Jump to content

மாற்று கருத்தாளன் என்பது ஒரு கெளரவமா??


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் பிரித்தானியாவில் இருந்து எழுத்தாளர் ஒருவர் சிட்னி வந்திருந்தா எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதிற்காக அந்த பெண்மணியை வாரம் ஒருமுறை ஒலிபரப்பு செய்யும் தமிழ் ஒலிபரப்பு சேவையினர் பேட்டி கண்டனர்.எழுத்தாளர் இலக்கிய சம்பந்தமான பேட்டியை தான் கொடுப்பார் என்று கேட்டு கொண்டிருந்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது காரணம் அவா கதைத்தது முழுக்க அரசியல் அதுவும் கிழக்கு தேர்தல் பற்றிய அரசியல் அங்கு வாழும் மக்களிற்கு இந்த தேர்தலால் நல்ல பயன் கிடைக்கும் என்ற மாதிரியும் தற்போதைய பிரச்சினை கல்வி,உணவு,உடை போன்ற அன்றாட தேவைகள் என்ற ரீதியில் தனது பேட்டியை தொடர்ந்தார்.

மகிந்தாவை தனது சொந்த பணத்தில் தான் சந்தித்தாக கூறினார்,மற்றும் தேசியதிற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார்.அது அவரின் சுகந்திரம் நாங்கள் கண்டுக்க தேவையில்லை ஆனால் இவர்களை எல்லாம் ஏன் நம்மவர்கள் தூக்கி பிடிக்கிறார்கள் எனது கேள்வி?

இதே வானொலி ஒரு வாரங்கள் கழிந்த பின் இன்னுமொரு உரையாடல் நடந்தது அதிலும் ஒரு எழுத்தாளர் கலந்து கொண்டார் அவர் அவுஸ்ரெலியாவில் வாழும் எழுத்தாளர் அவரும் கிழக்கு தேர்தலை பற்றிய தன்னுடைய கருத்துகளை பரிமாறினார்.தேர்தல் நல்லம் என்ற ரீதியிலும் அதன் மூகம் மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற வகையிலும் கருத்தை முன்வைத்தார்.

இந்த இருவரும் தேசியதிற்கு எதிரான கருத்தை தான் முன்வைத்தார்கள் இருவரும் எழுத்தாளர்கள் படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள்,தங்களது தேசியதிற்கு எதிரான கருத்தை தேசிய ஆதரவாளருடன் சேர்ந்து நாசூக்காக மக்களிற்கு புகட்டி உள்ளார்கள் அங்கு தான் இவர்களின் கெட்டிதனம் தெரிகிறது.

தேசிய ஆதரவாளர்கள் என்று கூறுவோருக்கு இவர்களை இனம் கண்டு கொள்ள முடியவில்லையா?சிலர் சொல்லலாம் நாங்கள் ஜனநாயகவாதிகள்,மாற்று கருத்தையும் உள்வாங்க வேண்டும்,மாற்று கருத்தையும் மதிக்க வேண்டும் என்று அது எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியவில்லை.

தாயக்த்தில் தேசியதிற்கு வீரோதமானவர்களை துரோகி,ஒட்டு குழு புலத்தில் இருந்து கூச்சல் போடும் நாம்,புலத்தில் தேசதிற்கு வீரோதமானவர்களை மாற்று கருத்தாளன் என்று கெளரவமான பட்டம் கொடுத்து அவர்களுடன் உறவாடுவது ஏன்?மேடைகளிள்,வானொலிகளிள் கருத்து பரிமாறுவது ஏன்?

இவர்களை நாம் ஒதுக்க முடியாதா?

பட்டம் பெற்றோர்,படித்தோர்,எழுத்தாளர

் தேசிய விரோத கருத்தை புலத்தில் இருந்து கூறினால் அவர்கள் மாற்று கருத்தாளன் அதையே தாயகத்தில் பட்டமற்றோர் சொன்னால் துரோகியா??

எதையும் எழுதுறது எனது உரிமை

எதையும் தூக்கிறது நிர்வாகத்தின் உரிமை

எமது தேசிய போராட்டதிற்கு எதிராக பல சக்திகள் செயற்படுகிறது அதில் ஒரு சக்தியாக ஊடகதுறையும் பங்கு வகிக்கிறது.அந்த வகையில் பீ.பி.சி தமிழ் ஒலிபரப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது நான் கூறி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை அந்த வகையில் இவர்களும் தங்கள் பணியை தொடர போகிறார்களா?

Link to comment
Share on other sites

புத்தன் கூறிய கருத்துக்களுடன் நானும் உடன்படுகிறேன். நேரடியாக மோதும் எதிரியைவிட நல்லவர்போலத் தம்மை இனங்காட்டிக்கொண்டு நாசுக்காக எமது தாயகக்கோட்பாட்டிற்கு எதிரான விசமத்தனமான கருத்துக்களை நம்மவர் மத்தியில் விதைக்கும் இப்படியான கனவான்கள் மிகவூம் ஆபத்தானவர்கள். இவ்விசமிகளை இனங்கண்டு அவர்தம் முகத்திரையைக் கிழிக்க வேண்டியது தாயக்கோட்பாட்டில் பற்றுக்கொண்ட ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும்.

Link to comment
Share on other sites

இவையளுக்கு எதோ தனிப்பட்ட கோபதாபங்கள்..! கூட இருந்து குத்தும் இவர்கள் எதிரியை விட ஆபத்தானவர்கள்..!

Link to comment
Share on other sites

மாற்று கருத்தாளன் என்றால் உண்மையில் அதற்கு என்ன அர்த்தம் என்று சரியாக விளங்கவில்லை. அரசாங்கம் செய்யும் கொலைகளை புலிகள் தான் செய்தது என்று திருகி எழுதுபவர்களும் தங்களை மாற்று கருத்தாளன் என்று தான் சொல்கின்றார்கள். இவற்றுக்கு வங்காலைப் படுகொலை செஞ்சோலை குண்டுவீச்சு என்னும் நிறைய சம்பவங்களை எடுத்துக்கூறலாம். இது தான் மாற்றா? சம்பவ இடத்துக்கும் சம்மந்தமில்லாமல் அந்த இடத்தில் இருந்து வரும் செய்திகளை நிராகரித்து அரசு கூறும் செய்திகளை அல்லது அதற்கு மேல் ஒருபடி சென்று அரசை காப்பாற்றும் பிரகாரம் செயற்படுவது மாற்றா? இதற்கு என்ன அர்த்தம்?

தன் தனிப்பட்ட பிரச்சனைக்காக தனிப்பட்ட காழ்புணர்ச்சியால் தன்னினத்தையே காவு கொடுக்க விரும்பும் பல விசக்கிருமிகள் இந்த மாற்று முகமூடிக்குள் பதுங்கியிருப்பது அறியக்கூடியவாறு உள்ளது.

இலங்கை அரசு கடசி தமிழனை கொன்றபின்னும் தமிழனில் குறைகண்டுபிடித்து அதைப்பற்றியே கதைக்கவிரும்பும் குணம் கொண்டவரும் இதற்குள் அடங்குகின்றனர்.

பலவிடங்களில் அரசு துணிந்து மக்களை கொல்வதற்கு இவர்கள் ஊக்கமாக இருப்பதும் இருந்ததும் மறுக்க முடியாத உண்மையே. புலம் பெயர் நாடுகளில் அரசபடுகொலைக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டங்கள் செய்த போது அதை தடுக்கும் விதமாக பல அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியவர்கள் எழுதியவர்கள் இதற்கு தக்க சான்று.

துரோகத்தனத்தில் இருந்து மாற்று என்பதை பிரித்து அறிவது சாத்தியமற்றது. அவ்வாறான அவசியமும் சூழலும் மக்களுக்கு இப்போது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் எதிர்க்கட்சியை அனுமதிக்கிறது. மாற்றுக் கட்சியை அனுமதிப்பதில்லை. உலகில் எந்த நாட்டிலும் ஒரு கட்சிக்கு மாற்றுக் கட்சி என்று ஒன்றில்லை. ஆனால் உலகில் தமிழீழத்தில் அந்த தேச இருப்புக்கு எதிரான செயற்பாட்டுக்கு துரோகத்தனத்துக்கு எதிரியானவன் இட்டுள்ள பெயர் மாற்றுக் கருத்து, மாற்றுக்கட்சி அவற்றைச் சொல்பவன், நடத்துபவன் மாற்றுக் கருத்தாளன். அவர்களின் துரோகத்தனத்துக்கும் அவர்களின் துரோகக் கொள்கைகளுக்கும் பூசப்பட்டுள்ள முலாம் ஜனநாயகம்.

ஒரே கொள்கைக்காக நாலு கட்சிகள் வைப்பதையும், ஒரே கருத்தை.. நாலு பேர் வேறுபட்ட வடிவத்தில் சொல்ல நிற்பதையெல்லாம் ஜனநாயகம் என்று சொல்வதில்லை. அதுமட்டுமன்றி...

ஒரு தேசத்துக்குரிய கட்சிகளுக்கு.. அவர்கள் என்ன தான் தமக்கிடையே வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பினும், தேசத்தின் இறையாண்மை.. அதன் தேசியம்.. தேச நலன்.. தேச அங்கீகாரம்.. போன்ற அடிப்படைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம். அதுமட்டுமன்றி அவர்கள் இவற்றை ஏற்றும் மதித்தும் நடக்கும் பட்சத்திலே தான்.. அவர்கள் அங்கு ஜனநாயகம் என்பதன் கீழ் செயற்பட அனுமதிக்கப்படுகின்றனர். இந்திய இறையாண்மையை மதிக்காத ஒரு கட்சியை இந்தியா ஜனநாயகம் என்று அங்கு செயற்பட அனுமதிக்குமா. இல்லை..!

உதாரணத்துக்கு.. அமெரிக்காவின் இறையாண்மையை அல்லது அமெரிக்காவின் தேசியத்தை.. அல்லது அதன் தேச நலனை அல்லது தேசத்தை எதிர்க்கும் கட்சி அங்கு இருக்க வாய்ப்பில்லை..! அமெரிக்க தேசத்தை தற்போதைய நிலை வரையான அதன் கட்டமைப்பின் எல்லைகளின் கீழ் அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட கட்சிகள் தான்.. அதனை அரசாள என்று அமையும் கொள்கைகள் அளவில் உள்ள வேறுபாடுகளின் அடிப்படையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகள் என்று இருக்கின்றன. அவை ஒரு போதும் அமெரிக்க தேசம்.. தேச நலன்.. அதன் இருப்பு.. அதன் தேசியக் கூறுகள்.. அதன் பொது வெளிவிவகாரக் கொள்கை வகுப்புக்கள் இவற்றில் எல்லாம் எந்த செல்வாக்கும் செய்ய முடியாது.

தமிழ் மக்களின் தேசம்.. தமிழீழம். தேசியம்.. தமிழ் தேசியம்.. தேச நலன்.. தேசத்தின் இருப்பு... அதன் இறையாண்மை.. இவற்றை அங்கீகரிக்காத எவரும் தமிழ்மக்களை ஆள தகுதியற்ற ஜனநாயகவாதிகளே.

அந்த அடிப்படையில்.. இவர்கள் பேசுவதனைத்தும் ஜனநாயகமே அன்று. இவை தேசத்துரோகங்கள். அமெரிக்க தேசத்தின் இறையாண்மையை காட்டிக் கொடுப்பவன்.. அல்லது விற்பன்.. அமெரிக்க தேசத்துரோகி. அமெரிக்க தேசத்தின் இருப்பை அதன் தேசியத்தை நிராகரிப்பவன்.. அந்த தேசத் துரோகி.

அதேபோன்றதுதான்.. தமிழீழம் என்பதும். அது விடுதலைப்புலிகளின் கோரிக்கையல்ல. ஒவ்வொரு தமிழீழத் தமிழனின் பூர்வீக உரித்து. அந்த வகையில் அதனை நிராகரித்துவிட்டு.. தமிழ் மக்களுக்கு மாற்றுக் கருத்துச் சொல்வது என்பது.. தேசத் துரோகம். தமிழீழம்.. தமிழ் தேசியம்.. தேச இறையாண்மை.. தமிழ் மொழி இவற்றை அங்கீகரிக்காத.. எந்த பேடிகளும் துரோகிகளும்.. ( அவர்கள் கல்வியில் ஒரு சில துறைகளில் பெற்ற பட்டங்களை வைத்துக் கொண்டு.. அவர்களுக்கு தேவையற்ற சமூக முன்னுரிமை அளித்து..) மாற்றுக் கருத்தாளர்கள் என்ற தோறணையில் கருத்துக்களை விதைப்பதை அனுமதிப்பது தமிழீழ தேசத்துக்கு எதிராகச் செய்யப்படும் துரோகமாகவே கருத வேண்டும்.

தமிழர்கள் எம் ஒரே இலட்சியம். தமிழீழ தேசம். அது கனவல்ல. அது வரலாற்று உண்மை. ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தை விடிவிப்பது என்பதற்கும்.. அதன் இறையாண்மையை மீள நிலைநாட்டுவதற்கும் என்று அங்கு ஒரு மாற்றுக் கருத்தில்லை. தமிழீழம் என்றது ஒரு கருத்துத்தான். அது இலங்கைத் தீவில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அடக்கிய தேசம். அதற்கு மாற்றுக் கருத்து என்ற ஒரு மண்ணாங்கட்டி அங்கில்லை...!

அப்படி தமிழீழத்துக்கு மாற்றுக் கருத்து வைத்திருப்பவர்கள்.. புலிகளின் துரோகிகள் அல்ல. தமிழீழ பூர்வீகத்தைக் கொண்ட தமிழர்களின் தேசத் துரோகிகள். அவர்களை எல்லாம்.. ஜனநாயகவாதிகளாகவோ.. தமிழீழ தேசத்தின் எதிர்கால எதிர்க்கட்சிகளாகவோ இனங்காண்பது மிகப்பெரிய தவறு. அவர்களைத் தெளிவாக தமிழீழத் தேசத்துரோகிகளாக அடையாளம் காணலாம்..! அப்படி அடையாளம் காண்பதில் எந்தத் தவறும் இல்லை.

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டை விமர்சிப்பது வேறு. தமிழீழத்தை நிராகரிப்பது, காட்டிக்கொடுப்பது என்பது வேறு. தமிழீழத்தை அங்கீகரித்து நின்று கொண்டு.. தமிழீழ மக்களின் உரிமைகளை பாதுகாத்து நின்று கொண்டு... தமிழீழத்தை அங்கீகரித்து நிற்கும் புலிகளோடு.. ஜனநாயக ரீதியில் தமிழீழ தேசத்தில் எதிர்க்கட்சி வரிசையில் மக்களை ஆள.. தமிழீழ தேசத்தை திறம்பட நிர்வகிக்க என்று போட்டிக்கு நிற்கலாம். அது ஜனநாயகம். ஆனால்... அப்படியன்றி.. தமிழீழத்தை அங்கீகரிக்காது.. சிறீலங்காவுக்கு தமிழீழத்தைக் காட்டிக் கொடுத்து.. விலை பேசி விற்கும்.. தேசத்துரோகக் கருத்துக்களாக முன் வைக்கப்படும் மாற்றுக் கருத்துக்கள்.. எனப்படுபவை.. தமிழீழத் தேசத் துரோகங்களே..! அது மரண தண்டனைக்குரிய குற்றங்கள். இது தமிழீழத்துக்கு மட்டுமானதல்ல. உலகெங்கும் தமக்கென்றான இறைமையுள்ள தேசத்தில் வாழ விரும்பும் சுதந்திரத்தை விரும்பும் மக்களின் அவர்களை நிர்வகிக்கும் சக்திகளின் நிலைப்பாடும் இதுவே.!

தமிழீழம் என்ற தேச இருப்பையே அங்கீகரிக்காதவன்.. தமிழீழத்தில் எப்படி ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆக முடியும். தமிழீழ தேசம்.. அதன் மொழி.. அதன் எல்லைகள்.. அதன் இறையாண்மை.. அதன் தேசியம்.. அதன் நலன்.. இவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு அவற்றை எல்லாம் பாதுகாக்க உறுதி பூணுபவனுக்கே தமிழீழத் தமிழர்களை ஆளும் தகுதியும் தமிழீழத்தை நிர்வகிக்கும் தகுதியும்.. அவர்கள் ஜனநாயக வழியில் தமிழீழத் தாயகத்தில் செயற்படவும் வழி இருக்கும்.

அந்த வகையில் தமிழீழத்தை ஏற்றுக் கொண்டுள்ள.. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கும்.. இன்னும் தமிழீழத்தை அங்கீகரிக்கக் கூடிய வகையில் இருக்கும்.. ஆனால் தமிழீழத்துக்கு எதிராக மாற்றுக் கருத்தோ துரோகச் செயலோ செய்யாதவர்களும் சொல்லாதவர்களும்.. இதற்குள் அடக்கப்படலாம்.

தமிழீழ தேசத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கியவன்.. கூறுபோட்டவன்.. தமிழ் மொழியை.. தமிழ் தேசிய அடையாளங்களை.. மக்களை சிதைத்தவன்... தேசத்தை சிறுக சிறுகச் சிதைக்கும் எதிரிக்கு துணை போனவன்.. தமிழீழத்துக்கு எதிராக செயற்படுபவன்.. அல்லது கொள்கை வகுப்பவன்.. அல்லது பேசுபவன்.. தமிழீழத்தை எதிர்க்கும் எதிரியுடன் சேர்ந்து இயங்கி தேசத்தின் இருப்பை அழிக்க நிற்பவன்.. எவனும் தமிழீழத்தில்... ஜனநாயகத்தின் படி.. எதிர்க்கட்சியாளனாகவோ.. அல்லது ஆளும் கட்சியாளனாகவோ ஆக முடியாது. அவர்கள் தெளிவாக உலக நியதிப்படி.. தேசத் துரோகிகள் என்று தெளிவாக இனங்காணப்பட்டு.. ஒன்றில் அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது தேசத்தை விட்டு நாடு கடத்தப்பட வேண்டியவர்கள்.

1972 இல் சிறீலங்காவின் இறையாண்மையை, தேச நலனை மதிக்காது செயற்ப்பட்டதற்காக 1978ல் அன்றைய சிறீலங்கா ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா முன்னாள் சிறீலங்கா பிரதமரான சிறிமாவோ அம்மையாரின் குடியுரிமையைப் பறித்தார். நாடு கடத்தவும் திட்டமிட்டார்.

தங்கள் நாடுகளை குட்டிச் சுவராக்கிய குற்றத்துக்காக ஜேர்மனியின் முன்னாள் அதிபர் கிட்லர்.. உகண்டாவின் முன்னாள் அதிபர் இடியமீன்.. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோஸ்.. போன்ற பல தலைவர்கள்.. தங்கள் சொந்த தேசத்தின் இருப்பை.. இறையாண்மையை சிதைக்க விளைத்தது என்பதன் அடிப்படையில் நாட்டை விட்டு மக்களால், மக்கள் படைகளால் விரட்டி அடிக்கப்பட்டனர்.

மாறாக சொந்த தேசத்தைப் பாதுகாத்து.. அதன் எல்லைகளை எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து.. ஒரு நாட்டை அதன் தேசிய இனத்திடம் கையளித்த எந்தப் போராளிகளும் மக்களால் விரட்டி அடிக்கப்படவில்லை. அந்த வகையில் தமிழீழ தேசத்தின் எல்லைகளை மீள நிறுவி.. அதனை மீட்கவும் பாதுகாக்கவும் போராடும் விடுதலைப்புலிகளும் எப்போதும் விரட்டி அடிக்கப்படமாட்டார்கள்.

தமிழீழத்துக்கு மாற்றாக ஒரு தாயகம் இலங்கைத் தீவில் தமிழருக்கு இல்லை. அங்கு மாற்றுக் கருத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த வகையில்.. தமிழீழத்தை எவ்வெவ்வழிகளில் எல்லாம் எதிர்க்கின்றனரோ.. அது தேசத்துரோகமே அன்றி.. அதை, தமிழீழத்தை ஏற்றுக் கொண்டு.. அதற்குள் நின்று கொண்டு மக்களை ஆள, தேசத்தை நிர்வகிக்க.. ஜனநாயக வழிமுறையில் ஆளும் கட்சி.. எதிர்க்கட்சி அமைத்து செயற்படுவதற்கான, ஜனநாயக அரசியலுக்கான அடிப்படையாக கருத முடியாது. இதை புலம்பெயர் தமிழ் ஊடகங்கள், மக்கள் மற்றும் உறவாளர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் பட்டம் கொடுப்பது.. அந்தத்துறைக்கு. தமிழருக்காக தமிழீழத்துக்கு மாற்று தேசம் கண்டு பிடித்தத்ததற்காக அல்ல. எனவே அந்தப் பட்டதாரி புடலங்காய் தாரிகளைக் கொண்டு போய்.. குப்பையில் போடுங்கள் அல்லது தேவையான கல்வி சார் கூடங்களில் பாவியுங்கள். தமிழீழம் என்ற தேசத்தை அங்கீகரிக்க.. அதன் வரலாற்று பூர்வீக இருப்பே போதும். அங்கு வாழ்ந்த எம் சந்ததியினரின் அடையாளமே போதும். அதற்கு மாற்றுக் கருத்தில்லை. எனவே தமிழீழம் சார்ந்து வரும் மாற்றுக் கருத்து என்பது.. தமிழீழ தேசத் துரோகக் கருத்து. தமிழீழத்தை துண்டாடும் கருத்து என்பது.. தமிழீழ தேசத்துக்கு எதிரான துரோகக் கருத்து. அவற்றை அங்கீகரிப்பது.. அல்லது பரப்புரை செய்வது.. பேசுவது.. தமிழீழ தேசத்துரோகமே.. அன்றி ஜனநாயக அரசியல் அல்ல...!

இங்கும் இப்பதிவின் பிரதி இடப்பட்டுள்ளது: http://kundumani.blogspot.com/

Link to comment
Share on other sites

இப்படி தான் கொஞ்சபேர் "கருத்துகளை கருத்துகளால் வெல்ல வேண்டும் ஆயுதங்களால் அல்ல " எனக்கூறியவர்கள் இன்று அரசின் அடிவருடிகளாக இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பில் தொடங்கிய புத்தன் ஏன் பெயரை சொல்லவில்லை?

ஒருவர் இலண்டனில் இருக்கும் இராஜேஸ்வரி , பெண்ணியவாதி என்று புலி எதிர்ப்பு கருத்துகளைச் சொல்லும் பெண்மணி. காசுக்காக சொந்த இனத்தினைக் காட்டிக் கொடுக்கும் ஈனப்பிறவி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.