Jump to content


Tamil Star News
Photo

அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம்


  • Please log in to reply
14 replies to this topic

#1 ஆதிவாசி

ஆதிவாசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,758 posts
  • Location:kaadu

Posted 31 August 2009 - 08:16 PM

வணக்கம்
கன நாளைக்குப் பிறகு சுவைஞர்கள் பகுதிக்கு ஆதிநைனா வந்துள்ளேன். உள்ளாரக் கூப்பிடுங்க. பயப்படாதீங்க எல்லாருக்கு நல்லது செய்யத்தான் வந்திருக்கிறன். ஒரு காலத்தில கனபேரின் வால்கள் வளர்ந்ததற்கு ஆதியைக் காரணம் சொன்னாங்க. இனிமே எல்லாருடைய நா வளர்ச்சிக்கும் ஆதியை சொல்லுவாங்க. நா என்றால் பேச்சு வன்மையை வளர்க்கப்போறன் என்று நினைக்கப்படாது. சுவைகள் அறியும் நா வளர்ச்சியைத்தான் ஆதிநைனா ஆரம்பிக்கப்போறன். இங்க ஆதிநைனா போடுற அட்டில் இரகசியங்களை வாசிக்கிற நீங்களே வச்சுக்கொள்ள வேணும் செயல்முறையைச் செஞ்சு பாக்கவேணும். பின்னாடி உங்க உங்க எசமானிகள் என்ர வீட்டு எசமானியைக் கூப்பிட்டு உன் வீட்டுச் சமையல்காரனின் செய்முறைப் பதிவால தாங்கள் வீட்ல நிம்மதியா இருக்க முடியுதில்லை என்று முறைப்பாடு செய்ய இடம் வைக்கக் கூடாது விளங்கிச்சோ. நான் போடுற உணவுகளைச் செய்து கொடுத்து உங்க வீட்டு எசமானிகளை உங்க செல்லப்பிராணிகள் ஆக்கிறது உங்க கையிலதான் இருக்கு சொல்லிப்போட்டன். ஸ் சத்தம் போடாதேங்கோ பெடியள் ஏற்கனவே இங்க ஒரு அட்டில் உலையரிசி….ச்சீச்சீ….அட்டில் கலையரசி இருக்கிறா நீங்கள் ஆர்ப்பாட்டம் பண்ணினா அழுதிடுவா பாவமில்லையோ…..

சரி இதுக்கு ஒரு கவர்ச்சியான ஆரம்பத்த குடுக்கோணும்… ஆதி மண்டையைக் குடைஞ்சு குடைஞ்சு யோசிச்சு…யோசிச்சு உருவாக்கி இருக்கிறன்.
அறிஞர் ஆதிநைனாவின் ந(கை/ள)பாகம்

என்ன எல்லாரும் ரெடியா ஆதிநைனாவின் ந(கை/ள)பாகத்தைச் சுவைக்க… இங்க வந்து டாப்புப் பதிஞ்சாத்தான் ஆதிநைனாவுக்கு நா வளர்க்க ஆசைப்படுற சீவன்களைத் தெரியும். சுவார்ஸ்யம் உள்ள பிறவிகள் ஆதிக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கோணும் எண்டு வேண்டிக் கொள்கிறன். அட்டில் கலை உலகிற்குள் ஆதிநைனா அகப்பைத் தடம் பதிக்கலாமோ?
Posted Image
வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்
வம்பு செய்யவில்லை விதி விளையாடுது.

Advert

#2 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,163 posts
  • Gender:Not Telling

Posted 31 August 2009 - 08:54 PM

வணக்கம் நைனா :lol:
வாங்கோ..
நாங்க எல்லாம் சாப்பாட்டு ராமன்கள் நைனா..

ஆமா கட்டினவங்க எல்லாரும் என்ன இப்படி நொந்து சே...
மாவாட்டிட்டு இருக்கிறிங்களோ :lol:
என்ன தலையணை மந்திரமோ நாயாகவே(செல்ல பிராணி) இருக்கிறிங்க,வச்சிருக்கிறிங
க நைனா :lol:
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#3 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,449 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 31 August 2009 - 09:01 PM

யாருக்காவது Constipation இருந்தால் இந்தப் பக்கம் வரவும். னைநாவின் நளபாகம் பார்த்துட்டு ஏற்படும் பின் விளைவுகளுக்கு அவரே மருந்தும் சொல்லுவாராம்

#4 ஆதிவாசி

ஆதிவாசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,758 posts
  • Location:kaadu

Posted 31 August 2009 - 11:06 PM

ஜீவா செல்லப்பிராணிகளுக்கு கிடைக்கிற மருவாதை எங்கே மனுசர்களுக்குக் கிடைக்குது?

இப்ப இதைப் பாத்துக் கொண்டு இருங்கோ செய்முறை விளக்கத்தை என்ர கடைக்குட்டி கப்பல் விட்டுட்டான். திரும்ப எழுதி.... வாறதுக்கு என்ர பிஏ வரவேணும் அதுவரைக்கும் Rம்மா இருக்காமல் இந்தப் படத்தைப்பாருங்கோ.

Posted Image
Posted Image
வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்
வம்பு செய்யவில்லை விதி விளையாடுது.

#5 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,414 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 01 September 2009 - 12:59 AM

பார்க்க சாபிடவேனும் போல ஆசையாக இருக்கு. எடுத்து விடுங்கோ உங்க நள பாகத்தை.
.ஆவலோடு காத்திருக்கிறோம்

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#6 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,610 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 01 September 2009 - 01:33 AM

எடுத்து விடுங்கோ ஆதி உங்கள் கைவண்ணத்தை.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#7 ஆதிவாசி

ஆதிவாசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,758 posts
  • Location:kaadu

Posted 02 September 2009 - 04:41 PM

நன்றி நன்றி திங்களறிவு மற்றும் நிழலி, நுணுக்கம்.



கணவாய் பிரட்டல்

கணவாய் - 1
எண்ணெய் - 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6
பச்சைமிளகாய் - 2
பெருஞ்சீரகம் - சிறிதளவு
கருவேப்பிலை
உள்ளி – 4
மிளகாய்த்தூள் - 3 தேக்கரண்டி
பழப்புளி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
முக்கியமானவை சமைக்கும் பாத்திரம் மற்றும் அடுப்பு

செய்முறை –
(முக்கிய குறிப்பு மத்திமச்சூட்டில் அடுப்பை வைத்திருத்தால் மாத்திரமே உணவு சுவையானதாக இருக்கும்.)


1. முதலில் கணவாயைச் சுத்தமாக்கி துண்டுதுண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2. வெங்காயங்களையும், ,உள்ளிகளையும் சிறுசிறுதுண்டுகளாகவும், பச்சை மிளகாய்கயை நீளப்பாட்டுக்கு பிளந்தும் வைத்துக் கொள்க.

3. அடுப்பில் நீங்கள் சமைக்க இருக்கும் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை விட்டுச் மெல்லிய சூட்டில் சூடேற்றவும்.

4. சூடேறிய எண்ணெயில் முதலில் பெருஞ்சீரகத்தைப் போட்டு வாசம் வரும்போது வெட்டி வைத்த வெங்காயம், உள்ளி, பச்சைமிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து வதங்கவிடவும்.

5. இளம்பருவமாக வதங்கியவுடன் கருவேப்பிலையைச் சேர்த்துக் கொள்ளவும்.

6. கருவேப்பிலை வாசைன கமகமக்கும் போது நறுக்கி வைத்திருக்கும் கணவாய்த்துண்டுகளை அதனுடன் சேர்த்து கிளறி மூடி மத்திமச் சூட்டில் அவியவிடவும்.( ஊசிக் கணவாய், குண்டுக்கணவாய் அவியும் நேரத்தில் வித்தியாசம் உண்டு)

7. தண்ணீர் விடவேண்டிய தேவை இருக்காது. கணவாய் தானே கண்ணீர்விட்டு அவியும். அதன் தண்ணீர் வற்றிய மாதிரித் தெரியும் தருணத்தில் மிளகாயத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறவும்.

8. இப்போது கரைத்து வைத்திருக்கும் பழப்புளியையும் விட்டு கிளறி பிரட்டல் ஆக்கி சிறிது வேக விடவும்.

9. இப்போது கணவாய் பிரட்டல் ரெடி.



Posted Image
Posted Image
வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்
வம்பு செய்யவில்லை விதி விளையாடுது.

#8 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,163 posts
  • Gender:Not Telling

Posted 02 September 2009 - 06:07 PM

நல்லாத்தான் இருக்கு நைனா.வாயூறுது :( ஆனா ஊருற எதுவும் நான் சாப்பிடுவதில்லை :(
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#9 ஆதிவாசி

ஆதிவாசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,758 posts
  • Location:kaadu

Posted 09 September 2009 - 06:58 PM

நல்லாத்தான் இருக்கு நைனா.வாயூறுது :lol: ஆனா ஊருற எதுவும் நான் சாப்பிடுவதில்லை :o

ஜீவா நான் பாம்புக்கறிக்கா செய்முறை போட்டிருக்கிறன்?
Posted Image
வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்
வம்பு செய்யவில்லை விதி விளையாடுது.

#10 கறுப்பி

கறுப்பி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 26,459 posts
  • Gender:Not Telling
  • Location:London

Posted 09 September 2009 - 09:26 PM

இந்த கறி எல்லாம் நாம சாப்பிடுவது இல்லை.
நமக்கு எப்பவுமே சைவ சாப்பாடுதான்.
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#11 ஆதிவாசி

ஆதிவாசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,758 posts
  • Location:kaadu

Posted 11 September 2009 - 06:04 PM

இந்த கறி எல்லாம் நாம சாப்பிடுவது இல்லை.
நமக்கு எப்பவுமே சைவ சாப்பாடுதான்.

என் கறுப்புத் தேவதையே அடுத்த படையல் உன் வேண்டுதலுக்கே. :rolleyes:
Posted Image
வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்
வம்பு செய்யவில்லை விதி விளையாடுது.

#12 செவ்வந்தி

செவ்வந்தி

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 521 posts
  • Gender:Female
  • Location:மலர்வனம்

Posted 13 September 2009 - 09:09 PM

பழப்புளி விடாம தேசிப்புளி விடலாமா? :icon_idea:

#13 ஆதிவாசி

ஆதிவாசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,758 posts
  • Location:kaadu

Posted 22 June 2010 - 09:46 PM

பழப்புளி விடாம தேசிப்புளி விடலாமா? <_<

மப்புல தோயாம எங்கட சின்னா, சாத்து, கு.சா, முகத்தார், லேட்டஸ் நிழலி மாதிரி ...ஸ்ரெடியா... எப்பிடி?... ஸ்ரெடியா நிக்கோணும் எண்டால் தேசிக்காயை அவசியம் சேர்க்க :huh: :wub: :lol: :o :o
Posted Image
வாயாடவில்லை எந்தன் வாலாடுது - நான்
வம்பு செய்யவில்லை விதி விளையாடுது.

#14 suvy

suvy

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,017 posts
  • Gender:Male
  • Location:France

Posted 23 June 2010 - 01:43 PM

நல்லதொரு பிரட்டல் ஆதி! ஆனால் உங்களது கறுப்புத் தேவதைக்கு தரும் படையல் குறிப்பையே எதிர்பாத்து ஆவலோடு, வாய் ஊறலோடு காத்திருக்கிறேன்! <_<
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி!!!

#15 சின்னப்பு

சின்னப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,673 posts
  • Gender:Male
  • Location:kundus afghanistan

Posted 20 August 2010 - 06:35 PM

:huh: ஓய் அப்பிடியே நம்மட அயிட்டத்தையும் போடுமன்..
இருக்கட்டும் தேசிக்காய் தலையில தானெ தேக்கிறது.....
கள்ளடிப்போர் வாழ்வர் மற்றதெல்லாம் அடிப்போர் குடலழிந்து சாவர்




Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]