Jump to content

இனியது கேட்கின் எழில் நீர்க்கரையே - வாசுதேவன்.


Recommended Posts

இனியது கேட்கின்.

------------------------------------------------------------

நிதானமாக நடந்து வந்த குளிர்காலம்

மரங்களைத் துகிலுரித்து அவற்றின் கிளைகளெங்கும்

தன் நிர்வாண சர்வாதிகாரத்தை நிலைநாட்டியிருந்தது.

நகரின் சந்தடிகளையும்

வாகன இரைச்சல்களையும் விட்டொதுங்கி

நீ நகர்ந்து கொண்டிருந்து கொண்டிருந்தபோது

மனித முகங்கள் உன்னிலிந்து தொலைவில்

உலர்ந்து ஆவியாகின.

புனித மார்ட்டீன் ஓடையின் கரைகளை

ஒளித்துவைத்திருந்தது மண்டிக்கிடந்த பனிமூட்டம்

புறப்படுவதற்காகவோ அல்லது தரித்து நிற்பதற்காகவோ

ஒரு உல்லாசக் கப்பல் அங்கு

தனியனாக மிதந்துகொண்டிருந்தது.

ஒரு பூனையும் வெளியே புறப்படாத குளிரிரவில்

நீ ஓடைக்கரையில் நடந்துகொண்டிருந்தாய்.

மறுகரையின் உயர்கட்டடத்தின்

பதின்நான்காவது மாடியில் வசிக்கும்

சிகையலங்காரி பேர்ணாட் இப்போது

தூங்கிக் கொண்டிருப்பான் என நீ எண்ணினாய்.

கட்டடங்களையும் அதன் அறைகளையும்

அங்குள்ள மனிதர்களின் கட்டில்களையும்

ஒரு முறை கற்பனையில் நிறுத்திப்பார்த்தாய்

ஓடை நீரின் உறக்கநிலை உனக்கு

மிகவும் உவப்பாக இருந்தது.

கொதிநிலையில் ஆவிபறப்பது போல்

நீரின் எல்லைகளை கலைத்துவிட்டிருந்தது

அடர்ந்த பனிமூட்டம்.

அனைத்துக் காட்சியும்

ஒரு நாவலின் தொடர்ச்சியாக

உன்னுள் தரிசனமாகியபோது

நீ மட்டுமே அதன் உயிருள்ள பாத்திரமாகவும்

அதைத் தொடர்ந்து எழுதிமுடிக்க

அழைக்கப்பட்டிருந்த எழுத்தாளனாகவும்

இருப்பதாக உனக்குப்பட்டது.

வந்தடைய வேண்டிய இடம் வந்தபோதும்

இடங்களை இடங்களெனப்பார்க்கும் இயல்பொழிந்து

அதைப்பார்க்காமலே தாண்டி நடந்துகொண்டிருந்தாய்

உன் உடல் திரவமயப்பட்டிருந்ததையும்

நீ ஒரு ஆறுபோல் நடந்ததையும்

யாரும் நம்ப மறுப்பார்கள் என்பதும்

உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது

"நாளைக்காலை நீங்கள் விழித்தெழும்

வேளை பரிஸ் நகரம்

ஒரு பாலைவனமாகிவிட்டிருக்கும்"

என ஒரு குறுஞ்செய்தியை

உன் செல்லிடத் தொலைபேசியிலிருந்து

பலருக்கு அனுப்பவிட்டு

"இன்று இரவு எனக்கு மரணம் வாய்த்தால்

என் துணைவன் சொர்க்கத்தில் கலைந்து போனான்

என எல்லோருக்கும் அறிவித்து விடு"

என்று ஒரு சிறிய காகிதத்துண்டில் குறித்து

உனது சட்டைப்பையில் திணித்து விட்டு

நீ நடந்துகொண்டேயிருந்தாய்.

குளிரின் உக்கிரத்தில்

உன்னுடல் திரவநிலையிலிருந்து

வாயுநிலைக்குச் செல்லுவதாக உனக்குப் பட்டது

மண்டிக்கிடந்த பனிமூட்டத்துடன்

பனிமூட்டமானாய்.

"இனியது கேட்கின் எழில் நீர்க்கரையே, இனிது இனிது..."

என ஆரம்பித்தன உன்னுதடுகளின் உச்சாடனங்கள்.

நீ நடந்துகொண்டேயிருந்தாய்.

காலம் அழிந்திருந்தது.

----

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடை நீரின் உறக்கநிலை உனக்கு

மிகவும் உவப்பாக இருந்தது.

கொதிநிலையில் ஆவிபறப்பது போல்

நீரின் எல்லைகளை கலைத்துவிட்டிருந்தது

அடர்ந்த பனிமூட்டம்.

அழகான வரிகள்.

உங்க கவிதை அழகு

Link to comment
Share on other sites

நகரின் சந்தடிகளையும்

வாகன இரைச்சல்களையும் விட்டொதுங்கி

நீ நகர்ந்து கொண்டிருந்து கொண்டிருந்தபோது

மனித முகங்கள் உன்னிலிந்து தொலைவில்

உலர்ந்து ஆவியாகின.

சந்தத்துக்கும் விட்டுக்கொடுக்காத உருவத்தில் விட்டேர்த்தியான மனநிலையை ஒத்தி எடுத்த்ருக்கிறீர்கள். கவிதைக்கு நன்றி. பயணமும் உரையாடலும் கவிதையுமாக கூடிப் பிரான்சை அளந்து எழுதப்போகிற நாளை காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

கறுப்பிக்கும் கவிஞருக்கும் கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்றி. படைப்பாளிக்கு வழங்கும் ஊக்கங்கள் படைப்புணர்வை மேலும் அதிகரிக்க வழிகோலும்.

மீண்டும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த ஆக்கங்கள் வெளிப்படும்போது கருத்துப்பகிர்வுகள் குறைவாகவே இருக்கின்றது இங்கே(யாழ்களத்தில்)

Link to comment
Share on other sites

அரிது அரிது

அரிய கவிதைகள்

படிக்க கிடைப்பதரிது

அதனினுமரிது.... சே என்னது நான் ஓளவையார் மாதிரி எழுத தொடங்கிட்டன்.சரி அரியது சொன்ன அழகிய வரிகள். அனாலும் கொஞ்சம் எல்லாருக்கும் விழங்கிற மாதிரி எழுதினால் எனக்கும் விளங்கும். நான் சொல்லறது உங்களுக்கும் விளங்கும் எண்டு நினைக்கிறன் நன்றிகள்.விழங்குமா என்ன ள.. வையும் ழ.. வையும் குழப்பிட்டனோ :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை வாசுதேவன். உங்கள் கவிதைகளில் வைத்தீஸ்வரனின் நடை தெரிகிறது. ஆழமாக இருக்கிறது.

சாத்திரி: வாசுதேவன் கவிதை இப்படி இருப்பது அவர் வேண்டுமென்றே சிக்கலாக எழுதுவதால் அல்ல. மனக் கிடக்கைகளை அல்லது சம்பவங்களை அவர் இயலுமான வரை வார்த்தை ஜாலம் கலக்காமல் எழுதுவதால் இப்படி விளக்கம் குறைவான கவிதைகள் பிறக்கின்றன. அதே மாதிரியான அனுபவம் கொண்ட வாசகன் இதை வாசிக்கையில் கவிஞனும் வாசகனும் ஒரே "அலைவரிசையில்" நின்று கவிதை துல்லியமாக விளங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரிது அரிது

அரிய கவிதைகள்

படிக்க கிடைப்பதரிது

அதனினுமரிது.... சே என்னது நான் ஓளவையார் மாதிரி எழுத தொடங்கிட்டன்.சரி அரியது சொன்ன அழகிய வரிகள். அனாலும் கொஞ்சம் எல்லாருக்கும் விழங்கிற மாதிரி எழுதினால் எனக்கும் விளங்கும். நான் சொல்லறது உங்களுக்கும் விளங்கும் எண்டு நினைக்கிறன் நன்றிகள்.விழங்குமா என்ன ள.. வையும் ழ.. வையும் குழப்பிட்டனோ :lol:

சின்ன வயசுல்ல யிருந்தே உங்களுக்கு இந்த ள ழ பிரச்சனை இருக்குத்தானே சாத்திரி சார்.

கதைக்கும் போது இந்த பிரச்சனை இல்லையே உங்களிடம் அதையிட்டு :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.