Jump to content

25 ஆயிரம் கொடுத்தால் அவுஸ்திரெலியா போகலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

65893285.jpg

பாஸ்போர்ட்’ வேண்டாம்...‘விசா’ வேண்டாம்...இருபத்தஞ்சாயிரம் ரூபாய் கொடுத்தா போதும். ஆஸ்திரேலியாவுக்குப் போகலாம்.

‘என்ன ஆச்சரியமாக இருக்கா..

இப்படி ஒரு கும்பல் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இவர்களின் குறி இலங்கைத் தமிழர்கள்தான்.

கடந்த புதன்கிழமையன்று காலை கூடலூர் மசினக்குடி போலீஸார் ஊட்டி சாலையில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது இரண்டு சுற்றுலா வேன்களில் 11 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட மொத்தம் 57 பேர் இருந்துள்ளனர்.

அவர்களை விசாரித்ததில், ‘அவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றும், ஊட்டி,கூடலூர்,முதுமலை பந்திப்பூர் பகுதிகளை சுற்றிப்பார்க்க வந்ததாகவும்’ கூறியுள்ளனர். அவர்களிடம் இலங்கை அகதிகளுக்கான எந்த ஆவணங்களும் இல்லை.

அதிர்ச்சியடைந்த போலீஸார், அவர்கள் அத்தனை பேரையும் அழைத்துச் சென்று அருகில் உள்ள மாவனல்லா சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தனர். கூடலூர் டி.எஸ்.பி. லட்சுமணன், இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது,மேலும் பல தகவல்கள் கிடைத்தன.

போலீஸாரிடம் சிக்கிய 57 பேரில் 15 பேர் புழல், கும்மிடிப்பூண்டி, பல்லாவரம், மண்டபம் இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களைச் சேர்ந்தவர்கள். மீதி 42 பேர் தங்களைப் பற்றிய விவரம் பதிவு செய்யாமல் சென்னை உள்பட வெவ்வேறு பகுதிகளில் வீடு எடுத்துத் தங்கியுள்ளவர்கள்.இவர்கள் அத்தனை பேரும் ஆஸ்திரேலியா செல்வதற்காக சென்னையைச் சேர்ந்த ரூபன் என்பவரிடம் ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை பணம் கொடுத்துள்ளனர்.

இவர்களிடம் மொபைல் உள்பட பல பொருட்களை வாங்கி வைத்துக்கொண்ட ரூபன்,‘ஆஸ்திரேலியா செல்வதற்கு முறையான ஏற்பாடுகள் செய்ய ஒரு மாத காலம் ஆகும்.அதுவரை நீங்கள் தமிழ்நாட்டை சுற்றிப்பார்த்து வாருங்கள்!’என்று அனுப்பி வைத்திருக்கிறார்.

சென்னையிலிருந்து இருவாரங்களுக்கு முன்பு புறப்பட்ட இவர்கள் திருப்பரங்குன்றம், குற்றாலம், திருச்சி, மதுரை என்று சுற்றிவிட்டு, நான்கு நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் கூடலூரில் தனியார் வீடுகளை வாடகை எடுத்துத் தங்கியுள்ளனர்.

இலங்கை அகதிகள் சொல்லச்.சொல்ல..போலீஸாருக்குத் தலைசுற்ற ஆரம்பித்தது. ‘உங்களுக்கு கூடலூரில் வீடுகள் ஏற்பாடு செய்து கொடுத்தது யார்’ என்று அகதிகளிடம் போலீஸார் கேட்டனர்.

‘எல்லா ஏற்பாடுகளையும் செய்தது ரூபனின் ஆட்கள்தான். அவருடைய தொலைபேசி எண் கூட எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவரிடம் எங்கள் கைபேசி எண்களும் உண்டு. ரூபன் சொன்னதாகச் சொல்லி, ‘இங்கு செல்லுங்கள், உதவிகள் கிடைக்கும்’ என்பார்கள். அப்படியே செல்வோம்.அப்படித்தான் எங்களுக்கு ஒருவர் போன் செய்து வீடுகள் அரேஞ்ச் செய்து கொடுத்தார்!’ என்றனர்.

கடைசியில் இவர்களை நீலகிரி எஸ்.பி.மகேஷ்குமாரே நேரடியாக ஒருநாள் முழுக்க விசாரித்து,‘இவர்களில் யாரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை.யாரிடமோ ஆஸ்திரேலியா செல்வதற்கு பணம் கொடுத்துள்ளார்கள் என்பதை பதிவு செய்து, அனைவரையும் அகதிகள் முகாம்களுக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து க்யூ பிராஞ்ச் போலீஸாரிடம் பேசியபோது,“அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்களுக்கு வருடத்தில் மூன்று மாதங்கள் வெளியே சுற்றுலா செல்ல அனுமதியுண்டு.இவர்கள் அப்படி வந்தவர்களாகத் தெரியவில்லை.இலங்கையிலிருந்து புதிதாக வருபவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தவுடன்,ஆஸ்திரேலியா செல்வதிலேயே விருப்பம் காட்டுகிறார்கள்.

அங்கே சென்றதும்,தாங்கள் நிராயுதபாணிகள் என்று சரணடைந்து விடுகின்றனர். சரணடையும் அகதிகளுக்கு மறு வாழ்வு தர அந்நாட்டு சட்டத்தில் இடமுண்டு. அவர்கள் சில மாதம் சிறையில் அடைக்கப்படுவர். பின்னர் விடுதலை ஆனதும் அவர்களுக்கு வேலை கொடுப்பார்கள்.

இதை வைத்து தமிழகத்தில் பெரிய அளவில் பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவன்தான் ரூபன். இலங்கை அகதிகளை இவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு எப்படி அனுப்புகிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்!’’ என்றனர்.

சமீபத்தில் சென்னை மண்ணடியில் சுற்றித் திரிந்த 3பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது, ‘‘ஆஸ்திரேலியா செல்லப் போகிறோம்’’ என்று பதில் சொன்னார்கள். போலீஸார், ‘பாஸ்போர்ட், விசாவைக் கேட்க’ அவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறியுள்ளனர்.அவர்களை துருவித் துருவி விசாரித்தபோது,‘‘இங்குள்ள ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்துவிட்டால் படகுகளில் ஏற்றி ஆஸ்திரேலியாவில் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார்கள்’’ என்று கூலாகச் சொல்லியுள்ளனர்.

ஏதோ ஆண்டிபட்டிக்கு அனுப்பி வைப்பது போல இலங்கைத் தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல். இவ்வளவு நாள் உளவுத்துறைக்கும் ,க்யூ பிராஞ்ச் போலீஸாருக்கும் இந்த விஷயம் தெரியாதது, ‘ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருக்கிறது’ என்கின்றனர் உள்ளூர் போலீஸார்.

கா.சு.வேலாயுதன்

- குமுதம் ரிப்போட்டர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை. நான் நம்பாமைக்கான காரணம் - என்னை பொறுத்தவரை, இந்த கட்டுரையை பார்த்தால் புரியும் - இது மன அளுத்தம் பற்றிய தரவு அடிப்படையில்தான் எழுத பட்டுள்ளது. இலங்கையில் பலரின் மன அளுத்தம் ரெக்கோர்ர்டில் வருவதில்லை. ஆனால் யூகேயில் சும்மா அப்செட்டா இருந்தாலே மைல்ட் டிப்ரெசன் என ரெக்கோர்ர்ட்டில் எழுதி விடுவார்கள். இதுதான் பெரிய காரணம் என நினைக்கிறேன். மற்றும்படி எது மகிழ்சி என்பது வரைவிலக்கண படுத்த முடியாத ஒன்றல்லவா? ஆகவே இந்த வகை கணிப்பில் எனக்கு நம்பிக்கை பெரிதாக இல்லை. ஆனால் 5 மணி நேரம் உறங்கும் நாட்டை விட 8 மணி நேரம் உறங்கும் நாட்டில் மக்கள் relaxed ஆக இருப்பார்கள் என்பது சரிதான். நாம் இங்கே இருந்து போய் அந்தரப்படுவோம், அவர்கள் ஆமை வேகத்தில் இருப்பதை பார்க்க சினமும் வரும். ஆனால் இதையே அனுபவித்து வரும் வெள்ளையினத்தவர் உங்கள் நாட்டுக்காரார் very laidback என புழுகுவார்கள். கூடவே சூரிய ஒளியை விட மனதை, உடலை தெம்பூட்டும் அருமருத்து ஏதும் இல்லை என்பது என் கருத்து.
    • நாங்கள் பூமர் அங்கிள்கள் மாரி புறுபுறுக்கிறொமோ எண்டு சில சமயம் யோசிப்பேன். மணவறை செட் எமக்கு எம்மோடு ஒன்றிய ஒன்று, ஆனால் நிச்சயமாக 1920 இல் அந்த வழக்கம் இருந்திராது. அதே போலத்தான் தலைப்பாகை செட்டும். ஏதோ ஹிந்தி காரன் போல அல்லவா இருக்கிறது? முன்பு சால்வையை மடித்து கட்டி இருப்பார்கள். கேக் வெட்டுவது, ஹோம் கமிங், வீடியோ எடுப்பது, இவை எல்லாமுமே எமக்கு கொஞ்சகாலம் முன் போய் பர்த்தால் இருந்திராது. மாறிக்கொண்டே இருப்பதுதானே கலாச்சாரம். புறுபுறுக்கமட்டுமே முடியும்🤣.
    • 🤣 இறக்குமதி தடை இல்லாத போதும் பல கெடுபிடிகள், விதிகள் இருந்தது.  3 வருட புதிய வாகனத்தைதான் இறக்கலாம். சலுகை பெர்மிட்டுகள் இல்லாதவிடத்து 100% முதல் 300% வரை வாகனத்தின் கொள்விலையில் வரி அடிப்பர்.  எப்படியும் இங்கே 18,000£ க்கு வாங்கும் காரை அங்கே குறைந்தத்து 36,000£ தான் விலை சொல்வார்கள். இனி வரி விதிப்பு இன்னும் அமோகமாக இருக்கும்.   ஒருவருக்கும் இதை பற்றிய தெளிவு கொஞ்சமும் இல்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.