Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அண்மையில் கோவையில் இலங்கை அமைச்சர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பட்டம் பற்றி திரு இராமகிருஸ்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

43922587.jpg

இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசு இனியும் அமைதியாக இருக்க முடியாது என்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன.

கடந்த வாரம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக லண்டன் சென்றிருந்தார் ராஜபக்ஷே.லண்டன் வாழ் தமிழர்கள் அவரது வருகைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சேனல் 4 தொலைக்காட்சியும் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆதாரத்துடன் வெளியிட, பரபரப்பு அதிகமானது.

பிரிட்டனில் வைத்தே ராஜபக்ஷேவை கைது செய்ய வேண்டும் என தமிழர்கள் வலியுறுத்தினர். ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட, இலங்கைக்கு திரும்பினார் அதிபர் மகிந்த ராஜபக்ஷே.

தமிழகம் வந்த இலங்கை எம்.பி.யும் அதே பாணியில் கோவையில் விரட்டியடிக்கப்பட்டார்.கோவை கொடீசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இலங்கை வர்த்தக தொழில்துறை அமைச்சர் அப்துல் ரஷீத் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதே நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமியும், சாத்தூர் ராமச்சந்திரனும் கலந்து கொள்வார்கள் என்கிற அறிவிப்பு தமிழ் உணர்வாளர்களை ஆத்திரப்பட வைத்தது.

கொடீசியா வளாகத்தின் அருகே காலை எட்டு மணிக்கே குவிந்த விடுதலைச் சிறுத்தைகளைக் கைது செய்தது போலீஸ்.நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் வரும் வழியில் 50-க்கும் மேற்பட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர்,பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை-யில் குவிந்தனர்.இலங்கை அமைச்சர் வருகை ரத்து என்றும்,அவருக்குப் பதிலாக இலங்கை எம்.பி. காசிம் பைசல் கலந்து கொள்வார் என்றும் போலீஸார் அவர்களிடம் தெரிவித்தனர்.

அந்த வழியே அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி வர, அவரது கார்களை பெரியார் திராவிடர் கழகத்தினர் தடுத்தனர்.காரிலிருந்து இறங்கி அவர்களிடம் பேசிய அமைச்சர், ‘‘இலங்கை அமைச்சரோ, எம்.பி.யோ கலந்து கொள்வது தெரியாது.நானும் சாத்தூர் ராமச்சந்திரனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை’’ என உறுதியளித்தார்.

இதற்கிடையே டெம்போ டிராவலர் வேனில் கொடீசியா வளாகத்திற்கு போலீஸாரால் ரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டார் இலங்கை எம்.பி.காசிம் பைசல். தகவலறிந்த பெரியார் தி.க.வினர் வேனிலும், காரிலுமாக நிகழ்ச்சி அரங்கிற்கு விரைய,எம்.பி.யை காரில் ஏற்றித் திருப்பி அனுப்பினர். ஆனாலும் விடாத, பெரியார் தி.க.வினர் அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட,அவர்கள் அனைவரையும் கைது செய்தது போலீஸ். நட்சத்திர ஹோட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, உடனடியாக விமானத்தில் இலங்கை சென்றார் எம்.பி.

இதற்கிடையே செவ்வாய்க்கிழமை இலங்கை செல்வதாக இருந்த பிரிட்டன் தெற்காசிய விவகாரங்களுக்கான வெளியுறவு அமைச்சர் அலிஸ்ரார் போடி தன்னுடைய மூன்று நாள் இலங்கைப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

சர்வதேச அரங்கில் சிங்கள அரசு மீதான பிடி இறுகுகிறது என்பதையே இது காட்டுகிறது.

- கா.சு.வேலாயுதன்

- குமுதம் ரிப்போட்டர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.