Jump to content

கிளிநொச்சியில் நாம் இலங்கையர் அமைப்பு ஏற்பாடு செய்த ஆர்பாட்டத்துக்கு இராணுவம் தடை


Recommended Posts

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை கண்டுபிடித்துத் தருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி நாம் இலங்கையர் என்ற அமைப்பு இன்று கிளிநொச்சியில் ஆர்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஆர்பாட்டத்தை நடத்தவிடாது தடுப்பதற்கென ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்த தமது அமைப்பின் இரு தமிழ் இளைஞர்களை இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக நாம் இலங்கையர் அமைப்பின் தலைவர் உதுல் பிரேமரட்ன தெரிவித்தார்

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

"கிளிநொச்சி நகர மத்தியில் நாம் ஆர்பாட்டம் செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டோம். ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்த நாம் இலங்கையர் அமைப்பின் தமிழ் இளைஞர்கள் இருவரை இராணுவத்தினர் சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

அத்துடன் நாம் ஆர்பாட்டத்திற்கென அழைத்திருந்த தமிழ் தாய்மார் மற்றும் சிலரை பஸ்ஸில் ஏற்றி ஆர்பாட்டத்தை தடுக்க இராணுவத்தினர் முயற்சித்தனர்.

கிளிநொச்சியில் முழுமையான இராணுவ ஆட்சி நிலவுவதாகவும் இங்கு ஆர்பாட்டம் செய்ய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ உயர் அதிகாரி எம்மிடம் கூறினார்.

இராணுவ அட்சி இல்லை. ஜனநாயகத்தை ஏற்படுத்தி சிவில் நிர்வாகம் நடைபெறுவதாக கூறப்படும் கிளிநொச்சியில் சட்டவிரோத இராணு ஆட்சியை அறிவிப்பது, ஜனநாயக உரிமைகளை மீறுவது எப்படி?

காணாமல் போனவர்களை விடுதலை செய்யவும், கைது செய்யப்பட்ட எமது இளைஞர்கள் இருவரை விடுதலை செய்யவும். அத்துடன் கிளிநொச்சி மற்றும் வடக்கு பகுதியில் இராணுவ ஆட்சியை இல்லாதொழித்து ஜனநாயகத்தையும் சிவில் ஆட்சியையும் உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறோம்".

மனித உரிமை நிலையம் கண்டனம்....

வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கபே மற்றும் மனித உரிமை நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பாக, அரசியல் நடவடிக்கை மற்றும் சுதந்தரமாக கூட்டங்களை மேற்கொள்ளல் போன்ற உரிமைகள் பாதுகாக்கப்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாம் இலங்கையர் அமைப்பு இன்று காலை கிளிநொச்சியில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்துக் பாதுகாப்பு படையினரால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆர்பாட்டம் நடைபெறவிருந்த பகுதியில் அதிகளவில் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் ஆர்பாட்டத்திற்காக வந்தவர்களை கிளிநொச்சியை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில்:- அரசியல் நடவடிக்கைகள் என்பது ஜனநாயகத்துக்கு இட்டுச்செல்லும் வழி, அரசின் நிர்வாகத்தில் உள்ள கிளிநொச்சி பகுதியில் உள்ள அல்லது நாட்டில் எந்தவொரு பகுதியில் உள்ளவர்களுக்கும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை உண்டு.

எப்படியாயினும் இன்று இடம்பெற்றுள்ள இச்சம்பவம் கிளிநொச்சில் அரை இராணுவ ஆட்சியிற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசியல் கூட்டங்கள் அன்றியோ, அரசியல் ஆர்ப்பாட்டங்கள் அன்றியோ ஒரு உண்மையான தேர்தல் சாத்தியப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடக்கு பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை உரிமை குறித்து உறுதிப்படுத்துமாறு அதிகார சபைகளிடம் கபே மற்றும் மனி உரிமை நிலையம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

http://akkinikkunchu.com/new/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.