Jump to content

இரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள்: கவிதை நிழலி


Recommended Posts

இரண்டு ஈர உதடுகள்

என்னை முத்தமிட்டு

நீங்கின

ஒன்றில்

பொத்தி வைத்த காதலும்

வெளிப்படுத்தி வெளிப்படுத்தி

அடங்கா(த)

காமமும் நிறைந்து இருந்தன

இன்னொன்றில்

வெள்ளை நிறத்தில்

அன்பு இருந்தது

"இவன் என் அப்பா"

என கட்டிப் பிடித்து

இறுக்கி சிரிக்கும்

சின்னச்

சிறுக்கியின்

பாசம் இருந்தது

இரண்டு முத்தங்களிலும்

என் வாழ்வு

தொங்கி நின்றது

********

அவர்களை அனுப்பிவிட்டு

வீடு செல்கின்றேன்

வாசல் திறக்கும் போது

சூனியம் அப்பிக் கொள்கின்றது

கட்டிலும், தொட்டிலும்

சோபாவும்,

சட்டியும் முட்டியும்,

முட்டை பொரித்த பின்

எஞ்சிப் போன தாச்சியும்

சிந்தப் பட்ட ஒரு சொட்டு

எண்ணெயும்,

என்னவள் கழட்டிப் போட்ட

பனிச் சப்பாத்தும்

என் மகள் அணிந்து கழட்டிய

'ஸ்கேர்ட்டும்"..

எல்லாமும் அப்படியே

இருக்க

எதுவும் அற்ற சூனியம்

அப்பிக் கொள்கின்றது

எல்லாம் இருந்தும்

எதுவும் அற்ற பெரு வெளியில்

மனம் அலைந்தது

என்னவளது

ஒரு விரலின்

தொடுகைக்காக

ஓராயிரம் யுகங்கள்

தொடுதல் அற்று காத்திருக்கும்

ஒரு

கள்ளிச் செடியாக

மாறலாம் என்று இருந்தது

என் மகளின்

மழலைச் சொல்லுக்காக

மெளனமாகவே இருக்கும்

எட்டாவது ஸ்(சு)வரம் ஆக

மாறலாம் என்று இருந்தது

***************************************

நடு இரவில் விழித்து

Flight Status பார்த்து

மீண்டும் படுக்கின்றேன்

பல யுகங்களாக

நித்திரை கொள்ளாத

கண்களின் சுமை

மனதில் ஏறுகின்றது

கால பைரவன் எப்படித்தான்

கண் தூங்காது

புளிய மரத்தின் உச்சிக் கொம்பில்

தவம் இருக்கின்றானோ

**

தூரத்தே

கொழும்பு ரயில் ஒன்றில்

குருட்டு சிங்கள பிச்சைக் காரன்

பாடியதை

மனம் மீண்டும் கேட்டது

அருகில்

"ஓராயிரம் ஆண்டு

வாழ்ந்த வாழ்வின்

அர்த்தத்தை ஒரு நாள் பிரிவு

தரும் என"

:நிழலி

(ஊருக்கு மனிசி மற்றும் மகளை அனுப்பிய பின் வீட்டை வந்த பின் தோன்றிய ஒரு உணர்ச்சி இது)

சனவரி 04, 2012

Link to comment
Share on other sites

  • Replies 77
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அருமை நிழலி, நன்றி பகிர்வுக்கு, உங்கள் உணர்வை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள், பச்சை இல்லை நாளைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள், நிழலி!

இனிக் கொஞ்ச நாளைக்கு, ஆட்டுக்குடலும் இல்லை! ஈரல் வறையும் இல்லை!

நண்டுக் கறியும் இல்லை!

சோறும் பருப்புக் கறியும் தான்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிமையின் தவிப்பும் ஒருவித இனிமைதான்

இல்லாத போது தெரியும் அருமை

;பக்கத்தில் இருப்பதைக்காட்டிலும் அதிகமானது என்பதும் ஒரு அனுபவமே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா.. நீங்கள் உங்கள் துணைவி மகளைப் பிரிந்து மன உருகிப் பாடிய இக்கவிதையை வரவேற்றுக் கொண்டு.. இதே நிலையில் உங்கள் அப்பா.. அம்மா உங்களைப் பிரிந்து கவிதையே வடிக்காமல்.. உருகி இருந்திருப்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா...???! (ஏனெனில் பலர் தமது தனிமையை உணரும் போதுதான் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.. அந்த வகையில் இதனை முன் வைக்கிறேன். மற்றும்படி வேறு எதுவும் இல்லை..!) :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் கவிதை வரிகளை வாசித்த போது.... பிரிவின் ஏக்கத்தை நன்கு, உணரக்கூடியதாக இருந்தது.

குடும்பத்தில் உள்ள ஒருவர், தற்காலிகமாகப் பிரியும் போது.... ஏற்படும் ஏக்கம் வேதனையானது.

பிற்குறிப்பு: நிழலி இப்போ... சமைக்க பஞ்சிப் படுவார் என்பதால், நிழலியின் வீட்டுக்கு விருந்துக்குச் சென்ற உறவுகள்.. தினமும் ஒரு நேரச் சாப்பாடு செய்து கொடுத்தால் நல்லது. :D:icon_idea:

டிஸ்கி: துணைவி ஊருக்கு போகப் போறா... என்று தெரிந்தவுடன், நிழலி முதலே திட்டமிட்டு... ரொறொன்ரோ யாழ் கள உறவுகளை கூப்பிட்டு விருந்து வைத்திருக்கிறார் போலை... உள்ளது. :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

"உப்பில்லாத போது தான் உப்பின் அருமை தெரியும்" என்பார்கள்.அதுவா நிழலி?.

பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்ஸ்.. :rolleyes:

ஆக மொத்தம் நமக்கு கடுப்பேத்திடிங்கப்பா :lol::icon_idea:

(சாறி பாஸ் பச்சை காலியாகிட்டுது) :)

Link to comment
Share on other sites

பிரிவின் ஏக்கத்தை வெளிப்படுத்திய விதம் நன்று.

"பலர் தமது தனிமையை உணரும் போதுதான் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்வார்கள்"-நெடுக்ஸ்- நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அப்பா.. அம்மா உங்களைப் பிரிந்து கவிதையே வடிக்காமல்.. உருகி இருந்திருப்பதை எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா...???! (..!) :):icon_idea:

இதுக்குள்ளும் இந்த குண்டக்க மண்டக்க கேள்வியா?

அந்தாளே தனிய நொந்து நூலாகக்கிடக்கு

நீங்க வேற

அதற்கு முன்னைய பிரிவுகளையெல்லாம் சேர்த்து அனுபவி என்பதுபோல்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ளும் இந்த குண்டக்க மண்டக்க கேள்வியா?

அந்தாளே தனிய நொந்து நூலாகக்கிடக்கு

நீங்க வேற

அதற்கு முன்னைய பிரிவுகளையெல்லாம் சேர்த்து அனுபவி என்பதுபோல்...

இது என்னோட ஆதங்கமும் கூட. யாழிலும் சரி பலர் துணைவியை.. பிரிஞ்சிட்டு.. பிரிவின் வலின்னு கவிதை.. கட்டுரை.. கதை எல்லாம் எழுதி தங்க பிரிவை துணைவிக்கு சொல்லுறாங்களோ.. இல்லையோ.. அடுத்தவங்களுக்கு வெளிப்படுத்திறாங்க... ஆனா நான் அறிய.. எத்தனையோ பெற்றோர் தாயகத்தில் பிள்ளைகளைப் பிரிந்து கண்ணீரோடு வாழ்வதை கண்டிருக்கிறன். ஏன் வெளிநாட்டில் உள்ள தன் பிள்ளைக்கு கடிதம் போட ஆங்கிலத்தில் விலாசம் எழுத முடியாது..தபால் நிலையத்தில் அந்தரித்து நின்ற தாயைக் கண்டிருக்கிறேன்.. உதவி இருக்கிறேன். அந்த வகையில் தான் பிரிவின் வேதனை சொல்லும் இந்த இடத்தில் அதனையும் முன் வைத்தேனே அன்றி நிழலி அண்ணர் சங்கடப் படனும் என்பதற்காக அல்ல..! :):icon_idea:

இதையும் ஒருக்கா நேரம் கிடைச்சா படியுங்கோ...

மனசுக்குள் என்ன..?!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84659

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி... அழகான கவிதைகள் எப்போது பிறக்கும் என்றால் மிகவும் பிரியத்திற்கு உரியவர்கள் பிரிந்திருக்கும்போதுதான் இனி கொஞ்சநாளைக்கு உங்களிடமிருந்து அதிகமான கவிதைகளை எதிர்பார்க்கலாம் :wub:

நெடுக்கர் கேட்டதில் எதுவும் குண்டக்க மண்டக்கவாக இல்லை

எத்தனை பிள்ளைகளை தாய் தந்தையர் விட்டுப்பிரிந்து எவ்வளவு ஏக்கங்களை மனங்களில் தேக்கி வாழ்கிறார்கள் என்பது அந்த நிலையில் வாழ்கின்ற உறவுகளுக்குத்தான் புரியும். வெளிநாட்டில் எல்லோரையும் கூப்பிட்டு வைத்துவிட்டு இலகுவாக பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த ஏக்கம் தெரியாது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ம்ம்ம்.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள் - பிரிவு

கவிதை அழகு நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய காலங்களில் வரும் கவிதை,கதைகளுக்கு கருத்து எழுத முன்வருவதில்லை..அதுவும் சில,பல வலிகளால் ஏற்பட்ட தாக்கம் தான்...உங்கவிதைக்கு நான் தான் முதல் பச்சை குத்தினேன்...பிரிவு பற்றி எழுதிய கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது...பிரிவின் வலியால் இனி யாழிலும் வெட்டு,கொத்து அதிகரிக்கப் போகிறது.ம்ம்ம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவில் தெரியும் வலி , கவி வரிகளாக........

..கணணியிலுங்கள் திறமைகளை,காட்ட சிறந்த தருணம் அதிக படைப்புக்களை தாருங்கள்

எல்லாம் உள்ளது தான் வாழ்க்கை

(இன்பம் துன்பம் ,பிரிவு சோகம் ,.தனிமை உறவு இணைவு .மகிழ்வு .)

Link to comment
Share on other sites

இது கவிதை .

மனைவி பிள்ளைகள் பிரிவு வெறுமையையும் ஒரு வித பயத்தையும் தரும்.

எமது பெற்றோரை நாம் பிரிந்திருக்கும் போது இப்படியான உணர்வு வரமாட்டாது ,அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம வரும் வெறுமை வராது.

மனைவி வரமட்டும் சோனாவை கட்டிப்பிடித்துக்கொண்டு படுக்கவேண்டியதுதான்.

சோனா -எனது பெரிய புஷ்டி தலையணைக்கு நான் வைத்த பெயர்.

Link to comment
Share on other sites

ஒரு குடும்பஸ்தன் (மகளைப் பிரியும் தகப்பன்/ மனைவியைப் பிரியும் கணவன்) என்ற முறையில் உங்கள் பிரிவு புரிந்து கொள்ளப்படுகிறது நிழலி!

அதே நேரம் தாயை, தங்கையைப் பிரிந்த உங்கள் மகனிடம் அவனது மனநிலையைக் கேட்டீர்களா? (மனைவியும் மகளும் என்று மட்டும் போட்டதால் கேட்கிறேன்) முடிந்தால் அதையும் இங்கே உங்கள் ஆக்கத்தில் தாருங்கள்...

இது கவிதை .

மனைவி பிள்ளைகள் பிரிவு வெறுமையையும் ஒரு வித பயத்தையும் தரும்.

எமது பெற்றோரை நாம் பிரிந்திருக்கும் போது இப்படியான உணர்வு வரமாட்டாது ,அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம வரும் வெறுமை வராது.

மனைவி வரமட்டும் சோனாவை கட்டிப்பிடித்துக்கொண்டு படுக்கவேண்டியதுதான்.

சோனா -எனது பெரிய புஷ்டி தலையணைக்கு நான் வைத்த பெயர்.

அர்ஜுன், நீங்கள் சொல்வது ஒரு வேளை உங்களின் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என நினைக்கிறன். "எமது" என்று பன்மையில் சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!

எனது பெற்றோரை/ உடன் பிறந்தோரைப் பிரிந்து இங்கே வந்த பின்பு எவ்வளவோ வெறுமை, ஏக்கம், கவலை, கோபம், தனிமை என்று அவர்களின் பிரிவின் வலியை நான் உணர்ந்தேன். இன்று வரை பல சந்தர்ப்பங்களில் அந்த உணர்வுகள் வந்து போவதை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பெற்றோரை/ உடன் பிறந்தோரைப் பிரிந்து இங்கே வந்த பின்பு எவ்வளவோ வெறுமை, ஏக்கம், கவலை, கோபம், தனிமை என்று அவர்களின் பிரிவின் வலியை நான் உணர்ந்தேன். இன்று வரை பல சந்தர்ப்பங்களில் அந்த உணர்வுகள் வந்து போவதை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது!!

குட்டியின் இந்தக் கருத்து மிகவும் நிஜமானது.

கணவன்.. துணைவியை.. பிரியலாம்.. குழந்தையைப் பிரியலாம்.. ஆனால் ஒரு குழந்தை தாயை.. தந்தைப் பிரிவது வேதனை கூடியது. இதனை நானும் உணர்ந்திருக்கிறேன். ஏதாவது ஆசையா வாங்கப் போனால் கூட.. அம்மா அப்பா ஞாபகம் வர வாங்குவதை பின்போட்டு விட்டு வந்திருக்கிறேன். பிள்ளைகள் பெற்றோரைப் பிரிவது என்பது மிகவும் சங்கடமான வாழ்க்கையை வெறுமைக்குள் தள்ளக் கூடிய விடயங்களில் ஒன்று..!

துணைவியை பிரிஞ்சா.. தலையணையாவது கிடக்கு.. பெற்றோரைப் பிரிஞ்சா என்ன இருக்குது.. அவர்கள் போல.. பாசம் காட்ட..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிக்கு என் நான்காவது பச்சை..நீங்கள் எழுயது போல் நானும் எழுதிட்டு அளிச்சுட்டன் காரணம் நிழலி அண்ணாவிடம் திட்டு வாங்க வேண்ட வேண்டி வருமோ என்ற பயம் தான்..நிழலி அண்ணாவின் மகனும் ஒரு பாலகன் ஆகவே அவருக்குள்ளும் வெளியே காட்டிக் கொள்ளாத கவலைகள்,ஏங்கங்கள் கண்டிப்பாக இருக்கும்.தாயாரை,தங்கையை தான் பிறந்த பின்பு முதல் தடவையாக தற்காலிகமான பிரிவு ஒன்றை சந்தித்திருப்பார் இல்லையா...அது மட்டுமில்லை நிழலி அண்ணாவின் துணைவியார் பிள்ளைகள் எப்படித் தான் குளப்படி செய்தாலும் அடிப்பதில்லை,பேசுவதில்லை என்ற கருத்தை கூட முன்பு ஒரு திரியில் படித்திருக்கிறேன்..ஆகவே அந்தக் குழந்தையின் மனமும் நிறையவே கனத்துப் போய் இருக்கும்.நிழலி அண்ணா அவரையும் பேசாது,அடிக்காது அனுசரிச்சு போக வேண்டிடும்..உங்களுக்கு உணர்வுகளை கொட்டுவதற்று யாழ்களமவாது இருக்கிறது..சின்னவருக்கு.........??

Link to comment
Share on other sites

உணர்வுகளுக்கு உருவம் இல்லை என்பார்கள். ஆனால், உணர்வுகளுக்கும் வடிவம் கொடுப்பவைதான் கவிதை வரிகள்.

உணர்வுகள் வரிகளாய் வடிவமாகி மீண்டும் உணர்வாகவே வந்து நிற்கும் . உணர்வுகளின் வலிமை என்பது சோகத்திலும் பிரிவிலும்தான் தோல்வியிலும் வெறுமையிலும்தான் மிக அதிகமாக வெளிப்படுகின்றன. அந்த வகையில் இந்தக் கவிதையில் பிரிவின் வலியும் உறவுகளின் வெறுமையினால் உருவாகிய வலியும் அருமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் உணர்வு பூர்வமான கவிதை! :) 0

பி.கு:

ஆனாலும் குட்டியும், யாயினியும் சொன்ன விடயங்கள் கவிதைக்கு அப்பால் என்னை கொண்டுசென்றதனால் அவர்களின் கருத்துக்களை நான் ...... பார்க்கவே இல்லை என நினைத்துக் கொள்கின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்கள் கவிதையில் பிரிவு,ஏக்கம்,பாசம் எல்லாம் தெரிகிறது...நீங்களும் மகனைக் கூட்டிக் கொண்டு மனைவியோட போயிருக்கலாம் என்ன காரணமோ தெரியவில்லை நீங்கள் போகவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் தனிய இருக்கவேண்டி வந்தால் சமைக்கத் தெரிந்திருந்தாலும் சமைக்க மனம் வராது! நித்திரைக்கு மட்டும்தான் வீடு என்றாகிவிடும். நல்லவேளை மகனும் பயணம் போகவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிக் கவிஞன் நிழலியின் கவிதை

நன்றி

தனிமையை அனுபவிக்கும் போது தான்

அதன் கொடுமை தெரியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.