Jump to content


Tamil Star News
Photo

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் -நூல் வெளியீடு


  • Please log in to reply
108 replies to this topic

#21 சித்தன்

சித்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,264 posts
  • Gender:Male
  • Location:சித்தன்போக்கு சிவன்போக்கு.
  • Interests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.

Posted 21 February 2012 - 01:15 PM

ஓம் கிருபன், இப்படியான அரைவேக்காட்டுத் தனமான விமர்சனங்களாலும் புரிதல்களாலும் தான் இன்னும் நாம் அறிவுத் தளத்திலும் சிந்தனைத் தளத்திலும் பல நூற்றாண்டுகளுக்கு பின் தங்கி இருக்கின்றோம். ஒன்றை அறிய முன் வெறும் ஊகத்தின் அடிப்படையில் வாந்தி எடுப்பதால் தனக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்துக்கும் நோய்களைத் தான் பரப்ப முடியும்


எல்லாம் தெரிந்த ஒரு புத்திசாலி சொல்லுறார் முட்டள் தமிழினமே தெரிந்து நடந்து கொள்.
ஏழு குறுக்கு....... இரண்டு நெடுக்கு....... நாலுபேரு தூக்கும் வாகனம்........ அதில் நீயும் ஒருநாள் போகனும்........ நானும் ஒருநாள் போகனும்.
-சித்தன்-

Advert

#22 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 February 2012 - 01:51 PM

அகூதா சில கேள்விகள்,

1. தற்போது மக்கள் நினைக்கின்ற மாதிரி என்று சொல்ல நீங்கள் மக்களின் நாடி பிடித்தறிந்தவரா?, சரி ஓமெனில் நீங்கள் மக்கள் என்று அழைப்பது புலம்பெயர் மக்களையா அல்லது ஈழத்தில் இன்றும் வாழும் மக்களையா, அல்லது இரு பிரிவையும் ஒரே தராசில் வைக்கும் நடைமுறைச் சாத்தியமற்ற பார்வையா?



2. இதில் எதிரி என்று எவரை குறிப்பிடுகின்றீர்கள்? சிங்களத்தையா, இல்லை மாற்றுக் குழுக்களையா?, இல்லை போராட்டத்தை விமர்சிர்ப்பவர்களையா? அல்லது அப்படி விமர்சிப்பவர்களை துரோகி என்று முத்திரை குத்துபவர்களையா? இல்லை சர்வதேசத்தையா? இல்லை இந்தியாவையா?

...சரி எல்லாவற்றுக்கும் முதல்,

கிருபன் இணைத்த திரியின் பதிவுகளை பார்த்து தான் பதில் எழுதினீர்களா? இல்லயெனில் முன்முடிவுகளை எந்த ஆதாரங்கள் வைத்து எழுதினீர்கள்?


நிழலி,
இந்தகேள்விகளை நீங்கள் கேட்கவேண்டிய இடம் நானில்லை. நான் எழுதியது ஒரு பதில், ஒரு கருத்திற்கு.

எய்தவன் இருக்க அம்பை நொய்வான் ஏனோ !

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#23 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,338 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 21 February 2012 - 02:10 PM

எல்லாம் தெரிந்த ஒரு புத்திசாலி சொல்லுறார் .


ஒரு புத்திசாலிக்குத் தான் இன்னொரு புத்திசாலியை அடையாளம் காண முடியும் சித்தா...!!

நிழலி,
இந்தகேள்விகளை நீங்கள் கேட்கவேண்டிய இடம் நானில்லை. நான் எழுதியது ஒரு பதில், ஒரு கருத்திற்கு.

எய்தவன் இருக்க அம்பை நொய்வான் ஏனோ !


அப்ப சரி....

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


#24 பெருமாள்

பெருமாள்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 494 posts
  • Gender:Male

Posted 21 February 2012 - 02:51 PM

Posted Image

Wall Photos
புத்தக வெளியீடு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்

ஆரம்பகால விடுதலைப் புலி உறுப...்பினரான ஐயர் (கணேசன்) அவர்களின் ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த மிக முக்கிய பதிவுகளை இந் நூல் தாங்கியுள்ளது.Trc Thedakam

கட்டாயம் நானும் வருவன் புத்தக வெளியீட்டுக்கு அப்பத்தான் நாலு எழுத்து படிச்சது என்று மற்றவையள் நம்புவினம் தின்ற சோறும் செமிக்கவேனும் எல்லே.
உன்மையாகவே நானும் அந்த புத்தகத்தை வேன்டி கமக்கட்டுக்குள் வைத்து ஆவணப்படுத்துவன் ஏனென்றால் அடுத்ததலைமுறைக்கும் தெரியவேனும் நான் ஒரு படித்தகுழப்பவாதி என்று. :icon_mrgreen:
:icon_mrgreen:
:icon_mrgreen:
ஆயுதங்களையும் அறப்போராட்டங்களையும் தாண்டி இன்றையகாலத்தில் அறிவு (Intelligence) தான் நம்மை ஜெயிக்க வைக்கும். ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம். தேடத் தேவையில்லை. கத்தியோடு சேர்த்து புத்தியையும் தீட்டவேண்டிய காலத்திலிருக்கின்றோம்

#25 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 February 2012 - 03:54 PM

இந்த புத்தக வெளியீடு பற்றி சில கேள்விகள் எழுகின்றன:
- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?
- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?



Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#26 கிருபன்

கிருபன்

    வலைப்போக்கன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,929 posts
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்

Posted 21 February 2012 - 06:17 PM

இந்த புத்தக வெளியீடு பற்றி சில கேள்விகள் எழுகின்றன:
- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?
- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?




புத்தக வெளியீட்டை நிறுத்தமுடியாத இயலாமை தொக்கி நிற்கின்றது!

கேள்விகளுக்கு விடை கிடைத்தால் தெளிவு பிறக்கும்தான். ஐயரின் தொடர் யாழிலும் இருக்கு. அதைப் படிக்காமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது முன்கூட்டியே ஐயர் எழுதியது குழப்பத்தை விளைவிக்கத்தான் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் உங்களிடம் எழுகின்றது. நீங்களாகவே படித்து உங்கள் கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்ளுங்கள். அது நேரவிரயம் எனின் இப்படிக் கேள்விகள் எழுப்புவதும் நேரவிடயம்தான்.
  • நிழலி likes this

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.


#27 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 February 2012 - 06:32 PM

புத்தக வெளியீட்டை நிறுத்தமுடியாத இயலாமை தொக்கி நிற்கின்றது!

கேள்விகளுக்கு விடை கிடைத்தால் தெளிவு பிறக்கும்தான். ஐயரின் தொடர் யாழிலும் இருக்கு. அதைப் படிக்காமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருப்பது முன்கூட்டியே ஐயர் எழுதியது குழப்பத்தை விளைவிக்கத்தான் என்ற அனுமானத்தின் அடிப்படையில்தான் உங்களிடம் எழுகின்றது. நீங்களாகவே படித்து உங்கள் கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்ளுங்கள். அது நேரவிரயம் எனின் இப்படிக் கேள்விகள் எழுப்புவதும் நேரவிடயம்தான்.


கேள்விகள் கேட்பது தெளிவுக்குத்தானே.
வாசித்த உங்களுக்கு தெளிவு இருந்தால் பதில் தரலாமே.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#28 கிருபன்

கிருபன்

    வலைப்போக்கன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,929 posts
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்

Posted 21 February 2012 - 07:17 PM

கேள்விகள் கேட்பது தெளிவுக்குத்தானே.
வாசித்த உங்களுக்கு தெளிவு இருந்தால் பதில் தரலாமே.

தெளிவு இருப்பதால்தான் ஐயரின் புத்தகத்தை ஆவணமாகக் கருதுகின்றேன் என்று எழுதியிருந்தேன். மற்றையவர்களின் கருத்துக்கள் மூலம் மட்டும் ஒரு புத்தகத்தில் என்ன இருக்கின்றது என்று அறிய முற்படுவது புத்தக விமர்சனங்களை மட்டும் படித்து புத்தகத்தைப் படித்ததாக கருதிக்கொள்வதற்கு ஒப்பானது.

எதையும் ஆழமாக வாசித்தால் சரியான தெளிவு உங்களுக்கும் வரும். படிப்பதற்கு முயற்சி எடுக்காமலே சந்தேகங்களை வைப்பதும் ஒரு வகையில் குழப்பகரமான நடவடிக்கைதான். இப்படியான செய்கைகள் மூலம் தமிழர்களை தமது விடுதலையை நோக்கி நகர்த்த முற்படுவதை வடகொரிய "ஜனநாயகத்துடன்"தான் ஒப்பிடத்தோன்றுகின்றது!
  • Thumpalayan and நிழலி like this

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.


#29 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 February 2012 - 07:47 PM

தெளிவு இருப்பதால்தான் ஐயரின் புத்தகத்தை ஆவணமாகக் கருதுகின்றேன் என்று எழுதியிருந்தேன். மற்றையவர்களின் கருத்துக்கள் மூலம் மட்டும் ஒரு புத்தகத்தில் என்ன இருக்கின்றது என்று அறிய முற்படுவது புத்தக விமர்சனங்களை மட்டும் படித்து புத்தகத்தைப் படித்ததாக கருதிக்கொள்வதற்கு ஒப்பானது.

எதையும் ஆழமாக வாசித்தால் சரியான தெளிவு உங்களுக்கும் வரும். படிப்பதற்கு முயற்சி எடுக்காமலே சந்தேகங்களை வைப்பதும் ஒரு வகையில் குழப்பகரமான நடவடிக்கைதான். இப்படியான செய்கைகள் மூலம் தமிழர்களை தமது விடுதலையை நோக்கி நகர்த்த முற்படுவதை வடகொரிய "ஜனநாயகத்துடன்"தான் ஒப்பிடத்தோன்றுகின்றது!


- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?
- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#30 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,952 posts
  • Gender:Male

Posted 21 February 2012 - 08:04 PM

கனடாவில் வெளியீடு நடைபெறுவதால்

நல்ல வரவேற்புக் கிடைக்கும்.

அத்துடன் ஆயிரக்கணக்கில் பிரதிகளும் விற்பனையாகலாம்.

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#31 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,030 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 21 February 2012 - 08:18 PM

<p>

யாழில் ஒரு 10 ஆயிரம் பேர் வாசித்து இருப்பார்களா?
ஆனால் லண்டனிலும் கனடாவிலும் யாழுக்கு வராதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

நீங்கள் தப்பாக விளங்கிட்டீங்கள் நான் சொல்ல வந்தது என்னவென்டால் ஏற்கனவே இணையத்தில் வந்து யாழில் உள்ள சிலர் அதை வடிவாய் வாசித்து விட்டார்கள் ஆவணப்படுத்த வேண்டிய தேவை இருந்தால் இணையத்தில் வந்ததையே ஆவணப்படுத்தலாமே ஏன் நூலக வேண்ட வேண்டும் என்பது தான் என் கேள்வி...இதே வேளை நுணாவிலான் சொன்ன மாதிரி மேலதிக சேர்க்கை நூலில் இருக்குமோ தெரியாது.

<p>

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?
- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

அகூதா எத்தனை பேர் புத்தகம் எழுதுகிறார்கள்,வெளியிடுகிறார்கள் சயந்தன் கூட அண்மையில் தனது நூலை வெளியிட்டு இருந்தார்...எல்லோரும் மக்களது நலனை நோக்கமாக வைத்தாக புத்தகம் எழுதுகிறார்கள் இல்லைத் தானே...உங்களுக்கு வாசிக்க விருப்பம் என்டால் வேண்டி வாசித்து விட்டு கருத்தை எழுதுங்கள் குறைந்த பட்ச‌ம் இணையத்தில் வந்ததை முழுமையாக வாசித்து விட்டு கருத்தை எழுதலாம்...என்னைப் பொறுத்த வரை அவர் புலியைப் பற்றியோ,தலைவரைப் பற்றியோ தப்பாக எழுதவில்லை,எழுதவும் மாட்டார் என நினைக்கிறேன்...நீங்கள் அவருடைய புத்தகம் வெளி வந்தால் ஏதோ புலிக்கு அவமானம் வந்து விடும் என நினைப்பதே உங்களுக்கு கிடைத்த தோல்வியும்,அவருக்கு கிடைத்த வெற்றியுமாகும்...முடிந்தால் அந்த நூலை வேண்டி வாசியுங்கள் இல்லா விட்டால் அதை தூக்கி பிடிக்காதீர்கள்.
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#32 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 February 2012 - 08:56 PM

அகூதா எத்தனை பேர் புத்தகம் எழுதுகிறார்கள்,வெளியிடுகிறார்கள் சயந்தன் கூட அண்மையில் தனது நூலை வெளியிட்டு இருந்தார்...எல்லோரும் மக்களது நலனை நோக்கமாக வைத்தாக புத்தகம் எழுதுகிறார்கள் இல்லைத் தானே...உங்களுக்கு வாசிக்க விருப்பம் என்டால் வேண்டி வாசித்து விட்டு கருத்தை எழுதுங்கள் குறைந்த பட்ச‌ம் இணையத்தில் வந்ததை முழுமையாக வாசித்து விட்டு கருத்தை எழுதலாம்...என்னைப் பொறுத்த வரை அவர் புலியைப் பற்றியோ,தலைவரைப் பற்றியோ தப்பாக எழுதவில்லை,எழுதவும் மாட்டார் என நினைக்கிறேன்...நீங்கள் அவருடைய புத்தகம் வெளி வந்தால் ஏதோ புலிக்கு அவமானம் வந்து விடும் என நினைப்பதே உங்களுக்கு கிடைத்த தோல்வியும்,அவருக்கு கிடைத்த வெற்றியுமாகும்...முடிந்தால் அந்த நூலை வேண்டி வாசியுங்கள் இல்லா விட்டால் அதை தூக்கி பிடிக்காதீர்கள்.


புத்தகம் யாரும் எழுதுவதோ இல்லை வெளியிடுவதோ அவரவர் உரிமை. நான் கேட்டது என்னவென்றால் இதனால் சமூகத்திற்கு என்ன நன்மை என்று ஒரு பொதுவான கேள்வி (அதற்கு இன்னும் பதில் இல்லை). அதை விடுத்து நான் அவர் அதில் என்ன எழுதுகின்றார்? இல்லை யாரை எவ்வாறு விமர்சிக்கின்றார்? என கேட்கவில்லை, அதற்கு எனக்கு உரிமையும் இல்லை என எண்ணுகிறேன்.

Edited by akootha, 21 February 2012 - 08:57 PM.

  • பெருமாள் likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#33 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,952 posts
  • Gender:Male

Posted 21 February 2012 - 09:05 PM

ஈழப் போராட்ட வரலாற்றில் இவ்வளவு நாளும் நடந்தவை யாதென
அறிந்து அதனை விமர்சித்து அலசி ஆராய்ந்து அடுத்த போராட்ட கட்டத்திற்கு
அதைப் படிப்பினையாக எடுத்தக் கொண்டு இன்னுமொரு போராட்டத்தை ஆரம்பிக்கலாம்
என்ற தொனியில் யாரோ எங்கோ கேட்ட மாதிரி ஒரு ஞாபகம்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#34 சித்தன்

சித்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,264 posts
  • Gender:Male
  • Location:சித்தன்போக்கு சிவன்போக்கு.
  • Interests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.

Posted 21 February 2012 - 09:22 PM

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?
- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?


கடைசி வரையும் பதில் வராது, ஏனெனில் விடை 0 (பூச்சியமாக) இருக்கும் போது எப்படி பதில் வரும். விடையும் 0(பூச்சிசமாகத்தான்) இருக்கும்.
ஏழு குறுக்கு....... இரண்டு நெடுக்கு....... நாலுபேரு தூக்கும் வாகனம்........ அதில் நீயும் ஒருநாள் போகனும்........ நானும் ஒருநாள் போகனும்.
-சித்தன்-

#35 அலைமகள்

அலைமகள்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,836 posts
  • Gender:Female
  • Location:North America

Posted 21 February 2012 - 10:22 PM

நீங்கள் எல்லாம் சண்டை போடுகின்றீர்கள். யார் இந்த ஐயர்???? ஆரம்ப கால உறுப்பினர் என்றால் இறுதி வரை புலிகளோடு இருக்காதவரா?? யாராவது தெரிந்தவர்கள் எழுதுங்கோ!

"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"

 

 


#36 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,680 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 21 February 2012 - 10:40 PM

அதுசரி எல்லாம் கிடக்கட்டும் ஒரு புத்தகத்தின்ரை விலை என்னவாம்?
புத்தகம் அச்சடிச்சு வெளியிடுறவைன்ரை நோக்கம் என்னவாம்?சமூக சிந்தனையோ இல்லாட்டி அதுதானோ????????

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#37 சித்தன்

சித்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,264 posts
  • Gender:Male
  • Location:சித்தன்போக்கு சிவன்போக்கு.
  • Interests:பித்து பிடித்த சித்தம் தெளிய கதைப்பது.

Posted 21 February 2012 - 10:44 PM

அதுசரி எல்லாம் கிடக்கட்டும் ஒரு புத்தகத்தின்ரை விலை என்னவாம்?
புத்தகம் அச்சடிச்சு வெளியிடுறவைன்ரை நோக்கம் என்னவாம்?சமூக சிந்தனையோ இல்லாட்டி அதுதானோ????????


சமூக சித்தனை அல்ல புலம்பெயர் தமிழரில் சுமூகமற்ற நிலையேற்றபடவேண்டும் என்ற, சிந்தனைதான்
ஏழு குறுக்கு....... இரண்டு நெடுக்கு....... நாலுபேரு தூக்கும் வாகனம்........ அதில் நீயும் ஒருநாள் போகனும்........ நானும் ஒருநாள் போகனும்.
-சித்தன்-

#38 கிருபன்

கிருபன்

    வலைப்போக்கன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,929 posts
  • Gender:Male
  • Location:முடிவிலி வளையம்
  • Interests:போஜனம், சயனம்

Posted 21 February 2012 - 11:08 PM

விடைகள் மிகவும் இலகுவானவை. சரியா/பிழையா என்பதை ஊகத்தின் அடிப்படையில் நீங்கள் சொல்ல வெளிக்கிட்டால் உங்களின் நம்பகத்தன்மைதான் பாதிக்கும் அகூதா!

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?

ஒரு ஆயுதப் போராட்டம் விடுதலையை நோக்கி ஆரம்பித்து தோல்வியில் முடிந்துவிட்டது. அதன் ஆரம்ப வரலாறுகளை தமிழர்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும், போராட்டத்தின் உந்துசக்தியாகத் திகழ்ந்தவர்கள் எத்தகைய மனவோட்டங்களை அந்தக் காலத்தில் கொண்டிருந்தார்கள், முரண்பாடுகளை எவ்வாறு கையாண்டார்கள் என்பதையெல்லாம் அறிந்தால் தற்போதைய அரசியல் பிளவுகளின், கொள்கைப் பிளவுகளின் அடிப்படையை விளங்கிக் கொள்ளமுடியும். எனவே ஆயுதப் போராட்டம் அஸ்தமித்த இந்தக் காலகட்டத்தில்தான் வரலாறுகளை ஆவணப்படுத்தவேண்டும்.

வேலியைத் தாண்ட முடியாவிட்டாலும் வேலியைத் தாண்டக் கூடிய இளைய சமூகத்தை தோளில் ஏற்றி வேலிக்கு மறுபக்கம் கொண்டு சேர்க்க வரலாற்றில் இருந்து படிக்க எத்தனையோ விடயங்கள் உள்ளன. அதாவது சில்லுகளை மீண்டும் மீண்டும் கண்டுபிடிப்பதைத் தவிர்க்கவேண்டும். இத்தகைய நோக்கங்கள் இருப்பதாக நான் எண்ணுகின்றேன்.

- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

ஆம். அடிப்படையான விடயங்கள் மேலே தரப்பட்டுள்ளது.

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

தமிழர்களைத்தான். அதில் புலம் பெயர்ந்தவர்கள், தாயகத் தமிழர்கள் என்று பிரிக்கவேண்டிய அவசியமில்லை. எனினும் புத்தகம் தாயகத்தில் பரவலாகக் கிடைக்குமா தெரியவில்லை.

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?

இல்லை. விளக்கம் தேவையில்லை என்று நினைக்கின்றேன்.


நான் ஐயரின் உத்தியோகபூர்வமான அல்லது உத்தியோகப் பற்றற்ற குரல்தரவல்ல அதிகாரி இல்லை!
  • சுபேஸ் likes this

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.


#39 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 21 February 2012 - 11:12 PM

விடைகள் மிகவும் இலகுவானவை. சரியா/பிழையா என்பதை ஊகத்தின் அடிப்படையில் நீங்கள் சொல்ல வெளிக்கிட்டால் உங்களின் நம்பகத்தன்மைதான் பாதிக்கும் அகூதா!


மீண்டும் சொல்லுகின்றேன் கேள்விகள் கேட்கும் உரிமையை தடுக்காதீர்கள், மற்றும் கேள்வியை உங்களுக்கே ஏற்றமாதிரி திசை திருப்பி பதில் எழுதாதீர்கள்.
  • பெருமாள் likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#40 I.V.Sasi

I.V.Sasi

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,874 posts
  • Gender:Male
  • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.

Posted 21 February 2012 - 11:21 PM

- ஏன் இந்தக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு புத்தகம் வெளியிடப்படுகின்றது?
- இந்த புத்தக வெளியீட்டு மூலம் எமது தாயக மக்களின் வாழ்வியலில் முன்னேற்றம் காணமுடியுமா?

- யாரை நோக்கி இந்தப்புத்தகம் எழுதப்படுகின்றது? புலம்பெயர் சமூகத்தை இலக்கு வைத்தா?

- இந்தப்புத்தகம் மூலம் மேலும் பிளவுகளை புலம்பெயர் சமூகத்தில் உருவாக்கலாமா?



ஜயர் ஏன் புத்தகம் எழுதக் கூடாது?

போராட்டத்தின் ஆரம்பத்தில் எப்படி செய்ற்பட்டார்கள் சேர்ந்து தொடங்கியவர்கள் ஏன் பிரிந்தார்கள் எனபவற்றை தெரிந்துகொள்ள ஆர்வமுள்ளோருக்காக.

இந்த புத்தகத்தால் ஒரு பிரிவும் வரபோவதில்லை அந்த புத்தகத்தால் தமிழ்மக்கலை பிரிக்க முடியாது ஆனால் புலிகளின் மாவீரர்நாளையே பிரித்து செய்தவர்களை கேக்க வேண்டிய கேள்வி...


சரி இப்ப எழுதக்கூடாது என்றால் எப்ப தான் எழுதவேண்டும்?

ஜயர் இப்ப எழுதினால் தானே ஜயரின் வயதில் இருப்பவர்கள் அந்தே நேரத்தில் என்ன நடந்தது என்று உண்மையை கூறலாம் அல்லது ஜயரின் தகவல்கள் தவறானது என்று மறுக்கவாது முடியும்.

இன்னும் 30 40 வருடத்துக்கு பின் 80 ஆண்டுக்கு முன் நடந்த போராட்டங்களின் குழறுபடிகள் யாருக்கும் தெரியாது சொல்லவும் ஆள் ஈல்லை அதை மறுகவோ அல்லது உண்மையான தகவல் தான் என்று ஆமோதிப்பதுக்கு சமந்தப்பட்டவர்கள் இருக்க மாட்டார்கள்.
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]