Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் நாளை பேச்சுவார்த்தை :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

23 ஜூன் 2011

அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அரசாங்கம் கூடுதலான தகவல்களை வெளியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையில் எதிர்வரும் 29ம் திகதி மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

TNA யுடனான இன்றைய பேச்சுவார்த்தையில் அரசாங்கம் 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை முன்வைக்க உள்ளது

23-06-2011- 1:33

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வாக அரசாங்கம், 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தை முன்வைக்க உள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுவார்த்தை அலரி மாளிகையில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஜீவ விஜேசிங்க, சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் அரச தரப்பில் கலந்துக்கொள்ள உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் தீர்வை காண்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் இது தொடர்பாக தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்த எண்ணியுள்ளதாக பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரசியல் தீர்வொன்றை உருவாக்க தாம் முன்வைத்த யோசனை தொடர்பாக அரசாங்கத்தின் பதில் இன்று கிடைக்கும் எனவும் இந்த பதிலின் அடிப்படையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கும் TNAக்கும் இடையில் நாளை பேச்சுவார்த்தை :

22-06-2011 1:44

அதிகாரத்தை பரவலாக்குவது சம்பந்தமாக அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில், தீர்மானகரமான பேச்சுவார்த்தை ஒன்று நாளை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள யோசனைகளுக்கு, அரசாங்க தரப்பில் பதில் கிடைக்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகளில், அரசாங்கத் தரப்பில், அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, ஜீ.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க, சஜின்வாஸ் குணவர்தன ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துக்கொள்ள உள்ளனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62973/language/ta-IN/article.aspx

அரசாங்கத்துடனான கலந்துரையாடலில் இன்று அதிகாரப் பரவலாக்கல் குறித்துக் கலந்துரையாடப்பட்டது: த.தே.கூட்டமைப்பு

அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் நடந்து வரும் கலந்துரையாடல்களின் மற்றுமோர் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றிருந்தது. அதன்போதே தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த விடயம் தொடர்பில் கருத்துப் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அரசாங்கம் கூடுதலான தகவல்களை வெளியிடும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கும் இடையில் எதிர்வரும் 29ம் திகதி மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

அத்துடன் இன்றைய பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிடவுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

ஆயினும் பிரஸ்தாப அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

http://news.lankasri.com/view.php?22IIBd302bjQK4e34Gprcb0r92OddeS292bcb7pG3e4dWQj302cLLw42

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.