Jump to content


Tamil Star News
Photo

சொல்லடை ( சொலவடை )


  • Please log in to reply
227 replies to this topic

#1 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 23 February 2012 - 12:12 PM

எமது வாழ்கையில் தொடர்பாடலில் எமது பெரிசுகள் தாங்கள் சொல்லவந்த செய்தியை நேரடியாகச் சொல்லாது மறைமுகமுகமாக உறைக்கத்தக்க விதத்திலும் , புத்திமதி சொல்வது போலவும் உரையாடுவார்கள் . இதைச் சொல்லடை அல்லது சொலவடை என்று சொல்லுவோம் . ஆனால் , துர்ரதிஸ்டவசமாக இந்த சொல்லடைகள் எம்மிடமிருந்து நாகரீகம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு போகின்றன . இவை மீண்டும் புதியவேகம் பெற்று எம்மைப் போன்ற இளயவர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்திலேயே இந்தப் பதிவைத் தொடங்குகின்றேன் . இந்தப் பதிவானது உங்கள் ஒத்துளைப்பும் , ஆதரவும் இல்லாமல் வாசகர்களைச் சென்றடையாது என்பது நிதர்சனமான உண்மை . முதலில் ஆரம்பித்துவைக்க எனக்குத் தெரிந்த சொல்லடைகளைத் தருகின்றேன் , எங்கே உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள்!!!!!!!!!!!!!!!!!

*************************************************************

1 .அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்

2 . ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும் நடு ஏரியில சண்ட வெலக்கப் போன வெறா மீனுக்கு ஒடஞ்சி போச்சாம் மண்ட.

3 . கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.

Edited by கோமகன், 23 February 2012 - 12:20 PM.

  • சுபேஸ், ஜீவா and கவிதை like this

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


Advert

#2 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,134 posts
  • Gender:Not Telling

Posted 23 February 2012 - 12:39 PM

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.. :wub:

இது ஓக்கேயா கோம்ஸ் அண்ணா??? :rolleyes:
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#3 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,753 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 23 February 2012 - 02:22 PM

நீங்கள் குறிப்பிடும் சொல்லடைக்கும்
பழமொழிகளுக்கும் தொடர்புண்டா கோமகன்???

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#4 வாதவூரான்

வாதவூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,344 posts
  • Gender:Male
  • Location:London

Posted 23 February 2012 - 02:31 PM

1.சும்மா நடக்க மாட்டாத மூஞ்சூறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போச்சுதாம்
2.ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம் ஆனால் ஒன்பது பெண்டாட்டி கேட்குதாம்

இது சரியோ கோமகன் அண்ணா

#5 யாயினி

யாயினி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,985 posts
  • Gender:Female
  • Interests:யாரிடமும் அதிகம் பேசாத மௌனம்.

Posted 23 February 2012 - 03:00 PM

வயது வந்தவர்கள் மட்டும் ஓ இப்படி எல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லி வைச்சுட்டு போய் இருக்கிறார்களா என்று சந்தோசப்படலாம்..ஆனால் என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்லப் போனால் மேலைத் தேய நாடுகளில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றுவரும் பிள்ளைகளுக்கு இந்த சொல்லடை,சொலவடை பற்றி சொல்லிக் கொடுப்பதோ இல்லை புரிய வைப்பதோ கொஞ்சம் கஸ்ரம்..

Edited by யாயினி, 23 February 2012 - 03:06 PM.

 

நட்புடன்......யாயினி.

 


#6 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 23 February 2012 - 05:08 PM

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.. :wub:

இது ஓக்கேயா கோம்ஸ் அண்ணா??? :rolleyes:


அதே...................... :D :D .

1.சும்மா நடக்க மாட்டாத மூஞ்சூறு விளக்குமாற்றையும் காவிக்கொண்டு போச்சுதாம் .

2.ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம் ஆனால் ஒன்பது பெண்டாட்டி கேட்குதாம் .

இது சரியோ கோமகன் அண்ணா


இதே கருத்தைத் தழுவி இன்னும் இரண்டு மூன்று சொல்லடைகள் உள்ளன . முயற்சி செய்யுங்கள் வாதவூரான் :) :) .

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#7 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 23 February 2012 - 05:20 PM

நீங்கள் குறிப்பிடும் சொல்லடைக்கும்
பழமொழிகளுக்கும் தொடர்புண்டா கோமகன்???



மேலோட்டமாகப் பார்த்தால் இவையிரண்டும் ஒன்று போலவே தெரியும் விசுகண்ணை . பழமொழிகள் சொல்லவந்த செய்தியினைச் சுருக்கமாகவும் , தெளிவாகவும் , சுவையுடனும் சொல்லப்படுவன . அத்துடன் அது சார்ந்த சமூகத்தின் அனுபவ முதிர்ச்சியையும் , அறிவுக்கூர்மையையும் எடுத்துச் சொல்கின்றன :) :) :) .

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#8 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 23 February 2012 - 05:26 PM

வயது வந்தவர்கள் மட்டும் ஓ இப்படி எல்லாம் எங்கள் முன்னோர்கள் சொல்லி வைச்சுட்டு போய் இருக்கிறார்களா என்று சந்தோசப்படலாம்..ஆனால் என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்லப் போனால் மேலைத் தேய நாடுகளில் பிறந்து வளர்ந்து கல்வி கற்றுவரும் பிள்ளைகளுக்கு இந்த சொல்லடை,சொலவடை பற்றி சொல்லிக் கொடுப்பதோ இல்லை புரிய வைப்பதோ கொஞ்சம் கஸ்ரம்..


உங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் யாயினி . ஆனால் , இங்கும் இடியம்ஸ் ( idioms ) , புறோவேவ் (proverbs ) என்ற பகுதிகள் இளயவர்களுக்கு அந்தந்த மொழிகளில் இருக்கின்றன தானே . முடியாது என்ற நினைத்திருந்தால் இவ்வளவுதூரம் வந்திருப்போமா யாயினி :) :) :) ?

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#9 வாதவூரான்

வாதவூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,344 posts
  • Gender:Male
  • Location:London

Posted 23 February 2012 - 07:43 PM

1.உடையார் வீட்டு மோருக்கு அகப்பை கணக்கில்லையாம்
2.ஒளிக்க தெரியாதவன் தலையாரி வீட்டுக்கை ஒளிச்சானாம்

#10 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,217 posts
  • Gender:Male

Posted 23 February 2012 - 10:11 PM

ஆடத் தெரியாதவள், கூடம் கோணல் எண்டாளாம்!
உழுகிற மாடு, ஊருக்குள்ள விலை போகும்!
முயல் பிடிக்கிற நாயை, மூஞ்சியில தெரியும்!

போதுமா, கோமகன்? :D

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#11 கவிதை

கவிதை

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 953 posts
  • Gender:Male
  • Interests:வேலை, எதையாவது வாசித்தல்,எழுதுதல்

Posted 23 February 2012 - 10:26 PM

செல்லடிக்குப் பயந்து ஓடிப்போனவன்....... சொல்லடைக்கு வந்து சல்லடை போட்டானாம்!

எப்புடி...................... ?
:lol: :lol: :lol:

கோ...! இது நம்ம சொந்த வடை! :lol:

ஜாலியாக இருந்த மனநிலையில் மனதில் வந்த சொல்லடை!


தப்பாக நினைக்கவேண்டாம்!

பழைய சொல்லடைக
ளை...... எத்தனை நாளைக்கு கேட்பது...?!
புதிதாய் நாம் எதையாவது சொன்னால்தானே....... நம் பூட்டப் பிள்ளைகளுக்கும் ஏதாவது மிஞ்சியிருக்கும்! அதனால்தான்...... இப்படி! :)

என்ன கோ? ஓகேதானே? :)

Edited by கவிதை, 24 February 2012 - 05:11 PM.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களமாடும் கவிதை... விளையாடும் குழந்தை! :)

-ஒருவன்-

"கவிதை"

#12 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 23 February 2012 - 10:55 PM

வெல்லம் காய்ச்சுறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தன்.

முக்கி முக்கி குத்தினவளுக்கு மூண்டாம் எட்டிஎட்டி பாத்தவளுக்கு எட்டாம்.

நாய்க்கு நடுக்கடல் போனாலும் நக்குத்தண்ணிதான்.

கூரை ஏறிக் கோழி புடிக்காதவன் வானம் ஏறி வைகுந்தம் போனானாம்.

எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

இரும்பு புடிச்ச கையும் சிரங்கு புடிச்ச கையும் சும்மாய் இராது.

இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாளைக்கு.

கிட்ட உறவு முட்டப் பகை.

ஆடு பகை குட்டி உறவு..

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#13 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,937 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 23 February 2012 - 10:57 PM

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்....

வேலைக் கள்ளிக்குப் பிள்ளைப் பராக்கு..

ஆடிக்கறக்கிற மாட்டை ஆடிக்கறக்கவேணும்
பாடிக்கறக்கிற மாட்டை பாடிக்கறக்கவேணும்

தானாடாவிட்டாலும் தசையாடும்

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத் தெரியும்..

எட்டாப்பழத்துக்கு கொட்டாவி விடாதை..

கழுதைக்குத் தெரியுமோ கற்பூர வாசனை...?

:D :D
____________________________________________


கோமகன் அண்ணா கலக்கல்த்திரி... தொடருங்கோ...
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/

#14 யோக்கர்

யோக்கர்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 118 posts
  • Gender:Male
  • Location:3rd Rock from Sun
  • Interests:கண்ணில படுவதெல்லாம் :)

Posted 23 February 2012 - 11:59 PM

எல்லாரும் ஏறி விழுந்த குதிரயில சக்கடத்தாரும் ஏறி சறுக்கி விழுந்தாரம்
_/\_

#15 nige

nige

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 255 posts
  • Interests:kavithai ,sirukathai eluthal

Posted 24 February 2012 - 12:29 AM


3 . கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போனானாம்.


கோமகன் இது வைகுண்டம் போனானாம் என்று வர வேண்டும் என நினைக்கிறேன் .எனக்கும் சரியாக தெரியாது .பிழை என்றால் மன்னிக்கவும்

தவறித் தவறல் தவறல்ல தவறிவிட்டு
தவறல்ல என்பதே தவறு



நினைவுகளுடன்..
நிகே

#16 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,217 posts
  • Gender:Male

Posted 24 February 2012 - 02:37 AM

கோழி மிதித்துக் குஞ்சு சாவதில்லை!

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை!

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#17 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,275 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 24 February 2012 - 03:46 AM

சங்கு, சக்கர சாமி வந்து, ஜிங்கு... ஜிங்கு.... எண்டு ஆடிச்சாம். :D

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#18 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,010 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 24 February 2012 - 08:29 AM

நாய்க்கு எதற்கு போர்த் தேங்காய் :lol: [இது சரியோ தெரியவில்லை கேள்விப்பட்ட மாதிரி இருக்குது]
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#19 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,753 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 24 February 2012 - 10:38 AM

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்
இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.
இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#20 சுவைப்பிரியன்

சுவைப்பிரியன்

    ரசிகன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,670 posts
  • Gender:Male
  • Location:swiss
  • Interests:reeding and music

Posted 24 February 2012 - 12:02 PM

மீண்டும் கேட்கின்றேன் என்று தப்பா நினைக்காதீர்கள்
இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எல்லாமே பழமொழிகளாகவே இருக்கின்றன.
இரண்டுக்கும் விளக்கம் தேவை :(

இவருக்கு இனி வெள்ளை வான் தான் :lol: :lol:
  • Manivasahan likes this
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]