Jump to content

புலி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கை இலங்கையுடன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

24 ஜூன் 2011

பகிர்ந்து கொள்ளப்படும் - நெதர்லாந்து :

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கை இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட உள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட சிலரிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டதாக நெதர்லாந்து தூதரக பேச்சாளர் ஜாகோ பீரின்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் வரையில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து நெதர்லாந்து நீதிமன்றம் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் புலிகளின் சிரேஸ்ட தலைர்களில் ஒருவரான நெடியவனிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63072/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.