கருத்துக்களம்: ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஆவணநூல் சென்னையில் வெளியீடு - கருத்துக்களம்

Jump to content

பரிசுப்போட்டி முடிவுகள்(FIFA 2010): (1) கறுப்பி - 63.5 புள்ளிகள் | (2) இணையவன் - 60 புள்ளிகள் | (3) கந்தப்பு - 60 புள்ளிகள் | (4) அபிராம் - 59.5 புள்ளிகள் | (5) மறுத்தான் - 58.5 புள்ளிகள்
Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஆவணநூல் சென்னையில் வெளியீடு

#1 User is offline   shanthy 

  • முல்லைமண்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 1,365
  • Joined: 08-July 03
  • Gender:Female

Posted 24 December 2009 - 07:18 PM

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு இன்று (23-12-09) மாலை சென்னையில் வெளியிடப்பட்டது.
Posted Image
1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்.

Posted Image
(ஓவியர் புகழேந்தி, சட்டவாளர் பால் கனகராஜ், புலவர் புதுமைப் பித்தன், ஊடகவியலாளர் கவிதா முரளிதரன், சட்டவாளர் சுதா ராமலிங்கம் ஆகியோர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் அமர்ந்திருக்கின்றனர்.)

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட இரு புத்தகங்களும் வெளிடப்பட்டன. சென்னையைச் சேர்ந்த 'மனிதம் அமைப்பு' புத்தகத்தை பதிப்பித்திருந்தது.

கிளிநொச்சியில் இருந்து செயற்பட்ட வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினால் சேகரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களே தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளன.

புத்தக வெளியீட்டு நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளர் அமைப்பின் தலைவர் பால் கனகராஜ், பி.யூ.சி.எல். மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் சட்டவாளர் திருமதி சுதா ராமலிங்கம், ‘தி வீக்’ ஆங்கில வார ஏட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி கவிதா முரளிதரன், ஓவியர் புகழேந்தி, ஈழ ஆர்வலர்கள் ஜனார்த்தனன், கிருபானந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Posted Image
(தமிழினப் படுகொலைகள் புத்தகத்தை புலவர் புதுமைப்பித்தன் வெளியிட்டு வைக்க ஓவியர் புகழேந்தி, சட்டவாளர் பால் கனகராஜ், ஊடகவியலாளர் கவிதா முரளிதரன், சட்டவாளர் சுதா ராமலிங்கம் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.)

“இந்தப் புத்தகத்தில் 150 படுகொலைகள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. அவற்றில் நான்கைந்தைப் படித்தாலேயே ஈழத்தில் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு கதைகளும் எமது இரத்தத்தைக் கொதிக்கச் செய்யும் ஆத்திரமுறச் செய்யும். அந்தளவிற்கு அங்கு அரச பயங்கரவாதம் நிகழ்ந்துள்ளது” எனத் தெரிவித்தார் ‘மனிதம்’ மனித உரிமைகள் அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம்.

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.


(வெளியிடப்பட்ட புத்தகத்துடன் புலவர் புதுமைப்பித்தன், சட்டவாளர் பால் கனகராஜ், ஊடகவியலாளர் கவிதா முரளிதரன்.)

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்த நூல் வெளியிடப்பட்டாலும் மொழிபெயர்ப்பாக அல்லாமல் ஒவ்வொன்றும் அந்தந்த மொழிகளில் தனித் தனியாக எழுதி வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்ப் புத்தகத்தில் அதிகளவான விபரங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளதாக அக்னி சுப்ரமணியம் தெரிவித்தார்.

விரைவில் ஜெர்மன், பிரெஞ், இத்தாலி, டச் ஆகிய மொழிகளில் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

செய்தி மூலம் புதினப்பலகை.
Email - rameshsanthi@gmail.com
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்
Posted Image
முல்லைமண் வலைப்பூ

ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்களின் பயங்கரவாதம் யுத்தம்.
- சேர் பீற்றர் உஸ்டினோ -
-1

Advert

#2 User is offline   தமிழ் சிறி 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 8,823
  • Joined: 19-February 08
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.

Posted 24 December 2009 - 07:40 PM

எனக்கு இந்த புத்தகத்தை வாங்கவோ ...., வேண்டாமோ...... என்று யோசனயாக உள்ளது.
நான் இழந்த இழப்பை மீண்டும் மீட்டிப்பார்க்க எனக்கு தைரியம் இல்லை.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
0

#3 User is offline   ரதி 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 1,397
  • Joined: 14-November 08
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:reading

Posted 24 December 2009 - 09:25 PM

தகவலுக்கு நன்றி... இதை தமிழர் படிப்பதிலும் பார்க்க பிற நாட்டவர் படிக்க வேண்டும்
இன்று என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு சமனாகும்.
0

#4 User is online   nunavilan 

  • Advanced Member
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 16,821
  • Joined: 13-October 06
  • Gender:Male
  • Location:USA
  • Interests:Surfing

Posted 25 December 2009 - 01:20 AM

சாந்தி அக்கா இதன் ஆங்கில வடிவத்தை எப்படி பெற்றுக்கொள்ளலாம்.? ISBN இலக்கம் உள்ளதா? நேரடியாக இந்தியாவுக்கு தான் தொடர்பு கொள்ள வேண்டுமா?
Posted Image

தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட .முத்துக்குமார்
0

#5 User is offline   shanthy 

  • முல்லைமண்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 1,365
  • Joined: 08-July 03
  • Gender:Female

Posted 25 December 2009 - 09:18 AM

View Postnunavilan, on 25 December 2009 - 02:20 AM, said:

சாந்தி அக்கா இதன் ஆங்கில வடிவத்தை எப்படி பெற்றுக்கொள்ளலாம்.? ISBN இலக்கம் உள்ளதா? நேரடியாக இந்தியாவுக்கு தான் தொடர்பு கொள்ள வேண்டுமா?

இப்புத்தகம் வெளிநாடுகளுக்கு விரைவில் வரவுள்ளது. ஐரோப்பாவிற்கு விநியோகஸ்தர்கள் ஏற்பாடுகள் சரி. இதர நாடுகளுக்கு சாத்திரி தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறார். மற்றும் இணையத்தில் வாங்கும் வசதியும் வரவுள்ளது. வெளிநாடுகளில் வெளியீடு பற்றிய விபரங்கள் உங்களுக்கு அனுப்பிவிடுவோம் நுணாவிலான்.

மற்றும் இன்னும் 4மொழியில் இப்புத்தகம் வரவுள்ளது. ஜனவரியில் அடுத்த சில மொழிகளில் புத்தகம் வெளிவரவுள்ளது.

View Postரதி, on 24 December 2009 - 10:25 PM, said:

தகவலுக்கு நன்றி... இதை தமிழர் படிப்பதிலும் பார்க்க பிற நாட்டவர் படிக்க வேண்டும்


தமிழ் தவிர்ந்த 5மொழிகளில் வெளிவரவுள்ளது. டொச் , பிரெஞ்ச் மொழிகளுக்கான சகல ஏற்பாடுகளும் முடியும் தறுவாயில் உள்ளது. ஜனவரிக்கு இவ்விரு மொழிகளிலும் புத்தகத்தை எதிர்பார்க்கலாம் றதி.

View Postதமிழ் சிறி, on 24 December 2009 - 08:40 PM, said:

எனக்கு இந்த புத்தகத்தை வாங்கவோ ...., வேண்டாமோ...... என்று யோசனயாக உள்ளது.
நான் இழந்த இழப்பை மீண்டும் மீட்டிப்பார்க்க எனக்கு தைரியம் இல்லை.


சிறி,
டொச்சில் வரும் இந்நூலில் ஒன்றை உங்களுக்குத் தெரிந்த அல்லது உங்கள் யேர்மனிய நண்பருக்குக் கொடுக்கலாம். அந்த ஒருவர் மூலம் பலரை இந்த விடயம் போய்ச்சேரும் வாய்ப்பு உள்ளது.
Email - rameshsanthi@gmail.com
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்
Posted Image
முல்லைமண் வலைப்பூ

ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்களின் பயங்கரவாதம் யுத்தம்.
- சேர் பீற்றர் உஸ்டினோ -
0

#6 User is offline   shanthy 

  • முல்லைமண்
  • PipPipPip
  • Group: கருத்துக்கள உறவுகள்
  • Posts: 1,365
  • Joined: 08-July 03
  • Gender:Female

Posted 25 December 2009 - 07:49 PM

TN MPs lost golden opportunity to save one lakh Lankan Tamils: Poet Pulamaipithan

Chennai, December 24:

Had all the Tamil Nadu Members of Parliament stood firm on their resignations in October 2008, they as well as we would have saved more than a lakh innocent Tamils from death in Sri Lanka, pro-Tamil poet Pulamaipithan has said.

Addressing a gathering of people during the release of a book on massacres in Lankan Tamil areas from 1956 to 2008 here, Pulamaipithan said, “If those resignations by state MPs were not withdrawn in the last moment, the central government would have lost its chance to stay in power till May, thus not much help been sent to Sri Lanka to carry out its Tamils’ elimination mission.”
Not only the MPs were responsible for the death of more than a lakh innocent Tamils from October-2008 to May this year, we the seven crore Tamils living in the state were also equally responsible for the bloody massacre, he observed.

“If we think Lankan president Mahinda Rajapakse is alone the culprit for the mass extermination of innocent Tamils in the final days of Eelam War, we are wrong since we the Tamils in the state are also responsible for aiding it by silently let him to complete the task,” Pulamaipithan said.

Published in Tamil and English simultaneously on Thursday, the book comprehensively recounts 160 gory massacres including Veeramunai Massacre-1990, Saththrukkondan Massacre-1990, Vantharumoolai Massacre (Eastern University camp)-1990, Chemmani Massgraves-1996, Krishanthi-Rape and Murder-1996 and Bindunuwewa Rehabilitation Centre Carnage in 2000.
Manitham, a city-based human rights organisation, has published the book based on details compiled by a local NGO, North East Secretariat on Human Rights (NESoHR), operated from Kilinochchi.

- New Indian Express - Saravanan, Chennai
Email - rameshsanthi@gmail.com
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்
Posted Image
முல்லைமண் வலைப்பூ

ஏழை மக்களின் யுத்தம் பயங்கரவாதம். பணக்காரர்களின் பயங்கரவாதம் யுத்தம்.
- சேர் பீற்றர் உஸ்டினோ -
0

Share this topic:


Page 1 of 1
  • You cannot start a new topic
  • You cannot reply to this topic

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]