Jump to content

முரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம்


Recommended Posts

முரளீதரன் மீது முட்டை வீச்சு: ஆஸி. ரசிகர்கள் அட்டூழியம்

ஹோபர்ட்: முத்தரப்பு போட்டியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் மீது ஆஸ்திரேலியா ரசிகர்கள் முட்டையை வீசியுள்ளனர்.ஆஸ்திரேலியாவில

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹோபர்ட்டில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தாக்குதல்

ஹோபர்ட் : ஆஸ்திரேலியாவில் நாளை முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது ‌தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹோபர்ட்டில் இலங்க‌ை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது. கிரிக்‌கெட் வீரர் முத்தையா முரளிதரன் மீது முட்டையை வீசியுள்ளனர். நாளை இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் போட்டி துவங்க உள்ள நிலையில், இலங்கை அணியின் மீதான தாக்குதல் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரோ குடிச்சுப்போட்டு ு முட்டை எறிந்துள்ளார்கள். . ஆனால் இந்திய ஊடகங்கள் இதற்கு கால் கை வைத்து பெரிதாக கதை எழுதத்தொடங்கி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுச்திரேலிய, இந்திய அலைக்குள் அடிபட்டுப்போன தமது அணியையும் வெளியே கொண்டுவர இலங்கை அணியே இவ்வாறு செய்திருக்கலாம். குறிப்பாக முரளி மேல் அவுச்திரேலியர்களின் கேலியை இவர்கள் தமக்குச் சார்பாக பயன்படுத்தி இருக்கலாம். நிச்சயம் தோற்கப்போகும் அணியை கும்பல் சேர்த்து அடிக்க வேண்டிய அவசியமில்லை. அது அட்ட்டதின்போதே எதிரணியால் சரமாரியாக விழும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இந்தியர்கள் 1996 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அரையிறுதிப் போட்டியில் தோற்கும் தருவாயில் இலங்கை வீரர்களை நோக்கி போத்தில்களையும். குப்பைகளையும் வீசியதோடு அரங்கிலும் தீ மூட்டினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையால் வீசிய இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன் இது ஒரு ஜனநாயக விரோத செயல் இது ஒரு பயங்கரவாதம் இது எந்த ஒரு நாகரிகம் அடைந்த சமுகத்திலும் நடக்காது...எறியிறவன் கல்லை தூக்கி எறிந்திருக்க வேண்டும் அப்போதாவது குண்டடி படுபவனின் நோ புரிந்திருக்கும் அது சரி அது ஏன் முத்தையா முரளிதரனிற்கு மட்டும் முட்டையால் எரிந்தார்கள் அதை ஏன் இந்திய பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன உதிலை ஏதோ பம்மாத்து இருக்கிறது.

என்ன தான் இருந்தாலும் வீ ஆ அவுஸ்ரெலியன்ஸ் என்ன பொறுத்தவரை நான் வாழும் நாட்டிற்கு விசுவாசமாக நன்றியுடனும் இருப்பேன் என்பது தான் எனது இலச்சியம்,அவுஸ்ரெலிய இராணுவத்தில் ஒரு தமிழன் இராணுவ அதிகாரியாக இருக்கிறான் அவன் தமிழில் பேட்டி கொடுத்ததை நான் காதால் கேட்டனான் சிறிலங்காவில் முத்தையா முரளிதரன் கிரிகெட் அணியில் இருப்பதை விட அவுஸ்ரெலிய இராணுவத்தில் இந்த தமிழனிற்கு அதிகார் பதவி கொடுத்ததை நான் மகிழ்சியுடனும் பெருமிதத்துடன் ஏற்று கொள்கிறேன்..

Link to comment
Share on other sites

முட்டைக்குள் ஆசிட் ஒண்டு இருக்க இல்ல தானே? மேலும், முட்டை சத்தான ஒரு நிறை உணவு. இதனால் முரளிதரனுக்கு அந்த நிறை உணவு கிடைக்க வேணும் எண்டுற நல்ல ஒரு நோக்கத்தில் அவர்கள் இப்படி செய்து இருக்கலாம் தானே? அவுஸ்திரேலிய மக்களிடன் இலவசமாக முட்டை வாங்கிச் சாப்பிடுவது பற்றி முரளிதரன் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும்.

பி/கு: இதை எறிஞ்சது கந்தப்பு நீங்கள் தானே? உண்மையச் சொல்லுங்கோ.. :o

Link to comment
Share on other sites

மாப்பு உங்கடை சிஸ்யனையும் இங்கால பக்கம் கனநாள் காணேலை!...... ஒரு வேளை........?

Link to comment
Share on other sites

இதுவே அவுஸ்திரெலிய வீரர் ஒருவருக்கு இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ நடத்திருந்தால் இப்ப ஊடகங்களை பார்க்க வேணும்.

அவுஸ்திரேலியா என்ன இருந்தாலும் வெளிநாட்டு வீரர்களை பாதுகாக்க தவறிவிட்டது.அல்லது வேடிக்கை பார்த்தது என எடுக்கலாமா?

Link to comment
Share on other sites

எறிஞ்சவர் அப்படியே கொஞ்சம் வெங்காயம் பச்சைமிளகாயும் சேர்த்து

எறிஞ்சிருந்தால் முட்டைப்பொரியல் செய்ய உதவியாய் இருந்திருக்கும் :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை நீங்கள் கொதி எண்ணெயையும் சேர்த்துச் சொல்லமல் விட்டிட்டியள்

Link to comment
Share on other sites

அது முரளிதரனுக்கு எறிந்த முட்டை இல்லை. ஸ்ரீலங்கன் கிரிக்கெட் அணிக்கு எதிராக எறிந்தது.

அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஈழத்தமிழர் சிரிலங்கன் அணிக்கு எதிராக எறிய வேண்டிய முட்டையை அவுஸ்திரேலிய இளைஞர்கள் செய்துள்ளார்கள்.

அவர்களை வாழ்த்துவோம். தொடர்ந்து அவமானப்படுத்த ஊக்குவிப்போம்

முட்டை எறிந்து நாட்டை விட்டு கலைக்க வேண்டும்.

அங்க தமிழன் தலையில ஒவ்வொருநாளும் குண்டு எறியுறாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை உண்மையில் எறியப்பட்டதா?. தமிழர்கள் அவுச்திரெலியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துடுப்பாட்டப் போட்டியில் சிறிலங்கா அணிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தால்,(உதாரணமாக மயூரன் மேற்கிந்தியாத்தீவில் செய்தது போல) அதனைத் தடுக்க தங்களுக்கு பாதுகாப்பு தேவை என்ற போர்வையில் பொய்யான தகவலை சிறிலங்கா துடுப்பாட்ட அணியினர் வெளியிட்டு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கக் கொடி தூக்கிறவைக்கு யார் முட்டையாலயோ என்னத்தாலயோ அடித்தாலும் அவர்கள் நமக்கு நண்பர்கள். வாழ்க அவுஸ்திரேலியா! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணியினர் மீது வந்து விழுந்த முட்டை பற்றி ஆராய்ந்து தங்கள் தங்கள் அறிக்கைகளை சமர்ப்பித்துக்கொண்டு இருக்கும் யாழ்கள நண்பர்களே:

(1). முட்டை எவ்வாறு அங்கு வந்து விழுந்தது?

(2). கோழிமுட்டையா வாத்து முட்டையா?

(3). அது கூழ்முட்டையா நல்ல முட்டையா?

(4). தனியாகவா அல்லது பச்சை மிளகாய் வெங்காயத்துடனா விழுந்தது?

(5). ஓருவரையா அல்லது ஒரு குழுவையா குறிவைத்து எறியப்பட்டது?

என்றெல்லாம் ஆராய்ந்துள்ளீர்கள். நல்லது.

அந்த வேளையில் வானத்தில் கோழி அல்லது வேறு ஏதாவது பறவைகள் பறந்து சென்றிருக்கவும் சாத்தியமுண்டா?

என்பதையும் ஆய்வு செய்து கருத்து எழுதுவீர்களா?.

Link to comment
Share on other sites

நேக்கு அழுகை...அழுகையா வருது அந்த முட்டையை நினைக்க முட்டை கீழே விழுந்து உடைந்திருக்கு என்ன அநியாயமா போச்சு முட்டை...ஏன் முட்டை எல்லாத்தை வேஸ்ட் பண்ணுறியள் மை டிய ஆஸிஸ் ரோட்டில தான் கல்லு இருக்கு அதால எரிந்து இருக்கலாமே எனிவே அடுத்த முறை இதை வலோ பண்ணுங்கோ...

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"கல்லை கண்டா நாயை காணோம் நாயை கண்டா கல்லை காணோம்"

மாப்பு உங்கடை சிஸ்யனையும் இங்கால பக்கம் கனநாள் காணேலை!...... ஒரு வேளை........?

சாணக்கியன் அண்ணாநான் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லையோ :lol: சிட்னிக்கும் கோபார்டிற்கு நிறைய தூரம் பாருங்கோ :lol: அப்படி நான் எரிந்திருந்தா இப்படி முட்டை எல்லாம் எரிந்திருக்கமாட்டேன் ஒரேடியா தலையில கல்லை தூக்கி அல்லவா போட்டிருப்பேன் :lol: ...அது சரி முட்டை வந்து நான் வெஜிட்டேரியனா அல்லது வெஜிட்டேரியனா... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

முட்டை'யால் மீண்டும் சர்ச்சை வெடிக்கிறது இலங்கை வீரர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பலத்த பாதுகாப்பு

04 - February - 2008

ஹர்பஜன் விவகாரத்தின் ஈரம் காய்வதற்குள் இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. இலங்கை வீரர் முரளிதரன் முகத்தில் அவுஸ்திரேலிய ரசிகர்கள் முட்டையை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கோணத் தொடர் தொடங்கிய நிலையில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதால் இலங்கை வீரர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் முக்கோண ஒருநாள் தொடர் நேற்று பிரிஸ்பேனில் ஆரம்பமானது. இதில் பங்கேற்க இலங்கை வீரர்கள் அவுஸ்திரேலியா வந்துள்ளனர். ஹோபர்ட்டில் வெள்ளிக்கிழமை இரவு இலங்கை வீரர்கள் உணவருந்திவிட்டு தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, சில அவுஸ்திரேலிய ரசிகர்கள் அவர்களை கிண்டல் செய்தனர். முரளிதரன் முகத்தில் முட்டையை வீசித் தாக்கினர். இதையடுத்து இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் வீரர்களை பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.

இதற்கு, சமீபத்தில் அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வோர்னின் உலக சாதனையை முரளிதரன் முறியடித்தது முக்கிய காரணம் எனத் தெரிகிறது. இது குறித்து இலங்கை அணிக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்;

"முரளிதரனும் மற்றவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு கார் மின்னல் வேகத்தில் அருகில் வந்தது. அதிலிருந்து ஒருவர் முரளியைப் பார்த்து திட்டினார். பின்னர் திடீரென முட்டையை எடுத்து வீசத்தொடங்கினார்" என்றார்.

இப்பிரச்சினையைத் தொடர்ந்து இலங்கை வீரர்களுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையை இலங்கை கேட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையின் செயலர் மதிவாணன் இதுபற்றி கூறுகையில்;

"முரளிக்கு கூடுதல் பாதுகாப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம்" என்றார்.

"முரளிதரன் தாக்கப்பட்ட பின்னர் உஷாரடைந்த இலங்கை கிரிக்கெட் சபை, வீரர்களை பத்திரமாக அழைத்து சென்றது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்" எனத் தெரிவித்துள்ளது. தொடரும் சர்ச்சை .... அவுஸ்திரேலியர்களுக்கு முரளிதரன் என்றாலே `அலர்ஜி' தான். இவரது ஒவ்வொரு பயணத்தின் போதும் சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. இதன்விபரம்:

* 1995 - 96 இல் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் போது முரளிதரன் பந்தை எறிவதாக கூறி அவுஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர் தொடர்ந்து நோ - போல் கொடுத்தார். இதை எதிர்த்து கப்டன் அர்ஜுனா ரணதுங்க வீரர்களுடன் போட்டியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்.

2004 இல் முரளிதரனை ரசிகர்கள் கிண்டல் செய்து வெறுப்பேற்றினர். அப்போதைய அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவார்டும் `முரளி பந்தை எறிகிறார்' என குற்றம் சாட்டினார். இதையடுத்து அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடுவது இல்லையென்ற முடிவை முரளி எடுத்தார்.

* ஹேரை தொடர்ந்து அவுஸ்திரேலிய நடுவர் ரோஸ் எமர்சனும் முரளிதரன் பந்துவீச்சு ஐ.சி.சி. விதிகளுக்கு புறம்பானது என நோ - போல் வழங்கினார்.

* முரளிதரன் பெர்த்தில் உள்ள `வெஸ்டர்ன்' அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் நடந்த பரிசோதனையில் தனது பந்து வீச்சில் குறை இல்லை என்பதை நிரூபித்தார்.

* மனமாறிய முரளிதரன் பின்னர் 2007 நவம்பரில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க மீண்டும் அவுஸ்திரேலியா சென்றார்.

* தற்போது இவர் மீது முட்டை வீசப்பட்டுள்ளது.

thinakural.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டா இதெல்லாம்? கிரிக்கட்டில்கூட இப்படியான ரசிகர்?களும் உண்டா? :rolleyes::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன் மீது முட்டை வீசப்பட்டதை முரளி நகைச்சுவையாக கருதுகிறார்

[05 - February - 2008]

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் முட்டை வீசியதை அவர் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டதாக. கப்டன் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முக்கோண ஒருநாள்கிரிக்கெட் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் தொடங்கின.

இதற்கு முன்பாக இலங்கை அணி அவுஸ்திரேலியா வந்தபோது, ஹோபர்ட்டில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் மற்றும் இரு வீரர்கள் மீது அவுஸ்திரேலிய ரசிகர்கள் முட்டையை வீசினர்.

இலங்கை அணி இப்பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பவில்லையெனக் கப்டன் ஜெயவர்தன கூறியதுடன்;

முரளிதரன் மீது ஆஸி., ரசிகர்கள் முட்டை வீசியதை முரளிதரன் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2008/2/5/s...s_page45292.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.