Jump to content

ஏன் ஆண்கள் மனைவிமாருக்கு அஞ்சுகிறார்கள்..?!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

woman-threat-man.jpg

எனக்கு பெண்கள் என் மீது ஆதிக்கம் செய்வது பிடிப்பதில்லை. பெண்கள் மட்டுமல்ல.. எவராக இருந்தாலும்.. என் மீது எனது தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பது அதைச் செய்.. இதைச் செய் என்பது எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. புத்திமதி சொல்லக் கேட்பது வேறு.. ஒன்றை தயவோடு.. அன்போடு செய்யச் சொல்வது வேறு...! ஆனால் ஒன்றை அதிகார தொனியில் அல்லது மேலாதிக்க நோக்கில்.. அல்லது கட்டாயக் கடமை என்ற போர்வையில்.. செய் என்று பணிப்பது வேறு.. எனக்கு இந்த கடைசியில் சொன்ன செயல்கள் செய்பவர்களைப் பொதுவாகப் பிடிப்பதில்லை..! அப்படிச் சொல்லப்படும் விடயங்களை தெரிந்து கொண்டே செய்யாமல் புறக்கணித்தும் விடுவேன். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை..!

இதில் உங்கள் நிலைப்பாடு என்ன..???! பெண்கள் சொல்வதை எல்லாம் கேட்டு நடப்பதுவா.. அவர்களுக்கு ஆண்கள் மீது மரியாதையை உண்டு பண்ணும்..??! இந்த வெட்டி மரியாதை நமக்கு அவசியம் தானா..??!

ஆண் மேலாதிக்கம் என்பது போல.. பெண் மேலாதிக்க நிலையும் இருக்கிறது. இதுவா ஆண்கள் (பொதுவாக) வீட்டில் பெண்களுக்கு அஞ்சக் காரணம்.. அல்லது வேறேதாவது உண்டா..???!

அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு அண்ணா.. பாவம்.. விடுமுறையைக் கழிக்க மனைவி பிள்ளைகளோடு வந்திருந்தார். கொண்டு வரும் லக்கேஜ் காவுவதில் இருந்து மனைவியின் சேலைகள் அடுக்குவது வரை.. ஏன் அவை எந்த லக்கேஜில் இருக்குது என்று சொல்லி எடுத்துக் கொடுப்பது வரை.. அவர் செய்து கொண்டிருந்தார். அதுக்கும் மேலதிகமாக.. முன்னர் எல்லாம் (திருமணத்திற்கு முன் ) சுயமா சிந்திச்சவர்.. முடிவெடுத்தவர்.. இப்ப ஒரு முடிவெடுக்க.. மனைவியை கூப்பிட்டு வைச்சுக் கதைக்கிறார். எதற்கு எடுத்தற்கும்.. எங்களுக்கு குடும்பம் இருக்கு.. நான் குடும்பகாரன் என்று விடயங்களை.. தன் குடும்பம் சாராத பொறுப்புக்களை தட்டிக்கழிக்க முனைகிறார். எனக்கென்றால் தலைக்கில்லால போச்சுது. இடத்தை விட்டுக் காலி செய்துவிட்டேன்..! ஏன் இப்படி ஆகிறார்கள்.. எங்கள் தமிழ் ஆண்கள்..???!

இவர்களுக்கு மட்டும் தானா இந்தப் பூமிப் பந்தில் குடும்பம் இருக்குது..??! ஏன் குடும்பகாரன் என்றால் பிற விடயங்களை தட்டிக்கழிக்க வேணும் என்றது இவர்களின் மனைவியரின் கட்டாயச் சட்டமா..???! ஒன்னுமா புரியல்ல..???! உங்களுக்காவது இவற்றின் பின்னால் உள்ள காரணங்கள் ஏதாவது புரியுது..??! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சாச்சா ராசா

எழுதுகின்றேன். நேரம் வேணுமே

மனிசியிடம் அனுமதிகிடைக்குமோ தெரியல....? :lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிச்சாச்சா ராசா

எழுதுகின்றேன். நேரம் வேணுமே

மனிசியிடம் அனுமதிகிடைக்குமோ தெரியல....? :lol::icon_idea: :icon_idea:

நீங்களுமா.. மனிசியிடம் அனுமதி கேட்கனும்.. கொடுமை சரவணா..??! :lol:

எப்போதாவது (திருமணம் ஆக முதல்) உங்கள் நண்பவர்களோடு விடயங்களைப் பகிர்ந்து கொள்ள அம்மாவிடம் அனுமதி பெற்றிருக்கிறீங்களா..??! :icon_idea:

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் ஒவ்வொரு தனிக்கதைகள் உண்டு..! அதனால் இவ்விடயங்களைப் பொதுமைப்படுத்துவது கடினம்..! :D

என்னைப்பொறுத்தவரையில், இருவேறு குடும்பச் சூழ்நிலைகளில் இருந்து வந்து கணவன் மனைவியாக இணைந்தவர்களில் இருவரிடத்திலுமே மாறுதல்கள் ஏற்படுகிறது..! ஒருவர் மற்றொருவருக்கு முகம் பார்க்கும் கண்ணாடிபோல..! :rolleyes:

திருமணத்திற்கு முன்னர் சிலவற்றை சரி என நினைத்துச் செய்துகொண்டிருப்போம்..! அதில் பின்னர் மாற்றம் வரும்..! இதையெல்லாம் திருமணம் செய்து பார்த்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும்..! எழுதுவது கடினம்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோழி மிதிச்சு குஞ்சு முடம் ஆகுமா

குஞ்சு மிதிச்சு கோழி முடம் ஆகுமா ராசா?

ஆனால் இது மிதிச்சா.....???? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் ஒவ்வொரு தனிக்கதைகள் உண்டு..! அதனால் இவ்விடயங்களைப் பொதுமைப்படுத்துவது கடினம்..! :D

என்னைப்பொறுத்தவரையில், இருவேறு குடும்பச் சூழ்நிலைகளில் இருந்து வந்து கணவன் மனைவியாக இணைந்தவர்களில் இருவரிடத்திலுமே மாறுதல்கள் ஏற்படுகிறது..! ஒருவர் மற்றொருவருக்கு முகம் பார்க்கும் கண்ணாடிபோல..! :rolleyes:

திருமணத்திற்கு முன்னர் சிலவற்றை சரி என நினைத்துச் செய்துகொண்டிருப்போம்..! அதில் பின்னர் மாற்றம் வரும்..! இதையெல்லாம் திருமணம் செய்து பார்த்தால்தான் விளங்கிக்கொள்ள முடியும்..! எழுதுவது கடினம்..! :lol:

எப்படி இப்படி.. அடியோடு மாறிப் போயிடுறீங்க.. என்றது தான் கேள்வியே..???! உங்களைப் போலத் தான் நான் சந்தித்த அந்த அண்ணாவும் இருந்தார். எப்படி இருந்தவர்.. இப்படி ஆகிட்டாரே என்று ஒரு பக்கம் கவலையாக இருந்தது.. இன்னொரு பக்கம்.. சந்தோசமான குடும்பத்தை கொண்டிருக்கிறார் என்ற அளவில் மகிழ்ச்சியாக இருந்தது..! :):icon_idea:

குஞ்சு மிதிச்சு கோழி முடம் ஆகுமா ராசா?

ஆனால் இது மிதிச்சா.....???? :lol::D :D

இதில் குஞ்சு என்று யாரைச் சொல்லுறீங்க...??! கோழி என்று யாரைச் சொல்லுறீங்க..???! ஏன் இவ்வளவு பயப்பிடிறீங்க...???!

அவன் ஒருத்தன் யாழில விடுப்புக் கதைப்பானாம்.. இவர் அதுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறாராம்.. அவங்களுக்கு என்ன மனிசியா பிள்ளையா குட்டியா.. நீங்களும் அவங்களோடு போய் குந்தி இருந்து கொண்டு.. விடுப்புக் கதைக்கிறீங்களோ...! வந்து கிச்சினுக்க வேலையைப் பாருங்க என்று திட்டு விழும் என்று பயப்பிடுறீங்க போல..! அப்படி திட்டினா சொல்லுங்க.. ஆண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்.. உள்ள போக வேண்டு வருமுன்னு..! :icon_idea::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பக்கம்.. சந்தோசமான குடும்பத்தை கொண்டிருக்கிறார் என்ற அளவில் மகிழ்ச்சியாக இருந்தது..! :):icon_idea:

என்னப்பா இது

மண்டியிடுவதையிட்டு சந்தோசமா? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இது

மண்டியிடுவதையிட்டு சந்தோசமா? :lol::D

என்ன செய்வது அப்படி நினைச்சு எங்கள் அளவில் அவர் மகிழ்ச்சியா இருக்கிறார் என்று நினைச்சுக்க வேண்டியது தானே அண்ணா..!

ஏன் இந்த ஆண்கள்.. மண்டி இடுகிறார்கள் என்பது தான் புரியல்ல..???! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி திட்டினா சொல்லுங்க.. ஆண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ்.. உள்ள போக வேண்டு வருமுன்னு..! :icon_idea::lol:

உள்ள போடுறது சரி

ஆனால் எங்களுக்கு தேவைகள் இருக்கே :wub:

அதுக்கு இன்னொன்றை நாடணும்

அதுவும்இதைத்தானே செய்யப்போகுது

பிறகு கோட்டு கேசு என்று அலையத்தான் நேரம் சரி... :lol::icon_idea: :icon_idea:

கோட்டுக்கேசு என்று போனா எவ்வளவு அறவிடுவினம் என்பதை நினைத்துப்பார்க்கவே பயமா இருக்கப்பா.... :lol::D

Link to comment
Share on other sites

பயம் !!! என் அகராதியிலேயே இல்லை

என் மனிசிக்கு இதைச் சொல்லிப் போடாதைங்கோ...பிறகு நான் வீட்டுக்கு போக ஏலாது

Link to comment
Share on other sites

காவல்துறைக்குமட்டும்தான் அஞ்சுவோம் !

ஐந்து யுவதிகளை கடந்த எட்டு மாதங்களில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கை நடத்தி வந்த 28 வயது இளைஞன் சிலாபம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவர் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார் என்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

இவர் நிலச் சுவாந்தர் போல நடித்து இருக்கின்றார். மனைவிமாரின் தங்க நகைகளை வஞ்சகமாக பெற்று 3.2 மில்லியன் ரூபாய்க்கு அடகு வைத்து இருக்கின்றார்.

இவரிடம் இருந்து திருமண சான்றிதழ்கள் இரண்டையும், 40000 ரூபாய்க்கு இவர் அடகு வைத்திருந்த 400,000 ரூபாய் பெறுமதியான ஒரு நகையையும் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர்.

இவர் திருமணம் செய்த யுவதிகளில் ஒருவர் ஆடைத் தொழில்சாலையில் வேலை பார்ப்பவர். இன்னொருவர் வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பி வந்து இருப்பவர். முஸ்லிமாக நடித்த முஸ்லிம் யுவதிகள் இருவரை மண்ந்து இருக்கின்றார்.

இவர் திருமணம் செய்த யுவதிகள் வலஹபிட்டிய, செல்லக் கதிர்காமம், ராஜங்கண, பண்டுருவ, கல்நேவ ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தமைக்காக ஏற்கனவே இரண்டரை வருட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தார்.

இவர் யுவதிகளை பஸ் பயணங்களின்போது மடக்குகின்ற பழக்கத்தை வழக்கமாக கொண்டு இருக்கின்றார்.

filee.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயம் !!! என் அகராதியிலேயே இல்லை

என் மனிசிக்கு இதைச் சொல்லிப் போடாதைங்கோ...பிறகு நான் வீட்டுக்கு போக ஏலாது

இதிலிருந்து நிழலி சொல்லவருவது என்னவென்றால்

அகராதிக்கும் இல்லறத்துக்கும் சம்பந்தமில்லை.

ஆனால் பயத்துக்கும் மனைவிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. :lol::D :D

Link to comment
Share on other sites

குடும்ப நலன்களுக்காக விட்டுக் கொடுப்புகள் அவசியம். அதற்காக அடிமையாக இருக்கத் தேவையில்லை. நாங்களா விரும்பிச் செய்ய வேண்டும். ஒருத்தரில ஒருத்தர் அன்பாக இருந்தால், மற்றவரைக் கஷ்டப்படுத்தமாட்டீங்கள். தனிப்பட்ட முறையில் நான் இன்னுமொருவரை அடக்கி ஆள விரும்புவதில்லை. அதேபோல இன்னுமொருவர் என்னை அடக்கியாளவும் விடமாட்டேன்.

முடிவுகள் எடுக்கும் பொழுது அந்த விடயத்தில் உங்களுக்கு நல்ல அனுபவம் இருந்தாலன்றி, மற்றவரையும் ஆலோசித்துச் செய்வது நல்லதுதானே. இதைத்தானே வேலைத் தளங்களிலும் செய்கிறார்கள். அதற்காக சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் துணையை அபிப்பிராயம் கேட்க வெளிக்கிட்டால் சுயம் தொலைந்து போகும்.

தனிய இருக்கக்குள்ள வாழ்ந்த மாதிரியே கலியாணம் கட்டிய பின்னும் வாழ முடியாது. குடும்பம், பிள்ளைகள் என்று வர உங்களிலும் மாற்றங்கள் வரும். சிலர் அடிமையாக இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் கண்ட பெரும்பாலானவர்கள் விருப்பத்துடன்தான், ஒருவருடன் ஒருவர் ஒத்துப்போகிறார்கள்.

அண்மைய பதிவுகளைப் பார்க்கையில், நெடுக்காலபோவான் எதுக்கோ 'ரெக்கி' எடுக்கிற மாதிரிக் கிடக்கு. :unsure:

Link to comment
Share on other sites

கொள்கையளவில் திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றுசேர்வது, ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாவது கடினம். ஏனெனில் ஆண்களும் பெண்களும் இயற்கையாகவே இருவேறு படைப்புக்கள்.

அதேவேளை விட்டுக்கொடுப்புடன் வாழுவது, குறிப்பாக பிள்ளைகள் நல்வாழ்வுக்காக, நடைமுறையில் சாத்தியமாகின்றது. அதுவும் மேற்குலக வாழ்க்கையில் கடினமாகின்றது. ஆனால் அந்த விட்டுக்கொடுப்பு சமுதாய வளர்ச்சிக்கு தேவையானது. இதில் அவர் பயப்படுகின்றார் இவர் பயப்படுகின்றார் என்பதல்ல முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய பதிவுகளைப் பார்க்கையில், நெடுக்காலபோவான் எதுக்கோ 'ரெக்கி' எடுக்கிற மாதிரிக் கிடக்கு. :unsure:

எனக்காக அல்ல. நாங்கள் வாழும் சமூகத்திற்காக.. உலகிற்காக..! :):icon_idea:

கொள்கையளவில் திருமணம் என்பது இரு மனங்கள் ஒன்றுசேர்வது, ஆனால் நடைமுறையில் இது சாத்தியமாவது கடினம். ஏனெனில் ஆண்களும் பெண்களும் இயற்கையாகவே இருவேறு படைப்புக்கள்.

அதேவேளை விட்டுக்கொடுப்புடன் வாழுவது, குறிப்பாக பிள்ளைகள் நல்வாழ்வுக்காக, நடைமுறையில் சாத்தியமாகின்றது. அதுவும் மேற்குலக வாழ்க்கையில் கடினமாகின்றது. ஆனால் அந்த விட்டுக்கொடுப்பு சமுதாய வளர்ச்சிக்கு தேவையானது. இதில் அவர் பயப்படுகின்றார் இவர் பயப்படுகின்றார் என்பதல்ல முக்கியம்.

சில சமயம் அந்த விட்டுக் கொடுப்புக்கள் எல்லை தாண்டியதாக இருப்பதை வெளியில் உள்ளவர்கள் உணர முடிகிறதே..???! அதையிட்டு என்ன சொல்லலாம்..??! :):rolleyes:

Link to comment
Share on other sites

சில சமயம் அந்த விட்டுக் கொடுப்புக்கள் எல்லை தாண்டியதாக இருப்பதை வெளியில் உள்ளவர்கள் உணர முடிகிறதே..???! அதையிட்டு என்ன சொல்லலாம்..??! :):rolleyes:

உள்ளே உள்ளவர்களால் மட்டுமே அதை முழுமையாக உணர முடியும்.

வெளியில் உள்ளவர்கள், அவர்கள் தான் வெளியிலே உள்ளனரே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே உள்ளவர்களால் மட்டுமே அதை முழுமையாக உணர முடியும்.

வெளியில் உள்ளவர்கள், அவர்கள் தான் வெளியிலே உள்ளனரே :)

சுதந்திரத்தை இழந்த ஒரு வாழ்வு.. அதற்கு விட்டுக்கொடுப்பு என்ற பெயரில் ஒரு ஆபரணம் அணிந்து உள்ள இருந்து அழகு பார்த்து என்ன பயன்..???! சமூகம் அதை அழகு பார்க்க... அதனால் நன்மை அடைய ஏன்.. இந்த மனித இனம் விரும்புதில்ல.. குறிப்பா பெண்கள் விரும்புறாங்க இல்ல..???! கலியாணம் என்ற ஒன்றின் மூலம் ஆணின் சுதந்திர உணர்வுகள் பறிக்கப்படுவது தான்.. விட்டுக்கொடுப்பா..???! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடாத்தலாம் என்கின்றனர்.

அப்படியாயின் அதைக்கொண்டிழுக்கவும் அதைவிட அதிகம் பொய்யும் நடிப்பும் வேண்டுமல்லவா நெடுக்கு...

எல்லாமே ஒரு ஒழுங்கமைப்புத்தானே?

ஒருவர் பலசாலியானால் மற்றவர் ஆமாப்போடுவது நியதிதானே தம்பி?

Link to comment
Share on other sites

சுதந்திரத்தை இழந்த ஒரு வாழ்வு.. அதற்கு விட்டுக்கொடுப்பு என்ற பெயரில் ஒரு ஆபரணம் அணிந்து உள்ள இருந்து அழகு பார்த்து என்ன பயன்..???! சமூகம் அதை அழகு பார்க்க... அதனால் நன்மை அடைய ஏன்.. இந்த மனித இனம் விரும்புதில்ல.. குறிப்பா பெண்கள் விரும்புறாங்க இல்ல..???! கலியாணம் என்ற ஒன்றின் மூலம் ஆணின் சுதந்திர உணர்வுகள் பறிக்கப்படுவது தான்.. விட்டுக்கொடுப்பா..???! :):icon_idea:

இன்று ஆணில் பலரும் சட்டிபானை கழுவுகிறார்கள், பிள்ளைகளை பார்கின்றார்கள்... எமது தந்தை தலைமுறையில் இது நடந்தது இல்லை.

ஆம், அது விட்டுக்கொடுப்பு அதில் பிழையோ இல்லை மதிப்புக்குறைவோ இல்லை.

Link to comment
Share on other sites

சுதந்திரத்தை இழந்த ஒரு வாழ்வு.. அதற்கு விட்டுக்கொடுப்பு என்ற பெயரில் ஒரு ஆபரணம் அணிந்து உள்ள இருந்து அழகு பார்த்து என்ன பயன்..???! சமூகம் அதை அழகு பார்க்க... அதனால் நன்மை அடைய ஏன்.. இந்த மனித இனம் விரும்புதில்ல.. குறிப்பா பெண்கள் விரும்புறாங்க இல்ல..???! கலியாணம் என்ற ஒன்றின் மூலம் ஆணின் சுதந்திர உணர்வுகள் பறிக்கப்படுவது தான்.. விட்டுக்கொடுப்பா..???! :):icon_idea:

விட்டுக் கொடுப்பை, சுதந்திரத்தை இழந்த வாழ்வு என்று எடுக்க முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது சுதந்திரத்தை இழந்த மாதிரி இருக்கும். உண்மை அதுவல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டுக் கொடுப்பை, சுதந்திரத்தை இழந்த வாழ்வு என்று எடுக்க முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது சுதந்திரத்தை இழந்த மாதிரி இருக்கும். உண்மை அதுவல்ல.

இதைத்தான்

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதா??? :lol::D :D

Link to comment
Share on other sites

உண்மையில் அஞ்சுவது அல்ல ,அஞ்சுவது போல் காட்டிக்கொள்வது. ஏனெனில் எமது உலகம் வேறு அவர்கள் உலகம் வேறு.எமது உலகத்தில் உலா வரவேண்டும் என்றால் அவர்களுடன் நியாயம் கதைக்காமல், சண்டை பிடிக்காமல் இருப்பதுதான் நல்லது.

உண்மையில் சுயநலத்திற்காகவே ஆண் அப்படி செய்கின்றான்.

Link to comment
Share on other sites

இதைத்தான்

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதா??? :lol::D :D

'இவன் ரொம்ப நல்லவன்பா. எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்' என்கிற மாதிரி பொஸிடிவ்வாக எடுத்துக் கொள்வது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அஞ்சுவது அல்ல ,அஞ்சுவது போல் காட்டிக்கொள்வது. ஏனெனில் எமது உலகம் வேறு அவர்கள் உலகம் வேறு.எமது உலகத்தில் உலா வரவேண்டும் என்றால் அவர்களுடன் நியாயம் கதைக்காமல், சண்டை பிடிக்காமல் இருப்பதுதான் நல்லது.

உண்மையில் சுயநலத்திற்காகவே ஆண் அப்படி செய்கின்றான்.

இதில மட்டும் ஆண்கள் எல்லோரும் ஒரே கட்சி போலக்கிடக்கு....

:lol::icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.