-
Tell a friend
-
Topics
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: DIGITAL DESK 3 13 MAY, 2024 | 10:55 AM வட ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையால் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வெள்ளத்தில் சிக்கி 315 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,600 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, கால்நடைகளும் அழிந்துள்ளன. வீதிகள் சேற்றில் புதைந்திருப்பதோடு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் நீர் வழங்கல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதாக உதவிக் குழுக்கள் எச்சரித்துள்ளன. குடும்பத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 13 உறுப்பினர்களையும் இழந்த முஹம்மது யாகூப் கூறுகையில், "எங்களுக்கு உணவு இல்லை, குடிநீர் இல்லை, தங்குமிடம் இல்லை, போர்வைகள் இல்லை, எதுவும் இல்லை, வெள்ளம் அனைத்தையும் அழித்துவிட்டது," உயிர் பிழைத்தவர்கள் வாழ போராடுகிறார்கள். 42 வீடுகளில், இரண்டு அல்லது மூன்று வீடுகள் மாத்திரமே எஞ்சியுள்ளன, வெள்ளம் முழு பள்ளத்தாக்கையும் அழித்துவிட்டது என்றார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான அமைப்புகள் மற்றும் தனியார் வணிகங்களை தலிபானின் பொருளாதார அமைச்சர் டின் முகமது ஹனிஃப் வலியுறுத்தியுள்ளார். "உயிர்களும் வாழ்வாதாரங்களும் கழுவப்பட்டுவிட்டன," "திடீரென வெள்ளம் கிராமங்களை அழித்து, வீடுகளையும் அழித்து கால்நடைகளை கொன்றது." மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 310,000 சிறுவர்கள் வசிக்கின்றனர் என சேவ் தி சில்ரன் ஆப்கானிஸ்தான் பணிப்பாளர் அர்ஷத் மாலிக் தெரிவித்துள்ளார். பாக்லான் மாகாணத்தில் மாத்திரம் 153 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் எண்ணிக்கை உயரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் சபையால் கருதப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதையடுத்து அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளின் உதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் குறிப்பாக பெண்களுக்கு கல்வி கற்க தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/183376 -
ரபா மீது பாரிய நடவடிக்கையை மேற்கொண்டால் மேலும் பல ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்த்வேண்டியிருக்கும் - இஸ்ரேலிற்கு அமெரிக்கா எச்சரிக்கை 13 MAY, 2024 | 10:44 AM இஸ்ரேல் ரபாவின் மீது இராணுவநடவடிக்கையை முன்னெடுத்தால் அந்த நாட்டிற்கான மேலும் பல ஆயுத விநியோகத்தினை நிறுத்தவேண்டிய நிலையேற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ரபாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவநடவடிக்கை காரணமாக பாரிய உயிரிழப்புகள் ஏற்படலாம் என்ற கரிசனைகளை தொடர்ந்து குண்டுகள் அடங்கிய கப்பலொன்றை இஸ்ரேலிற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் அப்பாவி மக்களின் கொடுரமான உயிரிழப்புகளை அன்டனி பிளிங்கென் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் மேலும் இடங்களை கைப்பற்றினால் ஒரு வெற்றிடம் உருவாகும் அந்த வெற்றிடம் குழப்பம் அராஜகம் மற்றும் இறுதியில் ஹமாசினால் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ரபாவிலிருந்து மக்களை பலவந்தமாக வெளியேற்றுவது என்ற இஸ்ரேலின் பிடிவாதத்தினால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தன்னை பாதுகாப்பதற்கு உதவுவது குறித்து ஜனாதிபதி ஜோபைடன் உறுதியாகவுள்ளார் என என்பிசி சிபிசிக்கு தெரிவித்துள்ள அன்டனி பிளிங்கென் குண்டுகளை விநியோகிப்பதை மாத்திரம் அமெரிக்கா தற்போது நிறுத்திவைத்துள்ளது எனினும் இஸ்ரேல் ரபா மீது முழுமையான தாக்குதலை மேற்கொண்டால் இந்த நிலை மாறாலாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183380
-
தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்தியது போல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? - அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி Published By: DIGITAL DESK 7 13 MAY, 2024 | 01:10 PM தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார். அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவரால் இன்று திங்கட்கிழமை (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உப்பு கஞ்சி பகிர்வோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்திருக்கையில் சம்பூர் பொலிஸார் கஞ்சி பகிருதலை தடுப்பதற்காக மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவை பெற்றிருப்பதோடு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் என இதுவரை நால்வரை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மக்கள் ஒன்று கூடுதல் மூலம் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது எனவும் காரணம் காட்டி உள்ளனர். இது கொரோனா காலத்தில் பயன்படுத்திய சொற் தொடராகும். அதனையே மீண்டும் நினைவேந்தலை தடுத்து நிறுத்தும் ஆயுதமாக கையில் எடுத்திருப்பதும் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதும் இறந்தவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். சம்பூர் பொலிஸார் இத்தகைய அராஜக செயலை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு எதிர்வரும் வெசாக் பண்டிகையின் போது அதே தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? எனவும் கேட்கின்றது. பேரினவாத ஸ்ரீலங்கா அரசு சர்வதேச சக்திகள் பேராதரவோடு 2009 இல் இனப்படுகொலையை அரங்கேற்றி கொண்டிருக்கையில் ஆண்கள், பெண்கள் என பெரியோர் முதல் சிறுவர் வரை சதை பிண்டங்களாக இரத்த வெள்ளத்திலும் கொல்லப்பட்டும் காயங்களோடும் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கையில் இன்னும் ஒரு பக்கம் மக்கள் பட்டினியோடு வெறும் உப்பு கஞ்சிக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்த பேரவலத்தை தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது. இவ் வரலாற்று பேரவலத்தினை நினைவு கூறவும் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு, காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்கவும் கடந்த 15 வருட காலமாக தமிழர் தாயகம் எங்கும் முடிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் கஞ்சி பகிர்வதோடு மே 18ஆம் திகதி நினைவேந்தல் நடத்தப்படுகின்றது. உப்பு கஞ்சி மக்களின் நீதிக்கான குரலின் அடையாளமும், ஆயுதமும் ஆகும். இதற்கு எதிராக செயற்படுவதற்கு பொலிஸார் நீதியை மடக்கி தம் பக்கம் சாய்ப்பதும் தமிழர்களின் நீதியின் ஆயுதமான கஞ்சியை தட்டிப்பறித்து நீதி குரலை அடக்க நினைப்பது அராஜகமாகும். சம்பூர் பொலிஸார் பெற்றிருக்கும் நீதிமன்ற தடையுத்தரவை மீளப்பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றோம். அத்தோடு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு காரணமாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் அவர்களையும் பாடசாலை மாணவி உட்பட பெண் சமூக செயற்பாட்டாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கூறுகின்றோம். இத்தகைய கைதுகள் நீதியை தடுத்து விட முடியாது என்பதையும் உறுதியாக கூறுகின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் நாம் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு உரையாடிய போது சாதகமான பதிலளித்தமை மகிழ்ச்சியே. இவ்வாறு பொலிஸ் நிலையத்தினரும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்கின்றோம். உப்பு கஞ்சியை சுதந்திரமாக குடிக்கவிடு எனும் மக்களின் நீதி குரலை, அரசியல் குரலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 வது ஆண்டிலாவது சர்வதேசத்தின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. https://www.virakesari.lk/article/183395
-
இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்
-
இலங்கை வந்தார் அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ! Published By: PRIYATHARSHAN 13 MAY, 2024 | 11:57 AM தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ இம்மாதம் 10 - 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இன்றையதினம் காலை இலங்கைக்கு வருகைதந்துள்ளார். இவ்விஜயமானது இந்நாடுகளுடனான அமெரிக்காவின் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதையும், சுதந்திரமானதும், சுபீட்சமானதுமான இந்திய - பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்துவதையுமே பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அதன்படி வெள்ளிக்கிழமை (10) இந்தியாவை சென்றடைந்திருந்த இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, தென்னிந்தியாவுடனான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சென்னையில் கொன்சியூலர் அதிகாரியுடன் சந்திப்பை முன்னெடுத்திருந்தார். இதனையடுத்து இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ள டொனால்ட் லூ, கொழும்பில் உயர்மட்ட அரசியல் தலைமைகள் பலருடனும் சந்திப்புக்களை நடாத்தவுள்ளார். இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். அதுமாத்திரமன்றி இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்க வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பில் மீள் உத்தரவாதத்தை வழங்கவுள்ள அவர், சுதந்திரமான ஜனநாயக சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக சிவில் சமூகத்தை வலுவூட்டவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தவுள்ளார். https://www.virakesari.lk/article/183389
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
-
- 5 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.