Jump to content

குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை பிறந்தபின்னர் மொட்டை போடுவது ஏன்?

வியாழன், 02 ஜூன் 2011 08:17

குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில் மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை.

ஆனால் ஏன் அப்படி மொட்டை போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்கிறது இதற்கு. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில் இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மை சுற்றி என்ன தேனும் பாலுமா இருக்க போகிறது?

இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். இவையெல்லாம் எமது உடம்பில் எவளவு ஊறியிருக்கும்.

வெறும் ஐந்து நிமிடம் கடல்நீரில் விரலை வைத்து துடைத்து விட்டு சுவைத்து பாருங்கள் எமது விரல் அப்போதும் உப்பாகத்தான் இருக்கும். 5நிமிடம் உப்பு நீரில் வைத்த விரலே இப்படியென்றால் பத்து மாதம் மலம் சிறுநீர் இரத்தம் சதை இவற்றுக்குள் கிடந்த எமது உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

இதெல்லாம் எப்படி வெளியேறும்?? எமது உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் மயிர்கால்கள் வழியாக வெளியேறும். தலையில் உள்ள கழிவுகள் வெளியேற வழிகள் குறைவு. இதனால் சிரசில் அந்தக் கழிவுகள் தேங்கி நிற்கும் சந்தர்பங்கள் ஏற்படுகிறது. இதனால் பிற்காலத்தில் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

எனவேதான் சிரசில் மொட்டை போடுவது நேர்த்திக்கடன் என்ற பெயரில் முன்னோர்களால் பரப்பப்பட்டது. இதைப்போல் மீண்டும் ஒரு தடவை குழந்தைகளுக்கு மொட்டை போடுவார்கள்.

அது ஏற்கனவே மொட்டை போடும் போது ஏதாவது கிருமிகள் தவறியிருப்பின் இரண்டாவது மொட்டையில் இல்லாமல் போய்விடும் என்பதற்காகவே.

தற்போது புரிகிறதா பிறந்த குழந்தைக்கு கோயிலில் மொட்டை போடுவது ஏன் என்பது. இது தொடர்பாக அறிவியல் ரீதியாக கூறினால் மக்கள் பின்பற்றமாட்டார்கள் என்பதற்காகத்தான் ஆன்மீகரீதியாக கூறி மக்களை பின்பற்ற வைத்துள்ளனர் முன்னோர்கள்.

ஆனால் அதற்கு ஆன்மிக ரீதியிலான வேறு ஒரு விளக்கத்தினையும் குறிப்பிட்டுள்ளனர். எது எப்படியே ஆன்மிகத்தில் கூறப்பட்ட பல்வேறு காரியங்களுக்கு அறிவியல் ரீதியிலான விளக்கங்கள் இருக்கின்றது என்பதே உண்மை.

நன்றி - தமிழ்CNN

Link to comment
Share on other sites

இல்லை இரத்தம் சதை மலம் சிறுநீர் என அனைத்தும் இருக்கும்.அதற்குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். இவையெல்லாம் எமது உடம்பில் எவளவு ஊறியிருக்கும்.

வெறும் ஐந்து நிமிடம் கடல்நீரில் விரலை வைத்து துடைத்து விட்டு சுவைத்து பாருங்கள் எமது விரல் அப்போதும் உப்பாகத்தான் இருக்கும். 5நிமிடம் உப்பு நீரில் வைத்த விரலே இப்படியென்றால் பத்து மாதம் மலம் சிறுநீர் இரத்தம் சதை இவற்றுக்குள் கிடந்த எமது உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

இதெல்லாம் எப்படி வெளியேறும்?? எமது உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் மயிர்கால்கள் வழியாக வெளியேறும். தலையில் உள்ள கழிவுகள் வெளியேற வழிகள் குறைவு. இதனால் சிரசில் அந்தக் கழிவுகள் தேங்கி நிற்கும் சந்தர்பங்கள் ஏற்படுகிறது. இதனால் பிற்காலத்தில் பாரிய நோய்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

மொட்டை போடுவதற்கு வேறு நல்ல காரணங்கள் ஏதாவது இருக்கும்..! :unsure: ஆனால் இவற்றை நம்பமுடியவில்லை..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொட்டை போடுவதற்கு வேறு நல்ல காரணங்கள் ஏதாவது இருக்கும்..! :unsure: ஆனால் இவற்றை நம்பமுடியவில்லை..! :lol:

தமிழ் சீ என் என் சொந்தமாக யோசித்து எழுதிய கட்டுரையாக இருக்கும். சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.

மொட்டை போடுவதற்கு வேறு நல்ல காரணங்கள் ஏதாவது இருக்கும்..! :unsure: ஆனால் இவற்றை நம்பமுடியவில்லை..! :lol:

ஒரு இணையதளம் ஆய்வு செய்கிறது அதை நம்ப மறுப்பது அதை அவமதிக்கும் செயல். :lol::lol: :lol:

Link to comment
Share on other sites

அது பிறந்து வளரும் போது ரியுசன் காசு, டேட்டிங் காசு, நீச்சல் பழக காசு என்று எல்லாத்துக்கும் காசு கேட்டு தேப்பனுக்கு மொட்டை போடுவதால் ஒரு அட்வான்ஸ் பழிவாங்கல் இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்அறிந்து தலைமயிர் குறைவாக இருப்பவர்களுக்குத்தான் மொட்டை போடுகிறார்கள். மொட்டை போட்டபின் அது கூடுதலாக அடர்த்தியாக வளரும் என்பதற்காகவே.

டிஸ்கி: அப்புறம் அடர்த்தியான தலைமயிர் உள்ளவர்கள் ஏன் வழிக்கிறார்கள் என்று கேட்டால் பக்கத்துவிட்டுக்காறன் என்ன செய்தாலும்நாமும் செய்வோமில்ல.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாம்பழங்கள் வீட்டில் இருந்தால், அளவாகச் சாப்பிடுங்கள் என்ற ஆலோசனையை பின்பற்றுவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது.......😀. இங்கு இப்பொழுது மாம்பழ சீசன் தொடங்குகின்றது. சீசன் என்றால் இறக்குமதி செய்யும் காலம். மெக்சிக்கோ மற்றும் மத்திய, தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து கொண்டு வருகின்றார்கள், நல்ல மாம்பழங்கள். விலையும் கட்டுப்படியாகும் விலையே. ஒரு நாளிலேயே நிறைய சாப்பிட்டு விடுகின்றோம். 
    • வருடத்தில் ஆறு மாதங்கள் ட்ரோலர் வகை மீன்பிடி தடை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல விடயமே ஏனென்றால் இந்த வகை மீன்பிடி கடல் வளத்தை அழிக்கின்றது குட்டிக் குட்டி மீன்களை அழிப்பதன் வழியாக. ஆனால் எங்கள் மீனவர்களுக்கு மற்ற வகை மீன்பிடி முறைகளில், உதாரணம்: ஆழ்கடல் மீன்பிடி, நல்ல அனுபவமும், அதற்கேற்ற வசதிகளும் கிடையாது. பலர் இந்த தொழிலை செய்யாமல் விட்டு விட்டார்கள் என்றும் நினைக்கின்றேன். ஊரில் இருப்போர் கப்பலில் போகின்றனர், மற்றவர்கள் கப்பலில் போவதற்கான வகுப்புகளிற்கும் பயிற்சிகளுக்கும் போய் வந்து கொண்டிருக்கின்றனர். கனடா இப்பொழுது இலகுவாக்கியிருக்கும் விசா திட்டத்தின் மூலம் கடந்த சில மாதங்களில் இங்கிருந்து 600 பேர் வரை கனடாவிற்கு போய் விட்டார்கள் என்றும் சொன்னார்கள். எதற்குமே போதிய ஆட்பலம் இல்லை என்ற ஒரு நிலை. 
    • பட மூலாதாரம்,PA கட்டுரை தகவல் எழுதியவர், அதாஹுல்பா அமெரிஸ் பதவி, பிபிசி உலக செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "வாழ்க்கை சிறிது, எனவே திருமணம் மீறிய உறவை வைத்துக்கொள்ளுங்கள்" என்ற முழக்கத்தை பயன்படுத்தி, ஆஷ்லே மேடிசன் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள திருமணம் தாண்டிய உறவின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நபர்களை ஈர்த்துள்ளது. ஆனால் ஹேக்கர்கள் இந்த நிறுவனத்தின் 3.2 கோடி சந்தாதாரர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் மிகவும் ரகசியமான தகவல்களை பொதுவெளிக்கு கொண்டு வந்ததால் இவர்களில் பலரது வாழ்க்கையில் பூகம்பமே வெடித்துள்ளது. இதில் பலருக்கும் விவாகரத்துகள், குடும்பம் மற்றும் சுற்றுப்புறத்திலிருந்து ஒதுக்கி வைப்பது, தற்கொலைகள் என விளைவுகள் மோசமானதாக மாறியுள்ளன. இந்நிலையில், இந்த டேட்டிங் தளம் குறித்த கதையை டோபி பாட்டன் இயக்க “ஆஷ்லே மேடிசன்: செக்ஸ், லைஸ் அண்ட் ஸ்கேன்டல்ஸ்" என்ற பெயரில் மூன்று அத்தியாயங்கள் கொண்ட குறுந்தொடராக வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2002 ஆம் ஆண்டில் ஆஷ்லே மேடிசன் என்ற இணையதளத்தை நிறுவினார் கனடாவை சேர்ந்த டேரன் ஜே. மோர்கென்ஸ்டெர்ன். ஆஷ்லே மேடிசன் என்பது என்ன? அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் உலகின் "டாட் காம்ஸ்" களுக்குள் மனித குலம் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், திருமணத்திற்கு வெளியே ஒரு உறவைத் தேடிக்கொண்டிருக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டிஜிட்டல் சந்தை ஒன்று காலியாக இருப்பதை கனடாவை சேர்ந்த டேரன் ஜே. மோர்கென்ஸ்டெர்ன் உணர்ந்தார். 2002 ஆம் ஆண்டில் ஆஷ்லே மேடிசன் என்ற இணையதளம் ஒன்றை தொடங்கினார் அவர். இதில் உறுப்பினராக சேரும் நபர்கள் தங்கள் பகுதியில் உள்ள திருமணத்தை தாண்டிய உறவில் ஆர்வத்துடன் இருக்கும் நபர்களை கண்டறிவதற்காக தங்களது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் பாலியல் விருப்பங்களை பதிவேற்றிக் கொள்ளலாம். தற்காலத்தில் இருக்கும் பல டேட்டிங் தளங்களை போலவே, இந்த தளத்திலும் பெண்கள் பிறருடன் உரையாடலைத் தொடங்க பணம் கட்டத் தேவையில்லை. ஆனால், ஆண்கள் பணம் கட்டினால் மட்டுமே மற்றவருடன் பேச முடியும். நிறுவனத்தை தொடங்கி சில ஆண்டுகள் கழித்து, 2007 இல் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி நோயல் பைடர்மேனின் திறன்மிக்க, அதிவேகமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய சந்தைப்படுத்துதல் உத்தி மூலம் இந்த தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்தது. பெரும்பாலான விளம்பர நிறுவனங்கள் இந்த தளம் குறித்து விளம்பரப்படுத்த மறுத்துவிட்ட நிலையில், அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் தானே தோன்றிய பைடர்மேன், “துரோகம் செய்வது உறவில் சில நன்மைகளையும் ஏற்படுத்தும்” என்று விளம்பரம் செய்ய ஆரம்பித்தார். இணையதளங்கள், ஊடகங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் என பல வழிகளிலும் இதேபோன்ற வித்தியாசமான விளம்பரங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார் அவர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிகபட்சமாக கடந்த தசாப்தத்தில் அதன் பயனர் எண்ணிக்கை 3.7 கோடி என்று கூறியது அந்நிறுவனம். ஊடக கவனத்தை பெற்ற பிறகு இந்த நிறுவனம் பல நாடுகளுக்கும் தனது சேவையை விரிவு செய்தது. அதன் பலனாக அதிகபட்சமாக கடந்த தசாப்தத்தில் அதன் பயனர் எண்ணிக்கை 3.7 கோடி என்று கூறியது அந்நிறுவனம். இதன் தொடர்ச்சியாக இந்த தளம் ஒழுக்கம் நிறைந்த பாரம்பரிய குடும்ப அமைப்புக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக செயல்படுவதாக பலரும் இதை விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஆனால், அது இதன் உரிமையாளர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள அந்நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூட, “மோசமான விளம்பரங்கள் என்று எதுவுமில்லை, இங்கு எல்லா விளம்பரமும் நல்லதுதான்” என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2015 ஆம் ஆண்டில், தி இம்பாக்ட் டீம் என்று அழைக்கப்படும் ஒரு குழு ஆஷ்லே மேடிசனின் சர்வர்களுக்குள் நுழைந்து அதன் ஒட்டுமொத்த தகவல்களையும் வெளியே எடுத்து விட்டது. தரவுகளை கசிய விட்ட ஹேக்கர்கள் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பிற்காக முழுமையான விருப்புரிமை, தீவிரமான இரகசியத் தன்மை மற்றும் மிக உயர்ந்த பாதுகாப்பு அளிக்க உறுதியளித்திருந்தது இந்நிறுவனம். இருப்பினும், இந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் ஆவணப்படத்தில் ஒப்புக்கொள்வது போல், இது ஒரு பொய்யான வாக்குறுதி. இந்த நிறுவனம் தனது தரவுகளை போதுமான அளவு பாதுகாக்கவில்லை. 2015 ஆம் ஆண்டில், தி இம்பாக்ட் டீம் என்று அழைக்கப்படும் ஒரு குழு ஆஷ்லே மேடிசனின் சர்வர்களுக்குள் நுழைந்து அதன் ஒட்டுமொத்த தகவல்களையும் வெளியே எடுத்து விட்டது. நிறுவனத்தின் செயல்பாடுகளை 30 நாட்களுக்குள் நிரந்தரமாக நிறுத்தவில்லையென்றால், டார்க் வெப் தளத்தில் அனைத்து தகவல்களையும் கசிய விட்டுவிடுவோம் என்றும் அந்த குழு எச்சரித்தது. யார் இதை செய்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முனைப்பில், அவசரஅவசரமாக அந்நிறுவனம் திறமையான ஹேக்கர்களை பயன்படுத்தியது. இதனால், ஹேக்கர்கள் வைத்த கோரிக்கைக்கு அது ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியில் அவர்கள் அந்த தகவல்களை கசிய விடுவதையும் அதனால் தடுக்க முடியவில்லை. அந்நிறுவனம் தனது கோரிக்கையை ஏற்காததால், சுமார் 3.2 கோடி பயனர்களின் பெயர்கள், புகைப்படங்கள், முகவரிகள், மின்னஞ்சல்கள் மற்றும் பாலியல் விருப்பங்கள் ஆகியவற்றை டார்க் வெப்பில் ஹேக்கர்கள் வெளியிட்டனர். சமீபத்தில் வெளியான தரவுகளில் அந்தரங்கப் படங்கள், கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆகியவையும் அடங்கும்.   பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு,கணவர் ஆஷ்லே மேடிசனின் பயனாளர் என்று தெரிய வந்த போது பிரபல டெக்சாஸ் யூடியூபர் ஜோடியான சாம் - நியா ரேடரின் திருமண வாழ்வு உடைந்து போனது விரைவிலேயே இந்த தரவுகள் டார்க் வெப்பிலிருந்து, பொதுவெளியில் பயன்படுத்தப்படும் இணையப் பக்கங்களில் கிடைக்க தொடங்கியது. இதன் மூலம் ஒருவரின் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுவதன் வழியாகவே, அவர் ஆஷ்லே மேடிசன் தளத்தை பயன்படுத்தியுள்ளாரா, இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. இதனால், இந்த தளத்தின் முக்கிய சந்தையான அமெரிக்காவில் பெரும் பிரளயமே வெடித்தது. பலரும் தங்களது கணவர், மனைவி, நண்பர், பக்கத்து வீட்டுக்காரர், மத போதகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் என இந்த தளத்தை பயன்படுத்திய அனைவரின் தரவுகளையும் பொதுவெளியில் வெளிப்படுத்தி வந்தனர். இந்த ஆவணப்படத்தின் முக்கிய நபர்களில் ஒரு ஜோடியான பிரபல டெக்சாஸ் யூடியூபர்கள் சாம் மற்றும் நியா ரேடரின் சிறப்பான திருமண வாழ்வும் சாம், ஆஷ்லே மேடிசனின் பயனாளர் என்று தெரிய வந்த போது உடைந்து நொறுங்கியுள்ளது. இதுகுறித்த உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், ஆஷ்லே மேடிசனின் பயனாளர்களின் தரவு கசிந்ததன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பல ஜோடிகளின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்துள்ளது. குறிப்பாக, நியூ ஆர்லியன்ஸைச் சேர்ந்த போதகரான ஜான் கிப்சன் போன்றவர்கள் இந்த நிகழ்வின் நீட்சியாக மோசமான விளைவுகளை சந்திக்க நேர்ந்தது. அவர் இந்த தளத்தை பயன்படுத்துகிறார் என்று தெரிய வந்ததும் சமூகமே அவரை ஒதுக்கி வைத்தது. அவரது மனைவி கூறிய தகவலின்படி, அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். இந்த அனுபவங்களுக்கு மாறாக, வெளிப்படையான உறவில்(Open Relationship) இருந்து வரும் ஜோடி ஒன்று இந்த தளம் தங்களுக்கு நல்ல அனுபவத்தையே தந்ததாகவும், இது தங்களது உறவுக்கு ஊக்கமளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். திருமண உறவில் ஏமாற்றுபவர்களின் பட்டியல் இந்த தளத்திலிருந்து வெளியானது, அந்த நிறுவனத்தின் நேர்மையின்மை மற்றும் மோசடியையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதில் சுமார் 40% பெண்களே இருப்பதாக கூறப்பட்டாலும், அந்த தரவுகளில் சிறிய பகுதியே பயனர்களுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. வெளியான தரவுகளில் பல ஆண்களை ஈர்ப்பதற்காக நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட போலி கணக்குகள் ஆகும். கூடுதலாக, தங்களது கணக்குகளை நீக்கிய பயனர்களுக்கு 19 அமெரிக்க டாலர்கள் செலுத்தி, முழுமையாக அவற்றை அழிக்கும் தேர்வை வழங்கி வந்தது அந்த தளம். ஆனால், அதுவும் பொய், இந்த கணக்குகளும் கூட 2015 ஹேக்கிங்கின் போது கசிய விடப்பட்டன. இது மட்டுமின்றி அந்த ஹேக்கிங் குழு மேலும் பலரை அம்பலப்படுத்தும் விதமாக தனிப்பட்ட முறையில், சிஇஓ நோயல் பைடர்மேனின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து மின்னஞ்சல்களையும் அனுப்பியது.   பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு,ஆஷ்லே மேடிசன் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடை வழங்க வேண்டியிருந்தது. ஆஷ்லே மேடிசனுக்கு என்ன ஆனது? இந்த சம்பவத்தை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு நோயல் பைடர்மேன் தனது சிஇஓ பதவியில் இருந்து விலகினார். ஆஷ்லே மேடிசன் நிறுவனத்திற்கு எதிராக இழப்பீடு கேட்டு நீதிமன்றங்களில் வழக்குகள் குவிந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடை அந்நிறுவனம் வழங்க வேண்டியிருந்தது. ஆனாலும், அந்த தளம் முடங்கவில்லை. தற்போது நம்பர் 1 திருமணமானவர்களுக்கான டேட்டிங் தளமாக தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது மட்டுமின்றி, சில நாடுகளில் 8 கோடி பயனர்களை கொண்டுள்ளதாகவும் கூறி வருகிறது. தொடரின் இயக்குநர் டோபி பாட்டன், இந்த கதையை பாரபட்சமற்ற முறையில் அணுக வேண்டும் என்று தான் நினைத்ததாக குறிப்பிட்டுள்ளார். "ஆஷ்லே மேடிசனை பயன்படுத்தியவர்களை சங்கடப்படுத்துவதற்கு பதிலாக, அவர்கள் ஏன் அந்தத் தளத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள் என்பதில் நாங்கள் அதிக ஆர்வம் காட்டினோம் . அவர்கள் எதைத் தேடினார்கள்? அவர்களின் உறவுகளில் என்ன நடக்கிறது? மேலும், முக்கியமாக, "இணையர் தரப்பு கூறுவது என்ன?" போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினோம் என்று நெட்ஃப்ளிக்ஸிடம் பாட்டன் கூறியுள்ளார். உறவில் துரோகம் செய்வது என்பது மோசமானது மற்றும் மனதை உடைக்கும் ஒரு விஷயம் தான். ஆனால், ஆஷ்லே மேடிசன் தளத்தில் உறுப்பினராக இருந்த 3.7 கோடி பயனர்கள் நமக்கு உணர்த்தும் தகவல் வேறானதாக இருக்கிறது. அது என்னவெனில், "வாழ்க்கையில் ஒரு நபரோடு மட்டும் உறுதியாக வாழ்வது சிக்கலானது" என்பது என்று அவர் அவர் கூறுகிறார். எது எப்படியோ, இந்த மோசமான பாதிப்புக்கு காரணமாக ஹேக்கரை இன்று வரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. https://www.bbc.com/tamil/articles/c3ggd7d32r0o
    • இந்தப் பதிலை எல்லாம் வினா - விடையில் எப்போ சேர்த்தார்கள்....🤭
    • ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய வியாஸ்காந்த் 2024ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் (vijayakanth viyaskanth) தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். பஞ்சாப் கிங்ஸ் (PBKS) மற்றும் சன்ரைஸர்ஸ் ஐதராபாத் (SRH) ஆகிய இரண்டு அணிகளுக்கிடையில் இன்று நடைபெறும் போட்டியிலே குறித்த விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். எதிரணியான பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிறப்பாக துடுப்பாட்டம் செய்த பிரப்சிம்ரன் சிங் இன் விக்கெட்டை இவர் 14.2ஆவது ஓவரில் வீழ்த்தியுள்ளார். இரண்டாவது போட்டி   விஜயகாந்த் வியாஸ்காந்த் ஐ.பி.ல் தொடரில் விளையாடும் இரண்டாவது போட்டி இதுவாகும். இதேவேளை நடைபெறவுள்ள T-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில்  இலங்கை அணியில் உதிரி வீரராக வியாஸ்காந்த் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/vijayakanth-viyaskanth-gets-his-maiden-ipl-wicket-1716121759
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.