வெள்ளைக் கடற்கரையில்...
#1
Posted 23 January 2012 - 11:44 PM
வெள்ளைப் புற்றடி விநாயகரை
வணங்கியே நாம் செல்ல
மண்கும்பான் கும்பி மணல்
மலையழகு காட்டும்.
மணலிடையே பனைமரங்கள்
நுங்குதாங்கி நிற்கும்
இதைப் பாhத்து நடக்கையிலே
சோமர் கிணறு தெரியும்
சுகமான குளிப்பென்று - அது
எம்மை அழைக்கும்.
தெங்குகள் இடையினிலே
பள்ளிவாசல் மிளிரும்
தெவிட்டாத நீர் இங்கேயென
சாட்டி வழி சொல்லும்.
மாதாவின் திருத்தலத்தின்
மணி ஓசை கேட்கும்;
மனத்திலே அதன் ஒலி
அருள் நினைவு சுரக்கும்
மேல் வானில் செங்கதிர்கள்
அழகுக் கோலம் தெளிக்கும்
அதன் கீழே பறவை இனம்
வரிக் கோலம் போடும்.
கீழ்வானம் தேடியெங்கும்
படகுகள் பாய் இழுக்கும்
அதைப் பாhர்த்துச் சிறையாக்கள்
பாய்ந் தழகு கொடுக்கும்
இதைப் பார்த்து நிற்கையிலே
கடல் அலைகள் அழைக்கும்
இருந்து பார் என்றெம்மை
வெள்ளை மணல் பாய் விரிக்கும்.
நிலம் மீது கடல் வந்து
அலை கொண்டு மோதும்
அலை போன பின்னாலே
நண்டு படம் கீறும்
இதைப் பார்த்த அலையொன்று
அதை அழித்துப் போகும்
அதனோடு அந் நண்டு
கடலுக்குள் செல்லும்.
இவை கண்டு என்னவளும் -தன்
கால் நனைத்து மகிழ்ந்தாள்.
அதன் பின் அவள்...
கரைமேலே குழி ஒன்று தோண்டி
கரத்தாலே நீர் கொஞ்சம் மொண்டு - என்
வாயுள்ளே அதைமெல்ல விட்டு
புள்ளிமான்போல துள்ளி அவள் நகர்ந்தாள்.
சுவையான நீர் என்று கூறி நானும்
மெதுவாக என் பக்கம் இழுத்தேன்.
கொடிபோலே என் கையில் துவண்டு
பூப்போலே மென்மண்மீது வீழ்ந்தாள்.
மயிலோடு நானும் விழ்ந்தேன்
மதிமுகம் பொத்தியே மடிமீது சாய்ந்தாள்.
இதைப் பார்த்த இரவியனும் வெட்கத்தால்
இறங்கினான் முகம் சிவக்க மேற்கினிலே.
இதைக் கண்ட முள்ளிப்பூ ஒன்று – அவள்
இடையினிலே குத்தியதால் எழுந்து
கடல் உள்ளே மெதுவாக இறங்க - நானும்
கைநீட்டி அவள் பின்னே சென்N;றன்.
என் வருகை கண்டு அவளோ
இறங்கினாள் ஆழ்கடல்pன் னுள்ளே
அலையிடை அவள் கண்கள் ஒளிக்க
இரு கயல்கள் நீந்துவதாய் நினைத்தேன்.
ஆவலாய் அங்கு நானும் போக
கோபமாய் அலை ஒன்று வந்து
வேகமாய் நீரினுள்ளே தள்ள
பாவமாய் என் கையைப் பிடித்தாள்.
கருநாகம் சுற்றியதுபோல் கூந்தல்
என் கையெல்லாம் சுற்றியதால் பயந்தேன்.
அலைமேலே முத்துக்கள்போலே
பல்வரிசை அழகுகாட்டச் சிரித்தாள்.
இதமான குளிரொன்று வரவே
இறங்கினோம் இருவரும் கரையே.
பௌர்ணமி நிலா முகம் காட்ட
பசியுடன் கரையைச் சேர்ந்தோம்.
அந்தியேட்டி மடத்தி னுள்ளே
ஆடையை மாற்றிய பின்னே
மடுவார்கேணி தாண்டி மயானக்கரை இறங்கி;
ஐயனாரை வணங்கி அமைதியாகச் சென்றோம்.
- BLUE BIRD, தமிழ் சிறி, ரதி and 5 others like this

#2
Posted 24 January 2012 - 01:50 AM
கோபமாய் அலை ஒன்று வந்து
வேகமாய் நீரினுள்ளே தள்ள
பாவமாய் என் கையைப் பிடித்தாள்.
கருநாகம் சுற்றியதுபோல் கூந்தல்
என் கையெல்லாம் சுற்றியதால் பயந்தேன்.
அலைமேலே முத்துக்கள்போலே
பல்வரிசை அழகுகாட்டச் சிரித்தாள்.
நல்ல ஒரு கவிதைக்கு நன்றிகள், செண்பகன்!
சாட்டியின் நினைவுகளை மீண்டும் கண் முன்பு கொண்டு வந்ததுக்கு நன்றிகள்! >
- தமிழ் சிறி likes this
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#3
Posted 24 January 2012 - 03:10 AM
தவறல்ல என்பதே தவறு
நினைவுகளுடன்..
நிகே
#4
Posted 25 January 2012 - 03:21 PM
www.theeraanathi.blogspot.com/
#5
Posted 27 January 2012 - 09:42 PM
#6
Posted 27 January 2012 - 09:54 PM
தங்களின் கவி வரிகளில் என் மனமும் நனைந்தது அந்த கடலலைகளில்.
வார்த்தைக் கோர்ப்பும் அதனாலான சப்த ரிதமும் நன்றாகவே அமைந்திருக்கின்றது.
பாராட்டுக்கள்!
Edited by கவிதை, 28 January 2012 - 10:08 PM.
நம் மாற்றங்கள் என்பதனையும்.... மாறும் களங்கள்தான் தீர்மானிக்கின்றன!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
களமாடும் கவிதை... விளையாடும் குழந்தை!
-ஒருவன்-
"கவிதை"
#7
Posted 27 January 2012 - 10:04 PM
"இதைப் பார்த்த இரவியனும் வெட்கத்தால்
இறங்கினான் முகம் சிவக்க மேற்கினிலே."
அருமையான வரிகள்!!
#8
Posted 27 January 2012 - 10:48 PM
.என் வருகை கண்டு அவளோ
இறங்கினாள் ஆழ்கடல்pன் னுள்ளே
அலையிடை அவள் கண்கள் ஒளிக்க
இரு கயல்கள் நீந்துவதாய் நினைத்தேன்........
கண்கள் ஒளிர ...கயல்கள் நீந்த
கவிஞ்சன் தோற்றான் போங்கள்
.
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#9
Posted 28 January 2012 - 11:04 AM
[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b
http://sathirir.blogspot.com
#10
Posted 29 January 2012 - 02:47 PM
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்
- அறிவன் likes this
#11
Posted 29 January 2012 - 04:09 PM
#12
Posted 29 January 2012 - 09:47 PM
#13
Posted 30 January 2012 - 07:52 AM
வாழ்த்துக்கள் . தொடருங்கள்.......
#14
Posted 30 January 2012 - 08:44 AM
Edited by உடையார், 30 January 2012 - 08:45 AM.
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#15
Posted 30 January 2012 - 09:56 AM
வெள்ளைக்கடற்கரை சில கிலோ மீட்டர் தூரமே... இருந்தும், சில வருடங்களுக்கு முன்... ஒருமுறையே அங்கு குளிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டது.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#16
Posted 30 January 2012 - 08:37 PM
செம்பகனின் கவிதை அங்கே கூட்டிச் சென்றுவிட்டது.
அழகான ஆழமான கடலைப் போல உங்கள் கவிதையும் இருக்கின்றது
வாழ்த்துகள்
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#17
Posted 01 February 2012 - 07:05 PM
#18
Posted 07 September 2012 - 04:52 PM
#19
Posted 07 September 2012 - 05:22 PM
கவிதையை வாசிக்க முன்னர் மற்றவர்கள் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. என்னடா மூச்சுவிடாமல் வாசித்தோம் என இருவர் எழுதியிருக்கின்றனரே என எண்ணியபடி கவிதையை வாசிக்கத்தொடங்கினால் மூச்சு முட்டித்தான் போய்விட்டது. நல்ல கவிதை.
கவிதையை... பற்றி கருத்து சொன்னீர்கள் சகோதரி.
ஒகே...., மற்றவர்களின் கருத்தைப் பற்றி, உங்களின் கருத்தையும்... தெரிவிக்கலாம் தானே...
பிற்குறிப்பு: உங்களது பெயர் மிக நீண்டதாக உள்ளது.
சுருக்கமாய்... அழைக்க, ஏதாவது வழி உள்ளதா?
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#20
Posted 07 September 2012 - 05:38 PM














