Jump to content

புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளார்கள்;எரிக் சொல்கைம்!


Recommended Posts

தமிழீழ விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளனர் என நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார். எரிக் சொல்கைம் விடுதலைப் புலிகளுடன் பல தடவைகள் இன்று(17.05.2009) தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசு போரை நிறுத்தி மூன்றாம் தரப்பினரை போர்ப் பகுதிற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றாலும் இன்னும் போர் முடிவுபெறவில்லை என எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்.நோர்வே ஊடகங்களுக்கு தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நன்றி: http://www.tamilseythi.com/world/erik-solh...2009-05-17.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபொய்ட் பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலக் கழிவுகளால் டைபொய்ட் பாக்டீரியா உருவாகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா பரவுகிறது. வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியூர் சென்று வருபவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர். இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களை தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இதயத்துடிப்பு குறைதல், சோர்வு மற்றும் இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். டைபொய்ட் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைத்து சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் தொடர்புடைய தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301826
    • 15 வருடத்துக்கு பிறகாவது இவர் பங்குபற்றுவது ஒரு பெரிய ஆறுதல் . கொஞ்ச மாறுதலின் ஒரு படியாக சொல்லலாம் .
    • சன்ரைசர்ஸ் 3ஆவது அணியாக ப்ளே ஓவுக்கு தகுதி : நான்காவது இடத்திற்கு சென்னை, பெங்களூருக்கு இடையில் போட்டி 16 MAY, 2024 | 11:43 PM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் ப்ளே ஓவ் சுற்றுக்கு 3ஆவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிரமமின்றி முன்னேறியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கும் இடையில் ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை (16) இரவு நடைபெறவிருந்த 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 66ஆவது  போட்டி   மழையினால் கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதற்கு அமைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 போட்டிகளில் 15 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஓவ் சுற்றுக்கு 3ஆவது அணியாகத் தகுதிபெற்றது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தன. இதேவேளை, இந்த மூன்று அணிகளைத் தொடர்ந்து 4ஆவது அணியாக ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெறப்போகும் அணி எது என்பதை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி தீர்மானிக்கவுள்ளது. அப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றால் ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெறும். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஓவ் வாய்ப்பை பெறும். இப் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒருவேளை, அப் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டால் சென்னை சுப்பர் கிங்ஸ் 15 புள்ளிகளைப் பெற்ற ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழையும். https://www.virakesari.lk/article/183735
    • பிள்ளையையும்  கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுறது அமெரிக்காவின் கைவண்ணம் , இந்த வாத்தி என்னத்த செய்றது , சுமாவின் *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்த்தனத்துக்கு முன்னாள் இவர் சண்டித்தனம் எடுபடாது.
    • இன்றைய வானிலை முன்னறிவித்தல் இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் கொழும்பு – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் காலி – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் யாழ்ப்பாணம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் கண்டி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் இரத்தினபுரி – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் https://thinakkural.lk/article/301800
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.