Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு நகருக்குள் 20 மனித வெடிகுண்டுகள் : இலங்கை அதிபர் அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு நகருக்குள் 20 மனித வெடிகுண்டுகள் : இலங்கை அதிபர் அதிர்ச்சி

on 05-01-2009 16:32

Published in : செய்திகள், இலங்கை

மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதற்காக விடுதலைப் புலிகளைச் சேர்ந்த தற்கொலைப்படையின் 20 மனித வெடிகுண்டுகள் கொழும்புக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதலைப்புலிகளின் தலைமையகம் அமைந்துள்ள கிளிநொச்சியை பிடித்து விட்டோம். பொதுமக்கள் உயிர் இழக்காமல் கிளிநொச்சியை பிடிக்க நினைத்தோம். அதன்படி உயிர் இழப்பு இன்றி கிளிநொச்சி பிடிபட்டு விட்டது. இது எனக்கு திருப்தி அளிக்கிறது.

விடுதலைப்புலிகளின் மற்ற பகுதிகளையும் இதே போல் பொதுமக்கள் பெரும் உயிர் இழக்காத வகையில் ராணுவம் விரைவில் பிடிக்கும்.பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். பாலஸ்தீன அதிபருடன் நான் பேசினேன். அங்குள்ள உண்மை நிலவரம் என்ன என்பதை தெரிந்து கொள்ள அவருடன் தொடர்பு கொண்டேன்.

விடுதலைப்புலிகள் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களை பணய கைதிகள் போல பிடித்து வைத்துள்ளனர். அந்த தமிழர்களை விடுதலைப் புலிகள் விடுதலை செய்யவில்லை.பொதுமக்களை விடுவிக்க தொடர்ந்து மறுத்து வந்தாலும் மனித உரிமைகளை மீறினாலும் அந்த இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டியது வரும். ஒரு வாரத்துக்குள் இந்த தடை வரும்.

ஏற்கனவே இந்தியா உள்பட 30 நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை விதித்துள்ளன. எந்த சூழ்நிலையிலும் பொது மக்கள் மீது எங்களுக்கு மிகுந்த அக்கறை உண்டு. அவர்களது பாதுகாப்பு முக்கியம்.அதனால்தான் கைதிகளாக சிக்கி இருக்கும் அந்த பொதுமக்களை விடுதலை செய்ய தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன்.

அவர்களுக்கு நாங்கள் உணவுப் பொருட்களை அனுப்பி வருகிறோம். அவர்கள் விடுவிக்கப்பட்ட பிறகும் கூட உணவுப் பொருள்களை அனுப்பி வைப்போம். விடுதலைப்புலிகள் பட்டினி கிடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை.

விடுதலைப்புலிகளில் சிலர் ராணுவத்தினரிடம் சரண் அடைந்து வருகிறார்கள்.அகதிகள் என்ற போர்வையில் சில தற்கொலைப்படையினரும் வருவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். கொழும்பு நகருக்குள் 15 முதல் 20 தற்கொலை படையினர் (மனித வெடிகுண்டுகள்) ஊடுருவி இருப்பதாக தெரிகிறது. அவர்களது திட்டத்தை முறியடிக்க அரசு முடிந்த அளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

அதிகாலை

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கி விட்டேன் , சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தூயவன் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உள்ள வார்த்தைப் பிரயோகங்களை அவதானியுங்கள் தமிழ்சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.