுமில்லை.
முகவரியில்லாத முகத்திற்கு
சுகவரிகளை பரிசளித்த போதிலும்
தகவிலா நிலைகளை
வகைப்படுத்திய போதிலும்
மிகைப்பட்டுக்கொண்டதுமில்லை
இதமான இறந்தகால நினைவுடன்
சூனியவாதமொன்றை கடக்க முனைகையில் ,
சூழ்கின்றன எல்லாம் சூனியமாய் ..............
விளிம்பு நிலையென்பது
உயிர்களுக்கு மட்டுமல்ல
உயிர்மெய் வார்த்தைகளுக்கும் உண்டு.
ஆதலால் ..................
இபோதெல்லாம் ,
ஒலித்தலை மறுத்து
மௌனம் காக்கின்றன
காலவெளிகடக்குமென் வார்த்தைகள் ........
—
Edited by நேற்கொழு தாசன், 03 March 2012 - 10:46 AM.















