ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது - நோர்வே தெரிவிப்பு
Written by Ellalan Thursday, 05 January 2006
ஐரோப்பிய ஒன்றியததின் பயங்கரவாதப் பட்டியலை நோர்வேயால் ஏற்றுக் கொள்ள முடியாதென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜொனார்ஸ் கார்ஸ்ரோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப்பட்டியல் ஒன்று இல்லை என்ற போதும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் மையத்தின் கீழ் சிறுவர்களை படைக்கு சேர்த்தல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 54 அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் எந்தவொரு அமைப்பும் ஐ.நாவினால் தடைசெய்யப்படவில்லை.
இந்த நிலையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வே தமது நிலைப்பாட்டுக்கு காரணம் கூறியுள்ளது.
அத்துடன் தமது நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கம் இல்லாமையால் தம்மை ஐரோப்பிய பயங்கரவாத பட்டியலை ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கமுடியாது என ஜொனாஸ் காஸ்ரோர் தெரிவித்துள்ளார்.
நன்றி:சங்கதி
ஐரோப்பிய பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது: நோர்வே
Started by
வினித்
, Jan 05 2006 10:17 AM
No replies to this topic
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]















