Jump to content

தீபாவளி ரேஸில் மோதும் நட்சத்திரங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Si01-300x200.jpg

எதிர்வரும் 26ஆம் திகதி, உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் மக்கள் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இம்முறை தீபாவளித் திருநாளை ஒரு சவால்மிக்க திருநாளகக் கருதி களத்தில் குதிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் எமது சினிமா நட்சத்திரங்கள்.

இம்முறை தீபாவளித் திருநாள் சினிமா ரேஸில் யார் களமிறங்கவுள்ளார்கள் என்று பார்க்கிறிர்களா? வேறு யார்? விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

விஜய்யின் வேலாயுதம், சூர்யாவின் 7-ஆம் அறிவு, தனுசின் மயக்கம் என்ன? மற்றும் சிம்புவின் ஒஸ்தி ஆகிய திரைப்படங்களே இம்முறை தீபாவளி வெளியீடுகளாக திரையிடப்படவுள்ளன. இவற்றுக்கான சினிமாத் திரையரங்குகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.

கடந்த 2007ஆம் ஆண்டு தீபாவளி ரேஸில், இதே போல் விஜய்யின் அழகிய தமிழ் மகன், சூர்யாவின் வேல், தனுசின் பொல்லாதவன் ஆகிய திரைப்படங்கள் மோதிக்கொண்டன. ஆனால், அப்போது இருந்ததை விட இப்போது இந்த மூன்று நடிகர்களின் அந்தஸ்துகளும் உயர்ந்துள்ளன. வியாபாரமும் உலக அளவில் விரிவடைந்துள்ளது. எனவே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Si02.jpg7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ளது. சீனாவில் தற்காப்பு கலையை அறிமுகம் செய்த போதி தர்மர் என்ற தமிழரை பற்றிய கதையே இப்படம்.

வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஹன்சிகா, ஜெனிலியா என இரு ஜோடிகள் கிராமத்தில் பிறந்த சாதாரண இளைஞன் படிப்படியாக உயர்ந்து தலைவனாவதே கதை. ராஜா இயக்கியுள்ளார்.

Si03.jpg

மயக்கம் என்ன படத்தில் தனுஷ் ஜோடி ரிச்சா. செல்வராகவன் இயக்கியுள்ளார். இது அடுத்த தலைமுறை கதை என்று சுருக்கமாக சொல்கிறார் செல்வராகவன். ஏற்கனவே தனுஸுக்காக செல்வராகவன் உருவாக்கிய டாக்டர்ஸ் என்ற படம்தான் இது என்கிறார்கள்.

அடுத்தது, சிம்புவின் ஒஸ்தி. தரணி இயக்கியுள்ள இந்தப் படம், இந்தியில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற தபாங்கின் தழுவல் ஆகும். இவற்றைத் தவிர, மேலும் சில படங்களும் கடைசி நேரத்தில் வெளியாகும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Si04.jpg

Si05.jpg

Si06.jpg

Si07.jpg

Si08.jpg

http://www.eelampres.../2011/10/36976/

Link to comment
Share on other sites

ஏழாம் அறிவு ,, நல்லா இருக்கும்னுதான் நெனைக்கிறேன்..

பார்க்கலாம்,,,, பார்த்துடலாம்... தமிழ் அரசு! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழாம் அறிவு ,, நல்லா இருக்கும்னுதான் நெனைக்கிறேன்..

பார்க்கலாம்,,,, பார்த்துடலாம்... தமிழ் அரசு! :)

அறிவிலி, இருக்கிற ஆறு

அறிவில் ஐந்து

அறிவியை மட்டுமே

அறிவில் பெரியோர் என சொல்லும்

அறிவிலிகள் பயன்படுத்துகிறார்கள், இப்ப 7 ஆம்

அறிவா?

அறிவிலி, படம் 7 ஆம்

அறிவை பார்த்து

அறியத் தாரும் நல்ல படமா என

அறிவுக்கு எட்டிய வரையில் மேலும்

அறிந்த இணைப்புகளையும்

அறிய தரவும் மற்றவார்கள்

அறிய முதல்!!!

Link to comment
Share on other sites

அறிவிலி, இருக்கிற ஆறு

அறிவில் ஐந்து

அறிவியை மட்டுமே

அறிவில் பெரியோர் என சொல்லும்

அறிவிலிகள் பயன்படுத்துகிறார்கள், இப்ப 7 ஆம்

அறிவா?

அறிவிலி, படம் 7 ஆம்

அறிவை பார்த்து

அறியத் தாரும் நல்ல படமா என

அறிவுக்கு எட்டிய வரையில் மேலும்

அறிந்த இணைப்புகளையும்

அறிய தரவும் மற்றவார்கள்

அறிய முதல்!!!

உடையாரண்ணா இவ்ளோ அன்பா என்மேல? or ஓவரா கலாய்க்கிறீங்களா? <_<

எது என்னமோ ஆனாலும்... எல்லாரையும் போலவே ,, இந்த உடையாரண்ணாவை எனக்கும் ரொம்ப பிடிக்கும்!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரண்ணா இவ்ளோ அன்பா என்மேல? or ஓவரா கலாய்க்கிறீங்களா? <_<

எது என்னமோ ஆனாலும்... எல்லாரையும் போலவே ,, இந்த உடையாரண்ணாவை எனக்கும் ரொம்ப பிடிக்கும்!! :)

நன்றி அறிவிலி, பின்ன நீங்க வந்து போனபின் தானே கல கலப்பா இருக்கும் யாழ், உங்களை கலாய்க்க முடியுமா?

ஏழாம் அறிவு நல்ல படமா இருக்கும் என்ற நம்பிகை, நீங்க சொன்ன மாதிரியே எங்கேயும் எப்போதும் நல்லா இருந்திச்சு,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ் சிம்பு மோதல் இல்லை

dhanush-simbu-05-10-11.jpg

விஜயின் வேலாயுதம், சூர்யாவின் ஏழாம் அறிவு மற்றும் ஷாருக்கானின் ரா ஒன் ஆகிய மூன்று படங்கள் மட்டுமே தீபாவளியன்று வெளியிடப்படவுள்ளன. தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி ஆகியபடங்கள் தீபாவளிக்கு ரிலீசாவதில் இருந்து பின்வாங்கியுள்ளது. அதுசரி தமிழ் படங்களை வரிசைப்படுத்தும் போது ஷாருக்கானின் ரா ஒன் படத்தை ஏன் சொல்ல வேண்டும் கேட்கிறீர்களா? வேறு என்ன அதில் ரஜினி நடித்திருப்பதால் தமிழ் நாட்டிலும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பல்வேறு பெரிய படங்கள் போட்டியிட்டாலும் நேருக்கு நேர் மோதல் என்று வர்ணிகப்பட்டது சிம்புவின் ஒஸ்தி மற்றும் தனுஷின் மயக்கம் என்ன படங்கள் தான் ஆனால் இவ்விரண்டு படங்களுமே தியேட்டர் பற்றாக்குறையால் தீபாவளி ரிலீசை தள்ளி வைத்துவிட்டன.

http://www.tamilulakam.com/?p=9269

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த படமும் ஓடப்போவதில்லை ..எல்லா படமும் ஓடும் (தியேட்டரை விட்டு)

டிஸ்கி:

இங்குள்ள நிலமை புதுசா ஏதாவது மலரும் நினைவுகள் மாதிரி ஏதாவது டச் செய்தால் தான் உண்டு..மங்காத்தா பார்க்கும் ரசிகர்கள் அவுக ஆத்தா போன் செய்து தொடர்ந்து பார்க்குமாறு வேண்டினும் இடைவேளையோடு எழுந்து ஓடுகிறார்கள் :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆகா தொடங்கிட்டாங்க ............................
    • டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை! 3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து ரிசாத் பதியுதீன் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுமியை பணிப்பெண்ணாக கொடுத்ததாக கூறப்படும் முதலாம் சந்தேகநபரான பொன்னையா பண்டாரம், இரண்டாவது சந்தேகநபரான ரிஷாத் பதியுதீனின் மாமனார் என கூறப்படும் அலி இப்ராஹிம் கிதார் மொஹமட் மற்றும் மூன்றாவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீனின் மனைவியான கிதார் மொஹமட் ஷிஹாப்தீன் ஆயிஷா அவர்கள் மீது இவ்வாறான வழக்கை தாக்கல் செய்திருந்திருந்தனர். அதன்படி சம்பவம் தொடர்பில் ரிசாத் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை பணிப்பெண்ணாக அமர்த்திய நபர் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடருமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டதுடன், நான்காவது சந்தேகநபர் ரிசாத் பதியுதீன் மற்றும் ஐந்தாவது சந்தேகநபர் பதியுதீன் அப்துல் ரிஷாத் ஆகியோர் விடுதலை செய்தார் இந்த மூவருக்கும் எதிராக கொடுரமான வேலையாட்களை பணியமர்த்துதல், மனித கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி ஜூட் குமார் என்ற சிறுமி, பதியுதீனின் வீட்டிற்கு பணிப்பெண்ணாக வந்திருந்த நிலையில், உடலில் தீப்பற்றியதால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு மரணம் நிகழ்ந்துள்ளது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது சிறுமிக்கு 15 வயது என்பதுடன் சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். மேலும் அந்த வீட்டில் பணிப்பெண்ணாக பல வருடங்கள் பணியாற்றிய நிலையில், 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி அவரது உடலில் தீப்பிடித்ததாகவும், பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1382881
    • யாழில் நாய் இறைச்சி கொத்து. யாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாட்டிறைச்சி கொத்து வாங்கிய நபர் ஒருவருக்கு கொத்து ரொட்டியில் பழுதடைந்த இறைச்சி துண்டு காணப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த இறைச்சி துண்டு , மாட்டிறைச்சி போல் அல்லாது வேறு இறைச்சி போன்று காணப்பட்டதால் , அது குறித்து உணவகத்தில் இருந்தவாறே அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு குறித்த நபர் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார். இருந்த போதிலும் , பொது சுகாதார பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வராத காரணத்தால் , பழுதடைந்த இறைச்சி கொத்தினை புகைப்படம் எடுத்தும் , , கொத்து ரொட்டிக்கான விற்பனை சீட்டையும் பெற்றுக்கொண்டவர் , அது தொடர்பில் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் குழு குறித்த உணவகத்திற்கு சென்று சோதனையிட்ட போது , பழுதடைந்த இறைச்சிகள் மீட்கப்பட்டதுடன் , சுகாதார சீர்கேட்டுடன் உணவகம் காணப்பட்டதுடன் , இறைச்சியை கொள்வனவு செய்தமைக்கான பற்று சீட்டுக்கள் இல்லாதமை கண்டறியப்பட்டது. அதனை அடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து , நீதிமன்ற விசாரணைகளில் உரிமையாளர் தன் மீதான குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 65 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. அதேவேளை உணவகத்தில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பிலும் , பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தலுக்கு அமைய உணவகத்தில் திருத்த வேலைகள் செய்த பின்னர் அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் அறிக்கை கிடைக்கப்பெற்று மன்று திருப்தி படும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://athavannews.com/2024/1382900
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : வர்த்தக நிலையங்கள் பூட்டு. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுச்சந்தை உள்ளிட்ட அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் கைவிடப்பட்டுள்ளதை எமது பிராந்திய செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1382941
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.