Jump to content


Tamil Star News
Photo

தமிழரின் வாழ்வியல் கருவூலம்


  • Please log in to reply
336 replies to this topic

#321 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 05 December 2012 - 07:24 PM

அஞ்சுவதோ ரும் அறனே ; ஒருவனை
வஞ்சிப்பதோ ஓரும் அவா. 366

ஒருவன் அவாவிற்கு (ஆசைக்கு) அஞ்சி வாழ்வதே அறம் . ஏனெனில் ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது ஆசையே.

என்கருத்து :

 

எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் ஒருத்தன் கட்டுசெட்டாய் இருக்கவேணுமெண்டால் விரலுக்கு ஏத்த வீக்கம் இருக்கவேணும் எண்டு . ஆனால் , உங்கை கவிண்டு கொட்டுண்டவையின்ரை ஹிஸ்ரறியளை எடுத்து பாத்தியள் எண்டால் , அவையள் ஏதோவளியிலை ஒண்டிலை அளவுக்கு அதிகமாய் ஆசை வைச்சிருப்பினம் . அதாலை ஆசையள் இல்லாமல் சீவிக்கிறவனுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது .

 

Desire each soul beguiles;  True virtue dreads its wiles.

 

C’set le désir qui abuse un chacun; fuir le désir est la vertu.

 


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


Advert

#322 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,131 posts
  • Gender:Not Telling

Posted 05 December 2012 - 08:55 PM

ஆசை இல்லாமல் என்ன சீவியம்? ஆசை இருந்தால் தானே தேடல் இருக்கும்.. :rolleyes:

ஜயன் எங்கையோ தவறு விட்டிட்டரோ...! :icon_idea:


பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#323 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 08 December 2012 - 07:15 PM

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும். 367

 

ஒருவன் ஆசையை முற்றும் ஒழித்தால் , அவன் கெடாமல் வாழ்வதற்குரிய நல்வினைகள் தான் விரும்பியவாறே வரும்.

 

என்கருத்து :

 

ஒருத்தன் என்னத்தை விதைக்கிறானோ அதைத்தான் அறுப்பான் . எவன் கண்டதுக்கெல்லாம் ஆசைப்படாமல் தன்ரை சீவியத்தை கொண்டுபோறானோ , அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும் . ஆசையை அடக்காதவன் கடைசியிலை அந்த ஆசையாலையே அடிப்பத்திப் போவான் பாருங்கோ .

 

Who thoroughly rids his life of passion-prompted deed, Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed.

 

A celui qui extirpe ses désirs, le salut vient par la voie qu’il désire.

 


Edited by கோமகன், 08 December 2012 - 07:16 PM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#324 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 09 December 2012 - 08:05 PM

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் ;அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். 368

 

அவா இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை . அவா இருந்தால் துன்பமும் விடாமல் வந்து கொண்டே இருக்கும் .

 

என்கருத்து :

 

சும்மா கிடந்த ராவணன் தேவையில்லாமல் சீதைக்கு மேலை கைவைக்கப்போய் கடைசியில சொந்த நாடும் அவனுக்கு இல்லை . அவனுக்கு பெண் ஆசை இல்லாட்டில் ஒழுங்காய்த்தானே இருந்திருப்பான் . ஆசையை அடக்கினவனுக்கு வாழ்க்கையிலை அரையண்டம் இல்லை . அடக்காதவனுக்கு பொங்கு சனிதான் . ஆளையே முடிச்சு போடும். 

 

Affliction is not known where no desires abide; Where these are, endless rises sorrow's tide.

 

Nulle douleur pour celui qui n’a pas de désir; au contraire, les souffrances s’accmulent sans fin, sur la tête de celui qui a le désir.

 


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#325 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 10 December 2012 - 08:10 PM

இன்பம் இடையறா து ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின். 369

 

துன்பங்களுள் கொடிய ஆசையென்னும் துயரத்தை விட்டொழித்தால் , நிலையான இன்பத்தைப் பெறலாம் .

 

என்கருத்து :

 

சரி ஆசையை விட்டால் இன்பம் கிடைக்கும் எண்டு வைச்சாலும் , ஆசை அல்லது தேடல் தானே மனுசனை அவன்ரை இடத்திலை இருந்து உயத்திக் கொண்டு போகிது ?? ஆசை இல்லாட்டில் அவன் சோம்பேறியா அல்லோ போடுவான் ஐயன் .

 

When dies away desire, that woe of woes

Ev'n here the soul unceasing rapture knows.

 

Celui qui extirpe le désir, qui est la douleur des douleurs,
jouit du bonheur perpétuel, même ici-bas.

 


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#326 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 11 December 2012 - 08:20 PM

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். 370

 

ஒருபோதும் நிரம்பாத இயல்புடைய அவாவைக் கைவிட்டால் , அப்போதே அழிவில்லாத இன்பவாழ்க்கையைப் பெறலாம் .

 

என்கருத்து :

 

ஆசை எண்டிறது ஓட்டைச் சிரட்டையிலை தண்ணி விடுறமாதிரி . அதுக்கு முடிவே இல்லை . இதாலை ஒருத்தன்ரை வாழ்க்கை எப்பவுமே அரையண்டமாய்தான் இருக்கும் . ஆதாலை ஆசையை விட்டால் நெல்ல நிம்மதியான சீவியம் கிடைக்கும் எண்டு ஐயன் சொல்லிறார் .

 

Drive from thy soul desire insatiate; Straight'way is gained the moveless blissful state.

 

Abandonner le désir qui, de sa nature, est insatiable, confère sur le champ, l’état inchangeable (la perfection).


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#327 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 11 December 2012 - 10:12 PM

ஆசை இல்லாமல் என்ன சீவியம்? ஆசை இருந்தால் தானே தேடல் இருக்கும்.. :rolleyes:

ஜயன் எங்கையோ தவறு விட்டிட்டரோ...! :icon_idea:

 

எனக்கும் உந்த கோதாரி விழுந்த யோசினை மண்டையுக்கை அடிக்காமல் இல்லை . ஆனால் இல்லாத விசையங்களுக்கெல்லாம் ஆசைப்படிறது எளிய பழக்கமல்லோ ஜீவா :lol: :D :icon_idea: .


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#328 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 12 December 2012 - 07:16 PM

அறத்துப்பால் ஊழியல் ஊழ் ( ,Fate ,De la destinée )

 

 

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. 371

 

செல்வம் வருவதற்குத் தேவையான விதி வரும்பொழுது, முயற்ச்சி தானாக உண்டாகும் .அது அழிய வேண்டிய நேரம் வருமாயின் சோம்பல் வரும் .

 

எனது கருத்து:

 

ஒருத்தன் எப்பிடித்தான் தலைகீழாய் நிண்டாலும் விதியாலை வாற முயற்சி வந்து காசுபணம் கையுக்கு வந்து சேரும் . இதுக்கு நேர்மாறாய் சோம்பல் வரும் இருக்கிற காசையும் துலைக்கிறதுக்கு .

 

Wealth-giving fate power of unflinching effort brings; From fate that takes away idle remissness springs.

 

La Destinée, productrice de la fortune fait naitre l’effort; la Destinée destructrice de la fortune fait naitre la paresse.


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#329 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 13 December 2012 - 07:12 PM

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை. 372

செல்வம் அழிய வேண்டிய காலம் வந்தால் அறிவாளிக்கும் மதி மயங்கம் ஏற்படும் . செல்வம் வரவேண்டிய காலம் வந்தால் மூடனுக்கும் நல்லுணர்வு ஏற்படும் .

எனது கருத்து:

சிலபேரை பாத்தியள் எண்டால் நல்ல படிச்ச அறிவாளியளாய் இருப்பினம் . ஆனால் காலம் ஆரைத்தான் விட்டுது பாருங்கோ , சிலநேரத்திலை லூசுவேலையளைப் பாத்து தங்கடை சொத்துபத்துகளை அழிச்சுப்போட்டுத்தான் இருப்பினம் . இதே காலம் ஒரு தற்குறிக்கு சொத்துபத்து சேரவேணுமெண்டால் அதுக்கு அவனை தயார்படுத்தும் .

 

The fate that loss ordains makes wise men's wisdom foolishness; The fate that gain bestows with ampler powers will wisdom bless.

 

La Destinée productrice de la fortune enrichit l’intelligence, celle qui est destructive de la fortune affaiblit l’intelligence.

 


Edited by கோமகன், 13 December 2012 - 07:13 PM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#330 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 14 December 2012 - 07:34 PM

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும். 373

 

நுண்பமான பல நூல்களை முயன்று கற்றாலும் ஊழிற்கு ஏற்றவாறு அவனுடைய சொந்த அறிவே மேப்பட்டுத் தோன்றும் .

 

எனது கருத்து:

 

ஊரில பெரிசுகள் சொல்லுவினம் கெடுகுடி மதி சொல்கேளாது எண்டு . ஒருத்தன் என்னதான் படிச்சு பெரிய அறிவாளியா இருந்தாலும் அவன் கெடவேணும் எண்டு விதி இருந்தால் , அவன்ரை படிப்பால வாற அறிவு வளராது . அது அப்பிடியே இருந்து அவனை யோசிக்கவிடால் விழுத்தும்.

 

In subtle learning manifold though versed man be, 'The wisdom, truly his, will gain supremacy.

 

On a beau étudier tout ce qu’il y a d’excellent dans les ouvrages, c’est l’esprit dont on est doué par la Destinée, qui finit par prévaloir.


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#331 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 15 December 2012 - 06:17 PM

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ஆதலும் வேறு. 374

 

ஒருவன் செல்வம் நிறைந்து காணப்படுகின்றான் . மற்றவன் கல்வி நிறைந்து காணப்படுகின்றான் . இவ்விரண்டிற்கும் விதிதான் ( முன்வினை ) காரணம் . இது உலக இயல்பு .

 

எனது கருத்து:

 

சரி ஐயா உலகத்திலை காசு இருக்கிறவனுக்கும் படிப்பு இருக்கிறவனுக்கும் விதிதான் காரணம் எண்டால் , இது இரண்டுமே இல்லாத கூட்டம் ஒண்டு உலகத்திலை இருக்கு . அதுக்கு ஆர் ஐயா காரணம் ?

 

Two fold the fashion of the world: some live in fortune's light;  While other some have souls in wisdom's radiance bright.

 

La nature de la Destinée est double en ce monde: autre chose est d’être riche; autre chose est d’être intelligent.


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#332 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 16 December 2012 - 07:38 PM

நல்லவை எல்லாஅம்தீயவாம் ; தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. 375

 

விதி ஒத்திருந்தால் காலம் அல்லாத காலத்திலும் ஆக்கத்தைப் பெறலாம் . விதி சதி செய்தால் சரியான காலத்திலும் அதைப் பெற முடியாது .

 

எனது கருத்து:

 

சில பேரைப்பாத்தியள் எண்டால் பெரிய பிஸ்னஸ் மைக்கினெற்று எண்டு சொல்லிக்கொண்டு காசு அள்ளிறன் பேர்வளி எண்டு தலைகீழாய் நிண்டு தண்ணி குடிப்பினம் . ஆனால் ஐஞ்ச சதம் எடுக்கமாட்டினம் . அந்த இடத்திலை இவையின்ரை எழுத்து பிழையெண்டால் இப்பிடித்தான் நடக்கும் .

 

All things that good appear will oft have ill success;

All evil things prove good for gain of happiness.

 

Pour donner la richesse, (la Destinée) transforme tout bien en mal et tout mal en bien.


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#333 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 17 December 2012 - 07:31 PM

பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. 376

 

விதி சாதகமாக இல்லையென்றால் காக்கப்பட்ட பொருளும் நழுவிப் போய்விடும் . விதி சாதகமாக இருந்தால் காக்கப்படாத பொருளும் அழியாமல் இருக்கும் .

 

எனது கருத்து:

 

சிலபேரை பாருங்கோ ஆரையும் ஆட்டையைப்பட்டு , மொள்ளமாரி வேலையள் செய்து சேத்த சொத்துப்பத்துகளை , அவை எவ்வளவுதான் தலைகீழாய் நிண்டு காப்பாத்த நினைச்சாலும் அது ஏதோவழியிலை அழிஞ்சு போடும் . ஆனால் அவை உடம்பை வருத்தி இரத்தத்தை புளிஞ்சு சேத்த தேட்டங்களை அவை எங்கை கொண்டே போட்டாலும் அது அழியாது . இதுக்கெல்லாம் விதிதான் காரணமெண்டு ஐயன் சொல்லிறார் .

 

Things not your own will yield no good, howe'er you guard with pain;  Your own, howe'er you scatter them abroad, will yours remain.

 

Ce que tu converses avec le plus de soin s’en va, si la Destinée ne t’en attribue pas la propriété. Ce qui t’est réservé par la Destinée te reste, même s’il est jeté dehors.

 


Edited by கோமகன், 17 December 2012 - 07:32 PM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#334 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 18 December 2012 - 08:25 PM

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377

 

கோடிக்கணக்கான செல்வத்தை ஒருவன் முயன்று சேர்த்து வைத்தாலும் , விதி இருந்தால்தான் அவனால் அதை அனுபவிக்க முடியும் .

 

எனது கருத்து:

 

ஒருத்தன் எவ்வளவுதான் கோடிக்கணக்கான சொத்துப்பத்துக்களை வைச்சிருந்தாலும் , அதை அவன் ஆண்டுஅனுபவிக்கக் குடுத்துவைச்சிருக்கவேணும் கண்டியளோ . இதுக்கு நல்ல உதாரணம் சதாமும் கொலனல் கடாபியும் . இவையளிட்டை இல்லாத சொத்துபத்தே ? ஆனால் இவைக்கு விதி அமெரிக்காவாலையும் பிரான்சாலையும் வந்திது . இவையளை போட்டுத்தள்ளினாங்கள் . அவனவன் அவையின்ரை தேட்டங்களை ஆட்டையை போட்டதுதான் மிச்சம் .

 

Save as the 'sharer' shares to each in due degree, To those who millions store enjoyment scarce can be.

 

Tu as beau amasser un krore, tu ne peux en jouir, si le Dispensateur ne t’en a pas donné les moyens.

 


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#335 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 19 December 2012 - 08:43 PM

துறப்பார்மன் துப்புரவு இல்லார் உடற்பால
ஊட்டா கழியும் எனின். 378

 

மேலான செல்வம் இருந்தும் தீவினைக்கு உள்ளானவர்கள் இன்பம் பெறாமல் , துறவறத்தை நாடிச்செல்வர் .

 

எனது கருத்து:

 

உண்மையிலை எனக்கு இது விளங்கேலை . விதி ஏழையிளிட்டை மட்டும் தான் தன்ரை வேலையை காட்டுதோ ?? எண்டு அப்ப பணக்காறர் தங்கடை காசாலை விதியை விலைக்கு வாங்கி போட்டினமோ ?? அவைக்கும் ஒண்டாய் தானே வேலை செய்யிது . அவையளிலையும் கன பேர் நடுறோட்டுக்கு வந்திரிக்கினம் . ஏன் கனக்க வேண்டாம் , திருப்புகழை தந்த அருணகிரியர் பணக்காறனாய் இருந்து தானே துறவியானவர் பாருங்கோ .

 

The destitute with ascetics merit share, If fate to visit with predestined ills would spare.

 

La pensée de renoncer naît chez les pauvres, si la Destinée leur épargne leur part des douleurs.


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#336 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 20 December 2012 - 06:47 PM

நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர் ; அன்றுஆங்கால்
அல்லல் படுவதுஎவன். 379

 

நல்வினையால் நன்மை வரும்பொழுது மகிழ்ச்சியடைகின்றவர்கள் , அது இல்லாமல் தீமை வரும் போது மட்டும் ஏன் வீணாக வருந்த வேண்டும் ?

 

எனது கருத்து:

 

இதைத்தான் எங்கடை பெரிசுகள் சொல்லுவினம் " மனம் ஒரு குரங்கு எண்டு " . சந்தோசம் எண்டால் ஒரேயடியா துள்ளிப் பாயிறது . துக்கம் எண்டால் ஒரேயடியா தலியை கவிட்டுக்கொண்டு நிக்கிறது . இது ரெண்டும் இல்லாமல் சமனாய் இருக்கவேணும் எண்டு ஐயன் சொல்லிறார் .

 

When good things come, men view them all as gain;

When evils come, why then should they complain?

 

Pourquoi celui qui trouve bons, les plaisirs conférés par la Destinée,
trouve-t-il insupportables, les douleurs causées par elle.


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#337 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 21 December 2012 - 07:11 PM

ஊழின் பெருவலி யாஉள மற்றுஒன்று
சூழினும் தான்முந் துஉறும். 380

 

விதியைப் போல் வலிவுள்ள ஓரு பொருள் உலகில் வேறு இல்லை . அவ்விதி மனிதனுடைய முயற்சிகளையெல்லாம் அழித்து , தான் ஒன்றே முடிவில் வெல்கிறது .

 

எனது கருத்து:

 

உலகத்திலை கெட்டசாமான் எது எண்டால் அள் ஆளுக்கு ஒவ்வண்டை சொல்லுவியள் . நீங்கள் சொல்லுற கெட்ட சாமானுகளுக்கெல்லாம் ஒரு அப்பன் இருக்கிறான் எண்டு ஐயன் சொல்லிறார் . அவன்தான் விதி . நீங்கள் என்னதான் தலைகீழாய் நிண்டு தண்ணி குடிச்சாலும் , இவனின்ரை ஒத்துளைப்பு இல்லாட்டி ஒண்டுமே செய்யேலாது . உலகத்திலை இருக்கிற எல்லா இயக்கமுமே இந்த விதியின்ரை கொண்றோலிலை தான் கிடக்கு எண்டதை ரெண்டு வரியிலை ஐயன் வலு கிளீனாய் சொல்லியிருக்கிறார் கண்டியளோ .

 

What powers so great as those of Destiny? Man's skill

Some other thing contrives; but fate's beforehand still.

 

Qu’y a-t-il de plus puissant que la Destinée?

Elle devance tout plan médité (pour la vaincre).

 

 


உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]