
யாழ் களத்தில் கள விதிக்கு உட்பட்ட மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தின் கீழ் ஒரு களமாளுமன்றை யாழ் கள உறுப்பினர்களின் மத்தியில் இருந்து கட்சி அடிப்படையில் அமைக்கலாம் என்று தீர்மானிச்சு.. இதனை இங்கு கொண்டு வருகிறேன்.
இப்போ.. இளையோர் பாராளுமன்றம் போல.. இது யாழ் களத்திற்கு. இந்த மன்றம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு பதவிக் காலத்தைக் கொண்டிருக்கும்.
இதில்..
கள நிர்வாகத்திற்கு கீழ் இயங்கும்.. ஆளும் கட்சி சார்ந்த பிரதமர் மற்றும் இரண்டு அமைச்சுக்கள் மட்டுமே அமைய முடியும். எந்தப் பதவியும் சுழற்சி முறைக்கமைய அதே பதவிக் காலத்தில் ஆளும் கட்சியினர் எல்லோருக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.
ஆளும் கட்சி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற.. தனது கட்சியில் இருந்து குறைந்தது 60% ஆதரவையும்.. எதிர்கட்சியிடம் இருந்து குறைந்தது 50% ஆதரவையும் பெற்றாக வேண்டும். இன்றேல் அந்த தீர்மானம் நிறைவேறியதாகக் கொள்ள முடியாது.
இதுபோன்ற பல மறுசீரமைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டுக்கான ஜனநாயகம் என்ற தொனிப்பொருளோடு.. இந்த மன்றத்தை அமைக்கலாம்.
மேலும்.. ஆளும் கட்சிக்கான விதிமுறைகள்.. எதிர்க் கட்சிகளுக்கான விதிமுறைகள்.. களமாளுமன்ற விதிமுறைகள்.. களமாளுமன்ற கலைப்பு.. இவை அனைத்தும் களவிதிக்கு உட்பட்டவை. இந்த விதிமுறைகள் இத்தலைப்பு கள உறுப்பினர்களின் அங்கீகாரம் பெறப்பட்ட பின் தீர்மானிக்கப்படும்.
இது ஒரு சிநேகித பூர்வ முயற்சியே அன்றி.. பகைமை பாராட்டலுக்கானதல்ல..! அந்த வகையில்..
உங்களிடம் இருந்து.. கூடியது 5 கட்சிகளை பிரேரிக்க கேட்பதோடு.. (ஊரில் உள்ள கட்சிகள் போன்றதல்ல. நியாயமான.. மறுசீரமைப்பை வெளிக் கொணரக் கூடிய கட்சிப் பெயர்கள்) அந்தக் கட்சிகளில் அங்கத்துவம் வகிக்க விரும்புவர்கள் தங்களின் பெயர்களை (களப் பெயர் மட்டும்) இணைக்கலாம். அந்தக் கட்சிகளுக்கு உறுப்பினர்களையும் சேரக் கேட்கலாம்.
அதுமட்டுமன்றி இத்திட்டத்தை மேற்கொண்டு செல்ல.. குறைந்தது 10 பச்சைப் புள்ளிகள் இந்தத் தலைப்பிற்கு அவசியம். கள்ள வாக்குகள் செல்லுபடியாகா. கள நிர்வாகம் இதனை சரி பார்த்துச் சொன்னால் நன்று. அதாவது கள்ள வாக்கு போட்டிருக்கா இல்லையா என்று சொன்னால் மட்டும் போதும். கள்ள வாக்குப் போட்டிருந்தால்.. அதன் தொகையை குறிப்பிட்டால்.. அது மொத்த வாக்கில் இருந்து கழித்து நோக்கப்படும்.
இத்திட்டம் முற்றிலும் களவிதிக்கு உட்பட்டது. (எனவே இத்திட்டம் எதிர்பார்ப்பை மீறிச் சென்றால் கள நிர்வாகத்தால் தடை செய்யப்படலாம்). ஜனநாயக பண்புகளையும் எதிரிடை கருத்துக்கள் மத்தியிலும்.. சிநேகித பூர்வ.. கூட்டுச் செயற்பாடுகளுடனான கருத்தொருமிப்பு திட்டம் வகுத்து 21ம் நூற்றாண்டுக்கான மறுசீரமைக்கப்பட்ட ஜனநாயகத்தில் வழியில்.. செயற்படுத்தல்.. என்பதையும் இலக்காகக் கொண்டு இது வரையப்பட்டுள்ளது.
இது சீரியஸுக்கு அல்ல.. சிரிக்க சிந்திக்க செயற்பட என்பதால்.. சிரிக்கவுக்குள் இடுகிறேன்.
இத்திட்டதிற்கு இரண்டு வாரங்களுக்குள் 10 பச்சைப் புள்ளியும்.. 5 கட்சிப் பெயர்களும்.. கட்சிகளுக்கு தலா குறைந்தது.. இருவர் என்ற வகையில் அங்கத்துவமும் இன்றேல்.. இத்திட்டம் முற்றாகக் கைவிடப்படும்.
நன்றி... உங்கள் ஆதரவிற்கு.
Edited by nedukkalapoovan, 17 November 2011 - 11:57 PM.















