Jump to content

முள்ளிவாய்க்காலும் சர்வதேசமும்!


Recommended Posts

அண்மைக்காலங்களில் நிறையவே உள்ளூர் உலக அரசியல் மாற்றங்கள் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாததாய் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. மீண்டுமொரு உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சி, சர்வாதிகார ஆட்சி கவிழ்ப்பு, ஜனநாயகத்தேர்தல்கள் என்று அநேகமான நாடுகளில் என்னென்னவோ நெருக்கடிகள். எல்லாமே ஏதோவொரு மாற்றத்தை, தீர்வை, விடிவை நோக்கிய நகர்வுகளாய் நிறையவே எதிர்பார்ப்புகளோடு. எல்லோருக்கும் எங்கேயோ இருந்து ஓர் வலுவான ஆதரவும், அதன் முடிவு நோக்கிய பயணமும் தொடர்கிறது. ஈழத்தமிழர்களுக்கும் ஓர் முக்கிய நிகழ்வாக கடந்த 2009 May மாதம் இடம்பெற்றதாக கருத்தப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கி-மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வருடம் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும், ஈழத்தின் இறுதியுத்த இழப்புகளும் ஐ. நாவின் பான் - கி- மூன் அமைத்த மூன்று பேர் அடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட ஈழம் தொடர்பான அறிக்கை மூலம் நீதியைப் பெறுமா என்கிற எதிர்பார்ப்புகளோடு! இந்த குழு குறித்த புரிதல்களும், குழப்பங்களுமே ஆரம்பத்தில் விவாதத்திற்கு உள்ளாகியது. இந்தக் குழு போர்க்குற்றங்களை விசாரிக்க அமைக்கப்படவில்லை என்கிற அரிய, பெரிய உண்மையை வழக்கம் போல் இலங்கையின் இறையாண்மையை கட்டிக்காக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் கண்டுபிடித்து சொன்னார்கள்.

இது May 2009 ஐ. நாவின் செயலர் இலங்கைக்கு சென்றபோது ராஜபக்க்ஷேவுடன் பேசியதன் பிரகாரமே உருவாக்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட குழு ஈழத்தின் இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டனவா, மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டனவா என்றும்; அப்படியானால், அது குறித்த இவர்களின் தீர்வுக்குரிய ஆலோசனைகளும் என்ன என்பது தான்.

முன்னாள், ஐ. நாவின் பேச்சாளர் Gordon Weiss ஓய்வுபெற்றபின் இலங்கையின் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் இலங்கை அரசு குறித்து சொன்னதை நாங்கள் மறக்கவில்லை. அறிக்கை தயாரித்து ஐ. நா. செயலரிடம் சமர்ப்பித்தாகிவ்ட்டது. இனி அவர் அதை பகிரங்கப்படுத்துவாரா என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கிறது. மூன்று பேர் கொண்ட குழுவை எந்த காரணம் கொண்டும் இலங்கைக்குள் எந்தவொரு விசாரணை செய்யவும் அனுமதிக்கமாட்டோம்; இந்த குழு சட்டாபூர்வமானதால என்றெல்லாம் சொல்லிவிட்டு; அமெரிக்காவில் இலங்கைப் பிரதிநிதிகள் இந்த குழுவை ஐ. நாவின் அரசியல் விவகாரங்களுக்கான Lyn Pascoe வின் ஏற்பாட்டில் பான்- கி- மூன் சம்மதத்துடன் இரகசியமாக சந்தித்ததாக Sunday Times பத்திரிகை சொல்கிறது. அந்த இரசிய சந்திப்பு வெளிப்பட்டு சிரிப்பாய் சிரித்தது தனிக்கதை. இப்போ, ஐ. நா. இலங்கையிடம் சமர்ப்பித்த இந்த அறிக்கையை இலங்கை அரசு பக்கச்சார்பானது, "Fundamentally Flawed" என்றும் விமர்சிக்கிறது. இலங்கை அரசுக்கு ஆதரவான Island பத்திரிகையில் அந்த அறிக்கை குறித்த சில விடயங்கள் கசிந்திருப்பதாக தெரிகிறது. ஆனால், Island பத்திரிகையில் பகுதியாக வெளிவந்த அறிக்கைப்படி இலங்கை அரச படைகளின் குற்றங்களோடு, புலிகள் பற்றிய குற்றங்களும், ஐ. நா. மக்களை காப்பாற்ற தவறி விட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இனி அது சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு இட்டுச்செல்லுமா என்கிற எத்தனையோ கேள்விகள் இன்னும் மிச்சமிருக்கிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிளேக், லிபியாவின் கடாபியை கண்டித்த கையோடு இலங்கையையும் போகிற போக்கில் கண்டித்து வைத்தார். இவர் அகம், புறமாக கண்டித்ததோடு நில்லாமல் அமெரிக்காவின் 'Strategic Interest' இலங்கை என்பதை வெளிப்படையாகவே சொல்லியும் விட்டார். இதை பல பத்திரிகைகள், ஆய்வாளர்கள் விமர்சித்து தீர்த்துவிட்டார்கள். கூடவே புலத்தில் உலக தமிழர் பேரவை தலைவரையும் சந்தித்திதார், பேசினார். இலங்கை இதற்காக கோபப்பட பிறகு Island பத்திரிகையில் கொஞ்சம் சமாதானப்படுத்தவும் முயன்றிருக்கிறார். ஒரே இலங்கைக்கும் அமைதியும், சமாதானமுமான தீர்வு என்கிறார். ஒரே இலங்கை இருக்கும், தமிழர்களுக்கு அமைதியும், சமாதானமும் இருக்குமா! இன்றுவரை ஈழத்தமிழர்கள் தங்களுக்குரிய தீர்வாக தனி ஈழம் ஒன்றையே இறுதித் தீர்வாக கருதுகிறார்கள். அது எங்கேயோ காற்றில் இருந்து வருவிக்கப்பட்டதல்ல. மக்கள் ஆணையாக வழங்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானமே புலிகளால் Defacto State ஆக வடிவம் கொடுக்கப்பட்டது. இன்று அதுவே நாடு கடந்த தமிழீழம் ஆகவும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் வடிவம் மாற்றம் பெற்றிருக்கிறது. காலமும், வடிவமும் மாறினாலும் எங்கள் இலக்கு எப்போதுமே ஈழம் தான் என்பதை ஆணித்தரமாக சொல்லவேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு. எங்கள் காலத்தில் இல்லை என்றாலும் அடுத்த சந்ததி அந்த லட்சியத்தை தொடர வேண்டும், தமிழனுக்கு ஈழத்தில் சுதந்திரம் கிடைக்கும் வரை.

வருகிற மே மாதம் பத்தொன்பதுக்கு முன் பான்-கி-மூன் முதல் பிளேக் வரை எல்லோருமே ஏதோவொரு நிகழ்ச்சிநிரலோடு பேசுவார்கள். பான்-கி-மூனுக்கு இந்த வருட முடிவோடு பதவிக்காலம் முடிய இருக்கிறதாம். மீண்டும் பதவியில் தொடர எதையாவது சாதிக்க நினைத்து ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கு நியாயம் கிடைக்க ஏதாவது செய்வாரா? ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிற போதிலும் இன்னும் அவர்களின் மரணத்திற்கு நீதியோ, நியாயமோ கிடைக்காத நிலையில் எல்லோருமே எதையோ செய்ய முனைவது போல் ஓர் தோற்றப்பாட்டை உருவாக்கிகொண்டிருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது.

என்னுடைய மனதில் தோன்றும் கேள்விகள் ஈழத்தில் போர் மூழ, புலிகள் அழிய அதிக ஆதரவை வழங்கிய இந்தியா, அமெரிக்காவின் நிலைப்பாடு இந்த அறிக்கை குறித்து என்னவாக இருக்கும். ராஜபக்க்ஷேவை அவரது இனவாதத்தை ஊட்டி, ஊட்டி வளர்த்தவர்கள் இந்த இருசாராரும் தானே. இனி ஈழம் குறித்த அவர்கள் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும். ஒருவேளை போர்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் இந்தியாவும் இனப்படுகொலைக்குத் துணை போனதுக்கு விசாரிக்கப்படுமா???? இந்தியா விசாரிக்கப்படுகிறதோ இல்லையோ ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்கை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.*

நன்றி

http://lulurathi.blogspot.com/2011/04/blog-post_16.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய மனதில் தோன்றும் கேள்விகள் ஈழத்தில் போர் மூழ, புலிகள் அழிய அதிக ஆதரவை வழங்கிய இந்தியா, அமெரிக்காவின் நிலைப்பாடு இந்த அறிக்கை குறித்து என்னவாக இருக்கும். ராஜபக்க்ஷேவை அவரது இனவாதத்தை ஊட்டி, ஊட்டி வளர்த்தவர்கள் இந்த இருசாராரும் தானே. இனி ஈழம் குறித்த அவர்கள் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும். ஒருவேளை போர்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டால் இந்தியாவும் இனப்படுகொலைக்குத் துணை போனதுக்கு விசாரிக்கப்படுமா???? இந்தியா விசாரிக்கப்படுகிறதோ இல்லையோ ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டதில் இந்தியாவின் பங்கை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.*

கோமகன், இந்தியா கட்டாயம் விசாரிக்கப் பட வேண்டும். இல்லாதவிடத்து, இலங்கையைப் போர்க்குற்றவாளியாக்க இந்தியா ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன்,நம்பியார் ஆகியோர் தனிப்பட்ட முறையிலாவது விசாரிக்கப் படவேண்டும்.இரசாயனத் தாக்குதல் பற்றிய உண்மைகள் வெளியுலகத்துக் தெரியவேண்டும். அம்பதினாயிரம் + உயிர்கள் பறிக்கப் பட்ட உண்மையும்,அதில் இந்தியாவின் தார்மீகப் பொறுப்பின்மையும் உலகத்திற்குத் தெளிவாகத் தெரியப் படுத்தப் பட வேண்டும்.தண்டனைகளைப் பற்றி நாம் அவ்வளவு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.ஆனால் உண்மைகள் வெளிக்கொணரப் பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இருக்க முடியாது!!!

Link to comment
Share on other sites

கோமகன், இந்தியா கட்டாயம் விசாரிக்கப் பட வேண்டும். இல்லாதவிடத்து, இலங்கையைப் போர்க்குற்றவாளியாக்க இந்தியா ஒத்துழைக்கும் பட்சத்தில் பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன்,நம்பியார் ஆகியோர் தனிப்பட்ட முறையிலாவது விசாரிக்கப் படவேண்டும்.இரசாயனத் தாக்குதல் பற்றிய உண்மைகள் வெளியுலகத்துக் தெரியவேண்டும். அம்பதினாயிரம் + உயிர்கள் பறிக்கப் பட்ட உண்மையும்,அதில் இந்தியாவின் தார்மீகப் பொறுப்பின்மையும் உலகத்திற்குத் தெளிவாகத் தெரியப் படுத்தப் பட வேண்டும்.தண்டனைகளைப் பற்றி நாம் அவ்வளவு அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.ஆனால் உண்மைகள் வெளிக்கொணரப் பட வேண்டும் என்பதில் இரு கருத்துக்கு இடம் இருக்க முடியாது!!!

கருத்துப் பதிவிற்கு நன்றி புங்கையூரான்.உலகின் பூகோள அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டாலே இவர்களின் பங்கு வெளிவரும் இல்லாவிட்டால் பத்துடன் பதினொன்றாகத் தான் இருக்கும்.சந்தடி சாக்கில் நாம் ஒரு தேசிய இனம் என்றோ அல்லது எமக்கு பாரம்பரியமான நிலப்பரப்புகள் இருந்ததையோ இந்த மேதாவிகள் தமது அறிக்கையில் விபரிக்கவில்லை, பின்னால் நின்று முண்டு கொடுத்து இந்தக் கொடூரத்தை நிறைவேற்ரிய பங்காளிகளைப் பற்ரி வாயே திறக்கவில்லை இதை எப்படி சுயாதீனமான நடுநிலையான விசரணையாக எடுப்பது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் ஐயா முதலில் காங்கிரசில் இருந்தவர்தான். இந்திரா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் என்றும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை மாற்றியதில்லை. பிஜேபி எதிர்ப்பு என்பது இப்போ தமிழகத்தில் உள்ள மதவாத எதிர்ப்பு சக்திகள் அனைத்துக்கும் வாழ்வா, சாவா போராட்டம். இதில் எங்களுக்கு காங்கிரசை பிடியாது என்பதால் நெடுமாறன் போனோர் இந்தியா கூட்டணியை ஆதரிக்க கூடாது என நாம் நினைப்பது சுயநலமும், தேவையில்லாமல் அவர்கள் வீட்டு விசயத்தில் மூக்கை நுழைக்கும் செயலுமாகும். ஈழ போராட்டம் தமிழ்நாட்டு அரசியலில் தீர்மானிக்கும் விடயம் அல்ல. அவர்கள் தமக்கு முக்கியமான விடயங்களின் அடிப்படையிலேயே விடயங்களை தீர்மானிப்பர். மன்சூரும் ஈழவிடுதலை நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை எனிலும், இவர் காங்கிரசில் சேர்ந்தது சுய இலாபத்துக்கு. நெடுமாறன் ஐயா இந்தியா கூட்டணியை ஆதரிப்பது பிஜேபி வரக்கூடாது என்பதால்.
    • இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது.   வித்துபோட்டம் என்று சொல்வதற்கு வெட்கம் ....இதிலை பீலா வேறை..
    • வயது கூடும் போது வந்த ஞானோதயங்களில் இந்த உறைப்பு குறைப்பும் ஒன்று. தவிரவும் இறைச்சியின் சுவையே தெரியாது - மிளகாய்தூள் கறிக்குள் இறைச்சி துண்டை போட்டு சாப்பிட்டால், மான் ஏது, மரை ஏது - தூளின் சுவைதான் தெரியும்.  
    • நீங்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றி எழுதின‌து100/100 உண்மை இதை விய‌ன‌ரசு ஜ‌யா கூட‌ அன்மையில் சொல்லி இருந்தார் ஆனால் ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா கூட‌ ப‌ய‌ணம் செய்த‌ சில‌ருக்கு கூட‌ ஜ‌யாவின் செய‌ல் பாடு பிடிக்க‌ வில்லை   க‌ந்துப்பு அண்ணா கோவிக்க‌ வேண்டாம் 2009த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ இல‌ங்கை அர‌சிய‌லை நான் எட்டியும் பார்ப்ப‌து கிடையாது   க‌ண்ண‌ க‌ட்டி காட்டில‌ விட்ட‌ மாதிரி தான் என‌க்கும் இல‌ங்கைக்குமான‌ அர‌சிய‌ல் அங்கு ந‌ட‌ப்ப‌து ப‌ற்றி என‌க்கு ஒரு கோதாரியும் தெரியாது.........................த‌லைவ‌ர் 2002க‌ளில் உருவாக்கின‌ த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பில் இருப்ப‌வ‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ தெரியும் மீதிப் பேர‌ தெரியாது....................................................
    • அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில், குறித்த திமிங்கிலங்கள் நேற்று (25) காலை கரை ஒதுங்கியுள்ளன. இவ்வாறு கரை ஒதுங்கிய திமிங்கிலங்களைக் காப்பாற்றுவதற்கு, கடல் உயிரியலாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கரை ஒதுங்கிய 26 திமிங்கிலங்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய திமிங்கிலங்களை மீட்டு கடலில் விடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://thinakkural.lk/article/300286
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.