Jump to content

சீனா சிறிலங்காவிற்கு வழங்கும் 1.5 பில்லியன் டொலர் கடனுதவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 07:53 GMT ] [ நித்தியபாரதி ]

சிறிலங்காவில் சிலஅடிப்படைக் கட்டுமானத் திட்டங்களைமேற்கொள்வதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கசீனா உடன்பட்டுள்ளது என சிறிலங்காஅரசாங்கம் வியாழன் அன்று அறிவித்துள்ளது.

"வீதிகள், பாலங்கள், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் மின் சக்தி போன்றவற்றின் கட்டுமானப் பணிக்காக சீனாஅபிவிருத்திவங்கியானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவிற்கு வழங்க முன்வந்துள்ளது" என சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனுதவிக்கான கால எல்லைகள் தொடர்பான விபரங்கள் இதில் குறிப்பிடப்படவில்லை.

போருக்குப் பின்னான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்குடன், புதிய விமானத் தளம், துறைமுகங்கள், துரித நெடுஞ்சாலைகள், நிலக்கரி மற்றும் நீர்வலு மூலமான மின் சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கான பொறிகள், தொடருந்து வலைப்பின்னல் போன்றவற்றுடன் தொடர்புபட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கமானது 6பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.

சீனாவானது ஏற்கனவே சிறிலங்காவிற்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளதுடன்,வீதி அபிவிருத்தி, மின்சக்தி எரிவாயு இயந்திரஉற்பத்தி, புதியதுறைமுகக் கட்டுமானம் போன்றவற்றிற்காக 2.46 பில்லியன் அமெரிகக் டொலர்களை வழங்க உடன்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெறும் போருக்குப் பிந்திய மீள்கட்டுமானத்தின் பிரதான பங்காளியாக சீனா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நீண்டகாலமாக கவனிக்கப்படாதிருந்த கட்டுமானப் பணிகளிற்கான மீள் நிர்மாணத் திட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்குவதற்கான பணிகளை சிறிலங்கா அரசாங்கம் பாரியளவில் முன்னெடுத்து வருகின்றது.

http://www.puthinappalakai.com/view.php?20110624104134

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இன்னொரு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான உதவி போல் இது தெரியவில்லை!

தனது நாட்டின் ஒரு மாகாணத்தைக் கட்டி எழுப்புவது போலவே இது உள்ளது!

காலப் போக்கில் சிங்களம் தன்னை முழுமையாக அடமானம் வைத்துவிடும்!!!

Link to comment
Share on other sites

ஹம்பாந்தோட்டை துறைமுக கடனுக்காக 1110 கோடி ரூபா வட்டி

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்காக சீனாவிடமிருந்து வாங்கிய கடனுக்கு இலங்கை அரசாங்கம் 111.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது சுமார் 11.1 பில்லியன் (1110 கோடி) ரூபா வட்டியாக செலுத்த வேண்டியிருப்பதாக அரசாங்கம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கான மொத்த செலவு 360 மில்லியன் டொலர்களாகும். இவற்றில் 54 மில்லியன் டொலர்கள் மாத்திரம் துறைமுக அதிகார சபையால் வழங்கப்பட்டது. எஞ்சிய தொகை சீனாவின் வங்கியிடமிருந்து பெறப்பட்டது.

இதற்காக வட்டியுடன் சேர்த்து அரசாங்கம் 418.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை 31.12.2022 வரை 11 தவனைகளில் மேற்படி சீன வங்கிக்கு செலுத்த வேண்டும். அடுத்த வருடம் முதல் பணம் திருப்பிக்கொடுக்கப்படும். முதலாவது தவணை கொடுப்பனவு 46.81 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இரண்hவது கொடுப்பனவு 45.05 மில்லியன் டொலர்கள். 3 ஆவது கொடுப்பனவு 43.29 மில்லியன் டொலர்கள். 10 ஆவது கொடுப்பனவு 29.23 மில்;லியன் டொலர்கள்.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலாக இவ்விபரங்கள் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டன.

( கெலும் பண்டார, யொஹான் பெரேரா).

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/23664--1110-.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கும் தலைவருக்கும் இறுதிப் போரில் இறந்த மக்களுக்கும் வீரவணக்கங்கள்.
    • Published By: DIGITAL DESK 7  19 MAY, 2024 | 10:14 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும் என்று பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டன. மே மாதம் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்த தகவல்களில் கூறப்பட்டன. இந்த தகவல்களுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதிலளிக்கையில், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது என கேள்வியெழுப்பியிருந்தனர். இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தகவல் கூறினார். இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சட்ட விதிகளின் பிரகாரம் 2024ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட சனிக்கிழமை ஒன்றில் நடாத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஒக்டோபர் மாதத்தில் முதல் வாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் பொதுஜன பெரமுனவில் சாதகமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கின்ற நிலையில், அந்த கட்சியின் மாகான சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினர் ஜனாதிபதி ரணிலை சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சந்திப்பு பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடன் இடம்பெற்ற ஒன்றாகும். மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சியும் பல அரசியல் கட்சிகளுடனும்  பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இணக்கப்பாடுகளை எட்டியுள்ளது. அத்துடன் அநுர பிரியதர்ஷன யாப்பா தலமையிலான புதிய அரசியல் கூட்டணியும் ரணில் விக்க்கிரமசிங்கவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/183926
    • வணக்கம். 🙏 வயசானாலும், குறும்பு போகவில்லை..🌷👍😜  
    • Published By: DIGITAL DESK 7   19 MAY, 2024 | 10:49 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளது. இதேவேளை, பிராந்தியத்தில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தும் சர்வதேச நாடுகளின் ஆய்வுக் கப்பல்களின் வருகையை கட்டுப்படுத்த உள்ளக சமுத்திரவியல் ஆய்வுக்குழுவை ஸ்தாபிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இலங்கை விஜயத்தின்போது கூடுதல் அவதானம் செலுத்தியிருந்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளர் டொனல்ட் லூ, தேசிய பாதுகாப்பு ஆலோசரை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இந்த சந்திப்பு தொடர்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க கூறுகையில், இலங்கை கடற்பரப்பில் ஆய்வு நடவடிக்கைகளுக்காக விசேட உள்நாட்டு சமுத்திரவியல் ஆய்வுக்கு குழு ஒன்றை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு ஆய்வுக்குழுவை உருவாக்குவதன் மூலம் வேறு நாடுகளின் ஆய்வுக்கப்பல்கள் இலங்கைக்கு வரவேண்டிய தேவை ஏற்படாது. குறித்த சமுத்திரவியல் ஆய்வுக் குழுவை உருவாக்கும்போது ஏற்படக்கூடிய பயிற்சிகளின் அவசியம் மற்றும் இதர தேவைகளின்போது அமெரிக்காவிடம் ஒத்துழைப்பு வழங்க துணைச் செயலாளர் டொனல்ட் லூ இணக்கம் தெரிவித்தார்.   உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதால் இராஜதந்திர ரீதியில் பல்வேறு நெருக்கடிகளை அரசாங்கம் எதிர்கொள்கிறது. இலங்கைக்கான விசேட சமுத்திரவியல் ஆய்வுக்குழு காணப்படுமாயின் எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாது. மறுபுறம் அந்த நாடுகளின் தேவைக்கு ஏற்ப தரவுகளையும் எம்மால் வழங்க முடியும். ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையின் இந்த திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஏற்கனவே கூறியுள்ளன. உள்நாட்டு ஆய்வுக்குழு ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் இந்திய பெருங்கடல் தரவுகளை ஏனைய நாடுகளுடன் தேவைக்கு ஏற்ப பகிர்ந்துகொள்ள முடியும். மேலும் இலங்கை இராணுவத்தை நவீனமயப்படுத்துவதற்கான மீளாய்வுகள் இடம்பெறுகின்றன. அதே போன்று அனுமதியின்றி இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும்  நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிக்கவும் அவற்றை தடுப்பதற்குமான பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டது. இவை அனைத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க அமெரிக்க இணக்கம் தெரிவித்ததாக கூறினார். https://www.virakesari.lk/article/183930
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.