Jump to content

மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்


Recommended Posts

ஈழநூல் 70

நூல்

மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்

ஆசிரியர்

சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்)

மின்னூலாக்கம்

இ. பத்மநாப ஐயர்

மின்பதிப்பு ஈழநூல்

மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள்

பதிப்பாசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன்

இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக்குழு வெளியீடு

---------------------------------------------------.

ARTS COUNCIL TAMIL DRAMA

PANEL SERIES

Published under the authority

of the

Arts Council of Ceylon

GENRAL EDITOR

S.VITHIANANTHAN, M. A. ph. D.

Chairman, Tamil Drama Panel,

Arts Council of Ceylon

SECOND EDITION 1962

Price Re. 1.00

-------------------------------------------------

இந்நூலில்

தோற்றுவாய் பக்கம் 5

இரண்டாம் பதிப்புர ” 19

Introduction ” I-VI

கவிகள் ” 21-66

(அ). காதலன் கூற்றாய் உள்ளவை 21

(ஆ). காதலி கூற்றாய் உள்ளவை 41

(இ). தோழி கூற்றாய் உள்ளவை 57

(ஈ). தாயார் கூற்றாய் உள்ளவை 63

பொதுப்பாடல்கள் 67-74

தொழில்முறைப் பாடல்கள் 75-80

(அ). பொலிப் பாட்டு 75

(ஆ). ஏர்ப் பாட்டு 79

கொம்புவிளையாட்டுப் பாடல்கள் 81-82

இலங்கைக் கலழகத் தமிழ் நாடகக்குழு வெளியீடு 4.

இரண்டாம் பதிப்பு : கார்த்திகை 1962

எல்லா உரிமையும்

இலங்கைக் கலைக்கழகத்திற்கே.

கண்டி,

றோயல் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

தோற்றுவாய்

இயற்கையோடு ஒட்டிவாழும் உள்ளத்தினையும் பண்பினையும் உடைய நாட்டு மக்களின் உணர்ச்சிiயையும் செயல்களையும் வெளியிடும் பாடல்களே நாட்டுப்பாடல்கள், நாடோடிப்பாடல்கள், பாமரப்பாடல்கள், வாய்மொழிப்பாடல்கள் என்றெல்லாம் பெயரிடப்படும் இப்பாடல்கள் பெரும்பான்மையும் எழுத்தறிவில்லாத நாட்டுப்புற மக்களிடையே வழங்கும் பலவிதப்பாடல்களைக் குறிக்கின்றன. மக்கள் வாழ்க்கையில் உள்ள செய்திகளை, அவர்கள் இன்பதுன்பங்களை, விளையாட்டு வேடிக்கைகளை உள்ள படியே எடுத்துக்காட்டுபன நாட்டுப்பாடல்கள்.

இவைபல ஆண்டுகளளாக தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாகவும் கேள்வி மூலமாக பொதுமக்களிடையே பயின்று வருகின்றன. காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் பரவி, மாறியும் விரிந்தும் சுருங்கியும் வழங்கும் இப்பாடல்களை யார் எப்பொழுது இயற்றினனார் எனக்கூறமுடியாது. பாடலாசிரியர் யார் என கூற இயலாமை இவற்றின் இலக்கனங்களுள் ஒன்றாக அமைந்து விட்டது.

nhழிலாளர், குடிமக்கள், வேலைசெய்யும் பெண்கள் முதலியோர் தத்தம் வேலையினால் உண்டாகும் அலுப்பைப் போக்கி கொள்ளப்படும் பாடல்கள் ஒரு வகை; குழந்தைகளை தொட்டிலில் இட்டு தாழாட்டி நிலாக்காட்டி தலையையாட்டி தோழைவிசச் செய்து விளையாட்டுக்காட்டி தாய்மார் குழந்தையோடு குழந்தையாய் பாடும் தாளட்டுப்பாடல்கள். ஓருவகை; புத்தாண்டு பொங்கள் போன்ற விழாக்காலத்தில் மக்கள் ஒன்று கூடி ஆடிப்பாடி இசைக்கும் பாடல்கள் ஒருவகை; சில பிள்ளைகள் ஆடும் விளையாட்டுக்களிடையே பாடும் பாடல்கள் ஒருவகை. திருமணம் இழவு வீடு முதலியவற்றில் பாடும் பாடல்களும் ஒர் இனத்தவை. இவ்வாறு பலதுறைப்பட்டு நிற்கும் நாட்டுப் பாடல்களை பாரதியார்.

மானுடப் பெண்கள் வளரும் ஒரு காதலினால்

ஊனுருகப் பாடுவதிலூறிடுந் தேன்வாரியிலும்

ஏற்றநீர்ப் பாட்டினிசையினிலும் நெல்லிடிக்குங்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சு மொழியினிலும்

சுண்ணமிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்

வட்டமிட்டுப பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்

கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்

எனத் தான் பாடிய குயிற்பாட்டிற் குறிப்பிடுகிறார்.

நாட்டுப் பாடல்களில் ஓசை இனிமையும் கருத்தழகும் மலிந்து கிடக்கின்றன. வயல்வெளியிலே நாற்றுநடும் பொதுமக்கள் பாடும் பாடல்களைக் கவனித்தால் இதன் உண்மை தெரியும். இசையுடன் நாற்று நடுகை நடைபெறுகின்றது. முறைமுறையாக யாவரும் பாடுகின்றர்.இயற்கையான சங்கீதக் கச்சேரி இங்கு நடைபெறுகின்றது. முறைமுறையாக யாவரும் பாடுகின்றனர் இயற்கையான சங்கீதகச்சேரி இங்கு நடைபெறுகின்றது. கச்சேரியை நடத்துபவர் நாற்றுநடுவோர். நாற்றும் நடும்போது தாளம் பிறக்கப்படும் அந்தசங்கிதம் ஒருகுறிப்பிட்டகலத்திற்குள் ஓர் இடத்திற்குள் சிறைப்படவில்லை அவர்கள்குனிந்து நாற்று நடும்போது உண்டாகும் அலுப்பை அந்தச் இனிய பாட்டு மறக்கச்செய்யிறது. அவர்கள் தொழிலுக்கு இன்பம் அளிக்கின்றன அவர்கள் பாடும் பாட்டுக்கள் அவர்களுக்கு உணவேதேவையில்லை முறைமுறையாக அவர்கள்பாடும் பாட்டுக்கள். அவர்களுக்கு இன்பத்தை கொடுக்கின்றன. ஓசை இனிமையிலும் கருத்தழகிலும் தம் உள்ளத்தைப் பறிகொடுத்து உவகைபொங்க தொழிலாற்றுகின்றனர்.

ஒரு விசயத்தைப் பலவகையாக திருப்பித் திருப்பிச்சொல்வது நாட்டுப்பாடல்களில் காணப்படும் ஒரு பண்பாகும். உதாரணமாகப் பின்வரும் பாடல்களை கொள்ளலாம். சின்னப்பு என்பவன் தன் மச்சாள் லட்சுமிமேற் காதல்கொண்டிருந்தது அவன் தாயாருக்கும் பிடிக்கவில்லை லட்சுமி வீட்டுக்குச் சென்ற சின்னப்புவின் வரவை எதிர்பார்த்திருந்து. அவன் வந்ததும்.

இவ்வளவும் எங்கிருந்தாய்

சின்னப்பு சின்னப்பு

இவ்வளவும் எங்கிருந்தாய்

சின்னப்பு சின்னப்பு

என்று கேட்டாள். அவள்

அழகவல்லி லட்சுமியோடு

நாள் முழுதும் இருந்தேன்

இவன் என்னை கவர்ந்துகொண்டாள்

அழகவல்லி லட்சுமி

என்று குசாமல் விடை அளித்தான்

சோறு கறி ஆக்குவாளா

சின்னப்பு சின்னப்பு

சோறு கறி ஆக்குவளா

ஏன் சின்னப்பு சின்னப்பு

என்று கேட்டால் தாய்.

ஒடியல்கூழ் காய்ச்சுவாள்

ஊழுத்தம் கழியும்ங் கிண்டுவாள்

அவள் என்னை கவர்ந்து கொண்டால்

அழகவல்லி லட்சுமி

அன்று மறுமொழிகூறினான் அவன்.

சீதனமும் கேளடா

சின்னப்பு சின்னப்பு

சீதனமும் கேளடா

என் சின்னப்பு சின்னப்பு

என்று தாய்.

வன்னிவயலும் பரந்தன்காடும்

சீதனமாய்த் தருகிறார்கள்

அவள் என்னை கவர்ந்துகொண்டாள்

அழகவல்லி லட்சுமி

என்று அவன் மறுமொழி கூறக்கேட்ட தாய் இவர்களுக்கு குறுக்கே நிற்கவிரும்பாது.

அப்படியே செய்யடா

சின்னப்பு சின்னப்பு

அப்படியே செய்யடா

என்சின்னப்பு சின்னப்பு

என்று சம்மதத்தைத் தெரிவித்தாள். இப்பாடல்களில் ஒரேவி~யம் திருப்பித் திருப்பிச் சொல்லப்படுவதைக் காணலாம். இது செந்தழிழ் இலக்கியத்தில் ஒருவேளை குற்றமாகலாம். ஆனால் நாட்டுப்பாடல்கள் இப்படி அமைந்திருப்பது அப்பாடல்களின் பண்புகளுள் ஒன்றாகும். எத்தனைதரம் திரும்பித் திரும்பிச் சொன்னாலும் சொல்பவனுக்கும் கேட்பவனுக்கும் இன்பமே உண்டாகின்றது. ஒரு வரியை இன்னொரு வரியில் திருப்பிச் சொல்லக்கூடிய முறையில் இவை அமைந்திருப்பதும் கவனித்தற்குரியது. இன்ன தென்றுசொல்லி விவரிக்கமுடியாத ஓசைநயம் பொதிந்துகிடக்கும் இப் பாடல்கள் மக்கள் உள்ளத்தைத் தம்பால் இழுக்கும் அரிய பண்பைப் பெற்றிருக்கின்றன.

கிராம மக்களின் உள்ளத் துடிப்புகளையும் உணர்ச்சிப் பெருக்குகளையும் வெளியிடும் இப்பாடல்கள் பேச்சுவழக்கிலுள்ள சொற்களையும் சொல்லுரவங்களையும் கொண்டு விளங்குவது இயல்பே.

புல்லைப் புடுங்கிவெச்சேன்

புறவளவைத் துத்துவெச்சேன்

அன்னப் பசுங்கிளியின்

அடியழகைப் பார்ப்பதற்கு.

தோற்றுவாய்

தேருவால போவெண்ணா

தேன்போல மணக்கிறது

உறவாட நான்வாறேன்-உன்ர

அண்ணன்மார் காவலாமே

என்ற பாடல்களில் இப்பண்பைப் பெரிதும் காணலாம்.

நாட்டுப் பாடல்களுக்குத் தொடக்கமுமில்லை, முடிவுமில்லை. அந்த அந்தக் காலத்துச் செய்திகளையும் முறைகளையும் அவை ஏற்றுக்கொள்ளும். ஈழத்திற் பறங்கியர் ஆங்கிலேயர் முதலியோர் ஆண்டதன் பயனாக அவருடைய பழக்க வழக்கம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டும். அவர்கள் மொழியிலுள்ள சொற்களைக் கடன்வாங்கியும் பல நாட்டுப் பாடல்கள் எழுந்தன.

சிங்கிலிநோனா சிங்கிலிநோனா

சீப்புக் கொண்டைக்காரி

பார்த்தபேர்கள் ஆசைகொள்ளும்

பந்துக் கொண்டைக்காரி.

என்னபிடிக்கிறாய் அந்தோனி

எலிபிடிக்கிறேன் சிஞ்ஙோரே

பொத்திப்பொத்திப் பிடிஅந்தோனி

புறிக்கொண்டோடுது சிஞ்ஙோரே

போன்ற பாடல்கள் இவ்வகையாய் எழுந்தவையே.

இலக்கியத்திற்க்கும் நாட்டுப் பாடல்களுக்கும் குறிப்பிடத்தக்க வேற்றுமை உண்டு. இலக்கியங்கள் பெரும்பாலும் இலட்சிய வாழ்க்கையையே அடிபடபடைக் குறிக்கோளாகக் கொண்டவை. தமிழிலுள்ள காவியங்கள் பல அதர்மத்தின் அழிவையும் தர்மத்தின் வெற்றியையும் கூற எழுந்தவையே. இதனால் இலக்கியங்களுக்குத் தலைவராக அமைபவர் குற்றமே இல்லாதவராய்க் குணங்களுக்கு இருப்பிடமாய் படைக்கப்படுகின்றனர்.

எல்லாக் காவியங்களிலும் இத்தகைய குணம்படைத்த தலைவரையே நாம் காணுகின்றோம். இது உண்மையான வாழ்க்கைக்குப் பொருத்தமற்றதாக இருக்கின்றது.

இதற்கு மாறாக மனிதனின் குறைகுற்றங்களையும் சமூக ஊழல்களையும் உள்ளவாறே எடுத்து இயம்புகின்றன. நாட்டுப்பாடல்கள். கற்பின் சிறப்பை இலக்கியம் பாட, உலகில் மலிந்து கிடக்கும் கள்ளக்காதல் வாழ்க்கையை நாட்டுப் பாடல்கள் சித்திரிக்கின்றன. நாள்தோறும் வாழ்க்கையிற் காணப்படும் நிகழ்ச்சிகளைச் சுவைபடப் பாடும் நாட்டுப் பாடல்கள் ஆபாசங்களை வெட்ட வெளிச்சமாக உள்ளபடி கூறுகின்றன. ஆகவே, கல்வி, உருவம், ஒழுக்கம், வயது முதலியவற்றில் தம்மை ஒத்த ஆணையும் பெண்ணையும் காவியங்கள் பாட, எந்த விதத்திலும் ஒவ்வாத இருவர் வாழ்கை நடத்துவதைக் கேலி செய்து இயம்புகின்றன நாட்டுப்பாடல்கள்.

நடோடிப் பாடல்களில்வரும் பாத்திரங்கள் நெர்லுக்குற்றும் பொன்னி, நாற்று, நடும் சின்னாச்சி, வண்டியோட்டும் சின்னப்பு, ஏற்றம் மிதிக்கும் மாரிமுத்து, கஞ்சிகொண்டுவரும் வேலாயி, பொலிதுற்றும் சித்தி போன்றவர்களே. இவர்களுக்கு என்ன காதல், இவர்களைப்பற்றி என்ன பாடல் என்று நாடோடிப் பாவலன் ஒதுக்கிவிடகில்லை. அவன் பொன்னியின் காதலைப்பற்றிப் பாடுகின்றான், மாரிமுத்தனின் வீரத்தை விளம்புகின்றான், வேலாயியின் துக்கங்களை வியாக்கியானம் செய்கின்றான். இத்தகையோரைப் பாத்திரங்களாக வைத்துப் பாடிய பாடல்களிலேயே நாம் இலக்கியங்களிற் காணமுடியாத இன்பத்தை, உணர்ச்சிப் பெருக்கை, வாழ்க்கைப் பண்பைப் பார்க்கின்றோம். இதற்க்கு உதாரணமாகத் தெம்மாங்கு என அமைந்தது எனக் கூறுவர். வண்டியோடும் வண்டிக்காரன் சுப்புவும் வண்டி இழுக்கும் மாடுகளும் மயக்கும்படி பாடப்படும் அப்பாடல்கள் தேன்போலவே இனிக்கின்றன.

சின்னச்சின்ன வண்டிகட்டிச்

சேவலைமாடு ரெண்டுபூட்டி

வாழக்காய்ப் பாரம்ஏற்றி

வாருண்டி உன்புரு~ன்

மாடுமோ செத்தல்மாடு

மணலுமோ கும்பிமணல்

மாடிழுக்க மட்டாமல்

மாய்கிறாண்டி உன்புரு~ன்.

என்று பாடும்போது இவை கேட்போருடைய உள்ளத்தையும் பாடுவோர் உள்ளத்தையும் கவரகின்றன.

தமிழ் இலக்கியத்தில் அப்பொருள் இலக்கியம் காதலைப்பற்றிப்பாடுகின்றது. இத்தகைய இலக்கியத்திற்கு தமிழில் குறைவே இல்லை ஆயினும் இலக்கியத்தில் வரும் காதல் பெரும்பாலும் உலகில் நிகழ்வதன்று: நாடகவழக்கும் சேர்ந்தே அமைந்துள்ளது. ஆனால் நடோடி காதல்ப் பாடல்கள் காதல் உலகில் இயற்கையாக நடைபெறுவனவற்றை கூறுகின்றன. அதுவும் காதலன் காதலியைக் களவிற் கூடும்பகுதியே கூடுதலானது. காதலன் காதலியை தேடிவருதல், அவள் குறியிடம் கூறல், குறித்த இடத்தில் குறித்த காலத்தில் காணயியலாது. துத்தலித்தல் முதலிய பகுதிகள் உணர்ச்சிவாய்ந்தனவாக இருக்கும்.

அந்தி விடிந்து

சந்தையாற் போறமச்சான்

நேரத்துக்கு கோருடுப்பு

நெய்கிறதோ வாங்கிறதோ

மாசம் பதினாறு

வளவு நிறைந்தநிலா

சிற்றொழுங்கைக் குள்ளாலே - இரண்டு

செருப்பழுது பேகுதுகா.

சந்தன மரத்தைச்

சந்திக்க வேன்டும்மென்றால்

பூவலடிக்குப்

பொழுதுபட வாமயிலார்.

கடித்தநுளம்பு - நான்

கத்திருந்த முளையும்

அடித்தமழையும் -எனக்கொரு

ஆள்வேனும் சொல்லியழ

தாயாரும்மில்லை மச்சான்

தகப்பன் வெடிகாட்ட

அண்ணன் தினைக்காவல்- என்

ஆணிமுத்தே வாமயிலார்.

போன்ற பாடல்கள் நாட்டுப்பாடல்களின் அகப்பொருளை நன்கு விளக்க வல்லன.

நாடோடிப்பாடல்களுக்கு முன்னோடியாக பழைய தமிழ் இலக்கியத்துக்கு சில பகுதிகளைக்;காணலாம். இளங்கோவடிகள் பாடியசிலப்பதிகாரத்தில் அம்மனைவரிகந்துக வரி என்று வருபவை நாட்டுப் பெண்கள் அம்மானை ஆடும்போது பாடும் பாட்டுக்களை ஒத்திருக்கின்றன. மணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்திற்பாடிய தோள் நோக்கம் சாழல் திருவுந்தி என்பன உருவத்திலும் ஓசையிலும் நாட்டுப்பாடல் உலகத்திற்குரியன. குறவஞ்சி, பள்ளு முதலிய இலக்கியவகைகளும் நாடோடி இலக்கியங்களே. பொதுமக்களுடைய வழ்க்கையையும் இன்ப துன்பங்களையும் படைத்துக்காட்டும் இப்பிரபந்தங்கள் நாட்டுப்பாடல் இலக்கியத்தைச் சேர்ந்தவையே.

தொல்காப்பியர் தமிழிலுள்ள செய்யுள் வகைகளைக் குறிப்பிடும்மிடத்து பண்ணத்திச்செய்யுள் என்ற ஒருவகை இலக்கியத்தையும் தருகின்றார்.

பாட்டிடைக் கலந்த பொருள் வாகிப்

பாட்டினியல பண்ணத்தி யியல்பே

( செய்யுளியல் 180 )

என்பது அதன் இலக்கணம்.

பழம்பாட்டினூடும் கலந்த பொருளே தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும் போலச் செய்யப்படுவன பண்ணத்தி என உரை கூறுவார் பேராசிரியர். எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களை உடையது பண்ணத்தியென்றும் அதற்கு உதாரணமாக வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு முதலியவற்றைக் கொள்ளலாமென்றும் அவர் மேலும் கூறுவர். பண்ணத்தி என்று அக்காலத்தில் வழங்கியவையே நாட்டுப்பாடல்கள். எனவே நூல்வடிவில் இல்லாது வாய்மொழியாகப் பரம்பரை பரம்பரையாக வழங்கிவரும் நாட்டுப்பாடல்கள் அக்காலத்திலிருந்தே வந்தவை.

தொல்காப்பியர் காலத்திலிருந்து பாரதி காலம்வரை பள்ளு குறவஞ்சி ஏசல் சிந்து கும்மி முதலிய செய்யுள் வகைகளைப் புலவர் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பாரதி பல இடங்களில் நாட்டுப் பாடல் மெட்டிற் பல பாடல்கள் இயற்றி உள்ளார். புயற்காற்று புதியகோணங்கி போன்ற பாடற்பகுதிகளில் வரும் பாடல்கள் இதற்குச்சன்றாகும் புயற் காற்றில்வரும்

காற்றடிக்குது கடல் குமுறுது

கண்ணை விழிப்பாய் நாயகநே

துற்றல் கதவு சாளர மெல்லாங்

தோலைத் தடிக்குது பள்ளியிலே

வானஞ் சிவந்தது வைய நடுங்குது

வாழி பராசக்கி காத்திடவே

தீனக் குழந்தைகள் துன்பப்படாதிங்கு

தேவி அருள் செய்ய வேண்டுகின்றோம்

என்னும் பாடல்களும் புதியகோணங்கி என்னும் பகுதியில் வரும்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்லகாலம் வருகுது நல்லகாலம் வருகுது

சாதிகள் சேருது சண்டைகள் தொலையுது

செல்லடி சக்தி மாகாளீ

வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு

என்னும் பாடலும் போதிய எடுத்துக்காட்டுக்;களாம்.

ஈழ நாட்டிலே கிராமியக் கவிதை நலம் நிறைந்துள்ள பகுதி மட்டக்களப்பு. தேனுக்கும் பாலுக்கும் தழிழர் வீரத்திற்கும் பெயர் பெற்ற மட்டக்களப்பு மக்கள் கலைகளைபேணி வளர்பதிலும் தலைசிறந்து விளங்குகின்றது. உணர்ச்சி கவிதை நிறைந்த மட்டக்களப்பு நட்டுப் பாடல்கள் பல்வேறு துறைப்பாட்டு, நிறைந்து வழங்குகின்றன. கிழக்கிலங்கையின் மூலை முடுக்குகளிலும் வயல்வெளிகளிலும் வீடுகளிலும் வீதியிலும் உலவும் இப்பாடல்களை தொகுத்து வகைப்படுத்தி வெளியிடுவதில் ஒருவரும் பெரிது கவனம் செலுத்தவில்லை. இயற்கை வழ்வில் நின்று விலகி நிற்கும் நாகரிகத்தில் திளைத்து நிற்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை தெரியாது. நாட்டுப்புற பாமரமக்களுக்கும் நகரமக்களுக்கும் வாழ்க்கை முறையிலும் உள்ளப்பாங்கிலும் வேறுபாடு வளர்ந்துகொண்டே வருவதனால்

பாமரமக்கள் பாடும் பாட்டை கேட்டு மகிழ்கிற மனநிலை படித்தமக்களைவிட்டு ஒரளவிற்கு நீங்கிவிட்டது என்று கூறலாம். நாட்டுப்பாடல்களை படுவோரின் தொகையும் நளுக்குநாள் குறைந்து கொண்டேவருகின்றது. நாளடைவில் நாட்டுப்பாடல்கள் மறைந்து விடக்கூடும்.

இந்நிலையை மாற்றி அமைக்கும் நோக்கத்துடநேயே இந்நு}ல் வெளியிடப்படுகின்றது. எமது நட்டில் பாமரமக்களே பெரும் பகுதியினர். அவர்களுடைய பாடல்களை பயிலுவதே தக்கவழி. இக்கவிகளை அவர்கள் நாள்தோறும் தாமேபாடித் தமேகேட்டு உள்ளத்தில் அமைத்து வளர்த்து வந்திருக்கின்றனர். அவர்களுடைய கவிதைப் பெருக்கிலே ஓசை இன்பத்தையும் தாளக்கட்டையும் சொல்லாட்சியையும் காணலாம். உணர்ச்சி பெருக்கொண்றை அடிப்படையாகக்கொண்டு இப்பாடல்கள் இயங்குகின்றன. உணர்ச்சியே இப்பாடல்களுக்கு உயிர் எனலாம்.

இத்தகைய உணர்ச்சிக் கவிதைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடநேயே இலங்கைக் கலைக்கழக நாடக நடனக்குழு இந் நூலை வெளியிடுகின்றது. கிராமியப்பாடல்களையும் கூத்துவகைகளையும பேணி வளர்ப்பது இக்குழுவின் முக்கிய நோக்கங்களுல் ஒன்றாகும். இப்பாடல்களை ஒன்றுசேர்த்துத்துறைப்படுத்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

42. மூணுநாள் மட்டிலேயும்

மூலையிலே ஓடுவெச்சி

சோளன் வறுத்து- என்ர

தோகை பசியாறினம்கா.

43. கொட்டை வறுத்துக்

கொண்டு வந்தேன் தட்டிலே

கொட்டுண்டு போச்சுதென்று

கூக்குரலும் சத்தமுமாம்.

44. முந்திரியம் பழமும்

மூணுவகை முட்டாசியும்

கல்கண்டும் தாறன்- நீ

கதவுதிற கண்மணியே.

45. கோடி உடுத்துக்

குளத்தோறம் போறபெண்ணே- உன்ர

கோடிப்புடவையிலே

கொக்கு ரத்தம் பட்டதென்ன.

இறைவன் ,

இந்த வரிகளை வாசித்தபோது .......

நெஞ்சு கனத்தது .

Link to comment
Share on other sites

49. ஆலையிலே சோலையிலே

ஆலம்பாடிச் சந்தையிலே

கிட்டிப்புள்ளும் பம்பரமும்

கிறுகிஅடிக்கப் பாலாறுபாலாறு.

கிட்டிப்புள் விளையாடியதை நினைத்துப் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

"கிறுகி" என்றால் என்ன? கிழக்கின் பூர்விக குடிகளின் மொழி ......சுற்றுது.....என்பதின் கருத்து

Link to comment
Share on other sites

"பூவலைக் கிண்டி

புதுக்குடத்தைக் கிட்டவைச்சி

ஆரம் விழுந்தகிளி

அள்ளுதுகா நல்லதண்ணி.

. தண்ணிக் குடமெடுத்து

தனிவழியே போறபெண்ணே

தண்ணி குடத்தினுள்ளே

தளம்புதடி என்மனசு."

அட ஒரு அற்புதமான பகுதி இவ்வளவு நாளும் கண்ணில் படாமல் போய் விட்டதே.....

இயந்திர கதியில் மூச்சு முட்டும் வாழ்க்கை சூழலில் அற்புதமாய் இளைபாற ஒரு மர நிழல் கிடைத்தது போல் ஒரு அருமையான திரட்டு... திரட்டித் தந்த இறைவனுக்கு நன்றி....

(இறைவனுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும் இப்பூவுலகில் அழகுகளையும் அதை இரசிக்கும் கவிதை மனதை எமக்குள்ளும் படைத்ததனால்...)

"புல்லைப் புடுங்கிவெச்சேன்

புறவளவைத் துத்துவெச்சேன்

அன்னப் பசுங்கிளியின்

அடியழகைப் பார்ப்பதற்கு."

அவள் அடியழகே அவனுக்குள் உணர்வினை பற்ற வைக்கின்றதென்றால் அவள் அங்கங்களில் அங்கங்கே கண்வைப்பதில் தன் மனதை தொலைத்து விடமாட்டானா...

-மோகத்தைக் கொன்று விடு அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு - என்று பாரதியைக் கதற வைத்ததே...அவன் கவிஞன்

"கண்ணுக்கு மை தீட்டி

காலில் ஹீல்ஸ் வைத்து

வண்ண வண்ண நைலக்ஸை

வழியெல்லாம் நழுவவிட்டு

பற்பசைக்கு விளம்பரமாய்

பல்லெல்லாம் வெளிக்காட்டி.."

வரும் பெண்ணைப்பார்த்தால் ஆயாசம் வந்து மனதை அடைக்கின்றது...

கவிதைக் குளம் வற்றி

கரடு தட்டிப் போகின்றதே....

"சந்தன மரத்தை மச்சான்

சந்திக்க வேன்டுமென்றால்

பூவலடிக்கு மச்சான்

பொழுதுபட வந்திடுங்கோ.

கடப்படியில் வந்து நின்று

காளை கனைக்கும் மென்றால்

எங்கிருந்த போதும் நாகு

எழுந்துவர மாட்டாதோ"

சந்தனமரத்தை சந்திக்க வேண்டுமென்றால் ... உள்ளம் மணக்கத்தொடங்குகின்றதே காதலினால்...

பூப்பூக்கும் ஓசை காட்கும் மனது என்பது இது தான்....மழையில் நனைந்து ஒற்ரை நீர்த்துளியை ஏந்தி வைத்திருக்கும் பூவைக்கண்டதி உங்கள் மனது விகசித்து விரிவதைப்போல் உங்கள் காதலும் கண்முழித்துப்பார்க்கின்றதே..

.

கடப்படியில் வந்து நின்று

காளை கனைக்கும் மென்றால்

எங்கிருந்த போதும் நாகு

எழுந்துவர மாட்டாதோ...

இது இயற்கை ...காளையும் நாகுவும் ...காதலும் உலகம் எத்தனை அழகானது...

"புல்லுச் சவன்டிருக்கு

போனதடம் தானிருக்கு

தண்டை பதிந்திருக்கு- என்ர

தங்கவண்டார் போனதெங்கோ?

அக்கரையில் கொக்கே

அணில்கோதா மாம்பழமே

இக்கரைக்கு வந்தியண்டா-ஒரு

இனித்தகனி நான்தருவேன்."

புல்லுச் சவண்டிருக்கு .... புல்லுக்கு நோகா நடை..

இல்லாத இடை...அதன் குறை தெரியாது நெஞ்சில் நிரைத்து வைத்த சுமை...

படைத்தானே பிரம்ம தேவன்

பதினாறு வயதுக் கோலம்...

உலகம் அத்தனை அழகுடனேயே என்றும் இருக்கும்

மனிதனின் செயற்கைத் தனங்கள் பல்லிளித்து இளித்துத்

தன் கோர முகத்தைக் காட்டிச்செல்லும் கோரம் இன்னும் கூடும்..

வரும் காலச் சந்த்திகள் இழக்கப் போவது இவர்றைத்தான்...டிஜிட்டலில் கண்சிமிட்டப்போகும் உலகத்தில் வாழப்போகும் எம்சந்ததிக்கு இயற்கையின் புன் சிரிப்பை நினவு படுத்தப் போவது இவ்வழகுத் திரட்டல்களே..

இவற்றை நாளைய சந்ததிக்காக தொகுத்து வைப்பவர்கள் என்றும் போற்ரலுக்குரியவர்களே

இன்னும் நிறைய எழுத ஆசை ...அதாங்க கொட்டுது கவிதை..கவிதை..

ஆனாலும்,

."அக்கரையில் கொக்கே

அணில்கோதா மாம்பழமே

இக்கரைக்கு வந்தியண்டா-ஒரு

இனித்தகனி நான்தருவேன்"

இனித்த கனி இவன் என்ன கொடுப்பான்....

கற்பனையில் கரைந்து கொண்டிருக்கின்றேன்...

மனதெல்லாம் இறக்கை கட்டிக் கொண்டிருக்கின்றது....

-இறக்கை கட்டிப் பறக்கும் எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி இறைவன் இப்ப நாட்டுப்புற பாடல்கள் அழிவின் விளிம்பில் ஊசலாடுகின்றன.

முந்தியெல்லாம் நாட்டார் பாடல் 11ஆம் வகுப்புவரை இருக்கும் இப்ப அதையும் தூக்கி அந்தரத்தில்

விட்டதனால் ஆய்வு செய்துதான் இனி வருங் காலத்தில் நம் மூதாதையர் பாடல்களைத் தேட வேண்டியுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.