Jump to content

கனேடிய காவல்துறை உத்தியோத்தர்களிற்கும் அதிகாரிகளிற்கும் நன்றிகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.


Recommended Posts

உறவுகளே!

ரொரன்ரோ மற்றும் கனேடிய காவல்துறை உத்தியோத்தர்களிற்கும் அதிகாரிகளிற்கும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.(சிறு சிறு சம்பவங்களைத் தவிர) எங்களிற்கு பாரிய ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கும் காவல்துறையினரிற்கு நாம் நிச்சயமாக நன்றிகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

உறவுகளே உதவுங்கள் நன்றி கூறுவதற்கு. உங்களிற்கு தெரிந்தவர்களைக் கொண்டும் நன்றி கூற வையுங்கள். இதனை CMR & TVIலும் தெரிவியுங்கள்.வேறு நாட்டில் உள்ளவர்களும் அழைத்து நன்றி தெரிவிக்கலாம்.

அத்துடன் மேஜர் டேவிட் மில்லரிற்கும் நன்றி தெரிவிக்கவேண்டும்.

(நன்றிகளை தெரிவித்துவிட்டு இங்கே உங்கள் அந்த அனுபவங்களை பதிவு செய்வீர்களானால் அது எல்லோரையும் ஊக்கப்படுத்தும்.)

Link to comment
Share on other sites

மாதிரிக் கடிதம்:

To: Mayor of Toronto

Dear Mayor Miller,

We respect the right of free speech and the right to protest and demonstrate in Toronto. We believe, the Tamil protesters are very emotional, when they heard that “3,000 civilians feared slaughtered in a single night”.

Two days of heavy shelling of a supposed safe haven inside Sri Lanka’s war zone has killed at least 430 civilians and possibly as many as 1,000 — a government doctor in the area said Monday, May 11, 2009.

The United Nations described the bombardment as a bloodbath, saying that it had killed more than 100 children.

The Tamils grievances are over 60 years old, while the arm struggle has been going on only for the last 30 years. Soon after the Sri-Lankan independence, the Sri-Lankan government was quick to implement anti-Tamil policies, making the Tamils feel aliens in their own native land, and depriving them of basic rights. Tamils were protesting against the discrimination in a Gandian way (that is what people do in democratic countries), but the Sri-Lankan government chose violence as a weapon to suppress the Tamils legitimate aspiration, and force them into submission.

75% relatives of the 450 000 IDPs suffering in North and East of Sri Lanka, are living here in Canada.

Tamil Canadians call upon Canada to,

· Call for an Internationally Monitored Permanent Ceasefire

· Urge Unhindered Access to UN agencies into the “safe-zone”

· Take lead in ending this humanitarian tragedy and help find a peaceful settlement to the ethnic conflict in Sri Lanka.

If Sri Lanka does not accept this, apply economic and diplomatic sanctions against Sri Lanka.

Please convey our message to the Federal Government.

Sincerely,

E-Mail: mayor_miller@toronto.ca

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

u2_610_1.jpg

u2_610_2.jpg

இவற்றுக்கு சேர்த்தே ரொரன்ரோ காவல்த்துறைக்கு நன்றி சொல்லுங்கள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன் போலீசார் ஏன் அவரை தாக்கினார்கள் :lol::( ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்க்கு அவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்க்கு அவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்!

யாராவது இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்ன நடந்தது என்று கூறுங்கள் :lol: ?

Link to comment
Share on other sites

இது வேண்டுமென்று தாக்கப்பட்டது போல் தெரிகின்றது. அந்த இளைஞர் சும்மா நிற்கும்போது பின்பக்கத்திலிருந்து பொலிசாரால் தாக்கப்பட்டிருக்கின்றார். இந்த படங்களுடன் பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லையென்றால் இவர்கள் தாக்கிக்கொண்டே இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சொன்னது காவல்த்துறையினரிடம் கேட்க வேண்டும் என்று தமிழர்களது போராட்டத்தில் ஒரு போதும் வன்முறை இருப்பதில்லை. அவற்றை உருவாக்கும் ஒரு காவல்த்துறையின் முயற்ச்சியாக கூட இருக்கலாம் .இவர் மட்டுமல்ல இன்னும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆனாலும் காவல்த்துறை அதிகாரியின் செய்தியாளர் மாநாட்டில் இதை பற்றி கேள்வி கேட்க ஒரு தமிழ் செய்தியாளர் இருந்திருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம்

Link to comment
Share on other sites

நேற்றும் லண்டனில் காவல் துறையினர் மக்களை பலமாக தாக்கினார்கள், பலருக்கு ஊமைக்காயங்கள், தாக்குதல் நடாத்து பொழுது ஜிரிவி வீடியோ ஆக்கியதாக கேள்வி உற்றேன், ஏற்கனவே ஜீ20 மாநாட்டில் இங்கிலாந்த் பொலிஸ் ஒருவரை கொன்றார்கள், அங்காங்கே பொலிஸ் அதிகளவில் பலத்தை பிரயோகிக்கிறார்கள். எருமைகள் மாதிரி உடம்பை வளர்த்திருக்கும் இந்த எருமைகளுக்கு நன்றி கூறாதீர்கள், நாளைக்கே ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க சொன்னால் அடித்து துரத்துவார்கள், ஏனெனில் பாதிக்கப்படுவது தன் இனம் இல்லையே? ஏதிலியலாய் வந்த ஆதிவாசிகள் தானே?

அவர்கள் தங்கள் கடமையை செய்கிறார்கள், அதாவது நாய் மாதிரி,எஜமானர் குரைக்க சொன்னால் குரைப்பார்கள், கடிக்க சொன்னால் கடிப்பார்கள், அந்த நாய்களுக்கு வேனுமெண்டால் பிஸ்கட் போடுங்கள், நன்றி என்ற பெரிய வார்த்தை சொல்லி கேவலப்படுத்தார்கள்..

Link to comment
Share on other sites

கனேடிய காவல்துறைக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டு உள்ளோம். போராட்டம் என்றால் எப்படியும் அடிபாடுகள், கைதுகள் ஏற்பட சந்தர்ப்பம் இருக்கின்றது. காவல்துறை எமக்கானது மட்டும் அல்ல. நாங்கள் நாங்கள் வாழும் நாடுகளில் ஓர் சிறிய சதவீதமே. அந்தந்த நாடுகளில் வாழும் பெரும்பாலான மக்கள் எமக்கு எதிராக முறைப்பாடு செய்தால் அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கவேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு இருக்கின்றது.

தவிர, காவல்துறையும் சாதாரண மனிதர்களே. அவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும். அதுவும் அரசாங்கத்திடம் கைநீட்டி பணம் வாங்கிக்கொண்டு அரசாங்கத்தின் உத்தரவுக்கு அமைய வேலை செய்யாமல் இருக்க அவர்களால் முடியாது.

நாங்கள் காவல்துறையை கோவிப்பதில் அல்லது காவல்துறையுடன் மல்லுக்கட்டுவதில் பயனில்லை. காவல்துறையுடன் நாங்கள் நல்ல உறவை கட்டி வளர்க்க வேண்டும். அப்போதுதான் நீண்டகாலநோக்கில் நமது போராட்டங்களை நாங்கள் வெளிநாடுகளில் வெற்றிகரமாக நடாத்தமுடியும்.

தெருவில் இறங்க தீர்மானித்தால் அல்லது தெருவை முற்றுகையிட தீர்மானித்தால் நிச்சயம் காவல்துறையிடம் அடிவாங்க, காவல்துறையால் கைது செய்யப்படுவதற்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்.

நாங்கள் எல்லாம் எங்கள் சார்பாக எங்களுக்காக இருக்கவேண்டும் என்று இல்லாது மற்றவர்கள் பார்வையிலும் எங்களை பார்க்க பழகிக்கொள்ள வேண்டும்.

புத்திசாதுரியமாக நடந்தால்தான் நாங்கள் எங்கள் போராட்டங்களில் வெற்றிபெற முடியும். இந்தவகையில் காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பது, அவர்களுடன் நல்லுறவை கட்டி வளர்ப்பது மிகவும் முக்கியமானது.

Link to comment
Share on other sites

நான் சொன்னது காவல்த்துறையினரிடம் கேட்க வேண்டும் என்று தமிழர்களது போராட்டத்தில் ஒரு போதும் வன்முறை இருப்பதில்லை. அவற்றை உருவாக்கும் ஒரு காவல்த்துறையின் முயற்ச்சியாக கூட இருக்கலாம் .இவர் மட்டுமல்ல இன்னும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆனாலும் காவல்துறை அதிகாரியின் செய்தியாளர் மாநாட்டில் இதை பற்றி கேள்வி கேட்க ஒரு தமிழ் செய்தியாளர் இருந்திருக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயம்

நிதர்சன், கனடாவின் பெருந்தெருவை இடைமறிக்கச் செல்லும்போது, இடைமறிக்கும்போது காவல்துறை எமக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது என்று நினைப்பது மிகவும் வேடிக்கையானது. நம்மவர்கள் காவல்துறையின் துவிச்சக்கர வண்டியை பறித்து பாளத்தினூடாக கீழே தூக்கி எறிந்து இருந்தார்கள்.

நான் நம்மவர்களின் உணர்வை, துணிவை மதிக்கின்றேன். ஆனால்... சட்டத்திற்கு முரணாக செயற்படும் நேரத்தில் எம்மை காவல்துறை கட்டியணைத்து முத்தம் இடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது. :unsure:

Link to comment
Share on other sites

கருத்துகளை பரிமாறிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். அகோதா உங்களிற்கு எனது மனமுவர்ந்த நன்றிகள். உண்மையிலேயே நீங்கள் நேரம் ஒதுக்கி செயல்வடிவாக்கியதற்கு அனைத்து அங்கத்தவர்கள் சார்பாகவும் எனது நன்றிகள்.

அடுத்து சரிகளையும் பிழைகளையும் எடுத்துக் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.

குறிப்பாக மிகவும் விளக்கத்துடன் எனது பதில் போலவே பதில் தந்த கலைஞனுக்கு எனது நன்றிகள்.

நிச்சயமாக நாம் ஒரு நாட்டின் காவல்துறையாக இருந்தால் வேறு ஒரு இனம் இந்த ஆர்ப்பாட்டங்களை செய்தால் எங்களிற்கு என்ன உணர்வு வருமோ, அதே போல் காவல்துறை என்பவர்களது கடமை எந்த ஒரு பாதிப்பும் எவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாத வகையில் சட்டத்தை நடைமுறைப் படுத்த உதவுவதே அவர்களது கடமை ஆகும். அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தங்களது கடமையை செய்கின்றார்கள். அவர்களிற்கு எவ்வளவோ அதிகாரங்கள் இருந்தும் அவர்கள் அனைத்தையும் பயன்படுத்தவில்லை. காவல்துறை அதிகாரி கூறி இருந்தார் நாங்கள் அவர்களது பிரச்சினைகளை உணர்கின்றோம். நடவடிக்கை எடுப்பதன் மூலம் இன்னும் பிரச்சனையை அதிகப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அனைவரது பாதுகாப்பை பற்றியும் நாம் கவலை அடைகின்றோம். குறிப்பாக இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களது பாதுகாப்பையும் தான். அவர்களைப் பொறுத்தளவில் கடமை என்னும் போது எந்த ஒரு இனமோ பிரச்சினைகளோ அவர்களது கண்முன்னே வருவதற்கு பதிலாக அவர்களது கடமை, பாதுகாப்பு என்பவையே கண்முன் வரும். அதை நாமும் புரியவேண்டும். அதே நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமும் உணர்ச்சிணை கட்டுப்படுத்த முடியாலம் சில நேரங்களில் வரம்புகளை மீறுகின்றோம். இருந்தும் கனேடிய காவல்துறையைப் பொறுத்தளவில் மிகவும் பொறுப்புணர்வுடன் இயன்றளவிற்கு செயற்பட்டு எமக்கு தொடர்ந்து ஒத்துழைத்து வருகின்றார்கள். அந்த வகையில் நாம் அவர்களை பாராட்டமல் இருக்க முடியாது. காரணம் அவர்களது ஒத்துழைப்பு எமக்கு தொடர்ந்து வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் பிழைகள் செய்கின்றார்கள் எனில் அதை நாம் சுட்டிக்காட்டவும் முடியும். உதாராணமாக மேலே உள்ள படத்தில் எமது உறவு ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். நாம் அது பிழை என்று உணர்ந்தால் அதையும் காவல்துறையினரிற்கு தெரிவிப்போம்.

சரி இப்போது நடைமுறைக்கு வருவோம்.

1)எத்தனை பேர் மேஜர் டேவிட் மில்லரிற்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தீர்கள். ஏதேனும் பதில் கிடைத்ததா?

2)எத்தனை பேர் காவல்துறையினரிற்கு நன்றி அல்லது உங்களது ஆதங்கங்களை தெரிவித்து தொலைபேசி மூலம் அல்லது கடிதம் மூலம் தெரிவித்திருந்தீர்கள்(தயவு செய்து தொலை பேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பவற்றை இங்கே குறிப்பிடுங்கள். மற்றவர்களிற்கு உதவும்). ஏதேனும் பதில் கிடைத்ததா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சொல்வதையோ, அல்லது அவர்களோடு இணக்கப்பாட்டுக்கு வருவதையோ தவறு என்று நாம் ஒருபோதும் சொல்லவில்லை. நீங்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நான் கனடாவை அடிப்படையாக வைத்து கருத்து எழுதுகின்றேன். உண்மையில் வன்முறைகளை கைவிட்டு அமைதிவழியில் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை நாம் கனேடிய தமிழர்கள் இந்த கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடாத்திக்கொண்டிருக்கின்றோம

Link to comment
Share on other sites

நீங்கள் கூறுவதுபோல், நாங்கள் எங்கள் உரிமைகளைத்தான் பாவிக்கின்றோம் என்பதில் உண்மை இருக்கலாம் இருந்தாலும் காவல்துறையினருக்கும் கடமையை செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடும் உண்டு.

அன்று எங்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த போராட்டத்தில் அதாவது முக்கியமாக நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தில் யாரின் உயிருக்காவது எதிர்பாராத விதமாக அனர்த்தம் ஏற்பட்டிருந்தால் காவல்துறையினர்தான் பதில் சொல்ல வேண்டியிருந்திருக்கும்.

இன்று எங்களைச்சார்ந்தவருக்கு காயம் ஏற்பட்டதிற்கே இவ்வளவு பாராதூரமாக விவாதிக்கின்றோம் என்றால் நெடுஞ்சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டிருந்தாலும் இதே காவல்துறையினரைத்தானே குறை சொல்லியிருப்போம்.

பல விபரீதங்களை தடுப்பதிற்கு அந்த சந்தர்ப்பத்தில் காவல்துறையினர் சற்று கடினமாக இருக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது நாங்கள்தானே.

நாம் அதாவது தமிழர்தரப்பினர் போராட்டத்தை நடத்துகின்றபோது மற்றவர்களின் கவனத்தை எப்படி எங்கள் பக்கம் திருப்பலாம் என்ற ஆர்வமும், ஆவலும் இருக்கின்றதோ அதேபோல் அதே போராட்டத்தில் எந்தவிதமான விபரீதமும் இடம்பெறக்கூடாது என்ற எதிர்பார்ப்பு காவல்துறையினருக்கும் இருப்பதில் தப்பில்லைத்தானே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.