Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா சிறிலங்காவிற்கு வழங்கும் 1.5 பில்லியன் டொலர் கடனுதவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ வெள்ளிக்கிழமை, 24 யூன் 2011, 07:53 GMT ] [ நித்தியபாரதி ]

சிறிலங்காவில் சிலஅடிப்படைக் கட்டுமானத் திட்டங்களைமேற்கொள்வதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கசீனா உடன்பட்டுள்ளது என சிறிலங்காஅரசாங்கம் வியாழன் அன்று அறிவித்துள்ளது.

"வீதிகள், பாலங்கள், நீர்வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் மின் சக்தி போன்றவற்றின் கட்டுமானப் பணிக்காக சீனாஅபிவிருத்திவங்கியானது 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சிறிலங்காவிற்கு வழங்க முன்வந்துள்ளது" என சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனுதவிக்கான கால எல்லைகள் தொடர்பான விபரங்கள் இதில் குறிப்பிடப்படவில்லை.

போருக்குப் பின்னான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கும் நோக்குடன், புதிய விமானத் தளம், துறைமுகங்கள், துரித நெடுஞ்சாலைகள், நிலக்கரி மற்றும் நீர்வலு மூலமான மின் சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கான பொறிகள், தொடருந்து வலைப்பின்னல் போன்றவற்றுடன் தொடர்புபட்ட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கமானது 6பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது.

சீனாவானது ஏற்கனவே சிறிலங்காவிற்கு 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளதுடன்,வீதி அபிவிருத்தி, மின்சக்தி எரிவாயு இயந்திரஉற்பத்தி, புதியதுறைமுகக் கட்டுமானம் போன்றவற்றிற்காக 2.46 பில்லியன் அமெரிகக் டொலர்களை வழங்க உடன்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெறும் போருக்குப் பிந்திய மீள்கட்டுமானத்தின் பிரதான பங்காளியாக சீனா உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நீண்டகாலமாக கவனிக்கப்படாதிருந்த கட்டுமானப் பணிகளிற்கான மீள் நிர்மாணத் திட்டத்தில் வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்குவதற்கான பணிகளை சிறிலங்கா அரசாங்கம் பாரியளவில் முன்னெடுத்து வருகின்றது.

http://www.puthinappalakai.com/view.php?20110624104134

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இன்னொரு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான உதவி போல் இது தெரியவில்லை!

தனது நாட்டின் ஒரு மாகாணத்தைக் கட்டி எழுப்புவது போலவே இது உள்ளது!

காலப் போக்கில் சிங்களம் தன்னை முழுமையாக அடமானம் வைத்துவிடும்!!!

ஹம்பாந்தோட்டை துறைமுக கடனுக்காக 1110 கோடி ரூபா வட்டி

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்காக சீனாவிடமிருந்து வாங்கிய கடனுக்கு இலங்கை அரசாங்கம் 111.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை அதாவது சுமார் 11.1 பில்லியன் (1110 கோடி) ரூபா வட்டியாக செலுத்த வேண்டியிருப்பதாக அரசாங்கம் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கான மொத்த செலவு 360 மில்லியன் டொலர்களாகும். இவற்றில் 54 மில்லியன் டொலர்கள் மாத்திரம் துறைமுக அதிகார சபையால் வழங்கப்பட்டது. எஞ்சிய தொகை சீனாவின் வங்கியிடமிருந்து பெறப்பட்டது.

இதற்காக வட்டியுடன் சேர்த்து அரசாங்கம் 418.21 மில்லியன் அமெரிக்க டொலர்களை 31.12.2022 வரை 11 தவனைகளில் மேற்படி சீன வங்கிக்கு செலுத்த வேண்டும். அடுத்த வருடம் முதல் பணம் திருப்பிக்கொடுக்கப்படும். முதலாவது தவணை கொடுப்பனவு 46.81 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இரண்hவது கொடுப்பனவு 45.05 மில்லியன் டொலர்கள். 3 ஆவது கொடுப்பனவு 43.29 மில்லியன் டொலர்கள். 10 ஆவது கொடுப்பனவு 29.23 மில்;லியன் டொலர்கள்.

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலாக இவ்விபரங்கள் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டன.

( கெலும் பண்டார, யொஹான் பெரேரா).

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/23664--1110-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.