Jump to content

வெள்ளைக் கடற்கரையில்...


Recommended Posts

வெள்ளைக் கடற்கரையில்...

வெள்ளைப் புற்றடி விநாயகரை

வணங்கியே நாம் செல்ல

மண்கும்பான் கும்பி மணல்

மலையழகு காட்டும்.

மணலிடையே பனைமரங்கள்

நுங்குதாங்கி நிற்கும்

இதைப் பாhத்து நடக்கையிலே

சோமர் கிணறு தெரியும்

சுகமான குளிப்பென்று - அது

எம்மை அழைக்கும்.

தெங்குகள் இடையினிலே

பள்ளிவாசல் மிளிரும்

தெவிட்டாத நீர் இங்கேயென

சாட்டி வழி சொல்லும்.

மாதாவின் திருத்தலத்தின்

மணி ஓசை கேட்கும்;

மனத்திலே அதன் ஒலி

அருள் நினைவு சுரக்கும்

மேல் வானில் செங்கதிர்கள்

அழகுக் கோலம் தெளிக்கும்

அதன் கீழே பறவை இனம்

வரிக் கோலம் போடும்.

கீழ்வானம் தேடியெங்கும்

படகுகள் பாய் இழுக்கும்

அதைப் பாhர்த்துச் சிறையாக்கள்

பாய்ந் தழகு கொடுக்கும்

இதைப் பார்த்து நிற்கையிலே

கடல் அலைகள் அழைக்கும்

இருந்து பார் என்றெம்மை

வெள்ளை மணல் பாய் விரிக்கும்.

நிலம் மீது கடல் வந்து

அலை கொண்டு மோதும்

அலை போன பின்னாலே

நண்டு படம் கீறும்

இதைப் பார்த்த அலையொன்று

அதை அழித்துப் போகும்

அதனோடு அந் நண்டு

கடலுக்குள் செல்லும்.

இவை கண்டு என்னவளும் -தன்

கால் நனைத்து மகிழ்ந்தாள்.

அதன் பின் அவள்...

கரைமேலே குழி ஒன்று தோண்டி

கரத்தாலே நீர் கொஞ்சம் மொண்டு - என்

வாயுள்ளே அதைமெல்ல விட்டு

புள்ளிமான்போல துள்ளி அவள் நகர்ந்தாள்.

சுவையான நீர் என்று கூறி நானும்

மெதுவாக என் பக்கம் இழுத்தேன்.

கொடிபோலே என் கையில் துவண்டு

பூப்போலே மென்மண்மீது வீழ்ந்தாள்.

மயிலோடு நானும் விழ்ந்தேன்

மதிமுகம் பொத்தியே மடிமீது சாய்ந்தாள்.

இதைப் பார்த்த இரவியனும் வெட்கத்தால்

இறங்கினான் முகம் சிவக்க மேற்கினிலே.

இதைக் கண்ட முள்ளிப்பூ ஒன்று – அவள்

இடையினிலே குத்தியதால் எழுந்து

கடல் உள்ளே மெதுவாக இறங்க - நானும்

கைநீட்டி அவள் பின்னே சென்N;றன்.

என் வருகை கண்டு அவளோ

இறங்கினாள் ஆழ்கடல்pன் னுள்ளே

அலையிடை அவள் கண்கள் ஒளிக்க

இரு கயல்கள் நீந்துவதாய் நினைத்தேன்.

ஆவலாய் அங்கு நானும் போக

கோபமாய் அலை ஒன்று வந்து

வேகமாய் நீரினுள்ளே தள்ள

பாவமாய் என் கையைப் பிடித்தாள்.

கருநாகம் சுற்றியதுபோல் கூந்தல்

என் கையெல்லாம் சுற்றியதால் பயந்தேன்.

அலைமேலே முத்துக்கள்போலே

பல்வரிசை அழகுகாட்டச் சிரித்தாள்.

இதமான குளிரொன்று வரவே

இறங்கினோம் இருவரும் கரையே.

பௌர்ணமி நிலா முகம் காட்ட

பசியுடன் கரையைச் சேர்ந்தோம்.

அந்தியேட்டி மடத்தி னுள்ளே

ஆடையை மாற்றிய பின்னே

மடுவார்கேணி தாண்டி மயானக்கரை இறங்கி;

ஐயனாரை வணங்கி அமைதியாகச் சென்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலாய் அங்கு நானும் போக

கோபமாய் அலை ஒன்று வந்து

வேகமாய் நீரினுள்ளே தள்ள

பாவமாய் என் கையைப் பிடித்தாள்.

கருநாகம் சுற்றியதுபோல் கூந்தல்

என் கையெல்லாம் சுற்றியதால் பயந்தேன்.

அலைமேலே முத்துக்கள்போலே

பல்வரிசை அழகுகாட்டச் சிரித்தாள்.

நல்ல ஒரு கவிதைக்கு நன்றிகள், செண்பகன்!

சாட்டியின் நினைவுகளை மீண்டும் கண் முன்பு கொண்டு வந்ததுக்கு நன்றிகள்! >

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூச்சு விடாமல் எழுதியிருக்கிறிர்கள்...நானும் மூச்சுவிடாமல் படித்து முடித்தேன்...நீங்கள் நடந்துபோன அந்த வெள்ளை மணல்க் கடற்க்கரையில் நடந்தது போலிருக்கு...என்ன துணைக்குத்தான் யாருமில்லை...தனிய நடந்தேன்... :D

Link to comment
Share on other sites

கருத்துரை வழங்கிய புங்கையூரான், நிகேக, சுபேஸ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

செம்பகன்...! இப்பதான் பார்த்தேன்! அருமையான கவிதை.

தங்களின் கவி வரிகளில் என் மனமும் நனைந்தது அந்த கடலலைகளில். :)

வார்த்தைக் கோர்ப்பும் அதனாலான சப்த ரிதமும் நன்றாகவே அமைந்திருக்கின்றது.

பாராட்டுக்கள்! :)4

Link to comment
Share on other sites

அழகான கவிதை செண்பகன்!!!

"இதைப் பார்த்த இரவியனும் வெட்கத்தால்

இறங்கினான் முகம் சிவக்க மேற்கினிலே."

அருமையான வரிகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தாயக மண் மணம் வீசும் கவிதை .....

.என் வருகை கண்டு அவளோ

இறங்கினாள் ஆழ்கடல்pன் னுள்ளே

அலையிடை அவள் கண்கள் ஒளிக்க

இரு கயல்கள் நீந்துவதாய் நினைத்தேன்........

கண்கள் ஒளிர ...கயல்கள் நீந்த

கவிஞ்சன் தோற்றான் போங்கள் :D ...........பாராட்டுக்கள் .

.

Link to comment
Share on other sites

கவிதை வரிகளை பாராட்டிய கவிதை, அறிவன், நிலாமதி அக்கா, சாத்திரி ஆகியோருக்கு மகிழ்ச்சியுடன் நன்றிகள்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக் கடற்கரை நினைவுகளை மீண்டும் மீட்டியதற்கு நன்றி.வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்கள் பணி!!!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா ஊர் வாச‌னை தூக்குது...பாராட்டுக்கள்...தொட‌ர்ந்தும் எழுதுங்கள்

Link to comment
Share on other sites

ஊரை வர்ணித்த விதம், கூடவே பெண்ணை வர்ணித்த விதம் மிக அருமை. உண்மையில் மூச்சு விடாமல் தான் படிக்கமுடிந்தாலும் மிக நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் . தொடருங்கள்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கவிதை வரிகள் செம்பகன்.

வெள்ளைக்கடற்கரை சில கிலோ மீட்டர் தூரமே... இருந்தும், சில வருடங்களுக்கு முன்... ஒருமுறையே அங்கு குளிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை அந்தக் கடற்கரைக்கு நான் செல்லவில்லை.

செம்பகனின் கவிதை அங்கே கூட்டிச் சென்றுவிட்டது.

அழகான ஆழமான கடலைப் போல உங்கள் கவிதையும் இருக்கின்றது

வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

வெள்ளைக் கடற்கரைக்கு வந்து கால் நனைத்துச் சென்றவர்களுக்கும் கருத்தெழுதியவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். வெள்ளைக் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு மைலுக்கு அப்பால் சில கற்பாறைகள் உண்டு. இதற்கு சட்டிவைத்தபார் எனப் பெயர். குளிக்கும்போது இப்பகுதிக்கு நண்பர்களுடன் நீந்திச் சென்றதுண்டு, அங்கே அழகான முருகைக் கற்கள் பல வர்ணங்களில் காட்சி அளிக்கும். சென்றால் பார்க்க முயற்சி செய்யுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை வாசிக்க முன்னர் மற்றவர்கள் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. என்னடா மூச்சுவிடாமல் வாசித்தோம் என இருவர் எழுதியிருக்கின்றனரே என எண்ணியபடி கவிதையை வாசிக்கத்தொடங்கினால் மூச்சு முட்டித்தான் போய்விட்டது. நல்ல கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை வாசிக்க முன்னர் மற்றவர்கள் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. என்னடா மூச்சுவிடாமல் வாசித்தோம் என இருவர் எழுதியிருக்கின்றனரே என எண்ணியபடி கவிதையை வாசிக்கத்தொடங்கினால் மூச்சு முட்டித்தான் போய்விட்டது. நல்ல கவிதை.

கவிதையை... பற்றி கருத்து சொன்னீர்கள் சகோதரி.

ஒகே...., மற்றவர்களின் கருத்தைப் பற்றி, உங்களின் கருத்தையும்... தெரிவிக்கலாம் தானே... :D

பிற்குறிப்பு: உங்களது பெயர் மிக நீண்டதாக உள்ளது.

சுருக்கமாய்... அழைக்க, ஏதாவது வழி உள்ளதா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சென்பகன் .மீண்டும் சாட்டி கடற்கரையை நினைவுபடுத்தியதற்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.