அப்ப நாங்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமாச் செய்ய வேண்டுமா?

அப்படியும் எடுத்துக் கொள்ளலாம் வாத்தியார்.
எங்கட யாழ் கள களமாளுமன்ற யாப்பில சொல்லப்பட்ட விடயம் இந்தச் செய்தியிலும் பேசப்பட்டுள்ளது.
இந்த தலைப்பை வைச்சு நாங்க எதைப் பற்றி உலகம் சிந்திக்கனுன்னு விரும்பினமோ.. அதை உலகம் சிந்திக்க ஆரம்பிச்சிருக்குது..!
அமெரிக்க பேச்சளவு ஜனநாயகம் இறந்து கொண்டிருக்கிறது.. அது உழலுக்கும் கிரிமினலிஸத்துக்கும் வழி வகுப்பதோடு.. ஆயுத பல ஆக்கிரமிப்புக்களுக்கும் அவசியமற்ற ஆனால் வள ஆக்கிரமிப்பு நோக்கிய போர்களுக்கும் மனித அழிவுகளுக்கும் வகை செய்கிறது.
வாக்களிக்கும் மக்களை முட்டாளாக்கிக் கொண்டும் இருக்கிறது. இதனை மக்கள் எப்பவோ உணரத்தலைப்பட்டு விட்ட போதிலும்.. அரசியல்வாதிக்க இப்ப தான் இதை உணர வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாங்க.
இது உண்மையான ஜனநாயக மறுசீரமைப்பாக அமையுமா இல்ல மக்களை மாற்றி யோசிக்கச் செய்து ஏமாற்றும் வேலையாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும். எதுஎப்படியோ மக்கள் உலகில் நடைமுறை ஜனநாயகம் மீது நம்பிக்கை இழந்துவிட்டிருக்கிறார்கள் என்பதற்கு இந்திய மூத்த அரசியல்வாதிகளின் இந்தப் பேச்சு நல்ல சான்று..! அதைத் தான் நாங்களும் இந்தத் தலைப்பில் சொல்ல வந்தம் இல்லையா....!
Edited by nedukkalapoovan, 13 August 2012 - 09:29 PM.